எபோலா நெருக்கடியுடன் தொடர்புடைய சாத்தியமான சுகாதார அபாயங்களைக் காரணம் காட்டி, அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நட்புரீதியான போட்டிக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என, ஸ்பெயின் நகரமான லா லினியா டி லா கான்செப்சியனின் மேயர் அறிவித்துள்ளார்.
தெற்கு நகரமான லா லினியா டி லா கான்செப்சியனின் அரசாங்க
அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆனாலும், சிலிக்கு எதிரான பயிற்சிப் போட்டி நடக்கும் என
கொங்கோ ஜனநாயகக் குடியரசு நம்புகிறது.
புதன்கிழமை
அன்று பெல்ஜியத்தின் லீஜ் நகரில், காங்கோ அணி டென்மார்க்கிற்கு எதிராக ஒரு பயிற்சி
ஆட்டத்தில் விளையாடியது.
அரிதான
வகை எபோலா வைரஸ் காங்கோ ,உகாண்டாவைப் பீடித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இதனை சர்வதேச
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
நாட்டின்
கிழக்குப் பகுதியில் நோய் பரவல் காரணமாக, காங்கோ ஏற்கனவே மூன்று நாள் உலகக் கோப்பை
ஆயத்தப் பயிற்சி முகாமையும், தலைநகர் கின்ஷாசாவில் ரசிகர்களுக்கு பிரியாவிடை அளிக்கும்
திட்டமிடப்பட்ட வைபவத்தியும் இரத்து செய்திருந்தது.
காங்கோ
வீரர்களும், அணியின் பிரெஞ்சு பயிற்சியாளரான செபாஸ்டியன் டெசாப்ரேயும் அந்த மத்திய
ஆப்பிரிக்க நாட்டிற்கு வெளியே வசிக்கின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் பிரான்சில்
விளையாடுகின்றனர்.

No comments:
Post a Comment