அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் அதிகப்படியான இளஞ்சிவப்பு நிற பூட்ஸ்கள் இடம்பெற்றதற்கு அடிடாஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. பூட்ஸ் காலணி வண்ணங்களின் வழக்கத்திற்கு மாறான சீரான தன்மை பற்றிக் கேட்கப்பட்டதற்கு, அடிடாஸ் தலைமை நிர்வாக அதிகாரி பியோர்ன் குல்டன், “அது தற்செயலாக நிகழ்ந்தது” என்று பதிலளித்தார்.
நடந்து
முடிந்த உலகக் கிண்ணப் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பூட்ஸ்கள் பரவலாகக்
காணப்படுவது குறித்து, சிலர் அந்த நிறம் பச்சை நிற ஆடுகளத்திற்கு எதிராகத் தெரிவதாகவும்,
இது பூட்ஸ் தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளை ரசிகர்களின் பார்வையில் தனித்துக் காட்ட
உதவுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இளஞ்சிவப்பு நிற பூட்ஸ்களை
அணிந்திருந்தது ஒரு தற்செயல் நிகழ்வு என்றும், அதற்காக அடிடாஸ் நிறுவனம் வியாழக்கிழமை
மன்னிப்பு கோரியது .
அடிடாஸ்
தலைமை நிர்வாக அதிகாரி பியோர்ன் குல்டன், இது
தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில்;
"இது
ஒரு தற்செயல் நிகழ்வு என்று நான் நினைக்கிறேன், மேலும் இது மீண்டும் நடக்காது என்று
நம்புகிறேன், என்னை ஆச்சரியப்படுத்தியது அந்த நிறம் அல்ல, மாறாக வெவ்வேறு பிராண்டுகள்
அனைத்தும் ஒரே நிறத்தைத் தேர்ந்தெடுத்ததுதான்,
இளஞ்சிவப்பு ஒரு நல்ல நிறம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் அனைவரும் ஒரே
நிறத்தைத் தேர்ந்தெடுத்தது விசித்திரமாக இருக்கிறது,” என்றார் அவர்.
நைக் பூட்ஸ் தயாரிப்பு மேலாளர் ஒடிங்கா நிமாகோ, 'தி அத்லெடிக்'
என்ற விளையாட்டுப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் , இளஞ்சிவப்பு நிறம் தன்னம்பிக்கையின்
வெளிப்பாடாகக் கருதப்படுவதால் சில வீரர்களால் விரும்பப்படுகிறது என்று கூறினார்.
புதிய
தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, காலணி தயாரிப்பாளர்களுக்குத் தங்கள்
போட்டியாளர்களின் துல்லியமான வண்ணத் திட்டங்களைப் பற்றி பொதுவாக அதிகம் தெரிந்திருக்காது
என்று குல்டன் கூறினார்.
