Showing posts with label ஜெய‌ல‌லிதா. Show all posts
Showing posts with label ஜெய‌ல‌லிதா. Show all posts

Saturday, December 20, 2025

எம்ஜிஆரின் வழியில் விஜய் சாதிப்பாரா? சறுக்குவாரா?

ஈரோடு பெருந்துறையில் மக்கள சந்திப்பு என்ற பெயரில் விஜய் பிரசாரம் செய்த்டார்.வழமைபோல பலத்த கெடுபிடிகளின்மத்தியில் அனுமதி வழங்கப்பட்டது. எது எது செய்யக்கூடாது என விஜயின் கட்சி சொல்லிக் கட்டுப்படுத்தியதோ அவை அத்தனையையும் விஜயின் தொண்டர்கள் கனகச்சிதமாகச் செய்தர்கள். விஜய் போசும்  போது 30 அடி  உயரமான ஒரு இடத்தில் ஏறியவர்  முத்தத்தைப் பறக்கவிட்டார். அவரை இறங்கும்படி விஜய் கெஞ்சினார்.

விஜயின்  பேச்சு சற்று வித்தியாசமாக  இருந்தது. அவர் தன்னை எம்ஜிஆராக நினைத்துக் கொண்டார். திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தவர் அண்ணா. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப் பட்டதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்ஜிஆர் உருவாக்கினார்.

அண்ணாவும், எம்ஜிஆரும்  பொதுவானவர்கள் எனச்சொல்லும் விஜய் அவர்களுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்.  ஜெயலலிதாவை முதன் முதலாக மேடம் என  விஜய் அழைத்தார்.  ஊழல் அற்ற அரசை அமைக்கப்போகும் விஜய்க்கு ஜெயலலிதா மெடமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் தீய சக்தி என எம்ஜிஆர்  பிரகடனப்படுத்தினார்.  அவர் வழியை ஜெயலலிதாவும்  பின்பற்றி திமுக தீயசக்தி எனக் கூறினார்.திமுக தீயசக்தி என ஈரோட்டில் விஜய் முழங்கினார். இது செங்கோட்டையனின் வருகையினால் ஏற்பட்ட தாக்கமாக  இருக்கலாம்.

வழக்கம் போல திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக் விஜய் முழங்கினார். பாஜகவிஅயும் கொஞ்சம் தொட்டுப் பார்த்தார். அதிமுகவைப் பற்றி வாயே திறக்கவில்லை. திமுகவுக்கும் தவெகவுக்குமிடையேதான் போட்டி. களத்தில் இலாதவர்களைப் பற்றிப் பேசமாட்டேன் எனவும் விஜய் தெரிவித்தார். களத்தில் இல்லாதவர் சீமானாக  இருக்கலாம்.

கவர்மெண்டா கண்காட்சியா.. எம்ஜிஆரும் அண்ணாவும் தமிழ்நாட்டோட சொத்து.. உங்களுக்கு காசு தான் துணை எனக்கு மாஸ் தான் துணை.. தீயசக்தி தூயசக்தி. திமுக ஆட்சியும் பிரச்சனைகளும் பெவிக்கால் போட்டு ஒட்டுன ப்ரண்ட்ஸ் மாதிரி என்று பஞ்ச் டயலாக் பேசினார் விஜய்.

  விஜய் பேசிய விஷயங்கள் அப்படியே  . 2 மணித்தியாலயத்துக்கு முன்னர்    இணையத்தில் கசிந்தது கட்சிக்கு உள்ளே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விஜய் கோபம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கு உள்ளேயே இருக்கும் அந்த கருறுப்பு ஆடு யார் என்று விஜய் கோபத்தில் கேட்டதாக கூறப்படுகிறது. எனக்கு எழுதிக்கொடுத்தவர் அதை லீக் செய்ய வாய்ப்பு இல்லை.. வேறு யார் லீக் செய்தது என்ற கேள்வி விஜய்க்கு எழுந்து உள்ளதாம்.

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருக்க்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விருப்புமனு வாங்கத்தொடங்கி உள்ளது. வெற்றி வாய்ப்புள்ள 40 தொகுதிகளின் பட்டியலை தமிழக பாரதீய ஜனதாத் தலைவர் டெல்லிகுத்  தெரியப்படுத்தியுள்ளார். தொகுதிப் பங்கீட்டுப்  பேச்சு வார்த்தைக்கு முன்பாக அதிமுகவும், பாரதீய ஜனதாவும் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டன.

தேர்தலின் கதாநாயகனாக தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக குழுவை அமைத்துள்ள்து.

தமிழக சட்டமன்றத்  தேர்தலுக்கு சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் கூட்டணியை இறுதி செய்ய கட்சித் தலைவர்கள் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகின்றனர்.   கூட்டணி ஏற்கனவே பலம் வாய்ந்ததாக இருக்கிறது. பெரும்பாலான கட்சிகள் அதே கூட்டணியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் அதிகதொகுதிகள்   வேண்டுமென காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன.  ஆனால் அது கூட்டணியில் பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தாது எனச் சொல்லப்படுகிறது.

 எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக ஆளும்கட்சியாக வேண்டும் எனத் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணியை அமித்ஷா இறுதி செய்துவிட்டார். 2021 போலவே 2026லும் பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது. மேலும் அந்த தேர்தலில் கூட்டணியிலிருந்து பாமகவை அழைத்து வர எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாகப் பேசி வருகிறார். 

  பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே குடும்ப தகராறு இருக்கிறது. அந்த தகராறு கட்சியிலும் எதிரொலித்திருக்கும் நிலையில், நான் தான் தலைவர் என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் தேர்தல் ஆணையம் தங்களைத்தான் அங்கீகரித்து இருப்பதாக கூறி அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறார் அன்புமணி. உச்சமாக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களையும் பெற்று வருகிறார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்வத்தோடு விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.

  தமிழக தேர்தல்களில் பலமுறை களம் கண்ட சீமான், இந்த முறையும் தனித்து களம் காண்பதென முடிவு செய்திருக்கிறார். இதற்காக வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார். பொதுவாக பல கட்சிகள் தேர்தல் நேரம் வரை காத்திருந்து கூட்டணி பங்கீடு முடிவடைந்தது தான் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார்கள். ஆனால் வழக்கம்போல் முதல் ஆளாக வேட்பாளரை பட்டியலை அறிவித்து, பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் என பிரம்மாண்டம் காட்டி வருகிறார் சீமான் .

  அரசியல் பிரச்சாரம் மற்றொரு புறம் தேர்தல் வேலைகள் என தனியாக துவக்காவிட்டாலும் கள அரசியலில் தனது முத்திரையை ஆழமாக பதித்து வருகிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய். இதுவரை ஒன்றிய, நகர, மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்யப்படவில்லை என்றாலும், விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் சேருவது அவர் தரப்பை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் விஜய் கால்பதிக்க திட்டமிட்டு அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை முன்பே திட்டமிட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் கரூர் சம்பவத்தால் 70 நாட்களுக்கும் மேலாக தடைப்பட்டது .தற்போது நிலைமை ஓரளவு சீராகி இருக்கும் நிலையில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை பிரச்சாரம் போல மேற்கொண்டு வருகிறார்.இதுவரை மாவட்ட அரசியல் பேசாத விஜய் காஞ்சிபுரத்திலிருந்து உள்ளூர் அரசியலையும் பேச ஆரம்பித்திருப்பது பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக,பாரதீய ஜனதா, தவெக ஆகிய மூன்று கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிக்கப்போகின்ரன. இந்த நிலை திமுகவுக்கு சாதகமாக உள்ளது.

ரமணி

21/12/25 

Wednesday, June 10, 2015

ம.தி.மு.க பச்சைக்கொடி மகிழ்ச்சியில் தி.மு.க‌

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கான  சாதக சமிக்ஞையை வைகோ வெளியிட்டதனால் திராவிட முன்னேற்றக் கழகம் உற்சாகமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறியபின் மெகா கூட்டணி அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டியது. அது எதிர்பார்த்த கட்சிகள் இணையாமையால் படுதோல்வியடைந்தது. திராவிட முன்னேற்றக்கழகம் மட்டுமல்லாது பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணியும் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் மண்னைக் கெளவியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடியது.
                                                 
திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றைப் புறந்தள்ளி மூன்றாவது அணி தலையெடுக்க முடியாதென்பது யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் புரிந்தும் புரியாதமாதிரி பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையில்  அமைந்த கூட்டணி தமிழகத்தில் பலத்த அடிவாங்கியது.
இந்தியாவில் வீசிய காங்கிரஸுக்கு எதிரான பாரதீய ஜனதா அலை தமிழகத்திலும் பலமாக வீசும் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் முடிவை புரட்டிப்போட்டது. பாரதீய ஜனதாக்கட்சியில் இருந்து ராமதாஸும் வைகோவும் வெளியேறினர்.  மகன் அன்புமணி எம்பியான சந்தோஷத்துடன் கூட்டணியை முறித்தார் ராமதாஸ். வைகோ வழமைபோன்று வெறும் கையுடன் வெளியேறினார். கூட்டணியில் இருப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அரசியல் நடத்துகின்றார் விஜயகாந்த்.

 தமிழக அரசியல் தலைவர்களிடம் அரசியல் நாகரிகம் என்பது மருந்துக்கும் கிடையாது. ஒரு அரசியல் கட்சித்தலைவர் இறந்துவிட்டால் எதிரணி அரசியல்  தலைவர் கலந்துகொள்ளமுடியாத இருண்ட அரசியல் கலாசாரம் தமிழகத்தில் உள்ளது. திருமண வைபவம் என்றால் அழைப்பிதழ் அனுப்பமாட்டார்கள். தனது பேரனின் திருமணத்துக்கு எதிர்க்கட்சித்தலைவர்கள் அனைவரையும் அழைத்துள்ளார் கலைஞர் கருணாநிதி. கருணாநிதியின் உத்தரவுக்கமைய எதிர்க்கட்சித்தலைவர்கள் அனைவரையும் வீடு தேடிச்சென்று அழைப்பிதழைக் கையில் கொடுத்தார் ஸ்டாலின்.

மூத்த‌ அர‌சிய‌ல் தலைவ‌ர் என்ப‌த‌னால் அனைவ‌ரையும் அர‌வ‌ணைத்துச் செல்ல‌ விரும்புகிறார் க‌ருணாநிதி.அர‌சிய‌ல்வாதிக‌ளும் விம‌ர்ச‌க‌ர்க‌ளும் இத‌னை அர‌சிய‌ல் க‌ண்ணாடிமூல‌ம் பார்த்த‌ன‌ர். மெகா கூட்ட‌ணி அமைக்க‌ க‌ருணாநிதி திட்ட‌ம் போடுகிறார் என‌ தலைப்புச்செய்திக‌ள் வெளியாகின‌.விஜ‌ய‌காந்த் தனது வீட்டுக்கு அழைக்காம‌ல் அலுவ‌ல‌க‌த்தில் ச‌ந்தித்தார். ராம‌தாஸும் அன்பும‌ணியும்  ஸ்டாலினை ச‌ந்திப்ப‌தை த‌விர்க்க‌ முய‌ன்ற‌ன‌ர். வில்ல‌ங்க‌மான‌ செய்தி வெளியான‌தால் ச‌ந்தித்த‌ன‌ர். ஸ்டாலின் த‌ன்னைச் ச‌ந்தித்து திரும‌ண‌ அழைப்பித‌ழைக்கொடுத்த‌தை ஆச்ச‌ரிய‌த்துட‌ன் டுவிட்ட‌ரில் ப‌கிர்ந்தார் சுப்பிர‌ம‌ணிய‌ன்சுவாமி. இதேவேளை அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌கத் த‌லைவ‌ர்க‌ள் எவ‌ருக்கும் திரும‌ண‌ அழைப்பித‌ழ் கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை. க‌ருணாநிதி வீட்டுத்திரும‌ண‌ அழைப்பித‌ழ் ப‌ற்றி நாக‌ரிக‌மாக‌வும் அநாக‌ரிக‌மாக‌வும் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் வெளியாகின‌. ப‌ழுத்த‌ அர‌சிய‌ல்வாதியான‌ க‌ருணாநிதி அதனைக்ண்டுகொள்ள‌வில்லை.

த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ச‌பைத்தேர்த‌லுக்கு இன்ன‌மும் ஒரு வ‌ருட‌ம் உள்ள‌து. இந்த‌நிலையில் விம‌ர்ச‌க‌ர்க‌ள் எதிர்வு கூறிய‌தைப்போன்று திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்துட‌ன் கூட்ட‌ணி சேரும் சாத்திய‌ம் ப‌ற்றி வைகோ சாத‌க‌ச‌மிக்ஞை காட்டி உள்ளார். இத‌னால் இர‌ண்டு க‌ட்சித்தொண்ட‌ர்க‌ளும் ம‌கிழ்ச்சிய‌டைந்துள்ள‌ன‌ர்.

வைகோவின் வளர்ச்சி ஸ்டாலினுக்கு போட்டியாக இருந்தமையினால் அவர் 1993 ஆம் ஆண்டு திராவிட் முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். கருணாநிதியைக் கொல்வதற்கு புலிகளுடன் சேர்ந்து வைகோ திட்டம் தீட்டியதற்காகவே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது. அக்காரணம் நம்பத்தகுந்ததாக இருக்கவில்லை. திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து வெளியேறிய  வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். வைகோவுடன் பலர் வெளியேறியதால் அவருடைய கட்சி பலமடைந்தது. காலப்போக்கில் அரசியல் சதுரங்கத்தில் வெற்றி பெறமுடியாததனால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் மாறிமாறி கூட்டணி சேர்ந்தது.

 அர‌சிய‌ல் க‌ள‌த்தில் த‌னித்து நின்று வெற்றி பெற‌முடியாது என்ப‌தை உண‌ர்ந்த‌ வைகோ ப‌ல‌மான‌ க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணியை நாடினார். சில‌ச‌ம‌ய‌ங்க‌ளில் அவ‌ருக்கு வெற்றியைக்கொடுத்த‌ கூட்ட‌ணி ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் காலை வாரிய‌து. திராவிட‌ முன்னேற்ற‌க்க் க‌ழ‌கம், அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் ஆகிய‌வ‌ற்றுக்கு மாற்றீடாக‌ மூன்றாவ‌து அணி அமைக்க‌லாம் என்ற‌ ந‌ம்பிக்கை க‌ட‌ந்த‌   நாடாளும‌ன்ற‌த்தேர்த‌லுட‌ன் த‌விடுபொடியாகிய‌தால் மீண்டும் திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌த்தின் ப‌க்க‌ம் சாய‌த்த‌யாராகி விட்டார் வைகோ.1993 ஆம் ஆன்டு பிர‌ச்சினைக்குப் பின்ன‌ர் வைகோவின் வீட்டுக்கு ஸ்டாலின் சென்ற‌த‌னால் இது சாத‌க‌மான‌து.


 க‌ருணாநிதி த‌லைமையிலான்  மெகாகூட்ட‌ணியின் முத‌ல்அடியை வைகோ எடுத்து வைத்துள்ளார். ஜெய‌‌ல‌லிதாவின் த‌லைமையிலான‌ க‌ட்சியை ப‌ல‌வீன‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு க‌ருணாநிதி த‌லைமையில் கூட்ட‌ணி அமைப்ப‌துதான் ச‌ரி என்ப‌தை கால‌ம் க‌ட‌ந்து வைகோ உண‌ர்ந்துள்ளார்.ப‌ல‌வீன‌மாக‌ இருந்த‌ திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் ச‌ற்று தெம்பாக‌ உள்ள‌து.  நாடாளும‌ன்ற‌த்தேர்த‌லில் திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் ப‌ல‌த்த‌ அடி வாங்கினாலும் அத‌னுடைய‌ வாக்கு வ‌ங்கி தொய்ய‌வில்லை. வைகோவின் அர‌சிய‌ல் க‌ண‌க்கை ஏனைய‌ த‌லைவ‌ர்க‌ளும் புரிந்து கொண்டால் த‌மிழ‌க‌த்தில் அர‌சிய‌ல் மாற்ற‌ம் ஏற்ப‌டும்.

Friday, October 18, 2013

அவமானப்பட்ட தமிழ் சினிமா

இந்தியாவில் சினிமா அறிமுகமான நூற்றாண்டு விழா என்ற பெயரில் தமிழகத்தில் நடந்த விழாவில் தமிழ் சினிமா அவமானப்படுத்தப்பட்டு  ஜெயலலிதாவின் புகழ் ஓங்கி ஒலித்தது. பத்துக்கோடி ரூபா செலவில் தமிழக அரசால் நடத்தப்பட்ட இந்த விழாவில் அரசியலை முன்னிறுத்தி கலைஞர்கள் புறக்கணிக்கப்படார்கள்.சினிமா நூற்றாண்டு விழா தமிழகத்தில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கலைஞர் கருணாநிதிக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுமா  இல்லையா  என்ற பட்டிமன்றம் களைகட்டியது.
கருணாநிதிக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்ற நெருக்கடி அதிகரித்ததனால் நிலைமையைச் சமாளிப்பதற்காக கடைசி நேரத்தில் ஒப்புக்காக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அழைப்பிதழுடன் வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்று அழைப்பிதழைப்பெற்று தனது மானத்தைக் காப்பாற்றிக்கொண்டார் கலைஞர் கருணாநிதி.

மிழஅரசியலும் சினிமாவும் ஒன்றையொன்று விட்டுப்பிரியாது பின்னிப்பிணைந்துள்ள‌.பேரறிஞர் அண்ணாவின் லைமையிலானதிராவிடமுன்னேற்றக் ம் நாடம், சினிமா ஆகியற்றின் மூலம் தனது கொள்கைகளை வெளிப்படுத்தி ஆட்சிபீடம் ஏறியது.அறிஞர் அண்ணாவின் பின் லைஞர் ருணாநிதி முதல்வரானார். ருணாநிதியுடனானக்கப்பினால் ட்சியைவிட்டு வெளியேறிய‌  எம்.ஜி.ஆர் அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தை ஆரம்பித்து ஆட்சியைக்கைப்பற்றினார். எம்.ஜி.ஆர் மறைந்ததும் அவது சினிமா ஜோடியானஜெயலிதா அரசியலில் து சுயரூபத்தை வெளிப்படுத்தினார்.எம்.ஜி.ஆரின் னைவி ஜானகியையும் மூத்தஅரசியல் லைவர்களையும் புறம் ள்ளியசிகர்கள் ஜெயலிதாவை முன்னிலைப்படுத்தினர்.
தமிழக அரசியலைப் போன்றே தமிழக சினிமாக் கலைஞர்களும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதல்வராகும் போது அரசியலில் தம்மை வெளிப்படுத்தாத கலைஞர்கள் விழா எடுத்து மகிழ்வார்கள்.ஜெயலலிதா முதல்வரானதும் சினிமாக் கலைஞர்கள் சார்பில் விழா எடுக்க முயற்சி செய்யப்பட்டது. அதற்கான அனுமதியை ஜெயலலிதா வழங்கவில்லை. சினிமா நூற்றாண்டுவிழா தமிழகத்தில் நடைபெறும் என அரசு அறிவித்தது. அந்தப் பொன்னான நாளை எதிபார்த்துக் காத்திருந்த கலைஞர்களின் மனதை மிழஅரசு  புண்ணாகிவிட்டது.


பாடல்கள் தான் தமிழ் சினிமா
வின் உயிர்நாடி.பாடல்கள் இல்லாது திரைப்படம் தயாரிக்க முடியாது.பாடத்தெரியாதவர்களினால் நடிக்க முடியாது என எழுதப்படாத விதி இருந்த காலத்தில் தனது கனல் தெறிக்கும் வசனத்தால் தமிழ் சினிமாவின் லைவிதியை மாற்றி அமைத்தர் கலைஞர் ருணாநிதி.ராசக்தி,அரசிளங்குமரி,பூம்புகார் போன்றங்களின் மூலம் மிழ்சினிமா புதியஅத்தியாயத்தினுள் நுழைந்தது.பாடல்கள் ட்டுமே இசைத்தட்டாகவெளிவந்தகாலத்திலே லைஞரின் திரைப்பங்களும் ஒலித்தட்டாகவெளியாகி ப்பாகவிற்பனையாகின‌.ருணாநிதி இல்லாதசினிமா நூற்றாண்டுவிழா ன் இல்லாததிருமவைபம் போலஇருந்தது. இவது தை த்தில் உருவானதிரைப்பங்கள் எவையும் நூற்றாண்டு விழாவில் திரையிடப்பவில்லை.அறிஞர் அண்ணாவின் ங்களும் புறக்கணிக்கப்பட்ட‌.


 மிழ் சினிமாவில் இன்று முன்னணியில் இருக்கும் ல்,ஜினி,விஜய் அகிய மூவரும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டர்.முன் ரிசையில் அமவேண்டியசினிமாக் லைஞர்கள் பின்வரிசைக்குத் ள்ளப்பட்டர்.அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தின் அரசியல் லைவர்கள் முன் ரிசையில் இருந்து வேடிக்கை பார்த்தர்.ஒஸ்கார் விருதின் மூலம் இந்தியசினிமாவை உலஅரங்கில் உயர்த்திய.ஆர்.ஹ்மான்,ராசூல் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பவில்லை. விருது பெறும் குதி இவர்களுக்கு இல்லை எனமிழஅரசு ருதியதால் விருது பெறுபர்களின்பெயர் ட்டியலில் இவர்கது பெயர் சேர்க்கப்பவில்லை.எம்.எஸ்.விஸ்வநாதன்,பாலுமகேந்திரா,பாரதிராஜா,வுண்ட‌‌ணி,டிவேல்,நாசர்,சுசீலா,ஜானகி , ஸ்ரீ தேவி  போன்றருக்கு விருது ங்கப்பவில்லை.

டிகர் ங்கத்தின் முன்னாள் லைவரும் எதிர்க்கட்சித்தலைவருமானவிஜகாந்த்,வைரமுத்து,விஜகுமார்,பிலிம்நியூஸ்ஆனந்தன்ஆகியோரைத்தமிழஅரசு ண்டுகொள்ளவில்லை.எம்.ஜி.ஆரின் மீது மிகுந்தஅன்புவைத்திருந்தசாண்டோசின்னப்பாதேவர்,என்.எஸ்.கிருஷ்ணன்,பி.யு.சின்னப்பா,தியாகராஜபாகர்,எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி,ல்கி,முக்தாசீனிவாசன்,ஆகியோரும் காலஓட்டத்தில் க்கடிக்கப்பட்டர்.

ன்,லைஞர் தொலைக்காட்சிகளில் ங்குபற்றும் லைஞர்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டர்.மீனா,சிம்ரன்,விவேக் ஆகியோர் சிறந்தலைஞர்களாகக்கணிக்கப்பட்டு விருது ங்கி கெளரவிக்கப்பட்டர்.மிழஅரசின் இந்தஎதேச்சாதிகாரபோக்குக்கு எதிராகஎடிட்டர் லெனின் து டுவிட்டரில் திவு செய்துள்ளார்.ற்றையஅனைவரும் ம் குமுறினார்களேதவிரகொதித்து எழவில்லை.அநியாயத்துக்கு எதிராகவீராவேசமாகப்போராடும் தாநாயர்கள் அனைவரும்  கைகட்டி மெளமாகத் லை குனிந்து நின்றார்கள்.