Tuesday, April 30, 2019

ஐபிஎல்லில் உள்ளே வெளியே பலமான போட்டி


டெல்லி கெப்பிட்டல்ஸ், சென்னை ஔப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் பிளே ஃஓவ் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. இன்னமும் இரண்டு அணிகள் பிளேஃஓவ் சுற்றுக்குச் செல்வதற்கான  போட்டியில் ஏனைய ஆரு அணிகளும் முட்டி மோத உள்ளன. ஏழாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸும் எட்டாவது இடத்தில் இருக்கும் பெங்களூர் ரோயல் சலஞ்சும் இன்ரு மோத உள்ளன. எட்டு அணிகளும் 12 போட்டிகளில் விளையாடி விட்டன. மிகுதியான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஃஒவ் சுற்றில் விளையாடும்  முனைப்பில் ஆனைய ஆறு அணிகளும் உள்ளன.

ராஜஸ்தான் ஐந்து   வெற்றி, ஏழு தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது.   நாலு வெற்றி எட்டுத் தோல்விகளுடன் 8  புள்ளிகளுடன் பெங்களூர் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் வெற்றி பெற்றால் மற்றைய அணிகளின் வெற்ரி தோல்விகளுடன் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது.

பிளே ஃஒவ் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற டெல்லியும் ,சென்னையும் மோதுவதால் தோல்வியடையும் அணிக்கு இப்போதைக்குப் பாதகமில்லை. சன்ரைஸ் ஹைதராபாத்தை எதிர்த்து விளையாடும் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் பிளே ஃஒவ் சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.  ஹைதராபாத் வெற்றி பெற்றால் அடுத்த போட்டிவரை இரண்டு அணிகளும் காத்திருக்க வேண்டி வரும்.

பஞ்சாப், கொல்கத்தா ஆகிய இரண்டும் தலா 10 புள்ளிகளுடன் முறையே ஐந்தாம் ஆறாம் இடங்களில் இருக்கின்றன. வெற்றி பெற வேண்டிய கட்ட்டாயத்தில் இரண்டு அணிகளும் மோத உள்ளன. வெற்றி மட்டுமல்லாது ஓட்ட விகிதமும் இருந்தால் மட்டுமே பிளே ஃஒவ் சுற்றுக்குச் செல்வதற்கு ஏதுவாக அமையும். முதல் போட்டியில் தோல்வியடையும் பிளே ஃஒவ் சுற்றில் இல்லாத அணிகள் வெளியேற வேண்டிய நிலை உள்ளது.


No comments: