Monday, September 21, 2009

மினி உலகக் கிண்ணத் திருவிழா

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சம்பியன் ட்ரபி எனப்படும் மினி உலகக் கிண்ணப் போட்டி நாளை தென் ஆபிரிக்காவில் ஆரம்பமாகிறது. வில்ஸ் சர்வதேசக் கிண்ணம் என்ற பெயரில்இப்போட்டி 1998ஆம் ஆண்டு ஆரம்பமானது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இப்போட்டியை நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
இரண்டாவது போட்டி நொக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. இப்போது இது ஐ.சி.சி. சாம்பியன் ட்ரபி என்ற பெயரில் நடைபெறுகிறது. முன்னர் நடைபெற்ற மினி உலகக் கிண்ணப் போட்டிகளில் வலிமையான அணிகளும் வலிமை குறைந்த அணிகளும் கலந்து கொண்டன. நாளை ஆரம்பமாகும் போட்டியில் தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பெற்ற அணிகள் மட்டும் தமது பலத்தைக் காட்ட களத்தில் இறங்கி உள்ளன.
இதுவரை ஐந்து மினி உலகக் கிண்ணப் போட்டிகள் நடந்துள்ளன. ஆறாவது போட்டி பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற தீர்மானிக்கப்பட்டது. பாகிஸ்தானில் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக நடைபெறவில்லை. இப்போட்டியை அல்லது மத்
திய கிழக்கு நாöடான்றில் நடத்துவதற்கு பாகிஸ்தான் பகீரதப் பிரயத்தனம் செய்தது. பாதுகாப்பு மிக முக்கியம் என்பதனால் தென் ஆபிரிக்காவில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. "ஏ' பிரிவில் அவுஸ்தி÷ரலியாஇ இந்தியாஇ பாகிஸ்தான்இ மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளன. "பீ' பிரிவில் தென் ஆபிரிக்காஇ இலங்கைஇ இங்கிலாந்துஇ நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
ஒவ்வொரு நாடும் தலா மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும். இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறலாம்.
அவுஸ்திரேலியாஇ தென் ஆபிரிக்காஇ இந்தியா ஆகியவற்றின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அண்மையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இந்த மூன்று அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.
"ஏ' பிரிவில் மேற்கு இந்தியத்
தீவுகள் அணி மிகவும் பலவீனமாக உள்ளது. நிர்வாகத்துக்கும் வீரர்களுக்கும் இடையிலான சம்பள
விவகாரத்தினால் கைல்ஸ்இ சந்தர் போல்இ பிராவோஇ சர்வான் ஆகிய முன்னணி வீரர்கள் விளையாடவில்லை. பங்களாதேஷûடனான ஒருநாள் போட்டித் தொடரில் பரிதாபமாகத் தோல்வியடைந்த மேற்கு இந்தியத் தீவின் அணியே களமிறக்குகிறது.
அவுஸ்திரேலியா அணி வழக்கம் போல் உறுதியாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை இழந்தாலும் ஒருநாள் போட்டியில் தனது ஆதிக்கம் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளது அவுஸ்திரேலியா. இந்திய அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான
ஷெவாக்இ வேகப்பந்து வீச்சாளரான சஹீர்கான் ஆகியோர் இல்லாதது பெரும் குறைதான். இலங்கையில் நடைபெற்ற முக்கோணத் தொடரில் சச்சினின் விளையாட்டு நம்பிக்கை கொடுத்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இறுதிப் போட்டியின் மிக நீண்ட நாட்களின் பின்னர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஜோடி சேர்ந்த சச்சினும்இ ட்ராவிட்டும் தமது திறமை குறையவில்லை என்பதை நிரூபித்தனர். பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ள இந்திய அணியின் பந்து வீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இல்லாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
டுவன்டி 20 கிண்ணச் சம்பியனான
பாகிஸ்தான் சாம்பியன் கிண்ணத்தையும் கைப்பற்ற உறுதி பூண்டுள்ளது.
பீ பிரிவில் தென் ஆபிரிக்காவும்இ
இலங்கையும் பலமான நிலையில் உள்ளன. இங்கிலாந்தும்இ நியூசிலாந்தும் மிகப்பலவீனமாக உள்ளன.
டுவன்டி 20 கிண்ணத்தை
பாகிஸ்தானிடம் பறிகொடுத்த
இலங்கை சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்லும் எண்ணத்தில் உள்ளது.

No comments: