Monday, March 19, 2012

கிரிக்கெட்டில் இருந்து விலகியது பெருஞ்சுவர்

இந்தியப் பெருஞ்சுவர் என கிரிக்கெட் இரசிகர்களினால் செல்லமாக அழைக்கபட்ட ராகுல் ட்ராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடிய பின்னர் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இப்போது டெஸ்ட் போட்டியிலிருந்தும் முதல் தரப்போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்று விட்டார். ராஜஸ்தான் ரோயல் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட ராகுல் ட்ராவிட் ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்தும் விளையõடுபவர் என்பது இரசிகர்களுக்கு சற்று மனத்திருப்தியளிக்கும் செய்தியாக உள்ளது.
ஜென்டில்மன் விளையாட்டு என்று அழைக்கப்படும் கிரிக்கெட்டில் உள்ள ஒருசில ஜென்டில்மன்களில் ராகுல் ட்ராவிட்டும் ஒருவர். தன் மீது விமர்சனக்கணைகள் பாய்ந்த போது விமர்சகர்களின் வாயை அடைத்துவிட்டார். இங்கிலாந்திலும் அவுஸ்திரேலியாவிலும் ட்ராவிட் சரியாக ஆடவில்லை என்பதனால் கண்டன கணைகள் பாய்ந்தன. இன்று அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்ததும் பாராட்டு மழையில் சிக்கித் திணறுகிறார். சச்சின், ட்ராவிட், லஷ்மன் என்ற மும்மூர்த்திகளின் கையில் தான் இந்தியாவின் வெற்றி தோல்வி இருந்தது. ஒருவர் சறுக்கினாலும் இன்னொருவர் தூக்கிப்பிடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்வார். அந்த மூவரில் ஒருவர் இன்று ஓய்வுபெற்றுவிட்டார்.
அதிக வருமானம் தரும் விளையாட்டாக கிரிக்கெட் மாறிவரும் வேளையில், கிரிக்கெட்டை அர்ப்பணிப்புடன் விளையாடியவர் ட்ராவிட். துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு, விக்கெட் கீப்பர் ஆகிய சகலதுறைகளிலும் முத்திரைப்பதித்தவர். கிரிக்கெட்டை மிக நுணுக்கமாகப் பார்த்து ரசிப்பவர்களுக்கு ட்ராவிட்டின் விளையாட்டின் நுட்பம் புரியும். சில வீரர்கள் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு ஷொட்களைத்தான் விளையாடுவார்கள். கிரிக்கெட்டின் சகல சொட்களையும் கள நிலைக்கு ஏற்ப விளையாடியவர் ட்ராவிட்
மத்திய பிரதேச இத்தூரில் 1973ஆம் ஆண்டு பிறந்த ராகுல் ட்ராவிட் கர்நாடக மாநில பெங்களூரில் வளர்ந்தார். 12 வயதில் கிரிக்கெட்டில் புகுந்தார் கர்நாடக
மாநிலத்திற்காக15,17,19 வயதுக்குட்பட்ட அணியில் பங்குபற்றினார். 1991ஆம் ஆண்டு கல்லூரி மாணவனாக இருந்தபோதே ரஞ்சி கிண்ணப்போட்டியில் கர்நாடக அணிக்காக விளையாடினார்.

1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடினார். அன்று மூன்று ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதே ஆண்டு இங்கிலாந்தில் முதலாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி 95 ஓட்டங்கள் எடுத்து கிரிக்கெட் உலகின் பார்வையைத் தன் பக்கம் இழுத்தார்.
1999ஆம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியில் விளையாடினார். தனது முதலாவது உலகக் கிண்ணப்போட்டியில் இரண்டு சதங்களுடன் 461 ஓட்டங்கள் அடித்தார். 1999ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் வீரர் ஒருவரின் அதிகூடிய ஓட்டம் இதுவாகும்.
2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் துணைக் கப்டனாக செயற்பட்டார். அப்போது இந்தியா இறுதிச் சுற்று வரை முன்னேறியது. 2005ஆம் ஆண்டு இந்திய அணித் தலைவர் பதவி அவரைத் தேடிவந்தது. இவரது தலைமையிலான இந்திய அணி மேற்கத்தையத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் டெஸ்ட்தொடரை வென்றது. 2007 ஆம் ஆண்டு ட்ராவிட் தலைமையிலான இந்திய அணி உலக்கிண்ணப் கிரிக்கெட் போட்டியில் விளையாடி முதல் சுற்றிலேயே வெளியேறியது.அப்@பா@த தலைமைப் பதவியைத் துறந்தார்.
2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட்போட்டியில் இந்தியா ஐந்து பொ@லா ஒன் எனத் தடுமாறியது. அப்போது ட்ராவிட் , லக்ஷ்மன் ஜோடி 281 ஓட்டங்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற உதவியது. ட்ராவிட் 180 ஓட்டங்கள் எடுத்தார்.
2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மூன்று சதம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக ஒரு சதம் அடித்தார்.
200304ஆம் ஆண்டு நியூஸிலாந்து அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு எதிராக இரட்டைச்சதம் அடித்தார். அடிலயிட்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 556 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கட்டுக்களை இழந்து 85 ஒட்டங்கள் எடுத்த போது தனி ஒருவராகப் போராடி 223 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணைபுரிந்தார். அப்போது வெளிநாட்டில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.
2004ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடிய போது காயம் காரணமாக கங்குலி விளையாடவில்லை. அன்றைய போட்டிக்கு ராகுல் ட்ராவிட் தலைவராக செயற்பட்டார். சச்சின் டெண்டுல்கார் முதல் இன்னிங்ஸில் 194 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தõர். சச்சினின் இரட்டை சதத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் குமுறினார்கள். ட்ராவிட்டின் முடிவு பலத்த சர்ச்சையை உண்டாக்கியது. இதுபற்றிய
வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. அந்த டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றதனால் சர்ச்சை அடங்கியது.
ட்ராவிட்டின் ஆட்டத்திறன் இன்னமும் வற்றிவிடவில்லை. இங்கிலாந்தில் இந்திய வீரர்கள் அனைவரும் தடுமாறிய போது நான்கு டெஸ்களில் மூன்று சதங்கள் அடித்து நம்பிக்கையூட்டியவர். அவுஸ்திரேலியாவில் ட்ராவிட் உட்பட சகலரும் மட்டையத் தூக்கவில்லை. அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்களின் முன் இந்திய வீரர்களால் நிலைத்து நிற்கமுடியவில்லை.








மூத்த வீரர்கள் ஓய்வு பெறவேண்டும் என்ற விமர்சனத்துக்கு மதிப்பளித்து ட்ராவிட் ஓய்வுபெற்று விட்டார். இளம் வீரர்களுக்கு வழிவிடுவதற்காக ஓய்வுபெறுகிறேன் என்று அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ட்ராவிட் லக்ஷ்மன், சச்சின் ஆகியோரின் இடத்தை நிரப்பக்கூடிய வீரர்கள் எவரும் இந்திய அணியில் இல்லை. யுவராஜ் ரெய்னா ஆகி@யார் டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எவரும் டெஸ்ட் போட்டியில் நின்று நிலைக்கவில்லை.
மூத்த வீரர்கள் ஓய்வுபெற வேண்டும் என்று குரல் கொடுக்கும் கங்குலி, கபில்தேவ் ஆகியோர் தாம் விளையாடிய போது கௌரவமாக ஓய்வு பெறவில்லை. ஆசிய வீரர்கள் ஓய்வு பெறுவதை கௌரவக் குறைச்சலாக கருதுகிறார்கள். கும்ப்ளே, கங்குலி, ட்ராவிட் போன்ற வீரர்கள் தனித்துவமானவர்கள். அவர்களைப் போன்ற வீரர்கள் உருவாகமுடியாது. அவர் இல்லாத இந்திய கிரிக்கெட் அணியைத் தாங்கப் போவது யார் என்ற இரசிகர்களின் கேள்விக்கு விடை கூற யாராலும் முடியாது. ட்ராவிட் என்ற அற்புதமான வீரனை கிரிக்கெட் இழந்து விட்டது. ட்ராவிட்டெஸ்ட் உலகில் இரண்டாவது வீரர் : ட்ராவிட் 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். இவர் மொத்தம் 13 ஆயிரத்து 288 ஓட்டங்கள் குவித்துள்ளார். டெஸ்ட் உலகில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்பதில் ட்ராவிட் 2வது இடத்தில் உள்ளார். இவர் இந்தியாவின் தடுப்புச் சுவர் என வர்ணிக்கப்பட்டவர்.
ரமணி
மெட்ரோநியூஸ் 16/03/12








No comments: