Thursday, July 2, 2026

நோர்வேயில் வெற்றிக்கோலை அடித்த ஹாலண்ட்

  டெக்சாஸில்  செவ்வாய்க்கிழமைநடந்த போட்டியில் ஐவரி கோஸ்ட்டை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், உலகக்  கிண்ண காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிறேஸிலுடன் மோத நோர்வே தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் எர்லிங் ஹாலண்ட் கடைசி நிமிடத்தில் வெற்றி கோலை அடித்தார்.

மான்செஸ்டர் சிட்டி வீரரான அவர், 86-வது நிமிடத்தில் மிக அருகில் இருந்து பந்தை தட்டிவிட்டார். பந்து மெதுவாக உருண்டு சென்று கோலாக மாறியது. இது இந்தத் தொடரில் அவரது ஐந்தாவது கோலாகும். உலகக்கிண்ண வரலாற்றில்  வரலாற்றில் நொக்-அவுட் சுற்றில் நோர்வே வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

டல்லாஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஐவரி கோஸ்ட் அணி தொடர்ந்து தாக்குதல் நடத்தி  நோர்வே அணிக்கு அழுத்தம் கொடுத்தது. இருப்பினும், முதல் பாதி முடிவடைய 6 நிமிடங்கள் இருந்தபோது நார்வே அணியின் அன்டோனியோ நுசா, பந்தை அற்புதமாக வளைத்து கோல் கம்பத்தின் மேல் மூலைக்கு அனுப்பி நோர்வேக்கு 1-0 என்ற கணக்கில் முன்னிலை தேடித்தந்தார்.

இரண்டாவது பாதியில் ஐவரி கோஸ்ட் அணியின் மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த அமத் தியாலோ ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். முதலில் நார்வே அணி அடிக்கவிருந்த உறுதியான கோலை கோல் கோட்டிற்கு அருகே தடுத்து நிறுத்தி காப்பாற்றினார். பின்னர், நிக்கோலஸ் பெபேயுடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், நார்வே தடுப்பாட்ட வீரர்களை ஏமாற்றி ஒரு சோலோ கோல் (Solo Goal) அடித்து போட்டியை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

போட்டி சமநிலையை நோக்கிச் சென்ற நிலையில், ஆட்டம் முடிய 4 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது நோர்வேயின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலாண்ட் தனது அசத்தலான திறமையைக் காட்டினார். ஆஸ்கர் பாப் கொடுத்த பாஸை பெற்று பேட்ரிக் பெர்க் கோல் கம்பத்தை நோக்கி அனுப்பிய பந்தை, எர்லிங் ஹாலாண்ட் மிக நேர்த்தியாக கோலாக மாற்றி நார்வே அணியின் வெற்றியை 2-1 என உறுதி செய்தார். கூடுதல் நேரத்தில் ஐவரி கோஸ்ட் அணி கோல் அடிக்கப் போராடிய போதிலும் நோர்வேயின் தடுப்பாட்டம் அதனை முறியடித்தது.

ஐவரி கோஸ்ட் அணியின் அமத் தியாலோவின் அபாரமான ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

  

 

எம்பாப்வே இரட்டைக்கோல் வென்றது பிரான்ஸ்


 நியூயார்க் நியூ ஜெர்சியில்  சுவீடனை எதிர்த்து விளையாடிய பிரான்ஸ்  3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி ,   உலகக்  கிண்ண  காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.  

முதல் பாதி ஆட்டம் முடியும் தறுவாயில் கைலியன் எம்பாப்பே முதல் கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து, 65-வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிஸ், பிராட்லி பார்கோலாவுக்கு பந்தை வழங்க, இரண்டாவது கோல் அடிக்கப்பட்டது.

74-வது நிமிடத்தில் எம்பாப்பேவுக்கு ஓலிஸ் மற்றொரு கோலை அடிக்க உதவினார். இதன் மூலம், பட்டத்தை வெல்லும் தகுதி தனக்கு உண்டு என்பதை பிரான்ஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.     

இப்போட்டியில் அடித்த  இரண்டு கோல்களின் மூலம் உலகக் கிண்ண  வரலாற்றில் எம்பாப்பே தனது கோல்களின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ளார். இதன் மூலம் லியோனல் மெஸ்ஸியின் 19 கோல்கள் என்ற சாதனையை நெருங்கியுள்ளார். மேலும், உலகக் கிண்ண நொக்கவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் (9 கோல்கள்) அடித்த வீரர் என்ற தனது சாதனையை எம்பாப்பே மேலும் நீடித்துள்ளார்.நான்கு போட்டிகளில் இது அவரது மூன்றாவது இரண்டு கோல்கள் ஆகும்.

தனது சக வீரர்களுக்குப் பல உதவிகளைச் செய்தபோதிலும், ஒலிஸால்  கோல் அடிக்கவில்லை.முதல் பாதியில் அவர் அடித்த அபாரமான பைசைக்கிள் கிக், கோல் கம்பத்தில் பட்டது.மைக்கேல் ஒலிஸ் ஐந்து கோல்களுக்கு உதவியுள்ளார்.

இந்தத் தொடரில் 6 கோல்களுடன் தங்கக் காலணி விருதுக்கான பந்தயத்திலும் அவர் முதலிடத்தில் உள்ளார்.  இந்தத் தொடரில் பிரான்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 13 கோல்களை அடித்து, 2 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது.

 80,663 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். விரிவாக்கப்பட்ட 104-போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் மொத்த பார்வையாளர் எண்ணிக்கையை 5 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்தியது.

ஜூலை 4 ஆம் திகதி நடைபெறும் அடுத்த சுற்றில் பிரான்ஸ், பராகுவேயை எதிர்கொள்ளும்.

  

 

40 வருடங்களின் பின்னர் நொக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற மெக்சிகோ

 உலகக்  கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், ஈக்வடோர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக் கிண்ணத் தொடரில்  தென் அமெரிக்க அணியை வெளியேற்றிய முதல் வட அமெரிக்க அணி என்ற வரலாற்றுச் சாதனையை மெக்சிகோ படைத்துள்ளது.   40 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக்கோப்பை நாக் அவுட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்று இருக்கிறது மெக்சிகோ அணி.

இடியுடன் கூடிய பலத்த மழையால் இந்தப் போட்டி தொடங்குவது 1 மணி நேரம் தாமதமானது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் மெக்சிகோ அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் 17 வயதான கில்பர்டோ மோரா கோல் அடிக்க முயன்றார். ஈக்வடோர் அணியின் ஜான் யெபோவாவின் முயற்சி கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. பின்னர், ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் ராபர்டோ அல்வராடோ கொடுத்த பாஸை பயன்படுத்தி ஜுலியன் குயினோனஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில், குயினோனஸ் கொடுத்த துல்லியமான பாஸை ரவுல் ஜிமினெஸ் கோலாக மாற்றி மெக்சிகோவை 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.

இந்த உலகக்  கிண்ணத் தொடரில்  3 போட்டிகளில் கோல் அடித்த இரண்டாவது மெக்சிகோ வீரர் என்ற பெருமையை 29 வயதான ஜுலியன் குயினோனஸ் பெற்றுள்ளார். இதற்கு முன் 1998-இல் லூயிஸ் ஹெர்னாண்டஸ் இந்தச் சாதனையைச் செய்திருந்தார். இந்தத் தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் மெக்சிகோ அணி ஒரு கோல் கூட எதிரணிக்கு விட்டுக்கொடுக்காமல் (கிளீன் ஷீட்) தடுப்பாட்டத்தில் மிக வலுவாக உள்ளது.

2006-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து அணிக்குப் பிறகு, உலகக் கோப்பையின் முதல் 4 போட்டிகளிலும் கோல் ஏதும் விட்டுக் கொடுக்காத இரண்டாவது அணி மெக்சிகோ ஆகும். அத்துடன் உலகக் கீண்ணத் தொடரில் கடந்த 15 போட்டிகளின் முதல் பாதியில் மெக்சிகோ அணி ஒரு கோல் கூட விட்டுக் கொடுக்காமல் புதிய சாதனை படைத்துள்ளது. 

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஈக்வடோர் வீரர் பியரோ ஹின்காபி, மெக்சிகோவின் சாண்டியாகோ கிமினெஸிடம் பேசும்போது தனது வாயை மூடிக்கொண்டதற்காக விஏஆர் (VAR) பரிசோதனைக்குப் பின் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

ஜூலியன் குவினோன்ஸ் ஒரு கோல் அடித்தும், ஒரு கோல் அடிக்க உதவிசெய்தார்.