Thursday, May 20, 2010

உலகக்கிண்ணம்2010


மெக்சிக்கோ1970
மெக்ஸிக்கோவில் 1970ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இத்தாலியை வீழ்த்தி பிரேஸில் சம்பியனானது. ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முதன் முதலாக வட அமெரிக்க நாட்டில் நடைபெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 75 நாடுகள் போட்டியிட்டன. 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து மொராக்கோ தகுதி பெற்றது. ஆர்ஜென்ரீனா, பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை.
ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து மொராக்கோ, ஐரோப்பாவிலிருந்து பெல்ஜியம், பல்கேரியா, செக்கஸ்லோவாகியா, இங்கிலாந்து, ஜேர்மன், இஸ்ரேல், இத்தாலி, ரொமானியா, சோவியத் யூனியன், சுவீடன், வட மத்திய அமெரிக்காவிலிருந்து எல்சல்வடோர் மெக்ஸிக்கோ தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸில், பெரு, உருகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
16 நாடுகளும் நான்கு குழக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு குழுவிலும் அதிக புள்ளிகளைப் பெற தலா இரண்டு நாடுகள் காலிறுதிக்குத் தெரிவாகின.
பிரேஸில் பெரு மேற்கு ஜேர்மன், இங்கிலாந்து இத்தாலி, மெக்ஸிக்கோ உருகுவே, சோவியத் ரஷ்யா ஆகியன காலிறுதியில் விளையாடின. காலிறுதியில் வெற்றி பெற்ற பிரேஸில் இத்தாலி, உருகுவே, மேற்கு ஜேர்மனி ஆகியன அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. உருகுவேக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிரேஸில் ஜேர்மனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இத்தாலி ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மேற்கு ஜேர்மன், உருகுவே ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மன் மூன்றாவது இடத்தையும் உருகுவே நான்காவது இடத்தையும் பிடித்தன.
இங்கிலாந்தில் நடைபெற்ற எட்டாவது உலகக் கிண்ணஉதைபந்தாட்ட போட்டியில் இறுதிவரை முன்னேறி தோல்வி அடைந்த மேற்கு ஜேர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 1958, 1962ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனான பிரேஸில் சம்பியனான கனவுடன் இறுதிப் போட்டியில் இத்தாலியை எதிர்த்த விளையாடியது பரபரப்பான இறுதிப் போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி சம்பியனானது பிரேஸில். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இத்தாலி இரண்டாமிடத்தைப் பிடித்தது.
பிரேஸில் 19 கோள்களும் மேற்கு ஜேர்மனி 17 கோல்களும் இத்தாலி 10 கோல்களும் அடித்தன. மேற்கு ஜேர்மனியை சேர்ந்த கிரேட் முல்லர் 10 கோல்கள் அடித்தார். ஜய்சின்ஹோ (பிரேஸில்) ஏழு கோல்கள் அடித்தார்.
உருகுவேக்கு எதிராக ஆறு தடவை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஜேர்மனி வீரர் கிரேட் முல்லருக்கு கேடன் ஷý வழங்கப்பட்டது. கிரேட் முல்லர் (மேற்கு ஜேர்மனி) ஜய்சின்ஹோ (பிரேஸில்) கியுபிலஸ் பெரு அணி வீரர்கள் கோல்டன் ஷýவுக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
பெருநாட்டு வீரர் கியுபிலஸ் சிறந்த இளம் வீரராகத் தெரிவானார். 1958ஆம் ஆண்டு சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது. 1958ஆம் ஆண்டு பீலே ( பிரேஸில், முதன் முதலில் சிறந்த இளம் வீரர் விருதைப் பெற்றார். 1962ஆம் ஆண்டு அல்பேட் (ஹங்கேரி, 1966 ஆம் õண்டு பெக்கன் பலூர் ( மே. ஜேர்மனி) ஆகியோர் இளம் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் முதன் முதலாக கலரில் ஒளிபரப்பப்பட்டன. ஒரு வீரர் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரர் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு அணியிலிருந்து இரண்டு மாற்று வீரர்கள் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு அணியும் சம புள்ளி பெற்றால் கோல்களின் அடிப்படையில் சராசரி புள்ளி கணக்கிட்டு அணிகள் தரப்படுத்தப்பட்ன.
பிரேஸில் வீரர் பீலே கடைசியாக விளையாடிய உலகக் கிண்ணப போட்டி இங்கிலாந்து அணித் தலைவர் பொபி மோரே திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியின் முதல் நாள் இரவு இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் முன்னால் ஆடிப் பாடிய பிரேஸில் ரசிகர்கள் இங்கிலாந்து வீரர்களின் தூக்கத்தைக் குழப்பினர். 32 போட்டிகளில் 95 கோல்கள் அடிக்கப்பட்டன. 1603975 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். சிவப்பு அட்டையும் மஞ்சள் அட்டையும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

ரமணி

மெட்ரோநியூஸ்

Wednesday, May 19, 2010

உலகக்கிண்ணம்2010


இங்கிலாந்து1966
இங்கிலாந்தில் 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மேற்கு ஜேர்மனியை தோற்கடித்து இங்கிலாந்து சம்பியனானது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்கு 30 நாடுகள் போட்டியிட்டன. புள்ளிகளின் அடிப்படையில் 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
ஆசியாவில் இருந்து தென் கொரியா தகுதி பெற்றது. ஐரோப்பாவிலிருந்து பல்கேரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, போர்த்துக்கல், சோவியத் யூனியன், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேசில், சிலி, உருகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
16 நாடுகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் போட்டியிட்டன. சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மன் முதல் சுற்றில் அதிக கோல் அடித்த நாடாகத் திகழ்ந்தது. இங்கிலாந்து ஆர்ஜென்ரீனா, உருகுவே, மெக்ஸிக்கோ மேற்கு ஜேர்மன், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டிகள் கோல் எதுவும் அடிக்கப்படாது சமநிலையில் முடிந்தன. தென் கொரியா, சிலி ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
முதல் சுற்றில் விளையாடிய நான்கு குழுக்களில் இருந்தும் அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்ற தலா இரண்டு நாடுகள் காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா மேற்கு ஜேர்மன், உருகுவே சோவியத் யூனியன், ஹங்கேரிபோர்த்துக்கல், தென் கொரியா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜேர்மனி, இங்கிலாந்து, சோவியத் யூனியன், போர்த்துக்கல் ஆகியன அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 53 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் காலிறுதியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமை பெற்றது. ஆட்ட நேர முதல் பாதியில் 3 2 என்ற கோல் கணக்கில் தென் கொரியா முன்னிலையில் இருந்தது. இடைவேளையின் பின்னர் மூன்று கோல்கள் அடித்த போர்த்துக்கல் வெற்றி பெற்றது.
மேற்கு ஜேர்மன், சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மன் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. போர்த்துக்கலுக்கு எதிரான அரையிறுதியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதியில் தோல்வி அடைந்த போர்த்துக்கல், சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் மூன்றாம் இடத்தையும் சோவியத் யூனியன் நான்காம் இடத்தையும் பிடித்தன.
இங்கிலாந்து, மேற்கு ஜேர்மன் ஆகியவற்றுக்கிடையேயான இறுதிப் போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்து சம்பியனானது.
போர்த்துக்கல் 17 கோல்களும் ஜேர்மன் 15 கோல்களும் இங்கிலாந்து 11 கோல்களும் சோவியத் யூனியன் 10 கோல்களும் அடித்தன. ஆர்ஜென்ரீனா, உருகுவே ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு எதிராக தலா இரண்டு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது. சோவியத் யூனியன் வீரருக்கு எதிராக ஒரு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இயுசெபியோ (போர்த்துக்கல்) ஒன்பது கோல்களும், ஹெல்மட்ஹல்லர் (மேற்கு ஜேர்மன்) ஆறு கோல்களும், போர்குயன் (சோவியத் யூனியன்) ஹர்ட்ஸ் (இங்கிலாந்து), பெனி (ஹங்கேரி) ஆகியோர் தலா நான்கு கோல்களும் அடித்தனர். சில்வா (ஹங்கேரி), ரட்டின் (பல்கேரியா), ரொச்சி (ஹங்கேரி), அல்பொசி (ஆர்ஜென்ரீனா) ஆகியோருக்கு எதிராக சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இயுசெபியோ (போர்த்துக்கல்), ஹெல்மட்ஹலர் (மே. ஜேர்மனி), பெக்கன் பகுர் (மே. ஜேர்மன்), பெனி (ஹங்கேரி), ஹரிட்ஸ் (இங்கிலாந்து), போர்குஜன் (சோவியத் யூனியன்) ஆகியோரின் பெயர்கள் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஒன்பது கோல்கள் அடித்த இயுசெபியோ சிறந்த வீரராகத் தெரிவ செய்யப்பட்டு கோல்டன் ஷý வழங்கப்பட்டது.32 போட்டிகளில் 89 கோல்கள் அடிக்கப்பட்டன. 16,35,000 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்

