Thursday, January 30, 2020

சூப்பர் ஓவரில் வென்றது இந்தியா


இந்தியா,நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நடந்த மூன்றாவது ரி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது. ரி20 போட்டியின் 20 ஆவது ஓவரின் கடசிப் பந்துவரை நியூசிலாந்தின் பக்கமே வெற்றி இருந்தது. ஒரு பந்து ஒரு ஓட்டம் என்ற நிலையில் ஷமியின் துல்லியமான பந்து வீச்சினால் நியுஸிலாந்துன் விக்கெற்றும் வெற்றியும் தகர்ந்ததன.

20 ஆவது ஓவரில் ஷமி இரண்டு விக்கெற்களை வீழ்த்து நியூஸிலாந்தின் வெற்றியைத் தடுத்தார். சூப்பர் ஓவரில் ரோஹித் தொடர்ச்சியாக இரண்டு சிக்கஸ்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்.
சூப்பர்  ஓவரில் இரண்டாவதாக இந்தியா துடுப்பெடுத்தாடியது. முதல் நான்கு பந்துகளில் நியூஸிலாந்தின் வசம் வெற்றி இருந்தது. கடைசி இரண்டு பந்துகளிலும் ஹிற்மன் ரோஹித் சிக்ஸார் அடித்ததனால் இந்தியா வெற்றி பெற்றது. நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் கடைப் பந்துல் சிக்ஸர் அடித்து இந்தியா வெற்றி பெற்றது. ஆறு சூப்பர் ஓவர்  போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.
 இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 ஆட்டம் ஹமில்டனில்   நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற   நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஆக்லாந்தில் நடைபெற்ற இருரண்டு  ரி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என ரி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் நியூஸிலாந்து அணிக்கு இருந்தது.
இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. 5-வது ஓவரின் முடிவில் விக்கெற் இழப்பின்றி 42  ஓட்டங்கள் எடுத்தார். பவர்பிளேயின் கடைசி ஓவரை பென்னட் வீசினார். முதல் பந்தில் ராகுல் ஒரு  ஓட்டம் எடுத்தார். கடைசி 5 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, முதலில் 2 சிக்ஸர்கள் அடித்தார், அடுத்து இரு பவுண்டரிகள், கடைசிப் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் என அதிரடி  காட்டினார்.  . அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 27 ஓட்டங்கள் கிடைத்தன. ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரை சதமெடுத்தார். 6-ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெற் இழப்பின்றி 69 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அணி.

ரி20 ஆட்டத்தின் பவர்பிளேயில் அரை சதம் எடுத்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையையும் ரோஹித் பெற்றார். இதற்கு முன்பு அதிகபட்சமாக தவான் 48 ஓட்டங்கள் எடுத்திருந்தார்
மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் தொடக்க வீரராக 10,000 ர ஓட்டங்கள் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. இத்தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது
19 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ராகுல் 9-வது ஓவரின் முடிவில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஓட்டம் குவிக்கும் வேகம் குறைந்து போனது. கோலிக்குப் பதிலாக 3-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஷிவம் டுபே,  தடுமாறினார். 7 பந்துகளை எதிர்கொண்டு 3 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்து பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு முன்பு ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி சில ஓவர்களுக்குத் தடுமாற ஆரம்பித்தது. அவருடைய விக்கெட்டையும் பென்னட் தான் வீழ்த்தினார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் விழுந்ததால் அடுத்து வந்த கோலியும் ஷ்ரேயஸ் ஐயரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினார்கள். ஏழு ஓவர்களுக்குப் பிறகு 11 ஆக இருந்த ரன்ரேட் 11 ஓவர்களுக்குப் பிறகு 9 ஆகக் குறைந்தது. இரு ஓவர்கள் நிதானமாக விளையாடிய கோலி, ஓட்டம் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார்.

16 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர், சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலி, 38 ஓட்டங்களில் பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 27 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்தார் கோலி
20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா 10, மணிஷ் பாண்டே 14 ஓட்டங்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். நியூஸிலாந்துத் தரப்பில் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூஸிலாந்து அணிக்கு பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்கள் கிடைத்தது. கப்தில் 21 பந்துகளில் 31 ஓட்டங்கள்  எடுத்தார். மன்ரோவை 14 ஓட்டங்களில் வீழ்த்தினார் ஜடேஜா.   அவர் சிறப்பாகப் பந்துவீசியது இந்திய அணிக்கு மிகவும் உதவியது. விரைவாக ஓட்டங்கள் குவிக்கக் களமிறக்கப்பட்ட சான்ட்னர் 11 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த கிராண்ட்ஹோம் 12 பந்துகளில் 5 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
எனினும் நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கினார். 28 பந்துகளில் அரை சதமெடுத்த வில்லியம்சன், தொடர்ந்து சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து இந்திய அணிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். அதிலும் உலகின் சிறந்த பந்துவீச்சாளரான பும்ராவைக் குறி வைத்து ஓட்டங்கள் குவித்தார். பும்ரா பந்துவீச்சில் 12 பந்துகளை எதிர்கொண்டு 25 ஓட்டங்கள் எடுத்தார் வில்லியம்சன். அதில் 5 பவுண்டரிகள்
கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவை என்கிறபோது ஷமி பந்துவீசினார். முதல் பந்திலேயே டெய்லர் சிக்ஸர் அடித்ததால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழந்தார்கள். ஆனால், 5 பந்துகளில் 3 ஓட்டங்கள் என்கிற எளிதான நிலையிலிருந்து ஆட்டம் மாறியதுதான் அதிசயம். 3-வது பந்தில் 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் வில்லியம்சன். 48 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடித்தார் வில்லியம்சன்

அடுத்து வந்த சைஃபர்ட், 2 பந்துகளிலும் தடுமாறினார். கடைசிப் பந்தை எதிர்கொண்டார் டெய்லர். அப்போது ஆட்டம் சமனில் இருந்தது. 1ஓட்டம் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் கடைசிப் பந்தில் டெய்லரை 17 ஓட்டங்ககளில் வெளீயேற்றுனார். ஷமி. இதனால் ஆட்டம் சமன் ஆகி, சூப்பர் ஓவர் நிலைக்குச் சென்றது
சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி, பும்ராவின் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்கள் எடுத்தது. இந்த முறையும் பும்ராவின் பந்துவீச்சில் 1 ஒரு சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்து அசத்தினார் வில்லியம்சன்.
18 ஓட்டங்கள்  இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, முதல் 2 பந்துகளில் 3 ஓட்டங்கள் தான் எடுத்தது. பிறகு ராகுல் ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி இரு பந்துகளில்  10 ஓட்டங்கள் தேவை என்கிற பொறுப்பு ரோஹித் சர்மா வசம் சென்றது.
செளதி வீசிய 5-வது பந்தில் சிக்ஸர் அடித்தார் ரோஹித். கடைசிப் பந்தில் 4 ஓட்டங்கள் தேவை என்கிற நிலையில் மற்றுமொரு சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்தார் ரோஹித் சர்மா.
யாரும் எதிர்பாராதவிதத்தில் 3-வது ரி0 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரையும் வென்றுள்ளது. இதன்மூலம் நியூஸிலாந்து மண்ணில் முதல்முறையாக டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி
மிகச்சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த ரோஹித் சர்மா, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்

No comments: