குற்றவியல் தண்டனை பெற்றிருந்த காரணத்தால், உலகக் உகிண்ணப் போட்டிக்குச் செல்லும் அணியின் விமானத்தில் ஏற சுவிட்சர்லாந்து முன்கள வீரர் பிரீல் எம்போலோஅனுமதி மறுக்கப்பட்டது. ஒரு நாள் கழித்து, புதன்கிழமை அன்று பெர்னில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவசர விஸாவுக்கு விண்ணப்பித்தார்.
சான்
டியாகோவில் உள்ள அணியின் பயிற்சி முகாமில், சுவிஸ் உதைப்ந்தாட்ட கூட்டமைப்பு, எம்போலோவின் அமெரிக்கப் பயண அனுமதி
ஏன் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதை செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.
இந்த ஆண்டு அவருக்கு எதிராகக் கட்டாயமாக்கப்பட்ட ஒரு தண்டனைத் தீர்ப்பு உள்ளது.
2018-ஆம்
ஆண்டு பேசல் நகர மையத்தில் நடந்த ஒரு வாக்குவாதத்தைத் தொடர்ந்து எம்போலோ மீது குற்றம்
சாட்டப்பட்டது, மேலும் கடந்த செப்டம்பரில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அவர் குற்றவாளி
என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. தனது வாழ்நாளின் மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியி
விளையாட அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதற்குச்
சில வாரங்களுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் எம்போலோ
எதிரான இந்தத் தீர்ப்பு இறுதி செய்யப்பட்டது.
29
வயதான எம்போலோ சுவிட்சர்லாந்தின் முதல் தேர்வு முன்கள வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறார், அவர் 86 சர்வதேசப் போட்டிகளில் 24 கோல்களை அடித்துள்ளார்.
உலகக்கிண்ணம்
26,அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ, சுவிட்ஸர்லாந்து,எம்போலா,,ஏகன்,ஏகன் மீடியா

No comments:
Post a Comment