ரமணி

மெட்ரோநியூஸ்

உலகக்கிண்ணம்2010


சிலி1962
சிலியில் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியாவை வீழ்த்திய பிரேஸில் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
1960ஆம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மரணமானார்கள். உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடைபெறும் மைதானம் பாதிக்கப்பட்டது. சிலி நாட்டு ஜனாதிபதியின் முயற்சியினால் விரைவாக புதிய மைதானம் கட்டப்பட்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 56 நாடுகள் போட்டியிட்டன. 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. கடந்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய சுவீடன் தகுதி பெறவில்லை. கொலம்பியா உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
ஐரோப்பாவிலிருந்து பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, மேற்கு ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, சோவியத் ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, யூகோஸ்லாவியா வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், சிலி, கொலம்பியா, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. 16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. நான்கு குழுக்களிலும் இருந்து அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற தலா இரண்டு நாடுகள் காலிறுதிக்குத் தெரிவாகின. 21 வயதான பீலே மெக்ஸிக்கோவுக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து பிரேஸிலின் வெற்றிக் கணக்கை தொடக்கி வைத்தõர்.
முதல் சுற்றில் பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் 61 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹங்கேரி, ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமை பெற்றது. கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற யூகோஸ்லாவியா அதிக கோல் அடித்த இரண்டாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
சோவியத் யூனியன், கொலம்பியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 44 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மேற்கு ஜேர்மன் இத்தாலி, பிரேஸில் செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்துபல்கேரியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டிகள் கோல் எதுவும் அடிக்காமையினால் சமநிலையில் முடிவடைந்தன.
முதல் சுற்றில் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற பிரேசில், இங்கிலாந்து சிலி, சோவியத் யூனியன் யூகோஸ்லாவியா, ஜேர்மன் செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆகியன காலிறுதியில் விளையாடின. காலிறுதியில் வெற்றி பெற்ற செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லாவியா, பிரேஸில், சிலி ஆகியன வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
செக்கோஸ்லோவாக்கியாவுடனான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற யூகோஸ்லாவியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. சிலியுடனான போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் இறுதிப் போட்டிக்கு விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதியில் தோல்வியடைந்த சிலி, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சிலி மூன்றாவது இடத்தையும் யூகோஸ்லாவியா நான்காவது இடத்தையும் பிடித்தன.
பிரேஸில், செக்கோஸ்லோவாக்கியா ஆகியவற்றுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் 3 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்தது.
பிரேஸில் 14 கோல்களும் யூகோஸ்லாவியா, சிலி ஆகியன தலா 10 கோல்களும் சோவியத்யூனியன் ஒன்பது கோல்களும் ஹங்கேரி எட்டு கோல்களும் அடித்தன.
வாவா (பிரேஸில்), லியோனல் சன் செஸ் (சிலி), ஜாகோவிச் (யூகோஸ்லாவியா), அல்பேட் (ஹங்கேரி), இவானோவ் (சோவியத் யூனியன்) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தலா நான்கு கோல்கள் அடித்தனர். ஹங்கேரியைச் சேர்ந்த அல்பேட் சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டு கோல்டன் ஷý வழங்கப்பட்டது.
பெரினி (இத்தாலி), டேவிட் (இத்தாலி), கப்ரெரா (உருகுவே), லண்டா (சிலி), சரிஞ்சா (பிரேசில்) ஆகியோருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.32 போட்டிகளில் 89 கோல்கள் அடிக்கப்பட்டன. 89,074 பேர் போட்டிகளை மைதானங்களில் பார்வையிட்டனர்

ரமணி

மெட்ரோநியூஸ்

Tuesday, May 18, 2010

சட்டசபைத் தேர்தலுக்குதயாராகிறது தமிழகம்


செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்கத் துரித கதியில் செயற்படும் தமிழக முதல்வர் கருணாநிதி உரிய காலத்துக்கு முன்னரே தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் உள்ளது. அறுதிப் பெரும்பான்மை இல்லாது காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி செய்யும் முதல்வர் கருணாநிதி கூட்டணிக் கட்சியின் தயவு இன்றி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமைச்சர் மு. க. அழகிரியின் தயவு கண்டிப்பாகத் தேவை என்பதை முதல்வர் கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளார். ஆகையினால் மு. க. அழகிரியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் அழகிரியின் கை ஓங்கும் வகையில் அவருக்கு பொறுப்பான பதவி ஒன்று கொடுக்கப்படலாம்.
அமைச்சர் அந்தஸ்துடன் அரசியல் படிக்க டில்லி சென்ற அழகிரிக்கு டில்லி அரசியல் கசந்துவிட்டது. மீண்டும் தமிழகத்தில் கால் பதிக்க விரும்புகிறார். அழகிரியின் தமிழகப் பார்வை துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் ஸ்டாலினும் அழகிரியும் மோதினால் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்பதனால் இருவரும் இணைந்து செயற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் பலவீனமான நிலையில் உள்ள இவ் வேளையில் தமிழக சட்ட சபைத் தேர்தலை நடத்தி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து துணை முதல்வர் ஸ்டாலினை முதல்வராக்கி விட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் இன்றைய அரசியல் நிலைமை அவர் ஓய்வெடுப்பதைத் தள்ளிப் போட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான சூழ்நிலை இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தான் இணைய வேண்டும் என்பதை உணர்ந்து கொண்ட வைகோ, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருப்பதையே விரும்புகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கட்சியும் தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெகு தூரம் தள்ளி நின்றனர். தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல்களின் போது ஜெயலலிதா வேண்டுகோள் விடுக்காமலே தமது ஆதரவைத் தெரிவித்தன இடதுசாரிகள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் இருக்கும் இடதுசாரிகள் தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவை ஆதரிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் இடதுசாரிகள், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் சூழ்நிலை ஏதுமில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி மிகவும் இறுக்கமாக இருப்பதனால் இடதுசாரிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கத்துக்கு சாய்ந்துள்ளன.
எந்தப் பக்கமும் சாராமல் அந்தரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை மிகப் பரிதாபகமாக உள்ளது. தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் திகழ்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் தேடுவாரின்றி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தம்மால் சாதிக்க முடியும் என்பதை பென்னாகரம் இடைத் தேர்தலில் நிரூபித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
வன்னியர் சமூகம் அதிகளவில் வாழும் தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதை பென்னாகரம் இடைத் தேர்தல் வெளிக்காட்டி உள்ளது. ஆகையினால் பாட்டாளி மக்கள் கட்சியை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. திராவிட முன்னேற்றக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவதை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலர் விரும்பவில்லை. என்றாலும் முதல்வர் கருணாநிதி கருணை காட்டுவார் என்ற நம்பிக்கை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இருந்த போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார் டாக்டர் ராமதாஸ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமானதும் தமிழக அரசு மீதான டாக்டர் ராமதாஸின் விமர்சனம் மிக மோசமாக இருந்தது. காடு வெட்டி குரு போன்றவர்களின் பேச்சு எல்லை மீறியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியதும் டாக்டர் ராமதாஸும் அவரது பரிவாரங்களும் அமைதியாகி விட்டனர். சட்டமன்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் எண்ணத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி சாதகமான சமிக்ஞை வரும் வரை அமைதியாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிக்க முடியாத வகையில் நெருக்கமாக உள் ளது. காங்கிரஸ் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பிடிக்கா ஒரு சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப் போது திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து அறிக்கை விடுவார்கள். அல்லது வீராவேசமாகப் பேசுவார்கள். இதையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் எப்படித்தான் எம்பிக் குதித்தாலும் இறுதியில் சோனியா காந்தியின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று கூறி விட்டு அமைதியாகி விடுவார்கள்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. அதற்கு ஏதுவாகவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளைப் பிரித்துக் கொடுக்க உள்ளார். தமக்கு அதிக தொகுதிகளைத் தருபவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம் என்று அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி கூறியுள்ளார். சிதம்பரம், ஜி. கே. வாசன், தங்கபாலு, இளங்கோவன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி பற்றி எதுவும் பேசாத நிலையில் கூட்டணி அமைப்பது பற்றி கார்த்தி பேசியது திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தியுடன் கார்த்தி மிக நெருக்கமானவர் என்பதனால் ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடன் தான் கார்த்தி பேசி இருப்பார் என்று கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் செயற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகம் எச்சரிக்கையுடன் அவதானித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பும் ராகுல் காந்தி திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை முறிக்க வேண்டும் என்று விரும்புகிறார். தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால் திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் அதரவு தேவை என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நன்கு புரிந்துள்ளனர். ஆகையினால் ராகுல் காந்தியின் எண்ணம் நிறைவேறுவதற்கான சூழ்நிலை இல்லை என்பது வெளிப்படை.
தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்ய சபா உறுப்பினர்கள் பதவிக் காலம் ஜூன் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அன்பு மணியின் பதவிக் காலம் ஜூன் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அன்பு மணியின் எதிர்காலம் முதல்வர் கருணாநிதியின் கையில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் அன்புமணியை ராஜ்யசபா உறுப்பினராக்கினால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு விடும்.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 16/05/10

Sunday, May 16, 2010

தூது விடுகிறது பா.ம.க.மௌனம் காக்கிறது தி.மு.க.


செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தமிழக முதல்வர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த வாரம் டில்லிக்கு விஜயம் செய்த தமிழக முதல்வர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்திக்கும் அவர் முறைப்படி அழைப்பு விடுத்தார்.
செம்மொழி மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை அழைப்பதற்காகவே கருணாநிதி டில்லிக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான சில பிரச்சினைகளைத் தீர்ப்பதே தமிழக முதல்வரின் டில்லிப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
அமைச்சர் ஆர். ராசாவுக்கு எதிரான ஊழல் புகார் பற்றிய பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியான செய்திகளால் அமைச்சர் ராசா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது. அமைச்சர் ராசாவுக்கு எதிராக தமிழகத்திலும் எதிர்ப்புக் குரல் வலுவடைந்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சில அமைச்சர் ராசாவுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. அமைச்சர் ராசாவுக்கு எதிரான ஊழல் புகார் பற்றிய ஆவணங்களை அவரை எதிர்க்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதேவேளை, சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அமைச்சர் ராசாவுக்கு பூரண ஆதரவு தெரிவித்துள்ளன. அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றினால் அல்லது ராசா இராஜினாமாச் செய்தால் ஊழலுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து விடும் என்ற பயமும் அரசிடம் உள்ளது.
அமைச்சர் ராசா ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இந்திய மத்திய அரசு உள்ளது. ராசாவை அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் எதிர்க் கட்சிகளும் சில ஊடகங்களும் குறியாக உள்ளன. அமைச்சர் ராசாவைக் கைவிட திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை.
அமைச்சர் அழகிரிக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன. அவை அனைத்தும் ஆதாரமற்ற பொய்கள் என்று அடித்துக் கூறுகிறார் அமைச்சர் அழகிரி. தமிழக முதல்வர் கருணாநிதியின் சொல்லுக்கு கட்டுப்படாது அடம் பிடிக்கும் அழகிரி மத்திய அரசின் சட்ட திட்டங்களையும் துச்சமாக மதிக்கிறார். அமைச்சர் அழகிரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நேரில் ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு காண்பதும் முதல்வர் கருணாநிதியின் டில்லி விஜயத்தின் ஒரு அங்கமாகும்.
தமிழக அரசியலில் தான் அழகிரிக்கு கண் வைத்துள்ளார், மத்திய அமைச்சராக இருப்பதில் அவருக்கு அதிக விருப்பம் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் அமைச்சர் அழகிரி.
ஆனால், அமைச்சர் அழகிரியின் மறுப்பு அனைத்தும் அறிக்கையாக வெளியாகிறதே தவிர, அவரின் நடவடிக்கைகள் எதுவும் சாதகமானதாக இல்லை. விருப்பம் இல்லாத இடத்தில் அழகிரியை விட்டு வைக்க முடியாத இக் கட்டான நிலையில் உள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
தமிழக முதல்வர் கருணாநிதியின் டில்லி விஜயத்தின் போது அமைச்சர் ஆர். ராசா, அமைச்சர் மு. க. அழகிரி ஆகியோரின் பிரச்சினைகள் பற்றி முதல்வர் கருணாநிதி விரிவாக ஆராய்ந்துள்ளார். அமைச்சர் ராசாவுக்கு எந்தப் பிரச்சினையும் இப்போதைக்கு ஏற்படும் சாத்தியம் இல்லை. மத்திய அரசில் தொடர்ந்தும் இருப்பதற்கு அழகிரி கஷ்டப்படவில்லை என்றால் அவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றி விடுவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. அமைச்சர் அழகிரியை தமிழகத்தில் அரசியல் செய்யவே விரும்புகிறார். தமிழக அரசியலில் அழகிரி காலடி எடுத்து வைத்தால் துணை முதல்வர் ஸ்டாலினில் செல்வாக்கில் பங்கம் ஏற்படலாம். கட்சியையும் தமிழக அரசையும் தன் கைக்குள் வைத்திருக்கவே அழகிரி விரும்புவார்.
தமிழக அரசியலில் துணை முதல்வர் ஸ்டாலினின் பங்கு அளப்பரியது. ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டதல்ல. இந்திய அரசியல் தலைவர்கள் தமது அரசியல் வாரிசுகளை திட்டமிட்டு அரசியலில் நுழைத்தார்கள். தமது செல்வாக்கும் பலத்தினால் அரசியல் வாரிசுகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தினார்கள்.
ஆனால், ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் எதிர்க்கட்சிகளினால் உருவாக்கப்பட்டது. மாணவப் பருவத்தில் அரசியலில் ஆர்வமுடன் செயற்பட்ட ஸ்டாலின் போராட்டங்களில் பங்குபற்றி சிறை சென்றால் வாரிசு அரசியல் என்ற சொல்லினுள் துணை முதல்வர் ஸ்டாலினின் அரசியல் வாழ்வை புகுத்தி விட முடியாது.
திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவையில் ஸ்டாலினுக்குப் பின்னர் அரசியல் வாழ்வை ஆரம்பித்த பலர் அமைச்சர்களானார்கள். தனது மகன் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு ஸ்டாலினுக்கு அமைச்சுப் பதவி எதனையும் முதல்வர் கருணாநிதி கொடுக்கவில்லை. அரசியலில் சகலவற்றையும் கற்று உணர்ந்த பின்பே தமிழக அமைச்சரவையில் ஸ்டாலினுக்கு இடம் கொடுத்தார் முதல்வர் கருணாநிதி. அழகிரியின் விஜயத்தில் எதிர்மாறாகச் செயற்பட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி. இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அழகிரி போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியானபோதே அவர் அமைச்சராகி விடுவார் என்று அரசியல் வல்லுனர்கள் ஆரூடம் கூறினார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற அழகிரி அமைச்சரானார். மூத்த உறுப்பினர்கள் இருக்கையில் அழகிரியை அமைச்சராக்கி அழகிரியின் ஆசையை நிறைவேற்றினார் தமிழக முதல்வர் கருணாநிதி.
முதல்வரின் ஆசையை முழுமையாக நிறைவேற்றாத அமைச்சர் அழகிரி, தனது ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார். மத்திய அமைச்சரவை எதிர்பார்த்தது போன்று இலகுவானதல்ல என்பதை காலம் கடந்த பின்னர் அமைச்சர் அழகிரி உணர்ந்து கொண்டார். தமிழக அரசியலில் அழகிரி தீவிரம் காட்டத் தொடங்கினார். அவருக்கு என்ன பதவி வழங்குவதென்று தடுமாறுகிறார் முதல்வர் கருணாநிதி. துறை முதல்வரான ஸ்டாலின் முதல்வராவது உறுதி. ஆகையினால் முதல்வர் பதவி அழகிரிக்கு கிடைக்க சந்தர்ப்பம் இல்லை. முதல்வர் கட்சித் தலைவராக இருப்பார் ஸ்டாலினை முதல்வராக்கி அழகிரியை கட்சித் தலைவராக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது.
கட்சித் தலைவர் பதவியை அழகிரிக்கு விட்டுக் கொடுக்க ஸ்டõலின் தயாராக இல்லை. நெருக்கடி எதுவும் இல்லாத கட்சித் தலைவராக இருக்கவே ஸ்டாலின் விரும்புகிறார். ஸ்டாலினையும் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவே அழகிரி விரும்புகிறார். கருணாநிதிக்குப் பின்னால் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று கூறியதன் மூலம் ஸ்டாலினுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார் அழகிரி. அழகிரியின் குணத்தைப் பற்றி நன்கு அறிந்துள்ள முதல்வர் கருணாநிதி; அழகிரியினால் ஸ்டாலினுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாக்கவே முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். ஆகையால் அழகிரியின் விருப்பம் இப்போதைக்கு நிறைவேறும் சாத்தியம் இல்லை.
இதேவேளை தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய பாட்டாளி மக்கள் கட்சி சீண்டு வாரின்றி தவிக்கிறது. பென்னாகரம் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும் விட அதிகளவு வாக்குகளைப் பெற்றதால் உற்சாகத்தில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர பாட்டாளி மக்கள் கட்சி விரும்புகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பத்தைப் புரிந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் சாதகமான சமிக்ஞை எதுவும் காட்டாது மௌனம் காத்து வருகிறது.
ஜூன் மாதத்துடன் அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைகிறது. தனது மகன் அன்புமணி தொடர்ந்து எம்.பியாக இருப்பதையே டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால்தான் அன்பு மணி நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்பதை டாக்டர் ராமதாஸ் மிக நன்றாக உணர்ந்து கொண்டுள்ளார். மகனின் எதிர்காலத்துக்காக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியமைக்க தயாராக உள்ளார் டாக்டர் ராமதாஸ்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகச் செயற்படுகிறது. டாக்டர் அன்புமணி மீது முதல்வர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் மதிப்பு வைத்துள்ளார். மத்திய அரசும் டாக்டர் அன்புமணி மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆசியுடன் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு டாக்டர் அன்புமணி விரும்புகிறார். திராவிட முன்÷னற்றக் கழகத்தவர்களில் சிலர் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ப்பதற்கு விரும்பவில்லை.
பென்னாகரம் இடைத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் மோதியதால், இரண்டு கட்சித் தொண்டர்களும் எதிரும் புதிருமாக உள்ளனர். அன்புமணியின் பதவி தொடர்வதற்காக தனது கட்சித் தொண்டர்களும் அடங்கிப் போக வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார். அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினராவது முதல்வர் கருணாநிதியின் கையிலேயே உள்ளது.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 09/05/10

Saturday, May 15, 2010

அழகிரியினால் நெருக்கடியைஎதிர்நோக்கும் கருணாநிதி


தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய ரயில், பஸ் மறியல் போராட்டம் பிசுபிசுத்து விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகம் முழுவதும் பஸ், ரயில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. விலைவாசி உயர்வினால் தமிழக மக்கள் பலத்த இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் விடுத்த போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி மக்களில் மனதைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. விலைவாசி உயர்வு தமிழக மக்கள் மீது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விலைவாசி உயர்வினால் மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. விலைவாசி மக்களை பாடாய்ப்படுத்தும் அதேவேளை மின் தடை தமிழகத்தில் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின் தடை எதிர்காலத்தில் இருக்காது என்று அமைச்சர் பலமுறை உறுதி கூறியும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. விலை ஏற்றம், மின் வெட்டு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. பஸ், ரயில் மறியல் போராட்டம் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தது போன்று பெரிய அளவில் நடைபெறவில்லை.
தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் பெயரளவில் அறிவித்தமை தவிர முழு அளவில் போராட்டம் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை முறையாகச் செய்யவில்லை. தமிழக அரசுக்கு எதிராக நடைபெற அறிவிக்கப்பட்ட பஸ், ரயில் மறியல் போராட்டத்தின் மூலம் மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டு அதன் காரணமாக மக்கள் தம் மீது குற்றம் சுமத்தி விடுவார்களோ என்ற பயமும் எதிர்க்கட்சிகளிடம் இருந்தது.
தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்களா இல்லையா என்பதை சரிவர ஆராயாமல் திட்டமிடப்பட்ட மறியல் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. முறையாகத் திட்டமிடாமலும் மக்களின் ஆதரவு இல்லாமலும் நடத்தப்பட்ட மறியல் போராட்டம் பிசுபிசுத்ததினால் தமிழக அரசு மகிழ்ச்சியில் உள்ளது. இதேவேளை அம்பேத்கர் சிலை திறப்பு விவகாரத்தினால் தமிழக அரசு கடும் சீற்றத்துடன் உள்ளது.
சென்னை நீதிமன்றத்தில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்ளக் கூடாது. அதையும் மீறி கலந்து கொண்டால் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று சட்டத்தரணிகள் எச்சரிக்கை விடுத்தனர். நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் மறியல் செய்த போது அதனைக் கலைப்பதற்கு பொலிஸார் முயற்சி செய்தனர். பொலிஸாரின் எச்சரிக்கையையும் மீறி நடத்தப்பட்ட போராட்டத்தை பொலிஸார் கலைத்த போது பொலிஸாருக்கும், சட்டத்தரணிகளுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப் போவதாக சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.
சட்டத்தரணிகளின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டார்கள். கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்ட போதும் முதல்வர் கருணாநிதி தனது பேச்சை நிறுத்தாது தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்கு முதல்வர் தடையாக இருந்தால் நீதிமன்றத்தின் உதவியுடனேயே அதற்குத் தீர்வு காண வேண்டும் என்று நடுநிலையான சட்டத்தரணிகள் கருத்துக் கூறி உள்ளனர். அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்ததை நடு நிலையாளர்கள் விரும்பவில்லை.
இதேவேளை, மத்திய அமைச்சர் அழகிரியின் விவகாரம் முதல்வருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் கேள்வி நேரங்களில் அதற்குரிய பதிலை அமைச்சர் கொடுக்க வேண்டியது அமைச்சரின் முக்கிய பொறுப்பு. அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் அமைச்சர் அழகிரி பற்றி பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அழகிரியின் நடவடிக்கையினால் மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் சரளமாக உரையாட முடியாமையினால் வாய்மூல வினாக்களுக்கு அமைச்சர் அழகிரி நாடாளுமன்றத்தில் பதிலளிப்பதைத் தவிர்த்து வருகிறார். அமைச்சர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதிலளிக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியாத அழகிரி தமிழில் பதிலளிக்க அனுமதி கோரினார். அழகிரிக்காக நாடாளுமன்ற வழமையை மாற்ற முடியாது அஎன்று பதிலளிக்கப்பட்டதனால் துணை அமைச்சர் வாய்மூலக் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். ஆனால் தாம் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சரிடம் இருந்தே பதில் வரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அமைச்சர் அழகிரியின் பலவீனத்தைத் தெரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றன.
நாடாளுமன்றத்தில் அழகிரியை பற்றி சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கையில் அவர் வெளிநாட்டில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தார். அமைச்சர் அழகிரியின் பிரச்சினையைப் பற்றி பேசி முடிவு காண்பதற்காக சபாநாயகர் பலமுறை அழைப்பு விடுத்தும் சபாநாயகரை அமைச்சர் அழகிரி சந்திக்கவில்லை.
மத்திய அரசில் அழகிரிக்கு விருப்பம் இல்லை. தமிழகத்தில் தனது பிடியை பலமாக்க அழகிரி விரும்புகிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது அடிக்கடி சுமத்தப்படுகிறது. அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்று அழகிரி கூறி வருகிறார். ஆனால் அவரது நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிக்கும் போது தமிழகத்தில் தனது கை ஓங்க வேண்டும் என்று விரும்புவது புலனாகின்றது.
கருணாநிதியைத் தவிர வேறு எவரையும் தலைவராக ஏற்க மாட்டேன். தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவேன் என்பன போன்ற அதிரடிப் பேட்டிகளினால் தமிழகத்தில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்கு அழகிரி விரும்புகின்றார் என்பது புலனாகின்றது. தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவேன். அவர் விரும்பினால் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவேன் என்றெல்லாம் பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர் அழகிரி, துணை முதலமைச்சர் ஸ்டாலினைத் தலைவராக ஏற்கமாட்டார் என்பது வெளிப்படையானது.
கட்சியையும் தமிழகத்தையும் தனது அரசியல்வாரிசான ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் முதல்வர் கருணாநிதியின் விருப்பத்துக்குப் பச்சைக் கொடி காட்டி விட்டனர். ஸ்டாலின் தலைவராவதையும் முதல்வராவதையும் விரும்பாதவர்களும் முதல்வரின் விருப்பத்துக்கு தலையாட்டினர். ஸ்டாலினை விரும்பாதவர்களுக்கு அழகிரியின் அதிரடி அறிக்கைகள் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
அழகிரி அமைச்சரான போது அவருக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் சரளமாகத் தெரியாது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது பல சவால்களை முறியடித்த அழகிரி ஆங்கிலமும் ஹிந்தியும் கற்று சவாலை முறியடிப்பார் என்று கூறப்பட்டது. ஆங்கிலமும் ஹிந்தியும் கற்பது பெரிய விடயமல்ல. அவற்றைக் கற்றுத் தேர்ந்து விட்டால் தமிழக அரசியலில் செல்வாக்குக் காட்ட முடியாது, அதனால்தான் அழகிரி ஆங்கிலத்தையும் ஹிந்தியையும் படிப்பதில் அக்கறை காட்டவில்லை என்ற கருத்தும் தமிழகத்தில் உள்ளது.
எத்தனையோ அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வெற்றி பெற்ற முதல்வர் கருணாநிதி, அழகிரியின் விவகாரத்தையும் சரியான முறையில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை கட்சித் தொண்டர்களிடம் உண்டு.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 02/05/10

Sunday, May 9, 2010

உலகக்கிண்ணம்2010


சுவீடன் 1958
சுவீடனில் நடைபெற்ற ஆறாவது உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சுவீடனுடன் மோதிய பிரேஸில் வெற்றி பெற்று சம்பியானனது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு 45 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. கூடுதல் புள்ளிகளைப் பெற்ற 16 நாடுகள் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. ஐந்தாவது உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடிய இத்தாலியும் ஹங்கேரியும் தகுதி பெறவில்லை. வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் பங்குபற்றின. அதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடம் பிடித்த நாடுகள் கால் இறுதிக்கு விளையாடும் தகுதியைப் பெற்றன.
ஐரோப்பாவில் இருந்து அவுஸ்திரேலியா, செக்கோஸிலோவாக்கியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், சுவீடன், வேல்ஸ், யூகோஸ்லாவியா, வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவில் இருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், பரகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. பரகுவேக்கு எதிரான போட்டியில் 73 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது.
பிரேஸில், பிரான்ஸ், மேற்கு ஜேர்மன், சுவீடன், வேல்ஸ், வட அயர்லாந்து, யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் கால் இறுதியில் விøயாடத் தகுதி பெற்றன. சுவீடன், பிரேஸில், ஜேர்மன், பிரான்ஸ் ஆகியன அரை இறுதியில் விளையாடின.
ஜேர்மனுக்கு எதிரான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் 52 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. அரை இறுதியில் தோல்வி அடைந்த ஜேர்மன், பிரான்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலான போட்டியில் 63 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் மூன்றாம் இடத்தையும் தோல்வி அடைந்த ஜேர்மன் நான்காம் இடத்தையும் பிடித்தன.
பிரேஸில், சுவீடன் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் 52 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் சம்பியனானது.
பிரான்ஸ் 23 கோல்களும் பிரேஸில் 16 கோல்களும், சுவீடன், ஜேர்மன் ஆகியன தலா 12 கோல்களும் அடித்தன. ஜஸ்ட் பொன்ரனி (பிரான்ஸ்) 13 கோல்களும் பீலே (பிரேஸில்), ஹெல்மட்ரஹன் (ஜேர்மன்) தலா ஆறு கோல்களும் வவ(பிரெஸில்), பீற்றர் மைக்பொலன்ட் (இங்கிலாந்து) ஆகியோர் தலா ஐந்து கோல்களும் அடித்தனர்.
ரிசுள் பு பொர்னிக் (செக்கோஸிலோவாக்கியா), பொன்ஸ் சிபொஸ் (ஹங்கேரி) எரிக் ஜக்கோவிச் ஆகியோருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
35 போட்டிகளில் 126 கோல்கள் அடிக்கப்பட்டன. 9,19,580 பேர் போட்டிகளை மைதானங்களில் பார்வையிட்டனர்.
13 கோல்கள் அடித்த ஜஸ் பொன்ரஸ் (பிரான்ஸ்) கோல்டன் ஷûவைப் பெற்றார். கோல்டன் ஷீவுக்காக ஜஸ் பொன்ரன், பீலே (பிரேஸில்), ஹெல்மட்ஹன் (ஜெர்மனி) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
12 நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன. 17 ஆவது வயதில் பீலே உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடினார்.
மிகக்குறைந்த வயதில் விளையாடிய பெருமை பெற்றார். ஆசியக் குழுவில் சேர்க்கப்பட்டதனால் துருக்கி பின்வாங்கியது. ஹங்கேரிக்கும் வேல்ஸுக்கும் இடையிலான போட்டியை 2823 பேரே பார்வையிட்டனர்


ரமணி

மெட்ரோநியூஸ்


.