Sunday, November 23, 2025

ஜமேக்காவின் பயிற்சியாளர் மெக்லாரன் இராஜினாமா


    குராக்கோவுடனான போட்டியில்  கோல் இல்லாத டிராவைத் தொடர்ந்து, ஜமைக்காவின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் மெக்லாரன் பதவி விலகினார் , இது அடுத்த ஆண்டு வட அமெரிக்காவில் நடைபெறும் உலகக்  கிண்ணத் தகுதி பெறும் அவர்களின் நம்பிக்கைக்கு  பின்னடைவாக உள்ளது.

ஜமேக்கா தகுதி பெற  ஒரு வெற்றி தேவைப்பட்டது.

முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்லாரனின் அணி, தகுதி பெறுவதற்கு விருப்பமான அணியாக இருந்தபோதிலும், CONCACAF தகுதிச் சுற்றின் B பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

உலகக்கிண்ணப் போட்டிக்கு ஜமேக்கா முன்னேற முடியும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு கூட்டமைப்புகளுக்கு இடையேயான பிளே‍ஓஃப் போட்டியில்  ஈராக் ,  காங்கோ ஜனநாயகக் குடியரசு  ஆகிய நாடுகளுக்கு எதிரான விளையாடி வெற்றி பெற வேண்டும்.

 2007-08 க்கு இடையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த மெக்லாரன், 2008 ஐரோப்பிய சம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறத் தவறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார், ஜூலை 2024 இல் ஜமேக்காவின் பயிற்சியாளராகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

64 வயதான  மெக்லாரனின் பயிற்சியில் ஜமேக்கா  24   போட்டிகளில் விளையாடி 13 போட்டிகளில் வெற்றி பெற்ற‌து. ஆறு போட்டிகளில் தோல்வியடைந்தது.


ஹொண்டுராஸ் , கோஸ்டரிகா வெளியே ஹைட்டி, பனாமா உள்ளே

CONCACAF  உலகக்கிண தகுதிச் சுற்றுப் போட்டியின் வியத்தகு கடைசி நாளில், கால்பந்தின் ஷோபீஸ் போட்டியில் அரை நூற்றாண்டு கால இடைவெளியை ஹைதி முடிவுக்குக் கொண்டு வந்த அதே வேளையில், குராக்கோ தனது முதல் உலகக்  கிண்ண இடத்தைப் பதிவு செய்தது.

கிங்ஸ்டனில், குராக்கோ அணி, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா , கரீபியன் பிராந்தியத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆறு ஆட்டங்களில் இருந்து 12 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் ஒரு  புள்ளி முன்னிலையுடன் குரோக்கோ  முதலிடத்தைப் பிடித்தது.  

கடைசியாக 1974 உலகக்  கிண்ணப் போட்டியில் ப‌ங்கேற்ற ஹைட்டி, நிகரகுவாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தகுதி பெற்றது. 

உலகக் கோப்பைக்கு நேரடி தகுதி பெற்ற மற்றொரு CONCACAF அணி பனாமா ஆகும், இது எல் சால்வடாரை 3-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் வீழ்த்தி குழு A இல் முதலிடத்தைப் பிடித்தது.

சீசர் பிளாக்மேன் மற்றும் எரிக் டேவிஸ் ஆகியோர் முதல் பாதியில் கோல்களை அடித்தனர், பின்னர் ஜோஸ் ரோட்ரிக்ஸ் 85வது நிமிடத்தில் கோல் அடித்து முடிவை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தினார்.

உலகக்  கிண்ணப் போட்டியில்  முதல் முறையாகப் பங்கேற்கப் போட்டியிடும் மற்றொரு அணியான சுரினாம், ஜமேக்கா ஆகியவை இரண்டாவது இடத்தில் உள்ள சிறந்த இரண்டு அணிகளாக பிளேஆஃப்களுக்கு முன்னேறின.

சுரினாமுடன் ஒப்பிடும்போது குறைவான கோல்கள் அடித்ததால் ஹோண்டுராஸ் பிளேஆஃப் இடத்தைப் பெறத் தவறியது, அதே நேரத்தில் கோஸ்டாரிகாவும் வாய்ப்பைத் தவறவிட்டது. 


Saturday, November 22, 2025

பிரசாரத்துக்குத் தயாராகும் தமிழகத் தலைவர்கள்


கரூரில் நடைபெற்ற அசம்பாவிதத்துக்குப் பின்னர் அமைதியாக  இருந்த தமிழக தேர்தல் களம் மீண்டும் சூடு பிடிக்க  உள்ளது. சுமார் ஒரு மாத மெளனத்துக்குப் பின்னர் விஜய் தனது அரசியல் பணிகளை ஆரம்பித்துள்ளார். டிசம்பரில் தேர்தல் பிரசாரம் செய்ய விஜய்யின் கட்சி மனு அளித்தது. அதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது.  எடப்பாடியும்  இந்த மாத இறுதியில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார்.

தமிழக வெற்றிக் கழ்கத் தலைவர் விஜய் கடந்த மாதம் கரூரில் பிரசாரம் செய்தபோது  கூட்ட நெரிசலில் 41  பேர் இறந்தனர். அந்தச் சம்பவம் விஜயின் அரசியல் வாழ்வில் கரும் பிள்ளியாக இருக்கிறது.

  சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.    சேலம் பொலிஸ் ஆணையரிடம் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.  அந்த மனுவில் அடுத்த மாதம் 4ம் திக‌தி அனுமதி கோரப்பட்டுள்ளது. சனிக்கிழமைக்கு பதிலாக அதில் வியாழனன்று விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரப்பட்டது.

விஜயில் பிரசாரக் கூட்டங்கள் சனிக்கிழமைகளில் இதுவரை காலமும் நடைபெற்றன. இப்போது விஜய் கிழமையை மாற்றி விட்டார். சேலத்தில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெறும். சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால்   கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இப்போது வியாழக்கிழமையை விஜய் தேர்ந்தெடுத்துள்ளார்.

  வியாழக்கிழமை, விஜய் என்ற 'வி' சென்டிமென்டோடு, வியாழக்கிழமை என்றால் பெரும்பாலும்  மாணவர்கள் பாடசாலைக்குச்  சென்று விடுவார்கள், இளைஞர்களும் வேலைகளுக்கு சென்று விடுவார்கள், இதனால் பெரிய அளவில் கூட்டம் திரள வாய்ப்பில்லை என்பதால் தான் அந்த கிழமையை தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது.

 கரூர் சம்பவத்துக்குப் பின்னர் விஜய்யின்  கூட்டத்துக்கு  அதிகளவில் மக்கள் வருவார்களா  என்ற சந்தேகமும் உள்ளது.

விஜயின் பிரசார கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கரூர் நெரிசல் சம்பவத்திற்கு பிறகு  பொலிஸார் மீது  கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில் இனி வரும் காலங்களில் அது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க உரிய கண்காணிப்பு ,பாதுகாப்பு ஏற்பாடுகளை  பொலிஸார் மேற்கொள்வார்கள் என்பதால், ஊருக்கு வெளிப்புறங்களில் மட்டுமே விஜய்க்கு பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் சேலம்.  எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் இருந்து விஜய் தனது பிரசாரத்தை தொடங்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விஜய் தனித்து போட்டி என சிறப்பு பொதுக்குழுவில் அறிவித்த பிறகு அதிமுகவும் விஜயை விமர்சிக்க தொடங்கியுள்ளது. எனினும், விஜய் தனது பிரசாரத்தில் அதிமுகவை பெரிய அளவில் சீண்டியது இல்லை. எனினும், தற்போதைய அரசியல் சூழலில், விஜயின் அணுகுமுறையில் மாற்றம் இருக்குமா? இல்லை.  அதிமுகவிற்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் வகையில் அவரது பேச்சு இருக்குமா? என்பது சேலம் பிரசாரத்தில் ஓரளவு தெரிந்து விடும் என்று தவெகவினர் எதிர்பார்க்கிறார்கள். விஜய் மீண்டும் பிரசாரம் தொடங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தவெகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 விஜயை எதிர் பார்த்துக் காத்திருந்த எடப்பாடி  ஏனைய கட்சிகளுடன்  பேச்சு வார்த்தை நடத்துகிறார். செந்தில் பாலாஜிக்குச் சவால் விடுவதற்காக கரூர் சென்று பாதிக்கப்பட்ட விஜய் இப்போது எடப்பாடியின் ஊரில் கால் வைக்கிறார்.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  இந்த மாதம்    27 அல்லது 28 ஆம் திகதி  திருவள்ளூரில் இருந்து தனது தொகுதி வாரியான பிரசாரத்தை மீண்டும் தொடங்குகிறார்.

வட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, வானிலை நிலவரத்தைப் பொறுத்து இந்த அட்டவணை மாற்றியமைக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, 41 பேர் உயிரிழந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது மக்கள் சந்திப்பு பயணத்தை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது பயணத்தை அவர் தொடங்கப் போகிறார். மக்களைக் காப்போம்; தமிழ்த்தாயை மீட்போம் என்ற பெயரில் ஜூலை மாதம் கோவையில் தொடங்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரம், இதுவரை 174 சட்டமன்றத் தொகுதிகளை எட்டியுள்ளது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ஈரோடு ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மீதமுள்ள தொகுதிகளை ஒரு நாளைக்கு இரண்டு என்ற வீதத்தில் அவர் நிறைவு செய்ய இலக்கு வைத்துள்ளார்.

பிரசாரத்தை ஆரம்பிக்கும் அதேவேளை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளையும் எடப்பாடி நடத்துகிறார்.கூட்டணியை வலுவாக்கும் முயற்சியையும்  எடப்பாடி தீவிரப்படுத்தியுள்ளார். தீவிரப்படுத்தியுள்ளதாம். கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளதாக சொல்கிறார்கள்.

 நோய்வாய்ப்பட்ட‌  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை,  வைத்தியசாலையில் எடப்பாடி சந்தித்தபோது  அடுத்த முதலமைச்சராக உங்களைக் காண விரும்புவதாகத் தெரிவித்தார். இதை அதிமுக தலைவர்கள், சாதகமான பேச்சாகப் பார்க்கிறார்களாம்.  பாமக நிர்வாகிகள் தரப்பிலும், இரு கட்சிகளுக்கும் இடையே நடக்கும் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நன்றாக முன்னேறி வருவதாக சொல்கிறார்கள்.  கட்சியின்  உள்விவகாரம்   வரவிருக்கும் அரசியல் போட்டியில் இருவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நிற்க விரும்புவதாக அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  தெரிவித்தார்கள்.

  பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக அவர் பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாமகவைப் போலவே, இன்னும் தேமுதிகவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை.  அந்தக் கட்சி கடலூர் மாநாட்டுக்குப் பிறகுதான் நிலைப்பாட்டை அறிவிக்கப் போவதாக கூறியுள்ளது. அதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் பிரேமலதா தொடர்பில் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்டமைப்பு இன்னும் வலுவாகவில்லை. இப்போதைக்கு பெரிய கட்சியாக பாஜகவும், அதிமுகவும் மட்டுமே உள்ளன. மற்றவை சிறிய கட்சிகளே. தேமுதிக, பாமக போன்றவை வந்தால்தான் கூட்டணிபலமானதாக  இருக்கும்.

ரமணி

23/11/25

உலகக்கிண்ண உதைபந்தாட்ட சின்னங்கள்


 

அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து உலகக்கிண்ண உதைப்ந்தாட்டப் போட்டியை நடத்துவதால்   மூன்று சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும்

மேப்பிள் என்ற கடமான், மெக்சிகோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாகுவார் என்ற ஜாயு ,அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கிளட்ச் என்ற வழுக்கை கழுகு.

  அதிகாரப்பூர்வ உலகக் கிண்ணப் போட்டி பந்துக்கு  - ட்ரையோண்டா  எனப் பெயரிடப்பட்டுள்ளது.- ஸ்பானிஷ் மொழியில் மூன்று அலைகள் என்று பொருள்.

இந்தப் பந்து சிவப்பு  நிறம் கனடாவையும், , பச்சை நிறம் மெக்ஸிகோவையும்  , நீல  நிற‌ம் அமெரிக்காவையும்  குறிப்பிடுகிறது. அடிடாஸ் நிறுவனம் இந்தப் பந்தைத் தயாரித்துள்ளது.

 

உலகக்கிண்ண உதைபந்தாட்டம் 2026 தகுதி பெற்ற நாடுகள்


 உலகக்கிண்ண உதைபந்தாட்ட தகுதிச் சுற்றுகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான  தகுதியை 39நாடுகள்  உறுதி செய்துள்ளன.

அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில்  நடைபெறும்  உலகக் கிண்ண உதைபந்தாட்ட‌ப் போட்டியில் 48 அணிகள் இடம்பெறும்.

போட்டியை நடத்தும் நாடுகள்

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ.

ஐரோப்பா (UEFA)வில் இருந்து

ஜேர்மனி, சுவிட்சர்லாந்து,ஸ்கொட்லாந்து, பிரான்ஸ்,ஸ்பெய்ன், போத்துகல்,நெதர்லாந்து ஒஸ்ரியா,நோர்வே, பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா,

தென் அமெரிக்கா (CONMEBOL)வில் இருந்து

ஆர்ஜென்ரீனா, பிறேஸில், கொலம்பியா, ஈக்வடோர், பராகுவே, உருகுவே.

ஆப்பிரிக்கா (CAF)வில் இருந்து

அல்ஜீரியா, கேப் வெர்டே, எகிப்து, கானா, ஐவரி கோஸ்ட், மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா.

ஆசியா (AFC)வில் இருந்து

அவுஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்தான், கட்டார், சவூதி அரேபியா, தென் கொரியா, உஸ்பெகிஸ்தான்.

ஓசியானியாவில் இருந்து

நியூசிலாந்து.

வட அமெரிக்க தகுதைகாண்  போட்டிகள்  இன்னமும் நடைபெறவில்லை.

 


Tuesday, November 18, 2025

ஜடேஜாவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன்


ஐபிஎல் தொடரில் மிகவும் பரபரப்பான வீரர்கள் பரிமாற்றம் (Trade) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின்  சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்குச் செல்வதும், அதற்கு ஈடாக சிஎஸ்கே-வின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் RR அணிக்கு திரும்புவதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதை உறுதி படுத்துவது போல   CSK அணி தனது X தளத்தில் சஞ்சு சாம்சனிற்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை பதிவிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

சஞ்சு சாம்சன் (RR), ரவீந்திர ஜடேஜா (CSK)  ,சாம் கரண் (CSK) ஆகியோர் பெயர் தான் இந்த வர்த்தக மாற்றத்தில் அடிபடும் பெயர்கள். தற்போது வீரர்கள் பரிமாற்றத்திற்கான விருப்பம் பிசிசிஐ-க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் அடுத்த 48 மணி நேரத்தில் இறுதி ஒப்புதலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு சஞ்சு சாம்சன், ஜடேஜா , சாம் கரண் ஆகிய மூவரும் இந்த மாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரவீந்திர ஜடேஜா தனது ஐபிஎல் பயணத்தின் ஆரம்ப ஆண்டுகளில் (2008, 2009) ராஜஸ்தான் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RR அணி முதலில் தீக்சனா அல்லது மதீஷா பத்திரனாவை கேட்டதாகவும், அது நிராகரிக்கப்பட்ட பின்னர் சாம் கரண் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சன் , ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருமே தங்கள் அணிகளில் தலா ₹18 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட (Retained) வீரர்கள் ஆவர்.

சஞ்சு சாம்சன் வெளியேறும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2026 ஐபிஎல் தொடரில் புதிய கப்டன் நியமிக்கப்படவுள்ளார்.

கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் இல்லாதபோது அணியை வழிநடத்திய ரியாண் பராகுக்கு நிரந்தர கப்டன் பொறுப்பு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

கப்டன் பதவிக்கான பிரதான போட்டியாளர்களாக, RR அணியின் உள்ளூர் வீரர்களான துருவ் ஜூரெல்   யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் உள்ளனர்.

அனுபவம் வாய்ந்த ரவீந்திர ஜடேஜா RR அணிக்குத் திரும்பினால், அவரும் கப்டன் பொறுப்புக்கு ஒரு முக்கிய தேர்வாகக் கருதப்படுவார்.

இதற்கிடையில், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஜடேஜாவை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர் சிஎஸ்கே-வுக்கு ஒரு 'Gun Player' என்றும் பொதுவெளியில் வலியுறுத்தியுள்ளார்.


ரமணி

16/11/25 

கனவுப் படத்தில் இருந்து வெளியேறினார் சுந்தர் சி காரணம் தெரியாது தவிக்கும் திரை உலகம்


 கனவுப் படத்தில் இருந்து வெளியேறினார் சுந்தர் சி 

காரணம் தெரியாது தவிக்கும் திரை உலகம் 

உலகநாயகன் கமலும், சூப்பர் ஸ்டார் ர‌ஜினியும் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் அந்தக் காலத்தில் சூப்பரான வெற்ரிப் படங்கள் 1957 ஆம் ஆண்டு வெளியான அபூரவராகங்கள் படத்தில்  சிறிய வேடத்தில்  ரஜினி அறிமுகமானார்.

ஒரு சில காட்சிகளில்  மட்டும்  நடித்த ரஜினி  பின்னர் கமலுக்கு  இணையாகவும்  போட்டியாளராகவும் மாறினார். கமல், ரஜினி இருவரும் உச்சத்தித் தொட்ட நேரம் 13 படங்களில் மட்டும் நடித்து விட்டு இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என அறிவித்தனர். இவர்களின்  பிரிவு  ரசிகர்களை வருத்தப்பட  வைத்தது.  பின்னர் ரசிகர்கள்  மெளனமாக அதனி ஏற்றுக்கொண்டனர்.

 கமல், ரஜினி  இருவரும் சேர்ந்து நடிக்க வில்லை என்றாலும். அவர்களின் நட்பு பலமாக நீடித்தது.  ஆனாலும், இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதையே ரசிகர்கள் விரும்பினார்கள்.  சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்  முயற்சி செய்தார்கள். நட்பு வேறு நடிப்பு  வேறு என் பதில் இருவரும்  உறுதியாக இருந்தார்கள்.

கடந்த நவம்பர் 5 ஆம் திகதி கமலஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நஷனல் நிறுவனம் வெறியிட்டச் அரிவிப்பு  இந்தியத் திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. ரஜினியின் 173 ஆவது படத்தை ராஜ்கமல் இன்ரர் நஷனல் நிறுவனம் தயாரிக்க சுந்தர் சி இயக்குவார் என்ற‌ அறிவிப்பு திரை உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியி 173 ஆவது படம் வெளியாகும். அந்தப் படத்தில் படத்தில் கமல் நடிக்கவில்லை. தக்லைவ் படத்தின் மூலம் கமலுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்வதற்காகவே கம‌லுக்கு உதவி செய்ய ரஜினி நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. 

எதிர் பார்க்காத இன்ப அதிர்ச்சியில் திரை உலகம் மூழ்கியது. இரண்டு நாட்களாக இந்தச் செய்தி தீயாக வலம் வந்தது.

பழைய  இயக்குநர்களைக் கைவிட்டு, புதிய இயக்குநர்களை நாடிச் செல்லும் ரஜினி சுந்தர் சியின்  இயக்கத்தில் நடிக்க இருப்பது பேசு பொருளானது. நடிகரைப் ப் அற்றிக் கவலைப் படாமல் திரைக்கதையை நம்பிப் படம் எடுப்பவர்களில் சுந்தர் சியும் ஒருவர். சிரிப்பு, சென்ரிமென்ற்  போன்ரவற்றால் நசிகர்களைக் கட்டி வைக்கும் சூட்சுமம் தெரிந்தவர் சுந்தர் சி

அருணசலம் என்ற பிரமாண்டமான வெற்றிப் படத்தை  ரஜினிக்குக் கொடுத்தவர் சுந்தர் சி.  ரஜினியும் சுந்தர் சி யும் ஏற்கெனவே  இணைந்து  வெற்றிப் படத்தைக் கொடுத்தவர்கள்.

அன்பே சிவம் என்ற காவியத்தை கமலுகுக் கொடுத்தவர் சுந்தர் சி. கமலுடன் மாதவனும் அன்பே சிவம் படத்தில் நடித்தார். 

கமல், ரஜினி, சுந்தர் சி ஆகிய மூவரும் இணைந்து  பலமுறை  பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இந்த அறிவிப்பு  வெளியாகி இருக்கும். ஆகையால்  2026 ஆம் ஆண்டு பொங்கலை சினிமா ரசிகர்கள்  பெரும் ஆவலுடன் எதிர் பார்த்தார்கள்.

சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புப்பு  பேரிடியாக வந்தது சுந்தர் சியின்  அறிவிப்பு.

 தவிர்க்க முடியாத காரணங்காளைனால் ரஜினியின் 173 ஆவது படத்தில் இருந்து கனத்த  இதயத்துடன் வெளியேறுவதாக சுந்தர் சி அறிவித்தார். 

கமலின் தயாரிப்பில் ரஜினியை இயக்குவது தனது  வாழ்வில் மிகப்பெரிய கனவு என வும் சுந்தர் சி தெரிவித்தார்.

நாம் எதிர்பார்த்த எல்லாம் சில நேரங்களில் நடப்பதில்லை. நாம் மூவரும்  பேசிக்கொண்டது என் வாழ்க்கையில் மற‌க்க முடியாத அனுபவம் எனவும் சுந்தர் சி தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்குள் என்ன நடந்தது என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்தது.

சுந்தர் சி இயக்குவதை ரஜினி ஆரம்பத்திலேயே விரும்பவில்லை. கமலின் கட்டாயத்தினால்தான் ரஜினி ஒப்புக்கொண்டார் என சிலர் சொன்னார்கள்.  ஊகங்களும் யூகங்களும்  இந்தப் பிரச்சனையை பூதாகரமாக்கின. 

ஒதுக்கிய பட்ஜெட்டில், திட்டமிட்ட நாளில் படத்தி  வெளியிடும் திறமை சுந்தர் சி யிடம் இருக்கிறாது. அதனால்தான் கலம் அவரைத் தேர்வு செய்தார்.

கனவுப் படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேறக் காரணம் சம்பளப்ப் இரச்சனை  என சிலர் சொல்கிரார்கள்.  ரஜினிய இயக்கும் இன்ரைய இயக்குநர்களுக்கு 50 கோடி  ரூபா கொடுக்கப்படுகிறதாம்.  சுந்தர் சிக்கு 10 கோடி ஒதுக்கப்பட்டதாம். அவர் அதிகமாகக் கேட்டதைக்  கொடுக்க கமல் மறுத்துவிட்டாராம்.

கமலுடன் இணைந்து உதயநிதியின் ரெட் ஜெயுண்ட் நிறுவனம்  இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கமலும், திமுகவும்  இணையும் படத்தில் சுந்தர் சி இருக்கக்கூடாது என  பாரதீய ஜனதா குட்டையைக் குழப்பியதாகவும்  சில பதிவுகள் வெளியாகின. சுந்தர் சியின் மனைவி குஷ்பு  பாரதீய ஜனதாவின் தலைவர்களில் இருவராக  இருக்கிறார். ஆகையினால் சிலர் இதனை அரசியலாக்குகின்றனர். 

அரசியல் பதிவுகளால் ஆத்திரமடந்த  குஷ்பு டுவிட்டரிஒல்  காரசாரமான பதிவுகளை போட்டபின்னர் அதனை நீக்கினார்.

சுந்தர் சி  சொன்ன இரண்டு கதைகளும் ரஜினிக்குப் பிடிக்கவில்லை. ரஜினிக்குக் கதை பிடிக்கும் வரை கதை கேட்போம் என சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல் தெரிவித்தார்.

ரஜினியிடம் சுந்தர் சி இரண்டு கதைகளைச் சொன்னாராம். இரண்டு கதைகளும் ரஜினிக்குப் ப்டிக்க வில்லையாம். அதனால்தான்  சுந்தர் சி விலகினார் என சாரப்பட கமல் தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி போன்ற மாஸ் படத்தை ரஜினி விரும்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

அப்படியான கதைகள்  சுந்தர் சியிடம் கட்டாயம் இருக்கும். ஆனால்,    ரஜினிக்கு ஏன் பிடிக்கவில்லை என்பது கேள்விக்குறியாக  உள்ளது.

10  வருடங்களுக்கு முன்னர் சுந்தர் சி இயக்கிய படம்  பெட்டிக்குள்  முடங்கி இருந்து இந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. மூக்குத்தி அம்மன் 2 பட வேலையில் சுந்தர் சி மும்முரமாக  இருக்கிறார். அடுத்ததாக விஷாலின் படத்தை  இயக்க்ப் போகிறார்.அரண்மனை 5 கைவசம்  உள்ளது.

ரஜினி நிராகரித்த கதைகளை சுந்தர் சி   கட்டாயமாக வெளியிடுவார்.


Sunday, November 16, 2025

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு உயிர் பயத்தில் இலங்கை வீரர்கள்

 

 பாகிஸ்தானில் குண்டு  வெடிப்பு

உயிர் பயத்தில் இலங்கை வீரர்கள்

பாகிஸ்தானில் கிறிக்கெற் தொடர் விளையாடுவதற்காக  இலங்கை அணி சென்றுள்ளது.  மூன்று போட்டிகள்  கொண்ட தொடரின் முதல்  போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.  இரண்டாவது போட்டிக்காக  இரண்டு அணிகளும் தயார் நிலையில் இருந்த போது  இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டு  வெடிப்பால் இலங்கை வீரர்கள் அச்சமடைந்துள்ளனர். இஸ்லாமாத்தில்  இந்தக் குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானார்கள் 20 பேர் காயமடைந்தனர்.

 பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள வானா இராணுவக் கல்லூரியின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள்   திட்டமிட்டிருந்ததாகக் கிடைத்த தகவலை அடுத்து  பாதுகாப்புப் படையினர் அதன முறியடித்தனர்.இதனால் பாரிய சேதம் தவிர்க்கப்பட்டது.

தற்கொலைத் தாக்குதல் நடந்த இஸ்லாமாபாத் நகரில் இலங்கை வீரர்கள் தங்கி இருந்தனர். தற்கொலைத்த தாக்குதலின் விளைவுகளால் அச்சமடைந்த  இலங்கை வீரர்கள்   பாகிஸ்தானில் தங்கி இருப்பதற்குப் பயந்து நாடு திரும்ப வேண்டுகோள் விடுத்தனர்.

கிறிக்கெற்  தொடரின் பாதியில் வீரர்கள் வெளியேறினால்  பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என மற்றைய நாட்டு  வீரர்களும் மறுப்புத் தெரிவிப்பார்கள் என  பாகிஸ்தான் கிறிக்கெற் கருதியது.  சுமார்  10 வருடங்களாக பாகிஸ்தானில் கிறிக்கெற்  போட்டி நடைபெறவில்லை.  அப்படி ஓரு நிலை பாகிஸ்தானுக்கு வரக்கூடாது என்பதில் பாகிஸ்தான் கிறிக்கெற் உறுதியாக  இருந்தது.

 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத சம்பவத்தை இலங்கை வீரர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.  லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில்  விளையாடுவதற்காக இலங்கை வீரர்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது  பயங்கரவாதிகள்  இலங்கை வீரர்கள் சென்ற பஸ்ஸின்  மீது சரமாரியாக கண்மூடித்தனமாகச் சுட்டனர்.

பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளால் மஹேல , குமார் சங்ககார, அஜந்தா மென்டிச், திலன் சமர வீர உள்ளிட்ட வீரர்கள் காயமடைந்தனர்.  இந்தப் பயங்கரவாதச் சம்பவத்தின் பின்னர் சுமார் 10 வருடங்களாக பாகிஸ்தானில் சர்வதேச கிறிக்கெற் நடைபெறவில்லை.

 2009-ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலே முக்கியக் காரணம். லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்திற்கு அணி வீரர்கள் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மஹேல ஜெயவர்த்தனே, குமார் சங்கக்காரா, அஜந்தா மெண்டிஸ், திலன் சமரவீரா உள்ளிட்ட பல இலங்கை வீரர்கள் படுகாயமடைந்தனர். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச கிறிக்கெற் போட்டிகள் நடைபெறவில்லை.

 மூன்று வருடங்களுக்கு முன்னர்  பாகிஸ்தானில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து  வீரர்கள் சென்றனர்.   பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் படலாம் என்ற உளவுத் தகவலால்  நியூஸிலாந்து வீரர்கள்  உடனடியாக பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்கள்.

பாகிஸ்தானின்  உளதுறை அமைச்சரும், பாகிஸ்தான்  கிறிக்கெந்ற் சபையின் தலைவருமான மொஹ்சின் நக்வி இலங்கை வீரர்களை நேரடியாகச் சந்தித்து பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக எடுத்துக் கூறினார்.இலங்கை வீரர்களின் அச்சத்தை அவரால் நீக்க முடியவில்லை.

இலங்கை கிறிக்கெற் சபையுடன் தொடர்புகொண்ட மொஹ்சின் நக்வி   பாதுகாப்புத் தொடர்பாக  உறுதியளித்தார்.

 பாகிஸ்தான்  கிறிக்கெற் சபையின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட இலங்கை கிறிக்கெற் சபை  கிறிக்கெற் போட்டி தொடரும் இலங்கை வீரர்கள் இடையில் திரும்பி வரமாட்டார்கள் என  உறுதியளித்தது.

இலங்கை கிறிக்கெற் சபை வெளியிட்ட அறிக்கையால்  வீரர்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.

 இலங்கை கிறிக்கெற் அணிக்கு பாகிஸ்தான் தகுந்த  பாதுகாப்பு வழங்கி உள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், உதவியாளர்கள்  எவரும்  இடையில் நாட்டுக்குத் திரும்பக் கூடாது. இதனை மீறி  யாராவது நாடு திரும்பினால்  விசாரணை நடைபெறும் என  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு அறிக்கை போல் தெரியவில்லை. எச்சரிக்கை போல் இருப்பதாக  சிலர் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானில் தொடர்ந்து விளையாட இலங்கை வீரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும்,  இலங்கைக்கு நன்றி என பாகிஸ்தான்  அறிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை நடைபெற இருந்த இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும். 15 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற இருந்த மூன்றாவது ஒருநாள் போட்டி 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

ஸிம்பாப்வே, இலங்கை , பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விளையாடும் ரி20 முத்தரப்புத் தொடர் நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகும்.ராவல்பிட்டியில் இரண்டு போட்டிகளும், லாகூரில் ஐந்து போட்டிகளும் நடைபெறும்.

நவம்பர் 27 ஆம் திகதி முத்தரப்புத் தொடர் முடிவடையும். அதுவரை வீரர்கள் பெரும் பதற்றத்தில் இருப்பார்கள். பாகிஸ்தானில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கும்

  


வாக்காளரைக் கவரும் சின்னத்தைத் தேடும் விஜய்

தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்குத் தயாரான விஜய்  தனது கட்சிக்குப் பொதுச் சின்னத்தை ஒதுக்கும் படி  தேர்தல் ஆணையத்திடம்  கோரிக்கை வைத்துள்ளார். தான் விரும்பிய 10 சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் விஜய் சமர்ப்பித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிக்கு சின்னம்  மிக முகியமானது.  சகல தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில்தான் வேட்பாளர்கள்  போட்டியிட வேண்டும். இல்லை என்றால் மக்கள் குழம்பி விடுவார்கள்.

2026ம் ஆண்டின் துவக்கத்தில் நடக்க உள்ள தமிழக சட்டச  தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கு சுமார்  ஆறு மாதங்கள்  இருக்கின்றன.  பெரிய கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன  ஏற்கெனவே பிரசாரத்தைத் தொடங்கி விட்டன. 2026 தேர்தல் அனைத்து கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை  நிர்ணயிக்க போகும் தேர்தல் என்பதால்  தமிழக அரசியல் களமும் பரபரப்பாக மாறி உள்ளது.

தேசிய ,மாநில கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் என புதிதாக களமிறங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றுக் கழகத்துக்கு  இது தான் முதல் தேர்தல்., விஜய்யின் சினிமா செல்வாக்கு தமிழக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்தக் கட்சியின் மீது  அரசியல் கட்சிகளும், மக்களும் கவனமாக தங்களின் பார்வையை பதித்துள்ளனர். திமுகவுக்கும் தவெகவும்மும் தான்  போட்டி என விஜய்  உசுப்பேத்தியுள்ளார். இதனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

தேர்தலை பொறுத்தவரை கட்சியின் சின்னம் என்பது மிக மிக முக்கியம் என்பதால் பொதுவான 10 சின்னங்களை குறிப்பிட்டு, அவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை தரும் படி தேர்தல் கமிஷனிடம் தமிழக வெற்ரிக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கிறிக்கெற்  துடுப்பு, விசில், ஆட்டோ  உள்ளிட்ட 10 சின்னங்கள்  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் தவிர்த்து, தேர்தல் கமிஷனால் பட்டியலிடப்பட்ட சின்னங்களில் ஏதாவது ஒன்றை தான் புதிய கட்சிககும், சுட்சைகளும்  கேட்க முடியும். அந்த குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளர்கள் கேட்ட சின்னத்தை வேறும் யாரும் கேட்கவில்லை என்றால், முதலில் கேட்டவர்களுக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும் என்பது தான் தேர்தல் கமிஷனின் விதி. ஆனால்  அரசியல் கட்சிகளை பொறுத்த வரை, மற்ற யாரும் கேட்காத சின்னமாக இருக்க வேண்டும் என்பதை தாண்டி, தேர்தலின் போது மக்கள் மனதில் எளிதில் பதியக் கூடியதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பார்த்ததும் தெளிவாக தெரியும் படி இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். அப்போது தான் வாக்காளர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து, வாக்குகளை பெற முடியும்.

விஜய் நடித்த பிகில் படம் தெலுங்கில் விசில் என்ற பெயரிலேயே வெளியானது. இந்த படம் அனைத்து மொழிகளிலும் ஹிட் ஆன படம். ஏற்கனவே "வி" என்ற எழுத்தில் துவங்கும் தொகுதியில் தான் விஜய் போட்டியிட போவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருவதால் விஜய்யின் "வி" சென்டிமென்ட் படி விசில் சின்னத்தை தவெக முன்னிலைப்படுத்தி கேட்க அதிக வாய்ப்புள்ளது. விசில் கிடைத்தால் அதை வைத்து ஈஸியாக பிரச்சாரம் செய்ய முடியும் என்று விஜய் தொண்டர்கள் விரும்புகிறார்கள். போக்கிரி படத்தில் ஆசினுக்கு விஜய் விசில் அடிக்கச் சொல்லித் தருவதையே கூட விளம்பரமாக்கி விட முடியும் என்பதும் ஒரு சுவாரஸ்ய எதிர்பார்ப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்   விசில் சத்தமும் விஜய்க்கு  உதவும் என்கிறார்கள்.

 கிகிக்கெற் துடுப்பும் மக்களிடம்  இலகுவில்  சேரக்கூடியவை. இந்த இரண்டு சின்னங்களுமே விஜய்யின் சினிமா ரசிகர்களை எளிதில் கவரும். மக்களின் மனதிலும் பதியும். அதேசமயம், ஆட்டோரிஷா சின்னத்தை ரசிகர்கள் விரும்பவில்லை. காரணம், ரஜினியின் பாட்ஷா ஆட்டோ என எதிர்த் தரப்பு கையில் எடுக்கும் என்பதால் ரசிகர்களுக்கு அதில் உடன்பாடு இல்லையாம்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்ரி பெற்று  விஜய் முதல்வராக வேண்டும் என்றால் தமிழகத்தில் வாக்கு வங்கி உள்ள கட்சியுடன்  சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும். விஜயுடன் சேர்வதற்கு பல கட்சிகள்  முயற்சி செய்தன. எல்லாம் தோல்வியில் முடிந்து விட்டன. பாரதீய ஜனதாவுடன்  கூட்டிணைந்திருக்கும் எடப்பாடியும் விஜய்க்குத் தூண்டில் போட்டார். அந்தத் தூண்டிலில் விஜய் சிக்க வில்லை.

தமிழக வெற்ரிக் கழகத்துக்கு 25 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக விஜய்க்குச் சொல்லப்பட்டிருக்கிறது.  இந்த 25 சதவீத வாக்கு வங்கியால்  முதல்வராகி விட முடியாது.

விஜயின் கட்சியில் விஜயைத் தவிர வேறு எவரும்  பிரபலமானவராக  இல்லை.  இன்றைய நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதா ஆகியன ஒன்றிணைந்து  விஜயைத் தோற்கடிக்க  முயற்சி செய்யும் என்பது நிதர்சனம்.

விஜய் எந்த ,ஏடையில் ஏறினாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஸ்டாலினையும் , உதயநிதியையும் கேலியாகவும், கிண் டலாகவும், கோபத்துடனும் விமர்சிப்பார்.  விஜயின் அடுத்த படமான ஜனநாயகன் படத்தின்  ஒளிபரப்பு உரிமையை சன் நிறுவனம் வாங்கி உள்ளது. இது என்ன கூத்து என  வ்மர்ச்கர்கள்  கேட்கிறார்கள்.

ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமை வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன். இப்படம் ஜனவரி 9‍ம் திக‌தி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. இதன் தமிழக உரிமை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. முதலில் இப்படத்தின் உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றி இருந்தார். தற்போது, அவர் கூறிய மாதிரி பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அவர் தவிர்த்து தமிழக உரிமையினை யாருக்கு வழங்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் படக்குழு இறங்கியிருக்கிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ பாணியில் ஒவ்வொரு ஏரியா உரிமையினையும் தனித்தனியாக வாங்கிவிடலாம் என்று விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள். ஆனால், தமிழக உரிமையினை ஒட்டுமொத்தமாக ஒருவரிடம் தான் வழங்க வேண்டும் என்ற முடிவில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது.

ஏனென்றால், ஒட்டுமொத்த தமிழக உரிமை விற்பனையின் மூலம் சுமார் ரூ.100 கோடி வரை எதிர்பார்க்கிறது தயாரிப்பு நிறுவனம். தனித்தனியாக விற்பனை செய்தால் இந்தப் பணம் வருமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் என்பதால் ஒட்டுமொத்த உரிமையும் ஒருவருக்கே என்ற நிலையில் இருக்கிறார்கள். இதனால் ’ஜனநாயகன் உரிமை யாருக்கு என்பது விரைவில் தெரியவரும். 

ரமணி

16/11/25 

  

தென்னாப்ரிக்காவை சமாளிப்பாரா கில்?


  இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த   நவம்பர் 14ம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமானது.

தென்னாப்ரிக்காவை சமாளிக்குமா இந்தியா? டெஸ்டில் யார் ஆதிக்கம், கில் படைக்கான சவால் என்ன? போன்ற கேள்விகள் ரசிகர்களிடம்  உள்ளது.   தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  இந்தியா விளையாடுகிறது.  தொடர்ந்து   3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில்  இரண்டு நாடுகளும் விளையாட உள்ளன.

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, தென்னாப்பிரிக்கா 18 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. கடைசியாக தென்னாப்பிரிக்க இந்திய மண்ணில் கடந்த 2019-20 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில்,  இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான டெஸ்ட் தொடர் 2015 முதல் சுதந்திரக் கிண்ணம் என்று அழைக்கப்படுகிறது. அகிம்சை வழிமுறைகள் மூலம் இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் சுதந்திரத்தை அடைவதில் மகாத்மா காந்தி,  நெல்சன் மண்டேலா ஆகியோரின்  பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த தொடருக்கு சுதந்திர கோப்பை தொடர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.தென்னாப்ரிக்காவுக்கு எதிராக அதிக டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கிறார். 25 போட்டிகள் ,45 இன்னிங்ஸ்களில், அவர் 42.46 சராசரியாக 47.72 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1,741 ஓட்டங்கள் எடுத்துள்ளார். டெண்டுல்கர் 7 சதங்களையும்,  5 அரை சதங்களையும் அடித்துள்ளார்.  மூன்று முறை மட்டுமே டக்-அவுட் ஆனார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் தென்னாப்ரிக்காவின் ககிசோ ரபாடா முதலிடம் வகிக்கிறார்.   14 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளர்.

உள்ளூரில் அணியை வழிநடத்தாவிட்டாலும், தனது முதல் தொடரையே இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்நாட்டில் கப்டன் கில் தொடங்கினார். கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்தார். போதிய அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்டே, அந்த தொடரை சமன்படுத்தியதே பெரும் வெற்றியாக கருதப்பட்டது. இதையடுத்து உள்ளூரில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர், எந்தவித சவாலும் இன்றி மிகவும் எளிதாக முடிந்தது. இந்நிலையில் தான், வலுவான தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில் அணி களமிறங்க உள்ளது.

Thursday, November 13, 2025

இந்தியாவை உலுக்கிய டெல்லியை குண்டு வெடிப்பு

இந்தியாவின் தலைநகரான டெல்லியில்  கடந்ததிங்கட்கிழமை நடந்த  கார் குண்டு வெடிப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும்  உலுக்கி உள்ளது. மக்கள் நெரிசலாக உள்ள செங்கோட்டை இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று.  பீகார் தேர்தலில் இந்தியாவின் கவனம் முழுவதும் இருந்த வேளையில்  தலைநகரில் குண்டு வெடித்துள்ளது.

  ரெட் போட் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே கார் குண்டு வெடித்தது என அறிவிக்கப்பட்டதால்  தற்கொலைத் தாக்குதலாக  இருக்குமோ என்ற‌  அச்சம் முதலில் ஏற்பட்டது. குண்டு வெடிப்பு,  தற்கொலைத் தாக்குதல் என்றால் அழிவு அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.ஆனால், 13  பேர் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

வழமையான குண்டு வெடிப்புக்கான அடையாளம் எதுவும் அங்கே இல்லை. பாரியகுழி, சம்பவம் நடந்த இடத்தைச்  சுற்றி இருந்த  கார்கள், கட்டடங்க எவையும் அதிகம் பாதிக்கப்படவில்லை இது பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் இது திட்டமிட்ட குண்டு  வெடிப்பு அல்ல என்று புலனாய்வாளர்கள் கருதுகிறார்கள். வெடிகுண்டுகளை இடமாற்றம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட விபத்தாக  இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.  குண்டு வெடித்தபோது நெரிசல் மிகுந்து இருந்ததால் கார் மெதுவாக நகர்ந்தது.  வீதியில் இருந்த  மேடு பள்ளம் காரணமாகவும்  குண்டு வெடித்திருக்கலாம் என வல்லுன‌ர்கள் கருதுகிறார்கள். பாதுகாப்பு, கெடுபிடி, சோதனைகள்  போன்றவற்றால் பதற்றத்தில் ஏற்பட்ட விபத்து என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.  சரியான முறையில் வெடிகுண்டு பொருத்தப்படாததனால் அதிக  சேதம் ஏற்படவில்லை.

காரைச்  செலுத்தியவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டரான உமர் நபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.     மூன்று   நாட்களாக அவரது தொலசிபேசி இயங்கவில்லை. யாருடனும் தொடர்பில் இல்லாது தலை மறைவாக  இருந்தார்.

துரித கதியில் செயற்பட்ட இந்திய புலனாய்வுத்துறை பலரைக் கைது செய்தது. அதில் அதிகமானோர் டாக்டர்கள், சிலர் இளைஞர்கள்.

டெல்லித் தாக்குதலில் சூத்திரதாரியாகச் செயற்பட்டவர்கள் டாக்டர்கள் என்பதால் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில் ஒரு பெண் டாக்டரும் அடங்குகிறார். உயிரைக் காப்பாற்றும் டாக்டர்களே உயிரைக் குடிக்கும் பயங்கர்வாதிகளாகச் செயற்படுகிறார்கள்.

ஒபரெஷன் சிந்தூர் நடவடிக்கைகு பழிவங்குவதற்காக ஜெய்ஷ் - இ - முகமது   அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

  ஜெய்ஷ் - இ - முகமது   அமைப்புக்கு ஆதரவாக காஷ்மீரில்  பதாகைகள்  ஒட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய ஆதில் என்ற டாக்டர் உத்தரபிரதேசத்தில்  பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

 அவரிடம் இருந்து 550 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே., - 56, ஏ.கே., - 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

   ஆதில் கொடுத்த தகவலின் பிரகாரம் ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையின் மருத்துவக் கல்லுாரி விரிவுரையாளர் முஸமில் கைது செய்யப்பட்டார். அவர் தங்கி இருந்த வீட்டில்  350 கிலோ, 'அமோனியம் நைட்ரேட்' வெடிபொருட்கள், துப்பாக்கிகள்  போன்ரவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

  இந்த ஆயுதங்களை கடத்துவதற்கு கார் கொடுத்து உதவிய   உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மருத்துவ கல்லூரியில் புரோபஷராக பணியாற்றிய டாக்டர் ஷாகின் ஷாஹித் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது மகளிர் அமைப்பின் இந்தியப் பிரிவுக்கு தலைமை தாங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் அவரது பின்னணி பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.  இதில் தொடர்புடைய நான்காவது டாக்டரான உமர், கைது நடவடிக்கைகளால் தலைமறைவான நிலையில், வெடிபொருட்கள் நிரப்பிய காரை டில்லி செங்கோட்டைக்கு ஓட்டிச்சென்று வெடிக்க செய்துள்ளார்.

டாக்டர்களையும், இளைஞர்களை தீவிரவாத கொள்கைகளுக்குள் ஈர்த்ததாக கருதப்படும் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியை சேர்ந்த இமாம் இர்ஃபான் அகமது வாகா செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.

இவர் இதற்கு முன்பு ஸ்ரீநகரில் உள்ள அரசுக் மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ ஊழியராகவும்   பின்னர் நௌகாமில் இமாமாகவும் பணியாற்றியவர்.

இர்ஃபான் அகமது வாகாவின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் (radicalising) இவர்கள் ஈடுபட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி குண்டுவெடிப்புக்கு மூல காரணமான வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் எங்கிருந்து ,எத்தனை மணிக்கு டெல்லி  சென்றது?, யார் யார் இந்த காரை வைத்திருந்தனர்? எப்படி இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் குண்டு வெடித்த அன்று காலையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களும், ஏகே 47 துப்பாக்கிகளும்  பறிமுதல் செய்யப்பட்டன.

 . இதனால்  பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பயங்கரவாதிகள் வெடிபொருட்களை மாற்றும்போது எதிர்பாராதவிதமாக டெல்லி சிக்னல் அருகே நின்றபோது வெடித்து சிதறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

  டெல்லி குண்டுவெடிப்புக்கு காரணமாக கூறப்படும், 'ஹூண்டாய் ஐ -20' கார், ஹரியானா மாநிலம் பரிதாபாதில் இருந்து டெல்லிக்கு வந்தது என்பதை சிசிடிவி காட்சிகள் மூலமாக பொலிஸார் உறுதி செய்தனர். ஹரியானாவில் இருந்து புறப்பட்ட கார்  சம்பவம் நடந்த அன்று காலை 7:30 மணிக்கு இந்த கார்ஹரியானாவில் இருந்து  புறப்பட்டது.

 காலை 8:13 மணியளவில் டெல்லியின் நுழைவுவாயிலாக கருதப்படும் பதர்பூர் சுங்கச்சாவடி அருகே காணப்பட்டது. அங்கிருந்து காலை 8:20 மணியளவில் டெல்லி ஓக்ல தொழிற்பேட்டை அருகே உள்ள பெட் ரோல் நிலையத்தைக்  கடந்து சென்றது.

 மாலை 3:19 மணியளவில் டெல்லி செங்கோட்டை வளாகம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில்  சுமார் 3 மணி நேரம் வரை நிறுத்தப்பட்டிருந்தது. * இதன் பிறகு தான் அந்த கார் மாலை 6:22 மணியளவில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து டெல்லி செங்கோட்டை நோக்கிச் சென்றது.. அப்போது சரியாக மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சிக்னலில் வந்த போது அந்த கார் வெடித்து சிதறியுள்ளது.

 ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த 35 வயதான  உமர் முகமது என்பவர் தான் காரை  செலுத்தியவர் என  கண்காணிப்பு கமிரா காட்சிகள் மூலமாக தெரியவந்துள்ளது. இவர் சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பார் எனவும், சிதைந்த உடல் இவருடையதாகத்தான் இருக்கும் என சந்தேகித்துள்ள பொலிஸார் டிஎன்ஏ சோதனை செய்ய உத்தரவிட்டு இருக்கிறார்கள். உமர் முகமது பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்தவர் . ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களும் அங்குதான் பணியாற்றி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 டெல்லி குண்டு வெடிப்புக்கு காரணமான வெள்ளை நிற ஹுண்டாய் ஐ20 கார்  முதலில் 2014 ஆம் ஆண்டு பழைய குர்கானில் வசிக்கும் திலீப் என்பவரால் வாங்கப்பட்டது. ஏழு ஆண்டுகளின்  பின்னர்  அவர் காரை விற்று விட்டார்.

பலரிடம் கைமாறிய  இந்தக் கார்  சோனு என்ற முகவர் மூலம் ஃபரிதாபாத்தில் உள்ள தௌஃபிக்கிற்கு விற்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக கார் ஃபரிதாபாத்தில்தான் இருந்தது.

டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிற‌தா என்ற‌ கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

கைதுசெய்யப்பட்ட பெண் மருத்துவர் ஷாஹீனிடம் புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியருகின்றன.

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது   அமைப்புடன் தொடர்புடைய ஷாஹீன், அந்த அமைப்பின் பெண் ஆள்சேர்ப்பு மற்றும் செயல்பாட்டு வலையமைப்பான ஜமாத்-உல்-மோமினீனின் கீழ் இந்தியாவில்  ஜெய்ஷ் இ முகமது பெண்கள் பிரிவை நிறுவி வழிநடத்தும் பணியில் அவர் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்திய மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு என எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டுகின்றன.

காஷ்மீர், மணிப்பூர், டெல்லி, புல்வாமா, பஹல்காம் , தற்போது மீண்டும்  தலைநகர் டெல்லியில் குண்டு வெடித்துள்லது.பல இடங்களிலும் நடைபெற்றுள்ள

டெல்லிக் குண்டு வெடிப்பை தடுக்கத்  தவறியதற்கு யார் பொறுப்பு? நிர்வாகத்தின் எந்த இடத்தில் குறைபாடு உள்ளது? கடமையை செய்ய தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தானே மீண்டும் இப்படி நிகழ்வு அரங்கேறாமல் இருக்கும்? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.

Wednesday, November 12, 2025

இவர்கள் எனது நண்பர்கள்


 சத்தியமாகச் சொல்கிறேன்

இவர்கள் எனது நண்பர்கள்

நீங்கள் நம்பினாலும்

நம்பாவிட்டாலும்

இவர்கள் எனது நண்பர்கள்

 

வகை வகையான நண்பர்கள்

வித விதமான நண்பர்கள்

தினிசு தினிசான நண்பர்கள்

புதிசு புதிசான நண்பர்கள்

 

எனக்குத் தெரிந்த நண்பர்கள்

என்னைத் தெரிந்த நண்பர்கள்

ஒத்த கருத்துடைய நண்பர்கள்

மாற்றுக் கருத்துடைய நண்பர்கள்

 

கெளரவ நண்பர்கள்

அகமறியும் நண்பர்கள்

புகழ் விரும்பும் நண்பர்கள்

பெருமை பேசும் நண்பர்கள்

 

எல்லை தாண்டும் நண்பர்கள்

கல்லை எறியும் நண்பர்கள்

தொல்லை தரும் நண்பர்கள்

பல்லைக் காட்டும் நண்பர்கள்

 

முகம் காட்டும் நண்பர்கள்

முகத்தை மறைகும் நண்பர்கள்

அகம்பாவ நண்பர்கள்

மதம்  பிடித்த நண்பர்கள்

 

புரளி பேசும் நண்பர்கள்

பரணி பாடும் நண்பர்கள்

அரட்டை அடிக்கும் நண்பர்கள்

குறட்டை விடும் நண்பர்கள்

 

பாங்கான படங்களுடன்

பவனி வரும் நண்பர்கள்

சிங்காரச் சிறுக்கிகளால்

சீரழியும் நண்பர்கள்

 

தற்பெருமை பேசும் நண்பர்கள்

தம்பட்டம் அடிக்கும் நண்பர்கள்

பொய்பரப்பும் நண்பர்கள்

புகழ் பாடும் நண்பர்கள்

 

லைக் போடாத நண்பர்கள்

வாழ்த்து சொல்லாத நண்பர்கள்

அனுதாபம் சொல்லாத நண்பர்கள்

பின்னூட்டம்  போடாத நண்பர்கள்

 

எட்டாம் வகுப்பை எட்டாத‌வனும்

பத்தாம் வகுப்பை தாண்டாதவனும்

பல்கலைக் கழக பட்டதாரி என‌

பந்தா காட்டும் நண்பர்கள்

 

சத்தியமாகச் சொல்கிறேன்

இவர்கள் எனது நண்பர்கள்

நீங்கள் நம்பினாலும்

நம்பாவிட்டாலும்

இவர்கள் எனது நண்பர்கள்

 

 

 

சூரன்.ஏ.ரவிவர்மா

ஜீவநதி

ஆடி 2025

 

 

 

ஓய்வுக்குத் தயாராகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ


  உதைபந்தாட்டஜாம்பவானான  கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பளபளப்பான வாழ்க்கைக்கு கண்ணீர் மல்க முடிவு கட்டத் தயாராகி வருவதால், விரைவில் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .

பியர்ஸ் மோர்கன் அன்சென்சார்டுக்கு அளித்த பேட்டியில்,   ஓய்வு , உதைபந்தாட்டம் ஆகிஅயவற்றுக்குப் பின்னர்  பிறகு தனது வாழ்க்கை குறித்த தனது எண்ணங்களைப் பற்றி ரொனால்டோ கருத்துத் தெரிவித்தார்.

  952 கோல்களை அடித்து சாதனை செய்த 40 வயதான அவர், விளையாட்டு வரலாற்றில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட வீரர்களில் ஒருவர், ஆனால் அவரது வியக்கத்தக்க வாழ்க்கைக்கு முடிவு நெருங்கி வருகிறது.

2027 வரை அல் நாசருடன் ஒப்பந்தத்தில் இருக்கும் ரொனால்டோ எப்போது ஓய்வு பெறுவது என்று யோசிப்பீர்களா என்று கேட்டதற்கு, "விரைவில். ஆனால் நான் தயாராக இருப்பேன் என்று நினைக்கிறேன்" என்று பதிலளித்தார்.

"நிச்சயமா அது கஷ்டமா இருக்கும். கஷ்டமா இருக்கும்? ஆமா. அழுவேன், ஆமா. நான் ரொம்ப திறந்த மனசுக்காரன். அது ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கும், ."

"ஆனால் பியர்ஸ், நான் 25, 26, 27 வயதிலிருந்தே எனது எதிர்காலத்தைத் தயார்படுத்திக் கொண்டேன்.. எனவே அந்த அழுத்தத்தை என்னால் ஆதரிக்க முடியும் என்று நினைக்கிறேன்." 

"ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பம் உண்டு, எல்லாவற்றிற்கும் ஒரு முடிவும் உண்டு. எனக்கு வேறு ஆர்வங்கள் உள்ளன. எனக்காக எனக்கு அதிக நேரம் கிடைக்கும், என் குடும்பத்திற்கு என் குழந்தைகளை வளர்க்க அதிக நேரம் கிடைக்கும் என ரொனால்டோ தெரிவித்தார்.

ரொனால்டோ தனது குடும்பம் , மைதானத்திற்கு வெளியே தனது நலன்களில் கவனம் செலுத்த விரும்புவதால், உதைபந்தாட்டம்  இல்லாமலேயே சமாளிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.

  

Friday, November 7, 2025

வரலாற்றை மாற்றி உசுப்பேற்றும் ஆதவ் அமைதியாக ரசித்து சிரித்த விஜய்

வரலாற்றை மாற்றி உசுப்பேற்றும் ஆதவ்

அமைதியாக ரசித்து சிரித்த விஜய்

 

கரூர் சம்பவத்தில் இருந்து தவெக மெது மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.  கரூரில் நடந்த வரலாரு காணாத துயர சம்பவத்தால் வெளிச்சத்துக்கு வராத விஜயும் அவரது  நிர்வாகிகளும் தமிழக அரசுக்கு சவால் விடும் அளவுக்கு தெம்படைந்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில்   தமிழக  வெற்றிக் கழக  சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 1,400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

சிறப்புப் பொதுக் குழுக்கூட்டத்தில் பேசியவர்கள் கரூர் சம்பவத்துக்கு தமிழக அரசே காரணம் என்றார்கள். விஜயின்  பேச்சுத்தான் எப்பவும் காரசாரமாக  இருக்கும். ஆனால், மாமல்லபுரக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனவின் பேச்சு வழமையை விட ஆக்ரோஷமாக  இருந்தது. துரைமுருகன், ஸ்டாலின்,உதயநிதி என அனைவரையும் விட்டுவைக்காமல் ஒருமையில் சவால் விட்டுப் பேசினார்.  ஆதவ் அர்ஜுனவின்  பேச்சு எல்லை மீறும் வகையில் இருந்தது.  அந்த உரையை விஜய் ரசித்துக்கொண்டிருந்தார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ப‌லத்த கரகோஷத்துடன் ஆதவ் அர்ஜுனவின் உரையை ஆமோதித்தார்கள்.

ஆதவ் அர்ஜுனவின் பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தது.

கரூர் விவகார விசாரணைக்கும் தமிழக அரசுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. அந்த விசாரணை சிபிஐயின் கைகளுக்குச் சென்றுட்டது. சிபிஐ மத்திய அரசின் கைப்பொம்மை என  ஒரு காலத்தில் விஜய் அறிக்கை விட்டார். கரூர் விசாரனையை தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது ஐபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக விரும்பியது. விஜயின் விருப்பம் போலவே ஐபிஐ  விசாரணையை ஆரம்பித்து விட்டது. இந்த  உண்மைதெரிந்துகொண்டும் ஆதவ் அர்ஜுன தமிழக அரசுக்குச் சவால் விடுகிறார்.

தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கைவையுங்கள் பார்ப்போம்.  முதலில் அவர் வீட்டுக்குச் செல்லுங்கள்  பார்ப்போம்  ஒட்டுமொத்த மாணவர்களும் உங்கள் வீட்டுக்கு வருவார்கள் என  உணர்ச்சிகரமாக ஆதவ் அர்ஜுன  பேசினார்.

கல்லூரி மாணவர்கள்  உசுப்பேத்தும் ஆதவ் அர்ஜுனவின் பேச்சை சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கிரார்கள்.2026 இல் மாணவர் புரட்சி வெடிக்கும் என்கிறார் ஆதவ்  அர்ஜுன. தனது டுவிற்றரில்  மாணவர் புரட்சி  வெடிக்கும் எனப்பதிவிட்டு உடனடியாக அதனை  டிலீட் பண்ணியவர்தான் இந்த ஆதவ் அர்ஜுன. இப்போது மீண்டும்  மாணவர் புரட்சி பற்றி   பேசி உள்ளார்.

இலங்கை,பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் நடந்த புரட்சி போல் தமிழகத்திலும் மாணவர் புரட்சி  வெடிக்கும் என ஆதவ் அர்ஜுன அடிக்கடி கருத்துத் தெரிவிக்கிறார். அந்த நாடுகளில்  புரட்சி ஏற்பட்டதன்  பின்னணி என்ன என்ப‌தை ஆதவ் அர்ஜுன நன்கு அறிவார்.  தமிழகத்தில்  அப்படி இரு நிலை இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். உசுப்பேத்தி  கைதட்டல் வாங்க வேண்டும் என்பதற்காகவே ஆதவ்   மேடையில் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நள்ளிரவு கலைஞர் கைது செய்யப்பட்டபோது  ஸ்டாலின்  ஓடி ஒழித்ததாக ஆதவ் அர்ஜுனா கதை விட்டார். அதற்கும் தவெக தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அந்தச் சம்பவம் நடந்தபோது பெங்களூரில் நின்ற ஸ்டாலின் மறுநாள் நீதிமன்றத்தில் சரணடைந்து தன்னைக் கைது செய்யும்படி கேட்டார். அன்று ஸ்டாலின்  பிணையில் விடுதலை செய்யப்பட்டார். குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படாமலே  கலைஞரும், ஸ்டாலினும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஸ்டாலினைப் போல் நாங்கள்  ஓடுபவர்கள் அல்ல என்ற ஆதவ் அர்ஜுனவின் பேச்சு சமூக வலைத்தலங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. கரூர் சம்பவத்தின் பின்னர் தலை தெறிக்க ஓடியது யார் என சமூக வலைத்தளங்கள்  கேள்வி எழுப்பி உள்ளன.

1000 ரூபா மகளிருக்கான  உதவித்தொகை வேண்டாம்,  மகளிருக்கு இலவச பஸ் சேவை வேண்டாம் என தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்குக் காரணமான  இரண்டு திட்டங்கலையும் தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பது ஆச்சரியமாக  உள்ளது. தமிழகத்தைப் பின்பற்றி வேறு  மாநிலங்கலிம்  இந்தத் திட்டங்களைப் பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளன.

 முதல்வர்  வேட்பாளர் விஜய் என்ற தீர்மானம் எடப்பாடிக்கு பலத்த அடியாக விழுந்துள்ளது. விஜயுடன் கூட்டணி வைத்து  அடுத்த முதல்வராகலாம் என்ற கனவில் இருக்கும் எடப்பாடி சித்தம் கலங்கி உள்ளார்.

25 சதவீத வாக்கு  இருப்பதாக தவெக கணக்குப் போட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க 25 சத வீத வாக்கு வங்கி போதுமானதல்ல.  முறைந்தது 10 சதவீத வாக்கு உள்ள கடியுடன் அல்லது கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால்தான் விஜயின் கனவு நனவாகும்.

 ரமணி

9/11/125

 

விற்பனைக்கு வந்தது RCB அணி மார்ச் 2026-க்குள் முடிவெடுக்க திட்டம்

 IPL தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை விற்பனை செய்வது குறித்து அதன் உரிமையாளர்கள் ஆராய்ந்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அணியின் தாய் நிறுவனமான Diageo, இது குறித்து "மூலோபாய மறுஆய்வை" தொடங்கியுள்ளதாக இந்தியப் பங்கு சந்தைக்கு தெரிவித்துள்ளது.

Diageo Plc, தங்கள் இந்திய துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) மூலம் இந்த அணியை நடத்தி வருகிறது.

RCB அணியை வைத்திருக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (United Spirits Ltd - USL), ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (RCSPL) மீதான முதலீட்டை மறுஆய்வு செய்வதாக அறிவித்துள்ளது.

ஆர்.சி.எஸ்.பி.எல். ஒரு மதிப்புமிக்க மற்றும் மூலோபாய சொத்தாக இருந்தாலும், இது எங்கள் ஆல்கஹோல் வணிகத்தின் மையப் பகுதி அல்ல," என்று USL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரவீன் சோமேஸ்வர் பங்குச் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அணி உரிமையாளர்கள் RCB-க்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 16,600 கோடி) மதிப்பீடு கோருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மறுஆய்வு செயல்முறை மார்ச் 31, 2026-க்குள் முடிவடையும் என்று USL தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஐபிஎல் (ஆடவர்) கிண்ணத்தை  வென்றதன் மூலம், ஆர்.சி.பி. அணியின் வர்த்தக மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இந்த விற்பனை குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன.

 வரலாற்றில் இது மிக பெரிய விற்பனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RCB-யை வாங்குவதற்கு பல முக்கிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதில் சில:

ஆதர் பூனாவாலா- சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி.

JSW Group- டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பங்கு வைத்திருக்கும் பார்த் ஜிண்டால் தலைமையிலான குழு.

அதானி குழுமம்.

ஐ.பி.எல். அணியின் உரிமையாளரை மாற்றும் இந்த முடிவு, ஐபிஎல் 2026 மெகா ஏலத்துக்கு முன்னதாக வீரர்களை தக்கவைப்பது (Retention) மற்றும் அணியின் மேலாண்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

இருப்பினும், ஆர்.சி.பி. அணியின் ஐகான் வீரரான விராட் கோலி தொடர்ந்து அணியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  

Monday, November 3, 2025

100 நாள் கவுண்டவுன் ஆரம்பம்


 மிலன்-கோர்டினா 2026   ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், கடந்த புத‌ன்கிழமை இத்தாலி   நகரம் முழுவதும் கவுண்ட்டவுன் ஆரம்பமாகிஒயது.

 ஒலிம்பிக் போட்டி 2026 ஆம் ஆண்டு  பெப்ரவரி 6 முதல் 22,  வரை  நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.    மார்ச் 6 முதல் 15 வரை பராலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டி நடைபெறும். மிலன், கோர்டினா டி'அம்பெஸ்ஸோ, வால்டெல்லினா, வால் டி ஃபீம் லிவிக்னோ ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும், நகர்ப்புற இடங்களை ஆல்பைன் அமைப்புகளுடன் கலக்கின்றன. மிலனின் சான் சிரோ ஸ்டேடியம் தொடக்க விழாவை நடத்தும், நிறைவு விழா வெரோனா அரங்கில் நடைபெறும்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஏற்பாட்டுக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மிலன்-கோர்டினா 2026, முன்னேற்றத்தை கோடிட்டுக் காட்டவும், புதிய விளையாட்டு நேர விவரங்களை வெளியிடவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. ஒலிம்பிக் , ப‌ராலிம்பிக்ஸ் இரண்டிற்கும் பதக்க விழா மேடை வடிவமைப்பு வெளியிடப்பட்டது.ஜோதி  ஓட்டத்தை  ஒன்லைனில் பகிர்ந்து கொள்ளவும், பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் ஒரு டிஜிட்டல் தூதர் குழுவின் ஒரு பகுதியாக 12 "டிஜிட்டல் ஜோதி தாங்கிகள்" அறிமுகப்படுத்தப்பட்டன.


 நகரம் முழுவதும் ஒலிம்பிக் படங்கள் அதிகரித்து வருகின்றன. டியோமோவிற்கு அருகிலுள்ள ஒரு பெரிய கவுண்டவுன் கடிகாரம் குடியிருப்பாளர்கள் , பார்வையாளர்களுக்கு ஒரு பிரபலமான புகைப்பட இடமாக மாறியுள்ளது, அதே நேரத்தில் நகர மண்டபத்திற்கு வெளியே உள்ள தற்காலிக சின்னங்கள் வழிப்போக்கர்களை நிறுத்தி புகைப்படம் எடுக்கத் தூண்டியுள்ளன. பல குடும்பங்கள் குழந்தைகளுடன் போஸ் கொடுத்தன. பிரபல கடிகாஅர நிறுவனமான ஒமேகா ஒலிம்பிக் எஐம் கீப்பரை வெளியிட்டது.

மிலனின் பனி அரங்குகள் பனி தயாரித்தல் மற்றும் நேர சோதனைகளை முடித்துவிட்டன. மலைத்தொடர்கள் பனி நடவடிக்கைகள், வானிலை ஆய்வு, மருத்துவ ஆதரவு மற்றும் ஒளிபரப்பு தற்செயல்களுக்கான திட்டங்களை இறுதி செய்து வருகின்றன. கூட்ட மேலாண்மை, திரையிடல்,தகவல் தொடர்பு மீள்தன்மை ஆகியவற்றிற்குத் தயாராவதற்கு பாதுகாப்பு பயிற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. கிரேக்கத்தில் சுடர் ஏற்றப்பட்ட பிறகு  ஜோதி தொடர் ஓட்டம் நடைபெறும். 

ரமணி