Saturday, October 12, 2024

பாஜகவை கைவிட்ட காஷ்மீர் காஷ்மீரை கோட்டைவிட்ட காங்கிரஸ்

இந்திய நாடளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  ஜம்மு காஷ்மீர்,ஹரியானா   தேர்தல் முடிவுகள் இந்திய கூட்டணிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் பாடம் எடுத்துள்ளன.

இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்தியக் கூட்டணி, வெற்றி பெறும் எனவும்  பாரதீய ஜனதா படு  தோல்வியடையும் எனவும்  கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

தேர்தல் முடிவும் எதிர்பார்த்தது போல வெளியாகின.    மாநிலமாக இருந்த ஜமு காஷ்மீரை ஜூனியன் பிரதேசமாக மாற்றிய பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அந்த மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

ஹரியானாவில் காலையில் காங்கிரஸ் பக்கம் இருந்த வெற்றி வாய்ப்பு நேரம் செல்லச் செல்ல பாரதீய ஜனதாவின் பக்கம் சாய்ந்தது.

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஹரியாணாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது பாரதீய ஜனதா

ஜம்மு - காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் பா... 29 இடங்களிலும் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் ஏழு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

 ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 இடங்களில், 48 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும் 37 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் இந்திய தேசிய லோக் தளம் இரண்டு இடங்களிலும் சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. ஹரியானாவில் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி, வாக்குகளைப் பிரித்ததால் காங்கிரஸின் வெற்றி எட்டாமல் போனது.

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் காங்கிரம் ஹரியானா தேர்தலில் மோசடி அநபெற்றிருக்கிறதென்ற குற்றச் சாட்டுடன் தேர்தல் திணைக் களத்தில் புகார் செய்துள்ளது.

இந்தியாவில் ஜம்மு - காஷ்மீருக்கு  மட்டும்சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, அங்கு நடந்த முதல் தேர்தல் இது என்பதால், இந்த நடவடிக்கைகள் குறித்த மக்களின் மனநிலையை அறியத் தரும் தேர்தலாக இந்த சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஒமர் அப்துல்லா அதிர்ச்சி தரத்தக்க வகையில் தோல்வியடைந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. ஒமர் அப்துல்லா மாநிலத்தின் புதிய முதல்வராகத் தேர்வுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்குவோம் என்ற கோஷத்துடன் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது.

திமிருடன் ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தைப் பறித்த பாரதீய ஜனதாவும் மீண்டும் மாநில அந்தஸ்து தருவதாக  உறுதியளித்தது. மக்கள் நம்பவில்லை என்பதை தேர்தல் முடிவு எடுத்துக் காட்டியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர்  அந்த மாநிலத்தில் ஐந்து நியமன எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் என அறிவித்துவிட்டதால், வாக்கு எண்ணிக்கை துவங்கும் முன்பே அவர்களிடம் ஐந்து எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். மேலும், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்துக்கள் அதிகமுள்ள ஜம்முவில் அதிக இடங்களும் முஸ்லிம்கள் அதிகமுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் தொகுதிகள் குறைவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். அப்படியிருந்தும் முடிவுகள் தீர்க்கமாக பா..கவுக்கு எதிராக வந்திருக்கின்றன. 370 நீக்குவதன் மூலமாக காஷ்மீரிகள் என்ற உணர்வை அம்மாநில மக்களிடம் நீக்க முடியவில்லை.

  நீண்ட நாட்களுக்கு ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசமாக வைத்திருக்க முடியாது. விரைவிலேயே அதன் மாநில அந்தஸ்தை திரும்பத் தர வேண்டியிருக்கும். 370வது பிரிவை திரும்ப கொண்டுவர மாட்டார்கள் என்றாலும் சில அம்சங்களாவது திருப்பியளிக்கப்படும். ஜம்மு - காஷ்மீரில் நாங்கள் எடுத்த முடிவை மக்கள் ஆதரிப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மக்கள் அதற்கு நேரெதிராக, தீர்க்கமாக வாக்களித்திருக்கிறார்கள்.

2014ல் இருந்து பாரதீய ஜனதாவுக்கு ஆதரவளித்தஅம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி  இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. 81 இடங்களில் போட்டியிட்டு, சுமார் 9 சதவீத வாக்குகளையும் மூன்று இடங்களையும் மட்டுமே அக்கட்சி பிடித்திருக்கிறது.

: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சியை பிடித்தது. பல்வேறு வியூகங்களை வகுத்த பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பாஜக ஜம்மு காஷ்மீரின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடக்காமல் இருந்தது. இந்தாண்டு தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும். இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.

காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும் கூட்டணி அமைத்தது. பாஜக தனித்து களமிறங்கியது. அதேபோல முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கின.

 பாரதீய ஜனதா  இதுவரை ஜம்மு காஷ்மீரில் தனித்து வெற்றி பெற்றது இல்லை. இதனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும்   வாக்கு சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

அதேநேரத்தில் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தாலும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 18% வாக்குடன் 12 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கு 38 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதில் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் வாக்கு 12% ஆக குறைந்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் தோல்வியை சந்தித்தாலும், ஜம்மு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.

அங்கு பாஜக போட்டியிட்ட 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சிக்கு அடுத்த பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பாஜக பெற்றுள்ளது. தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் வாக்கு சதவீத அடிப்படையில் மொத்தமாக பாஜக 25%, தேசிய மாநாடு கட்சி 23% பெற்றுள்ளன.

பாரதீய ஜனதாவைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் முடியும் என்பதை ஆம்  ஆத்மி இன்னமும் உணரவில்லை என்பதால் ஹரியானாவின் வெற்றி  கையை விட்டுப் போனதுஇந்தத் தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். விரைவிலேயே மகாராஷ்டிர மாநிலத்திலும் ஜார்க்கண்டிலும் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. மகாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாதக காங்கிரஸ் - உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணியில் தானே பலம் வாய்ந்த கட்சி என்ற காங்கிரஸின் இமேஜ், இந்தத் தோல்வியால் சற்று மங்கக்கூடும். இது இடங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் எதிரொலிக்கக்கூடும்.

"ஆனால், மகாராஷ்டிராவில் தேர்தலை நடத்தாமல் தேர்தல் ஆணையம் தள்ளிப்போடுவதே, காங்கிரஸ் கூட்டணிக்கு இருக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது.

ரமணி

13/10/24

 

 

 

 

 

 

 

 

Wednesday, October 9, 2024

பிரிட்ஜ்ஸ்டோன் டொயோட்டா, பனசொனிக் ஆகியன ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறின‌


 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூன்று முக்கிய ஜப்பானிய அனுஅசரணையாளர்களான  டொயோட்டா, பானாசோனிக்  பிரிட்ஜ்ஸ்டோன் ஆகியன  தங்கள் ஒப்பந்தங்களை நிறுத்துகின்றன

ஜப்பானிய அனுசரணையாளர்கள்  ஒலிம்பிக்கில் இருந்து விலகிவிட்டனர், இது 2020 டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் ஒரு வருட தாமதம் காரணமாக இருக்கலாம். இந்த தாமதம், போட்டி நடைபெறும் இடங்களில் கலந்து கொள்ள ரசிகர்கள் அனுமதிக்கப்படாதமை  ரசிகர்களின்  பார்வையை குறைத்தது, செலவுகள் அதிகரித்தன, மேலும் கேம்ஸ் சுற்றிலும் எண்ணற்ற ஊழல் ஊழல்கள் வெளிப்பட்டன.

 
மிக முக்கியமான அனுசரணையாள்ர்களான‌ 15 நிறுவனங்களில் இவை மூன்றும் மிக முக்கியமானவை  கடந்த நான்கு வருட ஒலிம்பிக் சுழற்சியில் 15 அனுசரணையாளர்களும்  $2 பில்லியனுக்கும் அதிகமான தொகையை ஒலிம்பிக்குக்குச் செலுத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த பரிஸ் விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் அதன் ஸ்பான்சர்ஷிப்பைப் புதுப்பிக்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

தலைவர் Akio Toyoda கடந்த மாதம் அமெரிக்க டீலர்ஷிப்களின் கூட்டத்தில், IOC இன் இலக்குகள் வாகன உற்பத்தியாளரின் பார்வைக்கு பொருந்தவில்லை என்று கூறினார்.

"
நேர்மையாக, அவர்கள் (IOC) உண்மையிலேயே மக்களை முதலிடத்தில் வைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, ஒலிம்பிக் என்பது அனைத்துத் தரப்பு விளையாட்டு வீரர்களும், அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொண்டு, அவர்களின் சாத்தியமற்றதைச் சாதிப்பதைப் பார்ப்பதாக இருக்க வேண்டும்,” என்று டொயோடா ஆங்கிலத்தில் கூறினார்.

தனிப்பட்ட ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கும், பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கும் தொடர்ந்து நிதி உதவி அளிப்பதாக டொயோடா உறுதியளித்தார்.

டொயோட்டா 2015 இல் அறிவிக்கப்பட்டபோது ஐஓசியின் மிகப்பெரிய ஒப்பந்தம் $835 மில்லியன் மதிப்புடையதாக அறிவிக்கப்பட்டது. தென் கொரியாவில் பியோங்சாங் 2018 குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி, இப்போது நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் வரை நான்கு ஒலிம்பிக் போட்டிகளையும் உள்ளடக்கியது.
ABINBev, Airbnb, Alibaba, Allianz, Atos, Bridgestone, Coca-Cola, Deloitte, Intel, Omega, Panasonic, P&G, Samsung, Toyota
மற்றும் Visa.      ஆகியன முதலிடம் வகிக்கும் அனுரசரணையாளர்களாவர்  

2014
ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் அனுசரணையாளராக  இருக்கும் Tiremaker Bridgestone Corp., இந்த வாரம் IOC உடனான ஒப்பந்தத்தை இந்த ஆண்டு முடிவடைந்த பிறகு புதுப்பிக்கவில்லை என்று கூறியது.
 

1987
ஆம் ஆண்டு ஐஓசி ஸ்பான்சரான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பானாசோனிக் கார்ப், கடந்த மாதம் தனது ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்துவதாகக் கூறியது மற்றும் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. "ஸ்பான்சர்ஷிப் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை மதிப்பாய்வு செய்த பிறகு" இந்த முடிவு எடுக்கப்பட்டது.

டோக்கியோ விளையாட்டுப் போட்டிகள் உள்ளூர் ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் ஒப்பந்தங்களை வழங்குவது தொடர்பான ஊழல் மோசடிகளில் சிக்கித் தவித்தன. Dentsu Inc, மிகப்பெரிய ஜப்பானிய சந்தைப்படுத்தல் மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனம், டோக்கியோ ஒலிம்பிக்கின் சந்தைப்படுத்தல் பிரிவாக இருந்தது மற்றும் உள்ளூர் ஸ்பான்சர்ஷிப் பணத்தில் $3.3 பில்லியன்களை வசூலித்தது.
 
டோக்கியோ விளையாட்டுகளுடன் முடிவடைந்த கடந்த நான்கு ஆண்டு சுழற்சியில் IOC $7.6 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது. பரிஸ் ஒலிம்பிக்குடன் முடிவடையும் சுழற்சிக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஐஓசியின் டாப் ஸ்பான்சர்கள் அந்தக் காலகட்டத்தில் $2 பில்லியனுக்கும் மேல் செலுத்தியுள்ளனர். அடுத்த சுழற்சியில் இந்த எண்ணிக்கை 3 பில்லியன் டொலர்களை எட்டும்.

  ரமணி

6/10/24