17 வயதிற்குட்பட்டோருக்கான பிஃபா உலகக் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் அடுத்த மாதம் 6 ஆம் திகதி முதல் 28 ஆ திகதி வரை
இந்தியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் கொல்கத்தா, கொச்சி, புதுடெல்லி, நவி ,கவுகாத்திஇ
மர்கோவா ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.
இந்த போட்டிகளில் விளையாட இந்தியா, ஈரான், அமெரிக்கா உட்பட 24 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு
பிரிவிலும் 4 அணிகள்
இடம்பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா , கானா அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை
எதிர்கொள்கிறது. தொடரின் முதல் நாளான அக்டோபர் 6 ஆ திகதி இரண்டாவது
போட்டியாக இது நடைபெறுகிறது. இதுதவிர, கொலம்பியா அணியுடன் 9- ஆம் திகதியும், கானா அணியுடன் 12 ஆம் திகதியும் இந்திய அணி விளையாட உள்ளது.
நாக்-அவுட் சுற்று போட்டிகள் அக்டோபர் 21 ஆம் திகதியும் 22ஆம் திகதியும் அரையிறுதி போட்டிகள் 25 ஆம் திகதியும் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி அக்டோபர் 28 ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் 21 வீரர்கள் கொண்ட
இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
கோல்கீப்பர்கள்: தீரஜ் சிங்இ பிரப்சுகன் கில்இ சன்னி தாலிவால்
தடுப்பாட்டம்: போரிஸ் சிங்இ ஜிதேந்திர சிங்இ அன்வர் அலிஇ சஞ்சீவ் ஸ்டாலின்இ
ஹென்றி அண்டனேஇ நமித் தேஷ்பாண்டே
நடுக்களம்: சுரேஷ் சிங்இ நிந்தோன்கன்பா மீதேய்இ அமர்ஜித் சிங் கியாம்இ அபிஜித்
சர்கார்இ கோமல் தாடல்இ லலேங்மாவியாஇ ஜேக்சன் சிங்இ நோங்டம்பா நயோரம்இ ராகுல்
கன்னோலி பிரவீன்இ ஷாஜகான்
முன்களம்: ரஹிம் அலிஇ அங்கித் ஜாதவ்
ஜூனியர் உலகக்கிண்ணப் போட்டியில்
கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என இந்திய அணியின் பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி
மாடோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment