Monday, April 11, 2016

பதுக்கிய பணத்தை பகிரங்கப்படுத்திய பனாமாபேப்பர்ஸ்


உலகின் மதிப்புமிக்கவர்களின் மறுபக்கம் எப்பொழுதும் மாறுபட்டதாகவே இருக்கும். அளவுக்கு மிஞ்சிய சொத்தை பாதுகாப்பதற்கு சட்டவிரோதமான முறையில் முதலீடு செய்தவர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர். நல்ல பிள்ளைபோல  அரசாங்கத்துக்கு வரிசெலுத்துபவர்கள் தமது கறுப்புப்பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கின்றனர். அவற்றைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. “பனாமா பேப்பர்ஸ்’”’””“ கடந்த  வாரம் கசியவிட்ட இரகசிய ஆவணங்களினால் பணமுதலைகள் திகைத்துப்போயுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்  புட்டின்,  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின், ஆர்ஜென்ரீனா ஜனாதிபதி  மாரிசியோ மாக்ரி, ஐஸ்லாந்து தீவு பிரதமர் சிக்மண்டூர் டேவிட் மற்றும் அவரது மனைவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.   , அபுதாபி மன்னரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபருமான கலீபா பின் ஜயத் அல் நஹாயன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பும் இந்த பட்டியலில் உள்ளார். இவரது மகன்களும், மகள்களும் இணைந்து பிரிட்டிஷ் வர்ஜின் தீவில் நிறுவனங்களைத் தொடங்கினர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த உதைபந்தாட்ட வீரர்  லியானல் மெஸ்ஸியின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. இவர் மீது ஏற்கனவே அவரது நாட்டில் பல வரி ஏய்ப்புப் புகார்கள் உள்ளன.. ஹொலிவுட் நடிகர் ஜாக்கி சானின் பெயரும் இப்பட்டியலில் உள்ளது. எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபி உள்ளிட்ட பல பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். ஈரான், சிம்பாப்வே மற்றும் வட கொரியாவைச் சேர்ந்த 33 நபர்கள் அமெரிக்காவின் தடைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்களுள் ஒருவர் வட கொரியாவின் அணுவாயுத நடவடிக்கையுடன் தொடர்புடையவர் எனவும் அறியப்படுகின்றது 12 நாடுகளின் தலைவர்களும்   120 அரசியல் தலைவர்களும் இப்புகார் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


இந்திய பிரபலங்கள் பலரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் கே.பி. சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர்  9 பேர், கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலோ டயர் புரோமோட்டர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோர் உட்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன. 'இண்டியாபுல்ஸ்' நிறுவன தலைவர் சமீர் குலாடிழூ'அப்பல்லோ டயர்ஸ்' தலைவர் ஓன்கார் கன்வர்ழூலோக்சத்தா கட்சித் தலைவர் அனுராக் கெஜ்ரிவால்ழூமூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேழூமுன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் மகனும்இ பிரபல டாக்டருமான ஜகாங்கீர் சோலி சொராப்ஜிழூதமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன்   ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர்.
 சமூகத்தில் மதிப்புமிக்க அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்,விளையாட்டு வீரர்கள்,  கோடீஸ்வரர்கள்பனாமாவில் பணத்தைப் பதுக்கிவைத்திருப்பதாகத் தெரியவருகிறது. அமிதாப் பச்சன் ,ஐஸ்வர்யாராய்  ஆகியோர் இதனை மறுத்துள்ளனர். கடந்தாண்டு ஜெனிவாவின் ஹச்எஸ்பிசி வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள 1100 இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டு சுவிட்சர்லாந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தற்போது இந்த பனாமா பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்லாந்து மக்களும் எதிர்க்கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தியதால் பிரதமர் டேவிட் இராஜினாமாச் செய்துள்ளார். தன மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் இராஜினாமா செய்யமுடியாது என தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தீவிரமாக போரட்டத்தை நடத்தியதால் வேறு வழி இன்றி   பிரதமர் பதவியை இராஜினாமாச் செத்தார். கட்சியின் தலைவராக செயற்படுகிறார்.

சுவிட்சர்லாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் வரிச்சலுகை கிடைப்பதால், அந்நாட்டு வங்கிகளில் பலர் முதலீடு செய்து வந்தனர்; குறிப்பாக கறுப்புப் பணம், இவ்வாறு பதுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், போலியான பெயரில் நிறுவனங்களை உருவாக்கி அதில் முதலீடு செய்வது. போன்ற மோசடி நடக்கிறது. மத்திய அமெரிக்க நாடான பனாமாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனம், இதுபோன்ற மோசடியை மிகப்பெரிய அளவில் செய்து வருவது தற்போது அம்பலமாகி உள்ளது. இந்த நிறுவனத்துக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி போலியான பெயரில் உள்ள நிறுவனத்தின் இயக்குனராக பதிவு செய்து கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பணத்தை பதுக்கி வைத்துக் கொள்ள இந்த நிறுவனம் உதவி வருகிறது. இதில்  இருந்த 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


'மோசக் பொன்சிகா'என்ற சட்ட நிறுவனம் சர்வதேச அளவில் இந்த மோசடியை செய்து வருகிறது. பனாமா நாட்டில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து இந்த மோசடி குறித்த ஆவணங்கள் வெளியான தால் பனாமா பேப்பர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.அடையாளம் தெரியாத ஒருவர் அளித்த இந்த ஆவணங்கள் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சர்வதேச புலன் விசாரணை பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து கடந்த எட்டு மாதங்களாக ஆய்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.கடந்த 40 ஆண்டுகளாக உலகெங்கும் 2.14 லட்சம் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்குறித்த விவரம்வெளியாகியுள்ளது.

 2013ம் ஆண்டு வெளியான விக்கிலீக்ஸை விட இது பெரிதாக பார்க்கப்படுகிறது. விக்கிலீக்ஸின் அம்பலத்தால் உலகின் பல நாடுகள் ஆட்டம் கண்டன. உலக வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்த  விக்கிலீக்ஸின்  விவகாரம் நீண்டுகொண்டே  இருக்கிறது. கடந்த 1970களிலிருந்து பல ஆவணங்களை கொண்டுள்ளது இந்த பனாமா விவகாரம். இதில்  2.6 டெர்ராபைட் அளவிலான டேட்டாக்கள் உள்ளன. 11.5 மில்லியன் ஆவணங்கள் கசிந்துள்ளன. இதுதான் பெரும்பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது. இதை கசிய விட்டவர் யார் என்பது தெரியவில்லை. 

விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International Consortium of Investigative Journalism)  ) ஏப்ரல்  3 ஆம் திகதி ஞாயிறன்று  இந்த தகவல்களை பனாமா பேப்பர்ஸ்எனும் பெயரில் வெளியிட்டுள்ளது.

கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்கள் பனாமா நாட்டில் எவ்வாறு பதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்களே கசிந்துள்ளன.மொசாக் பொன்சேகா நிதி நிறுவனம் 1977 இல் இருந்து 2015 டிசம்பர் வரையில் தங்கள் சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால்இமொசாக் ஃபொன்சேகா நிறுவனம் தாங்கள் 40 ஆண்டுகளாக இயங்கிவருவதாகவும் ஒருபோதும் இத்தகைய மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறது.எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் நிதி மோசடிக்காரர்கள் அனைவரின் விபரங்கள்  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிபற்றி விசாரிப்பதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளன. அப்போது கனவான்களின் முகத்திரை கிழிக்கப்படும்.
ரமணி
தமிழ்த்தந்தி
10/04/16




No comments: