Saturday, December 28, 2013

ஜீவநதி கார்த்திகை

ஓலைக்குடிசையின் முன்னால் பட்ட மரத்தின்  கீழ் நிலாவொளியில் பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லும் பாட்டியின்  அட்டைப் படத்துடன் ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகையின் கார்த்திகை இதழ் வெளியாகி உள்ளது. .பரம்சோதியின்  பாட்டி கதை சொல்லும்  அட்டைப் படம் பழைய கதைகள் பலவற்றை ஞாபகப்படுத்து கிறது.
இந்திய சினிமா நூற்றாண்டை முன்னிட்டு வ்றொன்ஸ் லைன் (FRONTLINE] வெளியிட்ட சிறப்பிபிதழில்  பாலுமகேந்தி ராவைப் பற்றி எஸ்.ஆர்.அசோக்குமார் எழுதிய கடடுரையை அ.யேசுராசா மொழியாக்கம் செய்துள்ளார்.
தாய் மொழியின் முக்கியத்துவம் பற்றிய ஆசிரியத் தலையங்கம்  தாய்மொழியின் அவசியத்தை வலியுறுத்துகிறது.  குணசேன  விதானவின் பாலம் பற்றிய புதிய தகவல் களை மேமன் கவி எழுதியுள்ளார். மடுளுகிரியே விஜயரத்ன சிங்களத்திலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட பாலம் பற்றிய சிறப்புகளையும் தவறுகளையும் தனக்கே உரிய  பாணியில்  தந்துள்ளார்.  சிவாசுப்பிரமணியம் ஜெயகாந்தன் ஆகிய யோர் இதனை ஏற்கனவே தமிழில் மொழி பெயர்த்த தகவலையும் தந்துள்ளார்.
மகாத்மா காந்தியை நிராகரித்த மாமேதை அம்பேத்கார் பற்றி இ.சு. முரளிதரன், கொடகே சாகித்ய விருது பெற்ற திருமதி அன்னலட்சுமி ராஜதுரை பற்றி எம்.எம்.மன்ஸீர் ஆகியோர் எழுதிய   கட்டுரைகள் உள்ளன.   இலக்கியத்தில் உள்ள சந்தேகங்களுக்கு அ.பெளந்தி தரும் விளக்கங்கள் பயனுள்ளவை.இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பகுதியாக இவரின் விவாத மேடை உள்ளது.
இ.முருகபூபதி, அன்ரனி ஜீவா ஆகியோரின்  அனுபவத் தொடர்களும் மா. செல்வதாசின் தமிழ்த் திரைப்படலாசிரியர்கள் பற்றிய தொடரும்  இடம்பெற்றுள்ளன.
மட்டுவில் ஞானக்குமரன் , சபா ஜெயராஜா, பாலமுனை பாரூக், கா, சிவபாலன், ஆகியோரின் கவிதைகளும்,   க.சட்டநாதன் (கருணாகரன்) அகியோரின் சிறுகதைகளும் நாச்சியா தீவு பர்வீனின் மனா வெளியின் பிரதிநிதிஎனும் கவிதை நூல் எஸ். முத்து மிரானின்  என்னடா கொலமும், கோத்திரமும் எனும் சிறுகதை தொகுதி ஆகியவற்றின் விமர் சனமும் கார்த்திகை மாத ஜீவநதியில் உள்ளன.

 சூரன் சுடர் ஒளி
15/12/13

No comments: