Friday, July 3, 2026

குரோஷியாவின் கோலை மறுத்த ஸ்னிக்கோ தொழில்நுட்பம்

போத்துகல்,குரோஷியா ஆகியவற்றுக்கிடையே  டொராண்டோவில் நடைபெற்ற போட்டியில்  2-1 என்ற கோல் கணக்கில் போத்துகல் வெற்றி பெற்றது.

கூடுதல் நேரத்தின் இறுதிக் கட்டத்தில் ரூபன் நெவ்ஸ் பந்தைத் தனது சொந்த வலைக்குள் திருப்பியபோது, குரோஷியா அணி ஆட்டத்தைக் கூடுதல் நேரத்திற்கு இழுத்துவிட்டதாக நினைத்தது. ஆனால், VAR மறுஆய்வுக்குப் பிறகு அந்த கோல் ஒஃப்சைட் காரணமாக இறுதியில் நிராகரிக்கப்பட்டது.

கோல் அடிக்கப்படுவதற்கு முன்னர், குரோஷிய வீரர் பந்தைத் தொட்டாரா என்பதைத் தீர்மானிக்க, கிரிக்கெட்டில் அதன் பரவலான பயன்பாட்டிற்காக நன்கு அறியப்பட்ட 'ஸ்னிக்கோ' தொழில்நுட்பமும் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது.

இந்தத் தொழில்நுட்பம், 2022-ல் கட்டாரில் நடைபெற்ற  உலகக் கிண்ணத்  தொடர் முதல் அதன் VAR அமைப்பின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

"உலகக் கிண்ண அதிகாரப்பூர்வ போட்டிப் பந்தான அடிடாஸ் ட்ரியோண்டாவில் உள்ள 'கனெக்டட் பால் டெக்னாலஜி' வழங்கிய தரவுகளின்படி, போத்துகலுக்கு எதிரான கோல் அடிக்கப்படுவதற்கு முன்னர் குரோஷியாவின் இகோர் மட்டனோவிச் பந்தைத் தொட்டது நிரூபிக்கப்பட்டது. இதன்மூலம் நடுவர் ஓஃப்சைட்டைச் சரியாகத் தீர்மானித்து, கோலை நிராகரிக்க முடிந்தது," என்று ஃபிஃபா கூறியது.

டிரையோண்டா பந்தினுள் பொருத்தப்பட்டுள்ள IMU சென்சார்கள், பந்தில் ஏற்படும் மிகச்சிறிய தொடர்பையும் கண்டறியும் திறன் கொண்டவை. இது ஒளிபரப்பில் பார்வையாளர்களுக்கு 'இதயத்துடிப்பு வரைபடம்' போலக் காட்டப்பட்டு, வேகமான மற்றும் துல்லியமான முடிவுகளை எடுக்க அதிகாரிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிலான தரவுகளை வழங்குகிறது.

  

No comments: