Tuesday, June 16, 2026

ராகுலைக் கைவிட்டு மோடியுடன் நெருக்கமாகும் விஜய் கூட்டணிக் கட்சிகள் வெளியேறியதால் தனிமரமான ஸ்டாலின்


  வங்கதேசத்தில் படு தோல்வியடைந்த மம்தா காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளார்.

0000000000000000000000000000000000

விஜய் வருந்தி அழைத்த போதும் திரும்பிப் பார்காதவர்கள் வரிசைகட்டி ஒடினார்கள்

0000000000000000000000000000000000000000

அதிகார ஆசையில்  அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் தவெகவில் இணைய முண்டியடிக்கிறார்கள்.

000000000000000000000000000000000000000000000000

திமுக படுதொல்வியடைந்த போதும் அங்கிருந்து யாரும் வெளியேறுவதாகத் தெரியவில்லை

0000000000000000000000000000000

 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழக அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மோடியின் அரசுக்கு எதிராகக் கட்டமைத்து உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டனியில் இருந்து திமுக வெளியேறியதால் டில்லி அரசியல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.  இந்தியாக்கூட்டணியில் டாலினின் இடத்தை விஜய் நிரப்புவார் என ராகுல் காந்தி எதிர்பார்த்திருந்தார். ஆனால், இந்தியாக் கூட்டணியில் இணையப்போவதில்லை  என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டார் விஜய்.

ஸ்டாலினின் தலைமையில் தமிழகத்தில் வலுவாக இருந்த  மத சார்பற்ற கூட்டணி  இன்று  கைர்ந்து  போயுள்ளது. திமுக  மட்டும் தனிமையில் உள்ளது. விஜய் யிடம் கொள்கையும் இல்லை,கோட்பாடும் இல்லை என முழங்கியவர்களும்,  ஆர்.எஸ்.எஸ்ஸின் குழந்தை என விஜய்   விமர்சித்தவர்களும் அமைச்சர் பதவிக்காகக் கொள்கையைக்  கைவிட்டு  அவருக்கு முட்டுக் கொடுக்கின்றனர். 

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுக இல்லாத  இந்தியா கூட்டணிக் கூட்டம் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் திமுக ஏன் கலந்துகொள்ளவில்லை என கூட்டனிக் கட்சிகள்  கேள்விக்கணை தொடுத்தன. அந்தக் கேள்விகளுக்கான திலை காங்கிரஸால் கொடுக்க முடியவில்லை. திமுகவை காங்கிரஸ் கையாண்ட விதம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியது.

பிராந்தியக் கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடாது அவற்றை ஆதரிக்க வேண்டும் என  சமஜ்வாதிக் கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

நிதிஷ்குமாரைச்  இழந்ததால்  கூட்டணி பலவீனமாக உள்ளது. இந்த நிலையில் திமுகவும் வெளியேறினார் மேலும்  பின்னடைவு ஏற்படும் என தேஜஸ் யாதவ் கருத்துத் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளிடையேயான அவசியத்தை வலியுறுத்திய உமர் அப்துல்லா, திமுகவை ,  இந்தியா கூட்டனிக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.

சமஜ்வாதி,ராஜ்டிரிய ஜனதா தளம், தேசிய வாத காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும்  திமுகவின் அவசியத்தை வலியுறுத்திக் கேள்வி எழுப்பின. இப்ப்படி ஒரு காட்டமான  எதிர்ப்பு  ஏற்படும் என காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை.

  தேர்தலில் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்  தலைவருக்கு இருக்க வேண்டும். இந்தியத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்த ராகுல் காந்தியின் செயற்பாட்டால் வெற்றியில் உச்சியில் இருந்த ஸ்டாலின் குப்புறக் கவிழ்க்கப்பட்டார்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற மோடியின் கோஷத்துக்கு ராகுல் காந்தி வலுச் சேர்க்கிறார்.  இன்றைய சூழலில் தமிழகத்தில் பலவீனப்பட்டிருக்கும் திமுகவை இந்தியா கூட்டனியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனப்தில் ராகுல் காந்தியும்,  அவரது ஆதரவாளர்களும் குறியாக இருக்கின்றனர்.

தேர்தலில் வெற்றி பெறும் வரை கைகோர்த்துவிட்டு தோல்வியடைந்ததும் துரோகம் செய்த காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில்   திமுக இருக்க வாய்ப்பு இல்லை. தங்களுக்கு உரிய மரியாதை இல்லாத ஒரு இடத்தில் திமுகவால் தொடர்ந்து நீடிக்க முடியாது. 

  இந்தியாக் கூட்டனியில் இருந்து ஸ்டாலின்  வெளியேறுவதை  மற்றைய மாநில முதலமைச்சர்களும், தலைஅர்களும் நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். ஏனெனில், அவர் இக்கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். இந்த கூட்டணியின் மிக வலுவான ஒரு தூணாக ஸ்டாலின் இருந்தார். எனவே, ஸ்டாலின் கலந்து கொள்ளாத முதல் இந்தியா கூட்டணிக் கூட்டம் என்பது அக்கூட்டணிக்கு ஒரு பலவீனமாகத்தான் பார்க்கப்படும். அதை உணர்ந்துதான், திமுக இன்னும் விலகவில்லை என்று சில காங்கிரஸ் தலைவர்கள்   பேசி வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி வெறும் ஒரே இரவில் ஒட்டுமொத்தமாகத் தடம் மாறி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெகவுடன் தான் கூட்டணி என்று அறிவித்துவிட்டது.


, திமுகவும் தவெகவும் கிட்டத்தட்ட அண்ணா திமுக - திமுக போல நேர் எதிரிகளாக மாறிவிட்டார்கள். தவெகவும் வேண்டும், திமுகவும் வேண்டும் என  காங்கிரஸ் எதிர்பார்க்க முடியாது.  விஜய் ஒரு மாநிலத்தின் முகமாக ஈசியாக வந்துவிடலாம். ஆனால், தேசிய அளவில் மோடிக்கு மாற்றாக ஒரு நாட்டின் முகமாக விஜய் உருவெடுப்பதற்கு வாய்ப்பில்லை. தேசிய அளவிலான அரசியல் கணக்குகள் முற்றிலும் வேறானவை. தேசிய அளவில் தலையெடுக்கும் ஒருவரை   இந்துத்துவா  வாக்கு வங்கி விரும்பாது. வங்கி விரும்பாது. விஜய்க்கு தேசிய அளவிலான அரசியல் ஆசைகள் வருமேயானால் அதுவே அவருக்குப் பின்னடைவாக மாறும். ராகுல் கந்தியையும், மோடியையும் அருகருகில் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தமுடியாது. தமிழக நலனுக்காக மத்திய அரசை எதிர்க்காமல் இணங்கிப்போவதற்கு விஜய் முடிவெடுத்துளார். இதனால் அவரது  அரசியல் கணக்கு மாறும் சாத்தியம் உள்ளது. தமிழக மக்களுக்கு என ஒரு கொள்கை உண்டு. அந்தக் கொள்கைக்கு விரோதமாக விஜய் முடிவெடுத்தால் மக்கள் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள்.

திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையில் தமிழகத்தில் வெடித்த பூகம்பம் டெல்லியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.  டெல்லியில் உதயநிதி, ஸ்டாலின், ராகுல் காந்தி புகைப்படங்களைப் போட்டு வைக்கப்பட்ட பதாதைகள்   தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துளன.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் திமுக பலத்த அடியை வாங்கி உள்ளது. கட்சியின் தலைவரே தோற்றுப்போனார். ஆனாலும் திமுகவில் இருந்து ஒருவரும் தவெக பக்கம் செல்லவில்லை. அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின்  முக்கியஸ்தர்களும், தொண்டர்களும் திமுகவில் இணைகிறார்கள். திமுக இழந்தது, ஆட்சியைத்தான் கட்சியை அல்ல!திமுக போரில் தோற்று இருக்கலாம், போர்குணத்தை இழக்கவில்லை!

உண்மையான திமுக தொண்டன் ஆளுங்கட்சியாக இருந்த போது கட்டாத கரைவேட்டியை எதிர் கட்சியில் தான் கஞ்சி போட்டு சும்மா விரைப்பா கம்பீரமா கட்டிட்டு நடப்பான் என்கிறார்கள் திமுகவின் தொண்டர்கள்.

அதிமுகவில் இருந்து விலகியவர்கள் , தவெகவிலும், திமுகவிலும்  இணைந்து வருகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் மோசமாக ஒன்றும் தோற்கவில்லை. 47 இடங்களில் வென்று ஓரளவு வலிமையான எதிர்க்கட்சியாகவே உள்ளார்.  அதிமுக இதுவரை ஐந்து வருடங்களுக்கு மேல் எதிர்க்கட்சியாக இருந்தது இல்லை. தவெக உடன் கூட்டணி வைக்க அதிமுகவினர் கணிசமானோர் தேர்தலுக்கு முன்பே விரும்பி உள்ளனர். அது நடக்காமல் போனது. அதேபோல் அதிமுக தேர்தலில் தோற்றுப் போனது. இதனால் ஏமாற்றம் அடைந்தவர்கள் தவெகவில் அடுத்தடுத்து இணைந்து வருகிறார்கள். சிலர் திமுகவிலும் இணைந்துள்ளனர். ஆனால் திமுகவில் இருந்து பெரிய நிர்வாகிகள் யாரும் தவெகவில் போய் சேரவில்லை.இதற்கு ஸ்டாலினின் மீதான நம்பிக்கையே காரணமாக பார்க்கப்படுகிறது.

அரசியலில் ஈடுபடும் அத்தனை அரசியல்வாதிகளின் இலக்கும் அதிகாரத்தை அடைவது தான். அதிகாரம் தான் அரசியல் என்பது தார்த்தம். ஆளும் கட்சியாக இருக்கும் போது கிடைக்கும் அதிகாரம், அந்தஸ்து, பணம் எதிர்க்கட்சியாக இருக்கும் போது கிடைப்பது இல்லை. இதனால் ஆளும் கட்சியில் இணைந்து லாபம் பெற வேண்டும் அல்லது அதிகாரம் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியில் தான் பலரும் இணைவார்கள். அப்படி பலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர்.

ஜெயலலிதாவின்  மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள், தொடர் தேர்தல் தோல்விகள் , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதான அதிருப்தியால், அக்கட்சி நிர்வாகிகளிடம் ஒருவித 'அரசியல் எதிர்கால பயம்' ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் விமர்சிக்கிறார்கள். இந்த பயத்தின் உச்சகட்டமாகத்தான், சமீபத்தில் நடந்து முடிந்த 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுகவில் இருந்து தவெக-விற்கும் திமுகவிற்கும் மிகப்பெரிய அளவில் தலைவர்கள் தஞ்சம் புகத் தொடங்கியுள்ளனர். 

  மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 294 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் அக்கட்சி வெறும் 80 இடங்களை மட்டுமே வென்றது. குறிப்பாக மம்தா பானர்ஜியே தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 100க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களி இராஜினாமா செய்தனர். ரிதாப்ராதா பானர்ஜி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் மம்தாவுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினர். கட்சியின் கட்டுப்பாட்டை இழந்த மம்தா, இந்தச் சூழலில் காங்கிரஸின் உதவியை நாடுகிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வெளிவந்துள்ளன. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அமைப்புகள் மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸுடன் இணைவதே சிறந்தது என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.  அதேபோல் மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் திரிணாமுல் காங்கிரஸ்  காங்கிரஸ் கட்சியுடன் இணைய வாய்ப்பு இருப்பதாகவே சொல்கிறார்கள்.

  மேற்கு வங்கத்தை சுமார் 15 ஆண்டுகள் ஆட்சி செய்த மம்தா இப்போது ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறார். சொந்தக் கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்தை மம்தா எதிர்கொண்டுள்ள சூழலில், மம்தா தனது கட்சியைக் காங்கிரஸுடன் இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறாராம். அடுத்தடுத்து இரு நாட்களில் இரு முக்கிய சந்திப்புகள் நடந்துள்ள நிலையில், காங்கிரஸ் வட்டாரங்கள் சில முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளன. இந்திய அரசியலில் குறிப்பாக எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே மம்தாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பல கசப்புணர்வுகள் இருந்தன. ஆனால், இப்போது தனது சொந்த திரிணாமுல் கட்சியே கையைவிட்டுப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மம்தா பானர்ஜி முக்கிய முடிவை எடுக்கப் போகிறார். அதாவது காங்கிரஸுடன் திரிணாமுல் கட்சியை இணைப்பது குறித்து யோசித்து வருகிறாராம்.

  மம்தா- சோனியா அபிஷேக் பானர்ஜி சந்திப்புக்கு ஒரு நாள் முன்னதாக,    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகின. இது இரு தரப்பும் நெருக்கமாகி வருவதையே காட்டுகிறது.

  நாடாளுமன்றத்தில் பாஜகவைக் கூட்டாக எதிர்கொள்வது  தான் இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம். ராகுல் காந்தியின் தலைமையைத் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதாகவும், வலுவான கூட்டணி அமைய விரும்புவதாகவும் இந்தச் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் தலைமையை ஏற்காத மம்தா,  பலத்த தோல்விக்கும் பின்னர்  மீண்டும்  ராகுல் காந்தியைத் தேடிச் சென்றுள்ளார். ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என முழங்கியவர் ஸ்டாலின். ஸ்டாலினை நோகடித்து  விஜய்யின் பனையூரில் தஞ்சமடைந்துளார் ராகுல் காந்தி. இதுதான் இன்றைய இந்திய அரசியல்.

ரமணி

14/6/26

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: