Tuesday, May 19, 2020

திறமையற்ற ஜனாதிபதி ஒபாமா டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு


அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி ட்ரம்பின் அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி  பராக் ஒபாமா சமீபத்தில் ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அமெரிக்காவில் இணைய தளம் மூலம் நடந்த ஒரு பள்ளி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஒபாமா பேசும்போது, “கொரோனா தொற்று இறுதியாக நாட்டின் திரைசீலையை கிழித்து விட்டது. அதிகாரிகளும் தாங்கள் ஒரு பொறுப்பில் இருப்பதை உணரவில்லை. நாட்டின் தலைமையிடம் இருக்கும் தோல்விகளை இந்த பெருந்தொற்று காட்டி விட்டது. குறைந்தது கொரோனாவை கட்டுப்படுத்துவது போல நடிக்க கூட தெரியவில்லை. அமெரிக்காவின் மானத்தை வாங்கும் வகையில் தாறுமாறான கேள்விகளை ஆட்சிகள் இருப்பவர்கள் எழுப்புகின்றனஎன்று ஜனாதிபதி ட்ரம்பை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி  ட்ம்ப் பதிலடி கொடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒபாமா தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து ட்ரம்பு கூறும்போது, “ஒபாமா ஒரு திறமையற்ற  ஜனாதிபதியாக இருந்தார். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அவர் முற்றிலும் திறமையற்றவர்என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல்  நடைபெற உள்ளது. ட்ரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோபீடனுக்கு ஆதரவாக ஒபாமா தீவிரமாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்தே அவர் ட்ரம்பின் அரசை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: