Tuesday, December 6, 2022

உலகக்கிண்ண தோல்வியின் எதிரொலி மூன்று பயிற்சியாளர்கள் இராஜினாமா


 உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்  நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறத் தவறியதால்  பெல்ஜியம்,கானா,மெக்ஸிகோ ஆகிய அணிகளின் பயிற்சியாளர்கள் இராஜினாமாச் செய்துள்ளனர்.

கானா பயிற்சியாளர்  ஓட்டோ அடோ ,  தென் கொரியாவுக்கு எதிரான  போட்டியில் வெற்றி பெற்றதால்   கானா ரசிகர்கள் அடோமீது நம்பிக்கை வைத்தனர்.   தகுதிச் சுற்றில் நைஜீரியாவை வீழ்த்தி   உலகக் கிண்ணப் போட்டிக்கு கானா தகுதி பெற்றது.  உலகக் கிண்ணப் போட்டியில்  இதுவரை விளையாடிய சிறந்த கானா அணி இதுவாகும்.
பெல்ஜியத்தின் பயிற்சியாளர்  ராபர்டோ மார்டினெஸ் பயிற்சியாளராகத் தொடரப்போவதில்லை என அறிவித்துள்ளார்.  2016 ஆம் ஆண்டு முதல் மார்டினெஸ் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.   2016 யூரோவில் காலிறுதி, 2018 உலகக் கிண்ணப் போட்டியில்  3 வது இடம் மற்றும் 2020 யூரோவில் காலிறுதி என அணியை முன்னேற்றினார்..
கானா பயிற்சியாளர் ஓட்டோ அடோ, ஒரு மோசமான குழு நிலைக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தார், இது அவரது  உருகுவேக்கு எதிரான போட்டியில் மிக  மோசமாகச் செயற்பட்டது.


பதவியைத் தொடருவதா அல்லது விலகுவதா என்ற மனநிலையில்  உள்ள பயிற்சியாளர்களின் பட்டியல் ஃபெலிக்ஸ் சான்செஸ் (கத்தார்), கார்லோஸ் குய்ரோஸ் (ஈரான்), ராப் பேஜ் (வேல்ஸ்), காஸ்பர் ஹ்ஜுல்மண்ட் (டென்மார்க்), டியாகோ அலோன்சோ (உருகுவே), டிராகன் ஸ்டோஜ்கோவிக் (சேர்பியா), , ஹன்சி ஃபிளிக் (ஜேர்மனி) .

No comments: