Friday, April 3, 2009

சர்ச்சைகளின்நாயகன்


கிரிக்கட் உலகில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் கொல்கட்டா நைற் ரைடர்ஸ் அணித்தலைவருமான சௌரவ் கங்குலியும் ஒருவர். எளிதில் உணர்ச்சிவசப்படும் இவர் இந்திய அணியில் இருந்த போது பல சர்ச்சைகளில் சிக்கினார்.
கங்குலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றவுடன் தனது மேலங்கியைக் கழற்றி கையில் வைத்து ஆட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணி இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றபோது இங்கிலாந்து வீரர் செய்ததைப் போல் செய்து பழிவாங்கினார். இதனால் அவர் மீது கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்திய அணியின் தலைவராக கங்குலி செயற்பட்டபோது அவரது துடுப்பாட்ட விகிதாசாரம் குறைந்தது. அன்றைய இந்திய அணியின் பயிற்சியாளர் செப்பலுக்கும் கங்குலிக்கும் இடையேயான பனிப்போர் அறிக்கைகள் மூலமும் ஈமெயில் மூலமும் பகிரங்கப்பட்டன.
இந்திய அணியின் பயிற்சியாளராக செப்பல் வர வேண்டும் என விரும்பியவர்களில் கங்குலியும் ஒருவர். இந்திய அணியின் பயிற்சியாளராக செப்பல் நியமிக்கப்பட்டதும் கங்குலிக்கும் செப்பலுக்கும் இடையிலான உறவு மேலும் நெருக்கமடைந்தது. இந்திய அணி வீரர்களின் தேர்வு, துடுப்பாட்ட வரிசையை மாற்றியமை போன்வற்றினால் செப்பலுக்கும் கங்குலிக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்தது. இறுதியில் அணித் தலைவர் பதவியில் இருந்து கங்குலியும் தூக்கியெறியப்பட்டார்.
இந்திய அணிக்கு டோனி தøலமை ஏற்றபோது இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதனால் மூத்த வீரர்களான கங்குலி, டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோரின் நிலை என்ன என்ற விமர்சனம் எழுந்தது. இளம் வீரர்களின் அதிரடியால் இந்திய அணி உத்வேகம் பெறுகையில் துடுப்பாட்டத்தில் சோபிக்காத மூத்த வீரர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற பட்டிமன்றமும் நடந்தது.
மூத்த வீரர்களை பகைக்க விரும்பாத அணித் தலைவர் டோனி அனுபவம் உள்ள வீரர்களும் அணிக்குத் தேவை என்று கூறினார்.
ஒருநாள் போட்டியில் இருந்து கங்குலி, ட்ராவிட், லக்ஷ்மன் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டனர். காலப் போக்கில் டெஸ்ட்போட்டியில் இருந்தும் வெளியேற வேண்டிய நிலைக்கு கங்குலி தள்ளப்பட்டார். விருப்பம் இல்லாமல் ஓய்வு பெற்ற கங்குலி. ஓய்வு பெற்ற பின்னர் தனது முன்னாள் சக வீரர்களின் மீது சேறு பூசும் அறிக்கைகளை வெளியிட்டார். இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிக்கும் வீரர்களில் ஒருவராக இருந்த கங்குலி, ஐ.பி. எல்லின் இருபது 20 போட்டியை மட்டுமே நம்பினார்.முதலாவது ஐ.பி.எல். டுவென்டி 20 போட்டியில் கங்குலி தலைமையிலான நைட்ரைடர்ஸ் அணி படுதோல்வியடைந்தது. கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளருக்கும் அணித் தலைவர் கங்குலிக்கும் இடையிலான முறுகல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கக் கூடிய தகைமை கங்குலிக்கு இல்லை என்று நினைத்த பயிற்சியாளர் புக்கனன் புதிய தலைவரை நியமிக்க விரும்பினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடும் நான்கு போட்டிகளுக்கும் நான்கு தலைவர்களை நியமிப்பதென பயிற்சியாளர் புக்கனன் அறிவித்தார். புக்கனனுடன் சேர்ந்து பத்திரிகையாளர் மாநாட்டில் சிரித்துப் பேசிப் பதிலளித்த கங்குலி மாலையில் மறுப்பறிக்கை விடுத்தார்.
பின்னர் ஒரு அணிக்கு நான்கு தலைவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணியின் உதவியாளர் ஷாருக்கான் கங்குலிக்கு ஆதரவாக இருப்பதனால் கங்குலியின் தலைமைப் பதவி தப்பியது.
தென்னாபிரிக்காவில் நடைபெறும் டுவென்டி 20 போட்டியில் நைட் டைரடஸின் வெற்றியே தலைவராக கங்குலி நீடிப்பாரா இல்லயா என்பதை முடிவு செய்யும்?
ரமணி
மெட்ரோநியூஸ்
03/04/2009

No comments: