Friday, March 9, 2018

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி





               வெற்றிக்களிப்பில் இந்திய வீரர்கள்
 

இந்தியா,பங்களாதேஷ்,இலங்கை ஆகியவற்றுகிடையே கொழும்பில் நடைபெறும் முத்தரப்பு ரி20 கிறிக்கெற் போட்டியில் இந்தியா முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.

பிறேமதாஸ மைதாந்த்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து விளையாடிய இந்தியா ஆறு விக்கெற்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ்  எட்டு விக்கெற்களை இழந்து 136 ஓட்டங்கள் எடுத்தது.  137 என்ற வெற்ரி இலக்குடன் விளையாடிய இந்தியா  நான்கு விக்கெற்களை இழந்து 140 ஓட்டங்கள் எடுத்தது.   

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா களத்தடுப்பைத் தேர்வு செய்தார். தமிம் இக்பாலும் சவும்யா சர்காரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்
பங்களாதேஷ் வீரர்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். களத்தடுப்பில் தடுமாறியதால் குறைந்த ஓட்டங்களில் கட்டுப்படுத்த முடியவில்லை.. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் சவும்யா சர்கார் வெளியேறி இருக்க வேண்டியது.  பந்தை அவர் தூக்கியடித்தபோது அதனைப் பிடிக்க வாஷிங்டன் சுந்தரும், மனிஷ் பாண்டேவும் ஓடி வந்தனர். அருகில் வந்ததும், ‘அவர் பிடிப்பார் என்றும் இவரும், இவர் பிடிப்பார் என்று அவரும் நினைத்து முயற்சிக்காமல் நின்றனர். அதற்குள் பந்து கீழே விழுந்துவிட்டது. ஆனாலும் அடுத்த ஓவரில் சவும்யா சர்கார் [14 ஓட்டங்கள்] வெளியேற்றினார்..

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த பங்களாத்ஷ் அணியினர், அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியதால் ரன்ரேட் பெரிய அளவில் செல்லவில்லை. அபாயகரமான பேட்ஸ்மேன்களான தமிம் இக்பால் 15 ஓட்டங்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 18ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 34 ஓட்டங்கள் எடுத்தார்.


                   ஆட்டநாயகன் விஜய் சங்கர் 

 
20 ஓவர் முடிவில் பங்களாதேஷ் 8 விக்கெற் இழப்புக்கு 139 ஓட்டங்கள்  மட்டுமே எடுத்தது. இந்திய வீரர்கள் பீல்டிங்கில் 3 கேட்ச்சுகளை கோட்டை விட்டனர். விஜய் சங்கரின் ஓவரில் லிவிங்டன் தாஷ் இரண்டுமுறை தப்பினார். இதனால் ஒரு ஓவரில் இரண்டு விக்கெற்களை வீழ்த்தும் சந்தர்ப்பத்தை விஜய் சங்கர் தவறவிட்டார்.களத்தடுப்பு சிறப்பாக இருந்திருந்தால் விஜய் சங்கர் ஐந்து விக்கெற்களை வீழ்த்தி இருப்பார்.. இந்திய தரப்பில் ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெற்களையும், விஜய் சங்கர் 2 விக்கெற்களையும் வீழ்த்தினர்..


அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து  140 ஓட்டங்கள்எடுத்து 6 விக்கெற் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை பெற்றது. ஷிகர் தவான் 55 ஓட்டங்களும் (43 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), சுரேஷ் ரெய்னா 28 ஓட்டங்களும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.. 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
 





Wednesday, March 7, 2018

முத்தரப்பு ரி 20 தொடர் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

ஆட்ட நாயகன் குசல் பெரேரா

 

இலங்கை   சுதந்திரக்கிண்ண ரி20 சுற்றுப்போட்டியில் இந்தியா,பங்களாதேஷ்,இலங்கை ஆகியன விளையாடுகின்றன. கொழும்பு பிறேமதாஸ மைதானத்தில் நடைபெற முதலாவது  போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய  இலங்கை  ஐந்து விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நானயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலவர் சண்டிமால் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஐந்து விக்கெற்களை இழந்து 174 ஓட்ட்டங்கள் எடுத்தது.

ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரின் 4 ஆவது பந்தில் ரோகித் சர்மா ஓட்டம் எதுவும் எடுக்காமல் சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் நுவான் பிரதீப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

3 ஆவது  விக்கெட்டுக்கு தவானுடன்  மணிஷ் பண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது.
  12.4 ஓவரில் 104 ஓட்டங்கள்  இருக்கும்போது மணிஷ் பண்டே 37 ஓட்டங்களில் (35 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸ்) ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பந்த் களம் இறங்கினார். அரைசதம் அடித்த தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தவான் 49 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சர்களுடன் 90 ரஓட்டங்கள் எடுத்தார். 5 ஆவது விக்கெற்றுக்கு  ரிஷப் பந்துடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் இரண்டு பவுண்டரியும், ரிஷப் பந்த் ஒரு பவுண்டரியும் அடித்து, கடைசி பந்தில் ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு  174 ஓட்டங்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 6 பந்தில் 13 ஓட்டங்கள் சேர்த்தார்.

சதத்தைத் தவறவிட்ட  தவான்



  175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியஇலங்கை 18.3 ஓவரிகளில் ஐந்து விக்கெற்களை இழந்து 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 
 குணதிலகா, குஷால் மெண்டிஸ் ஆகியோர்  ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். இரண்டாவது ஓவரில்
 11 ஓட்டங்கள் எடுத்த மெண்டிசை  வாஷிங்டன்   வெளியேற்றினார்.

அடுத்து களமிறங்கிய குசல் பெரேரா அதிரடியாக ஆடினார். அதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.  மூன்றவது ஓவரில் சர்துல் தாகூரை எதிகொண்ட குசல் பெரேரா  4 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 27 ஓட்டங்கள் எடுத்தார்.இந்த ஜோடி 58 ஓட்டங்கள் சேர்ந்த நிலையில் உனத்கட், குணதிலகாவை வெளியேற்றினார். அதன்பின் இறங்கிய சண்டிமாலும் நீடித்து நிலைக்கவில்லை. சஹால் சுழலில் தனது விக்கெற்றைப்  பறிகொடுத்தார்.

அடுத்து உபுல் தரங்கா களமிறங்கினார். மறுமுனையில் பெராரா தனது அதிரடியை தொடர்ந்தார். இவர் 37 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெற்  இழப்புக்கு 127 ஆக இருந்தது. அதன்பின் இறங்கிய சனகாவும் தரங்காவும் நிதானமாக ஆடினர். ஆனாலும் சஹால் சுழலில் தரங்கா சிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இலங்கை அணி 5 விக்கெற்இழப்புக்கு 136 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து திசரா பெராரா களமிறங்கினார். இருவரும் பொறுமையாக ஆடினர். கடைசி 4 ஓவரில் 35 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இருவரும் ஒன்றும் இரண்டுமாக எடுத்தனர். 17வது ஓவரில் 11 ஓட்டங்களும், 18வது ஓவரில் 16 ஓட்டங்களும் எடுக்க இலங்கை அணியின் வெற்றி உறுதியானது. கடைசி 2 ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் முதல் பந்து  வைடு ஆனது. அடுத்த பந்தில் ஒரு ஓட்டமும், அதற்கடுத்த பந்தில் 2 ஓட்டங்களும், மூன்றாவது பந்தில் 4 ஓட்டங்களும்,  எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது.
 
அந்த அணியின் திசாரா பெரேரா 10 பந்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 22ஓட்டங்களும், சனகா 18 பந்தில் 15 ஓட்டங்களும்எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை குசால் பெரேரா பெற்றார்.

இந்திய அணியின் சார்பில் வாஷிங்டன் சுந்தர், சஹால் தலா 2 விக்கெற்களும், உனத்கட் ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினர்.


 90 ஓட்டங்கள் எடுத்த தவான்  ரி20 போட்டியில் தனது அதிக பட்ச ஓட்டத்தைப் பதிவுசெய்தார். முன்னதாக நியூஸிலாந்துக்கு எதிராக டில்லியில் 2017  ஆம் ஆண்டு 80 ஓட்டங்கள் எடுத்தார். இதேவேளை இந்திய மண்ணில் இந்திய வீரர் எடுத்த அதிக பட்ச ஓட்டமும் இதுவாகும். முன்னதாக 2017 ஆம் ஆண்டு கோஹ்லி எடுத்த 82 ஓட்டங்களே அதிகமானதாக இருந்தது.