Wednesday, October 28, 2020

முதலிடத்துக்கான போட்டியில் முந்தியது மும்பை


 

பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய .பி.எல். ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


துபாயில் நடைபெற்று வரும் 13வது .பி.எல். தொடரின் இன்றைய 48வது ஆட்டத்தில் பொலாட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் மும்பை அணியின் கேப்டன் பொலாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களுரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பிலிப் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஜோஸ் பிலிப் 33(24) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி 9(14) ஓட்டங்களும், டி வில்லியர்ஸ் 15(12) ஓட்டங்களும், ஷிவம் துபே 2(6) ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.




மறுமுனையில் அதிரடி காட்டிய தேவ்தத் படிக்கல், தனது அரைசதத்தை பதிவு செய்திருந்த நிலையில், 74(45) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் மோரிஸ் 4(2) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 10(6)  ஒட்டங்களும், குர்கீரத் சிங் 14(11) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

20
ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், போல்ட், ராகுல் சாஹர், பொலார்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.



இதனை தொடர்ந்து 165 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக்18(19) மற்றும் இஷான் கிஷன் 25(19) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் மும்பை அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. இந்நிலையில் அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார்.

மறுமுனையில் சவுரப் திவாரி 5(8), க்ருனால் பாண்டியா 10(10), ஹர்திக் பாண்டியா 17(15) ஆகியோரின் விக்கெட்டுகள் சரிந்தாலும் சூர்யகுமார் யாதவ் நிலைத்து நின்று ஆடி 43 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார். இறுதியாக 19.1 ஓவர்களில் 166 ஓட்டங்கள் அடித்துமும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

No comments: