Wednesday, November 11, 2020

ஐந்தாவது முறை சம்பியனானது மும்பை


 

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றை பெற்ற மும்பை 5 ஆவது முறையாக சம்பியனானது.

13-வது .பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் கடந்த 2 மாதங்களாக நடந்து வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், டெல்லி கேப்பிட்டல்சும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

 மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள்  துபாயில் பலப்பரீட்சைசெய்தன. டெல்லி அணியில் மாற்றம் இல்லை. மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக ராகுல் சாஹருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியில் அதிகமான இடக்கை வீரர்கள் அங்கம் வகித்ததால் அதை மனதில் கொண்டுஆப்-பிரேக்வீசும் ஜெயந்த் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.


நாணயச்சுழற்சியில்  ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். இதன்படி மார்கஸ் ஸ்டோனிசும், ஷிகர் தவானும் டெல்லி அணியின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய  முதல் பந்திலேயே ஸ்டோனிஸ் (0) விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். சற்றே எழும்பி வந்த பந்து அவரது ட்டின் விளம்பில் பட்டு விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கின் கையில் சிக்கியது. அடுத்து வந்த ரஹானேவும் (2 ஓட்டங்கள்) பவுல்ட்டின் பந்து வீச்சுக்கு இரையானார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் (15 ஓட்டங்கள்) ஜெயந்த் யாதவின் சுழலில் முட்டிப்போட்டு விளாச முயற்சித்த போது பந்து ஸ்டம்பை தாக்கியது.


ஓட்டங்கரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (3.3 ஓவர்) இழந்து டெல்லி தள்ளாடியது. இந்த நெருக்கடியான சூழலில் ப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும் கைகோர்த்து அணியை மோசமான நிலைமையில் இருந்து மீட்டெடுத்தனர். அதே சமயம் ஏதுவான பந்துகளை விரட்டியடிக்கவும் தவறவில்லை. குருணல் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் ரிஷாப் பண்ட் 2 சிக்சர்களை பறக்க விட்டார். இந்த சீசனில் முதல்முறையாக அரைசதம் எட்டிய ரிஷாப் பண்ட்  56 ஓட்டங்களில் (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கவுல்டர்-நிலேவின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். ஸ்ரேயாஸ்-பண்ட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 96 ஓட்டங்கள் எப்படியும் 170 ஓட்டங்களை நெருங்குவார்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில் அடுத்து வந்த வீரர்கள் ள் மும்பையின் துல்லியமாஓட்டக்களிலும், அக்ஷர் பட்டேல் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ரபடா (0) ரன்-அவுட் ஆனார். கடைசி வரை மல்லுகட்டி நின்ற ஸ்ரேயாஸ் அய்யர் 65 ஓட்டங்கள் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 156 ஓட்டங்கள் அடித்தது. மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும், நாதன் கவுல்டர்-நிலே 2 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஜஸ்பிரித் பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.


 157 ஓட்டங்கள் இலக்கை நோக்கி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் களம் புகுந்தனர். இருவரும் டெல்லி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ரபடாவின் ஒரே ஓவரில் டி காக் 3 பவுஓட்டங்ரன்கள் விளாசி ஆட்டத்தை முழுமையாக டெல்லியிடம் இருந்து தட்டிப்பறித்தனர். டி காக் 20 ரன்களில் (12 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார்.

டெல்லி பந்து வீச்சாளர்களை மிரள வைத்த ரோகித் சர்மாவும் அதிரடி காட்ட அணி வெற்றியை நோக்கி வேகமாக பயணித்தது. பிரவீன் துபேவின் ஓவரில் ரோகித் சர்மா சர்வ சாதாரணமாக சிக்சர்களை கிளப்பினார். இதற்கிடையே ரோகித் சர்மாவுக்காக சூர்யகுமார் யாதவ் (19 ஓட்டங்கள்) தனது விக்கெட்டை ரன்-அவுட்டில் தியாகம் செய்தார்.


 

வெற்றியை நெருங்கிய சமயத்தில் ரோகித் சர்மா (68 ஓட்டங்கள், 51 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த பொல்லார்ட் (9 ஓட்டங்கள்), ஹர்திக் பாண்ட்யா (3 ஓட்டங்கள்) எடுத்து ஆட்டமிழந்தாலும் மும்பைக்கு எந்த சிக்கலும் எழவில்லை. 

மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. இஷான் கிஷன் 33 ஓட்டங்களுடனும் (19 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), குருணல் பாண்ட்யா ஒரு ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை அணி கோப்பையை உச்சிமுகர்வது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 2013, 2015, 2017, 2019-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருக்கிறது. .பி.எல். வரலாற்றில் வேறு எந்த அணியும் 3 முறைக்கு மேல் கோப்பையை வென்றதில்லை. இந்த வகையில் மும்பை ப்டன் ரோகித் சர்மா .பி.எல். வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்து விட்டார். அதே சமயம் முதல்முறையாக இறுதிசுற்றுக்குள் நுழைந்திருந்த டெல்லி அணியின் கனவு தகர்ந்து போனது.


முதல்முறையாக....

* மும்பை அணி இதற்கு முன்பு கோப்பையை கைப்பற்றிய 4 முறையும் முதலில் துடுப்பெடுத்தாடி வெற்றி பெற்றிருந்தது. முதல்முறையாக இந்த சீசனில் 2-வது பேட்டிங்கில் அசத்தியிருக்கிறது.

* மும்பை ப்டன் ரோகித் சர்மாவுக்கு இது 200-வது .பி.எல். ஆட்டமாகும். சென்னை கேப்டன் டோனிக்கு (204) அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.


* 4 ஆண்டுக்கு ஒரு முறை வரும் ஒவ்வொரு லீப் வருடத்திலும் (366 நாட்களை கொண்டது) புதிய அணி தான் .பி.எல். கோப்பையை வெல்கிறது. அந்த வகையில் இந்த லீப் ஆண்டில் டெல்லி அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் என்ற கணிப்பை மும்பை பொய்யாக்கி விட்டது.

No comments: