Sunday, July 5, 2020

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை - வடகொரியா

  

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு குண்டுகளை தொடர்ந்து சோதனை செய்து வந்தது.

  வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பாலமாக இருந்த தென் கொரியாவுடன் வடகொரியாவுக்கு மோதல் வலுத்து வருகிறது

இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அணு ஆயுத பேச்சுவார்த்தைக்காக கிம் ஜாங் உன்னை, ட்ரம்ப் சந்திப்பார்என அண்மையில் தெரிவித்தார். அக்டோபர் மாதத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் எனவும் அவர் கூறினார்.

ஆனால் வட கொரியா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

மேலும் அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிரான விரோத போக்குகளை மாற்றிக் கொள்ளும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை எனவும் வட கொரியா கூறியுள்ளது

இது குறித்து பேசிய வடகொரியாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி சோ சோன் ஹூய்சிங்கப்பூரில் நடந்த சந்திப்பின்போது செய்துகொண்ட ஒப்பந்தங்களை புறக்கணித்துவிட்டு வடகொரியா மீது விரோத கொள்கையை செயல்படுத்திவரும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா? ஏதேனும் பரிவர்த்தனை செய்ய முடியுமா?” என கேள்வி எழுப்பினார்

மேலும் அவர்அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணரவில்லை. ஏனெனில் இந்தப் பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அரசியல் நெருக்கடியை சமாளிப்பதற்கான ஒரு கருவி ஆகும்எனக் கூறினார்

இதனிடையே அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் அந்த நாட்டின் தலைமை மாற வாய்ப்புள்ளதால் நவம்பர் வரை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை வடகொரியா தவிர்க்கும் என சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

No comments: