மும்பை
வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 24-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை
7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. குயின்டன்
டி காக் சதம் அடித்தும் வெற்றி பெற முடியவில்லை இந்தத் தோல்வியின் மூலம் மும்பை அணி தனது 4-வது
தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது.
மும்பை
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற பஞ்சாப்
கப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடியமும்பை 6 விக்கெற்களை இழஎது 195 ஓட்டங்கள் எடுத்தது. ரோஹித்
சர்மா காயம் காரணமாக விளையாடாத நிலையில், தொடக்க வீரராகக் களம் இறங்கிய குயின்டன் டி
காக் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 112 ஓட்டங்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்)
குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்குத்
துணையாக நமன் திர் 50 ஓட்டங்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தார். இருப்பினும்,
மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை
இழந்து 195 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப்
தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
196
ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு, தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா
(15) , கூப்பர் கான்னொலி (17) ஏமாற்றம் அளித்தாலும், அதன்பின் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன்
சிங் ,கப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை பந்துவீச்சைச் சிதறடித்தனர். பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து
ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 66 ஓட்டங்கள் விளாசினார்.
பஞ்சாப்
அணி 16.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்களை இழந்து
198 ஓட்டங்கள் எடுத்து இலக்கை எட்டியது. மும்பை தரப்பில் நட்சத்திர பந்துவீச்சாளர்
ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் ஏதுமின்றி 41 ஓட்டங்களிக்
கொடுத்தார். இம்பாக்ட் பிளேயராக வந்த அல்லாஹ் கஜன்பர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல்
தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் என்ற பெருமையை
அர்ஷ்தீப் சிங் பெற்றார்.

No comments:
Post a Comment