Tuesday, July 16, 2019

ஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.


கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த  இரண்டு வாரங்களாக  இலண்டனில் நடைபெற்றது. எட்டுமுறை விம்பிள்டன் சம்பியனான சுவிட்சர்லாந்து நாட்டின்  ரோஜர் பெடரர்,  நடப்புச் சம்பியனான சேர்பிய வீரர்  ஜோகோவிச் ஆகியோர் ஆண்கள்  ஒற்றையர்  பிரிவு இறுதிப்போட்டியில் மோதினர். பலம் வாய்ந்த  இரண்டு வீரர்கள்  மல்லுக்கட்டியதால் இருதிப் போட்டி பரபரப்பாக இருந்தது. ஐந்து மணி நேர போராட்டத்தின் பின் நடப்புச் சம்பியனான ஜோகோவிச் தனது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.

சேவீஸ்களையே  புள்ளிகளா மாற்றுவதில்  இருவரும் கவனம் செலுத்தினர். இதனால் 6-6 என சமநிலையானது. டைபிரேக்கர் வரை சென்ற முதல் செற்றில்  ஜோகோவிச்  7[7]- 6[5] வெற்றி பெற்றார். இரண்டாவது செற்றை 6-1 என பெடரர் எளிதாகக் கைப்பற்றினார். மூன்றாவது செற்றும் டை பிரேக்கர் வரை சென்றது மிகுந்த போராட்டத்தின் பின்  7[7]- 6[4]   ஜோகோவிச் வெற்றி பெற்றார் நாக்வாது செற்றை 6-4 எனபெடரர் கைப்பற்றினார்.

சம்பியனைத் தீர்மானிக்கும் ஐந்தாவது  செற்றில் சளைக்காமல் இருவரும் மாறிமாறி  வெற்றி பெற்றதால், போட்டி விறுவிறுப்பானது. இறுதியில் 13-12 [ 7- 3 ] புள்ளியில் ஜோகோவிச் சம்பியனானார். ஜோகோவிச் கைப்பற்றிய 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.  

No comments: