Friday, July 3, 2026

உலகக் கிண்ணத்தில் ரொனால்டோவின் சாதனைக் கோல்

டொராண்டோ மைதானத்தில்  குரோஷியாவுக்கு எதிரான நொக் அவுட் போட்டியில் விளையாடிய போத்துகல் 2-1 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

 உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் நொக் அவுட்  சுற்றில் கோல் அடித்த மூத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.  இப்போட்டியின் முதல் பாதியில் போர்ச்சுகல் அணி பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்திருந்த போதிலும், கோல் அடிக்கத் தடுமாறியது. மைதானத்தில் குரோஷியா ரசிகர்கள் தொடர்ந்து ரொனால்டோவை கூச்சலிட்டு சீண்டினர். ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் முதல் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார். அதனால் 2018-இல் ரன்னர்அப் , 2022-இல் 3-வது இடத்தைப் பிடித்த குரோஷியா இந்த முறை ரொனால்டோ அணியை வீழ்த்தி விடுமோ? என்ற பரபரப்பு ஏற்பட்டது.   68-வது நிமிடத்தில்  போத்துகல் வீரர் ரெனாடோ வைகாவை, குரோஷியாவின் விலாசிக் ஃபவுல் செய்ததால் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கிறிஸ்டியானோ ரொனால்டோ மிக நேர்த்தியாக கோலாக மாற்றி ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். இதன் மூலம் உலகக் கிண்ண நொக் அவுட்  போட்டியில் முதல் கோல் , மிக மூத்த வீரர் என்ற  இரட்டைச் சாதனையை அவர் படைத்தார்.

 81-வது நிமிடத்தில் ரொனால்டோ வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து கூடுதல் நேரத்தின் 4-வது நிமிடத்தில், மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கிய கோன்சலோ ராமோஸ் தலையால்  கோல் அடித்து   2-1 என போத்துகலை  முன்னிலை பெறச் செய்தார்.

 ஆட்டத்தின் கடைசி வினாடியில் குரோஷியா அணி அடித்த கோல், விஏஆர் (VAR) பரிசோதனைக்குப் பிறகு ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குரோஷியா ரசிகர்கள் மைதானத்திற்குள் குப்பைகளை வீசி எறிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இரு அணிகளும் தத்தமது குழுக்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தன. கிறிஸ்டியானோ ரொனால்டோ (41 வயது மற்றும் 147 நாட்கள்) மற்றும் லூகா மோட்ரிச் (40 வயது மற்றும் 296 நாட்கள்) ஆகியோர் களத்தில் இருந்த நிலையில், 40 வயதுக்கு மேற்பட்ட இரண்டு கள வீரர்கள் உலகக்  கிண்ணப் போட்டியில் நேருக்கு நேர் மோதியதும் இதுவே முதல் முறையாகும்.

 

 

No comments: