Monday, January 5, 2015

ஒலிம்பிக்கில் விளையாட நோர்வே மகளிர் அணிதகுதிபெற்றது

ஐரோப்பிய மகளிர் ஹான்ட்போல் சம்பியனான நோர்வேஅணி பிரேஸிலில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுள்ளது. ஹங்கேரியின் தலைநகரமான  புடாபெஸ்டில் ஐரோப்பிய மகளிர் ஹன்ட்போல் சம்பியன்  போட்டி நடைபெற்றது. 

சுவீடன் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்ற நோர்வே  ரியோ 2016 இல் விளையாடும் முதல் அணியாகத்தேர்வானது. போட்டியின் முதல் பாதியில் 12-  10 என சுவீடன் முன்னிலை வகித்தது.  இரண்டாவதுபாதியில் எழுச்சிகண்ட நோர்வே 28-  25 என்றகணக்கில் வெற்றிபெற்றது.ஐரோப்பிய மக்ளிர் ஹான்ட்போல் சம்பியனான நோர்வே தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஒலிம்பிக்கில் விளையாடத்தகுதி பெற்றது. இலண்டன் ஒலிம்பிக்கில் நோர்வே மகளிர் அணி வெண்கலப்பதக்கம் பெற்றது.

ஐரோப்பிய மகளிர் ஹான்ட்போல் சம்பியன் போட்டியில்  14 ஐரோப்பிய நாடுகள் விளையாடின. ஐரோப்பிய சம்பியனான நோர்வேயும் போட்டியை நடத்தும் பிஏஎஸிலும் மகளிர் ஹான்ட்போல் போட்டியில் விளையாடத்  தகுதிபெற்றுள்ளன.தகுதிகாண் போட்டிகளின் மூலம் மேலும் 8 நாடுகள் தெரிவு செய்யப்பட உள்ளன.

ஆண்களுக்கான ஹான்ட்போல் சம்பியன் போட்டி இம்மாதம் 15 ஆம் திகதிமுதல் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதிவரை கட்டாரில் நடைபெற உள்ளது

தமிழ்மிரர்

No comments: