Monday, November 21, 2011

ஏங்குகிறேன்

முழு மதியின் ஒளியில்
பால் வீதி காணுகிறேன்
தேயா நிலவுகாண ஏங்குகிறேன்

சூரியனின் சுள்ளிட்ட‌
க‌திர்க‌ளால் வேத‌னைய‌டைகிறேன்
சுடாத‌ சூரிய‌ன் காண
ஏங்குகிறேன்

ம‌ல‌ர்க‌ளின் எழில் கொஞ்சும்
வ‌ன‌த்தில் இன்புறுகிறேன்
வாடா ம‌ல‌ர் காண
ஏங்குகிறேன்

என் தாய் ம‌ண்ணில்
ஓடிவிளையாட‌ ஆசையுறுகிறேன்
யுத்த‌மில்லா ம‌ண்காண‌
ஏங்குகிறேன்

நான் காண‌ விரும்பும்
ம‌ண்ணின் ஏக்க‌ம்
ம‌தி போல் சூரிய‌ன் போல்
க‌ட‌ல் வான் ம‌ல‌ர் போல்
ஆகி விடுமோ என‌
ஏங்கிக்கொண்டே இருக்கிறேன்

தாட்ஷாவ‌ர்மா
ஜீவ‌ந‌தி_ கார்த்திகை 2011

No comments: