Saturday, August 4, 2012

திரைக்குவராதசங்கதி 41


""அறிஞர்'' அண்ணா, ""கலைஞர்'' கருணாநிதி, ""கவிஞர்'' கண்ணதாசன், ""நடிகர் திலகம்'' சிவாஜி, ""மக்கள் திலகம்'' எம்.ஜி.ஆர்.போன்று ""சூப்பர் ஸ்டார்'' என்றால் அது ரஜினிதான் என்பது திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது.

சிவாஜிக்குப் பின்னர் யார் என்ற கேள்விஎழுந்தபோது அனைவரும் கமலை காட்டினார்கள். கமலுடன் விக்ரமும், சூர்யாவும்அந்த இடத்தைப் பிடிக்க போட்டி போடுகின்றனர். இதேபோல் ம்.ஜி.ஆருக்குப்பின்னர்ஆக்ஷன் நடிகர் யார் என்று கேட்டபோதுகுட்டி எம்.ஜி.ஆர். என ரவிச்சந்திரனைக்காட்டினார்கள். தென்னக ஜேம்ஸ் பொன்ட்என்று ஜெய்சங்கரைக் கூறினார்கள்.  அக்க்ஷன்கிங் என அர்ஜுனை அடையாளம்காட்டினார்கள். அந்த இடைவெளியை இலகுவில் நிரப்பியவர் ரஜினிகாந்த்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் எனக்கேட்டபோது  இதோ லிட்டில் சூப்பர்ஸ்டார் என தன் மகனை அறிமுகப்படுத்தினார் டி.ராஜேந்தர். அஜித்தும். விஜயும் அந்த இடத்தைப்பிடிக்க கடும் முயற்சி செய்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் என்றால் நான்தான் என்பதைமீண்டும் மீண்டும் ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு தற்செயலாக சூட்டப்பட்டது. அந்தப்பட்டத்தைரஜினி விரும்பவில்லை. ரசிகர்கள் அப்பட்டத்தைவிரும்பியதால் விருப்பமில்லாத பட்டத்தைஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு ரஜினிதள்ளப்பட்டார்.
ரஜினிகாந்த் என்றபெயர் திரை உலகில்பிரபலமாகத் தொடங்கியது. கதாநாயகனின்நண்பனாகவும், இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்த ரஜினியை கதாநாயகனாக்கியவர் கலைஞானம்

கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் ஆறுபுஷ்பங்கள் என்றபடத்துக்குக் கதை வசனம்எழுதியபோது அப்படத்தில் நடித்த ரஜினிக்கும் அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

ரஜினியிடம் ஒரு கதையைக் கூறி நீங்கள்தான்கதாநாயகன் என்றார். ரஜினிக்கு கதைபிடித்துவிட்டது. உடனே சம்மதம் ரிவித்துவிட்டார். கலைஞானத்தின் கையில் பணமில்லை. மறுநாள் பணத்தைச் சேர்த்து ரஜினியிடம் ஐயாயிரம்ரூபா அட்வான்ஸ்கொடுத்துஒப்பந்தம்போட்டார்.
கதாநாயகியாகஸ்ரீபிரியாவைஒப்பந்தம் செய்தார். படத்தின்பூஜையைக்கூட போடாமல்கதையைக்கூறி விநியோகஸ்தரிடம் பணம் பெற்றார்.

 ரஜினி முதன்முதலாக கதாநாயகனாக நடித்த "பைரவி'படம் பெரு வெற்றி பெற்றது. சென்னைநகர விநியோக உரிமையை தனது நண்பர்களுடன் இணைந்து கலைப்புலி தாணுபெற்றார். ""ஸ்டைல் மன்னன்'' எனஅழைக்கப்பட்ட ரஜினியை ""சூப்பர் ஸ்டார்'' ஆக்கியவர் கலைப்புலி தாணு.அண்ணாசாலையில் உள்ள பிளாசா தியேட்டரில் பைரவி படம் திரையிடப்பட்டது. 35அடி உயர ரஜினியின் கட் அவுட் தியேட்டரின் உயரத்தை மிஞ்சி நின்றது. மூன்று விதமான போஸ்டர்கள் அடித்து சென்னை நகரமெங்கும் ஒட்டினார்கள். எல்லா போஸ்டர்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி என விளம்பரப்படுத்தியிருந்தார். சூப்பர் ஸ்டார் என்றபட்டம் ரஜினி ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது.

சென்னை நகர விளம்பரம் ரஜினியையும்கவர்ந்துவிட்டது. கலைப்புலி தாணுவைஅழைத்து கைகொடுத்துப் பாராட்டினார்ரஜினி. நாள் செல்லச் செல்ல சூப்பர்ஸ்டார்என்ற பட்டம் பிரபலமானது. த்திரிகைகள்ரஜினியின் பெயருக்கு முன்னால் சூப்பர்
ஸ்டார் எனக்குறிப்பிட்டன.சிவாஜி , எம்.ஜி.ஆர் என்ற இரு பெரும்திலகங்களுக்கிடையே சூப்பர் ஸ்டார் என்றபட்டம் தனக்குப் பொருத்தமானதா என சிந்தித்த ரஜினி அப்பட்டத்தை விளம்பரத்திலிருந்து அகற்றும்படி கலைப்புலி தாணுவிடம்வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், அதுகாலம் கடந்த விடயமாகி விட்டது. சூப்பர்ஸ்டார் என்றபட்டம் ரஜினிக்கு நிரந்தரமாகிவிட்டது

.பைரவி படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். ""நண்டுரூது நரியூருது'' என்ற பாடலை டி.எம். சௌந்தரராஜன் பாட .ஏ.வி.எம்.மில் ஒலிப்பதிவானது. ஒலிப்பதிவைப்பார்ப்பதற்காக ரஜினி ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்றார். ஒலிப்பதிவு முடிந்ததும்கலை ஞானத்தின் கையைப்பிடித்து தனதுநன்றியைக் கூறினார். சௌந்தரராஜன் பாடதான் நடிப்பேன் என நினைக்கவில்லை எனநெகிழ்ந்து கூறினார்.

பைரவி படத்தை ரசிகர்களுடன் சேர்ந்துபார்த்தார் ரஜினி. பைரவி படத்தைப் பார்த்தபட அதிபர் சின்னப்பா தேவர் தனது படத்தில்நடிப்பதற்கு சிபார்சு செய்யும்படி கலைஞானத்திடம் கூறினார்.நீங்களே போன் பண்ணுங்கள், ரஜினி ஒப்புக்கொள்வார் என கலைஞானம் கூறினார்.அதேபோல் தேவர் பிலிம்ஸின்தொலைபேசி அழைப்புக்கேட்ட ஐந்தாவதுநிமிடத்தில் தேவர் பிலிம்ஸ் அலுவலகத்துக்குச்சென்று தேவரிடம் ஆசிபெற்றதுடன்இரண்டு படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டார்
ரமணி
மித்திரன்31/12/2006
101.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல சினிமா தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது...
நன்றி…

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா