Friday, December 28, 2012

குஜராத்தில் அசைக்க முடியாத மோடி பா.ஜ.க.வை அசைத்த காங்கிரஸ்


குஜராத் இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலைப் பரபரப்பாக்கியுள்ளன. நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி தொடர்ந்து  இரண்டு முறை வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.  மூன்றாவது முறை மோடி வெற்றிபெறுவதைத்தடுக்கும்  சபதத்துடன் தேர்தலில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி மோடியிடமிருந்து  ஆட்சியைப் பறிக்க முடியாது தோல்வியடைந்தது. இமாச்சலப் பிரதேசத்தில்  பாரதிய ஜனதாக் கட்சியிடமிருந்து ஆட்சியைப் பறித்ததனால் காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தை விட குஜராத் தேர்தலையே காங்கிரஸூம், பாரதிய ஜனதாக் கட்சியும் மிக முக்கியமாகக் கருதின. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளது என்ற விமர்சனங்களின் மத்தியில் பாரதிய  ஜனதாக் கட்சியிடமிருந்து  இமாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. ஆனாலும்  குஜராத்தில் மோடியை வீழ்த்த  காங்கிரஸினால் முடியவில்லை.

அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷாத்தில் இணைந்த மோடி மெதுமெதுவாகத் தனது அரசியல் அபிலாசைகளை வளர்த்துக் கொண்டார். பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்த மோடி படிப்படியாக முன்னேறினார்.  1995 ஆம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியின்  தேசியச் செயலாளராக நியமனம் பெற்றார்.

2001 ஆம் ஆண்டு  குஜராத் இடைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தோல்வியடைந்ததனால்  முதல்வர்  கோசுபாய் பட்டேல் இராஜினாமா செய்தார். குஜராத்தில் பாரதிய  ஜனதாக் கட்சி வலுவிழுந்த  நிலையில் முதல்வர் பொறுப்பை  ஏற்றார் நரேந்திர மோடி.



2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத் தேர்தலில் மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றது. 2002 ஆம் ஆண்டு மோடியின் ஆட்சிக் காலத்தில்கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தினால் குஜராத் பற்றி எரிந்தது. முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குஜராத்தின் சரித்திரத்தில் ஏற்பட்ட இக்கரும்புள்ளியினால் மோடியின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முஸ்லிம்களின் எதிரியாக மோடி வர்ணிக்கப்பட்டார்.

2007ஆம் ஆண்டு குஜராத் மாநில தேர்தலில் மோடியைமரணவியாபாரி என்று சோனியாகாந்தி  நேரடியாகத் தாக்கினார். முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல் காரணமாக  பாரதிய ஜனதாக் கட்சி பாதிக்கப்பட்டது.. குஜராத்தேர்தலில்யாருமே எதிர்பார்க்காத நிலையில் மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றது.

குஜராத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலிலாவது  மோடியை வீழ்த்தி விடலாம் என்ற  கணவில்  களமிறங்கிய காங்கிரஸ் பலத்த அடி வாங்கியுள்ளது.  இமாச்சல பிரதேசத்தில் வெற்றி பெற்றதனால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம் என்று திருப்திப்பட்டுள்ளது காங்கிரஸ். பாரதிய ஜனதா கட்சியின் கையில் இருந்த இமாச்சல பிரதேச ஆட்சியைத் தட்டிப்பறித்ததினால் வடமாநிலத்தில் காங்கிரஸின்  செல்வாக்கு குறையவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.


குஜராத்தை மோடி தக்க வைத்துள்ளார். குஜராத்தில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றாலும் அந்த வெற்றிக்கு மோடி தான் முக்கிய காரணம். மோடியின் தனிப்பட்ட செல்வாக்கினால் தான் பாரதிய ஜனதாக் கட்சி தலை நிமிர்ந்துள்ளது. குஜராத்தை முன்மாதிரியான மாநிலமாக வளர்த்துள்ள மோடி குஜராத்தின் முதலமைச்சராக  மோடி பதவி ஏற்றபோது  மின் பற்றாக்குறையால் குஜராத் தத்தளித்தது. மின் பற்றாக்குறையைச் சீர்செய்ய அவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக  அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கக் கூடிய வகையில் தன்னிறைவு  கண்டுள்ளது.
 
குஜராத்தின் நீர் பற்றாக்குறை காரணமாக  அண்டை மாநிலத்தையே  நம்பி உள்ளது.  சுமூகமான உறவுகள் காரணமாக அண்டை மாநிலங்களிலிருந்து எதுவித தடங்களுமின்றி நீர் கிடைத்தது. பூரணமான மது வில‌க்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு குடிமகன்கள் இல்லை. அண்மையில்  குட்காவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மோடியின் வெற்றி பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாயின்  தலைமையில் ஆட்சி அமைத்த‌ பாரதிய ஜனதாக் கட்சி தகுதியான தலைமைத்துவம் இல்லாமையால் தடுமாடுகிறது. அத்வானியின் வழிகாட்டலில் பாரதிய ஜனதாக் கட்சி  எதனையும் சாதிக்கவில்லை. அடுத்த பிரதமர் யார் என்பதில் பாரதிய ஜனதாக் கட்சிக்குள்   இழுபறி நிலவுகிறது. மோடியை  பிரதமர் வேட்பாளராக  நிறுத்த வேண்டும் என்று ஒரு சிலர் விரும்புகின்றனர். மோடிக்கு எதிராக  ஒரு சிலர் பாரதிய ஜனதாக் கட்சிக்குள் இயங்குகின்றனர். குஜராத்தை விட்டு மோடி வெளியே  வரக்கூடாது  என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
 
குஜராத் மாநிலத்தை விட்டு மத்திய அரசுப் பக்கம் மோடி சென்றால்  பாரதிய ஜனதாக் கட்சியின் செல்வாக்கு அங்கு சரிந்துவிடும். ஆகையால் மோடி குஜராத்திலிருந்து வெளியேறுவதையே காங்கிரஸ் விரும்புகிறது. பிரதமர் வேட்பாளர் போராட்டத்தில் மோடி வெற்றி பெறமாட்டார் என்று கருதுகிறது. காங்கிரஸ் குஜராத்தில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றிபெற்றாலும் ஏழு அமைச்சுகள் தோல்வியடைந்துள்ளனர். பாரதிய ஜனதாக் கட்சியை விட மோடியின் செல்வாக்குத்தான் குஜராத்தில் அதிகமாக  இருப்பதை இது  எடுத்துக் காட்டுகிறது.
 
பாரதிய ஜனதாக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய  கட்சி ஆரம்பித்து குஜராத்தில் தேர்தலைச் சந்தித்த கேசு பாய்பட்டேல் அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற இவரது கட்சியினால் வாக்குகளைப் பிரிக்க முடிந்ததே தவிர  பாரதிய ஜனதாக் கட்சியைத் தோல்வியடையச் செய்ய முடியவில்லை.
 
குஜராத் இமாச்சல  பிரதேசம்  ஆகியவற்றின் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலித்தன. மோடியின் வெற்றிக்கு  ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் அடுத்த பிரதமர்  ஜெயலலிதா என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைகளும், தொண்டர்களும் கருதுகின்றனர். காங்கிரஸ் பாதிய  ஜனதாக் கட்சி ஆகியற்றுக்கு போட்டியால்  மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்யும் ஜெயலலிதா பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகக் கருதப்படுபவருக்கு வாழ்த்து  தெரிவித்துள்ளனர்.
 
அத்வானியும் மோடியும் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவர்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சி காலூன்றுவதற்கு  ஜெயலலிதாவே  முக்கிய காரணம்.துக்ளக் ஆண்டு விழாவில் உரையாற்றிய  சோ, இந்தியாவின் பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு இருக்கும் என்றார். சோ அன்று கொளுத்திப் போட்ட வெடியை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அவ்வப்போது ஞாபகப்படுத்துகின்றனர்.
 
இமாச்சலப் பிரதேத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதனால் கருணாநிதி மிகுந்த  உற்சாகத்தில் உள்ளனர். காங்கிரஸூடன் கூட்டணி சேர்வதா இல்லையா என்ற கேள்விக்கு இதுவரை பதிலளிக்காத கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்த போது காங்கிரஸ் கட்சியின் வாக்கு    அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குஜராத் இமாச்சலப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளன.  
மெட்ரோநியூஸ் 28/12/12



ச‌ச்சின் இல்லாத ஒரு நாள்...


உலகக் கிண்ண ஒருநாள் போட்டி 1978 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற போது பந்து பொறுக்கும் சிறுவனாக ஓடித் திரிந்த சச்சின் டெண்டுல்கர் பின் நாளில் கிரிக்கெட்டைத் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
கிரிக்கெட் போட்டியின் பல சாதனைகளின் சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். சச்சினின் ஆட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. அவரது ஆட்டத்தில் தடுமாற்றமும் பந்தை எதிர்நோக்கும் வேகமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள். சச்சின் ஓய்வு பெற வேண்டும் என சிலரும் ஓய்வு பெறக் கூடாது எனச் சிலரும் வாதிட்டனர்.


இந்திய அணியில் முன்னாள் வீரர்கள் உட்பட சில கிரிக்கெட் வீரர்கள் சச்சின் ஓய்வு பெறுவது நல்லது என்று கூறினார்கள். ஒரு சில வர்ணனையாளர்களும் சச்சின் ஆட்டம் இழந்ததும் தமது மேதாவித்தனத்தை வெளிப்படுத்துவார்கள். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா படுதோல்வியடைந்து தொடர்களை இழந்தது. இந்திய அணியின் படுதோல்விக்கு சச்சினும் ஒரு காரணம் என்ற கடும் விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனங்கள் சச்சினை வெகுவாகப் பாதித்தன.


விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை. நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டேன் என்று அடிக்கடி கூறி வந்த சச்சின் திடீரென முன் அறிவித்தல் எதுவுமின்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்திய, இலங்கை, பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு பெறுவதற்கு இலகுவில் விரும்புவதில்லை. உடல் தகுதி இல்லாத ஆட்டத் திறன் குறைந்த சில வீரர்களைத் தெரிவு செய்யாத கிரிக்கெட் சபைகள் அவர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளதாக அறிவிக்கும். கிரிக்கெட் சபைக்கும் வீரருக்கும் பாதிப்பில்லாத இந்த அறிக்கையால் தற்காலிகமாகச் சில பிரச்சினைகள் தீர்ந்து விடுவதுண்டு. முரளி போன்ற ஒரு சிலர் மட்டும் செல்வாக்கு இருக்கும் போது ஓய்வு பெறப் போவதைத் துணிச்சலுடன் அறிவித்தார்கள்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்பும் வீரர் இரண்டு நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க முன்னர் அறிவிப்பார். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்திய வீரர்களின் பெயர் அறிவிக்க முன்னமே ஒரு நாள் போட்டியில் ஓய்வு பெறப் போவதாக சச்சின் அறிவித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோனியின் செயற்பாட்டில் அதிருப்தியுற்ற இந்திய கிரிக்கெட் தெரிவுக் குழு தலைமைப் பொறுப்பில் இருந்து டோனியை நீக்க முடிவெடுத்தது. தெரிவுக் குழுவின் உயர் பதவியிலிருந்த ஒருவர் டோனியின் தலைமைப் பதவியைக் காப்பாற்றினார். தெரிவுக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற இந்த ரகசிய விவாதம் அண்மையில் பரகசியமானது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் சச்சினின் பெயர் இல்லை என்ற ரகசியம் தெரிந்ததனால் தான் இந்த அவசர ஓய்வு பெறும் முடிவை சச்சின் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.


சச்சினின் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் இப்போது ஓய்வு பெற்றிருக்கக் கூடாது என்ற‌ குரல் இப்போது பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் தலைவர்களும், வீரர்களும் சச்சினின் திடீர் ஓய்வை விரும்பவில்லை. சச்சினின் ஓய்வு அறிவிப்பால் பாகிஸ்தான் வீரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பாகிஸ்தானுடன் ஆரம்பமான சச்சினின் கிரிக்கெட் ஓய்வு பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் பின்னர் ஏற்பட்டிருக்கலாம் என ஆதங்கப்படுகிறார்கள்.


வேகப்பந்து வீரராகவே சச்சின் ஆசைப்பட்டார். டென்னிஸ் லில்லியால். நிராகரிக்கப்பட்ட சச்சின் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி சாதனைகளின் சொந்தக்காரரானார். பாடசாலைப் போட்டியில் வினோத் கம்ளியுடன் இணைந்து 326 ஓட்டங்கள் எடுத்தார் சச்சின். அப்போட்டியில் சச்சின் 326 ஓட்டங்கள் எடுத்தார் ரஞ்சி, இரானி, துலிப் டிராபி போட்டிகளில் அறிமுக வீரராகக் களமிறங்கி சதமடித்தார். சச்சினும் கம்ளியும் கிரிக்கெட்டில் அறிமுகமான போது சாதனை வீரர்கள் வருகிறார்கள், சாதிப்பார்கள். இந்திய அணியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று எவரும் கட்டியம் கூறவில்லை. பாகிஸ்தானுடனான அறிமுகப் போட்டியிலும் நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் ஓட்டமெடுக்காது ஆட்டமிழந்தார் சச்சின். அப்போது அவர் மீது எதிர்பார்ப்பு இல்லாமையால் எந்த ஊடகமும் அவரை வறுத்தெடுக்கவில்லை.
இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கிண்ண முத்தரப்பு போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதமடித்து தனது சத சாதனைக் கணக்கை ஆரம்பித்தார். 75 ஆவது போட்டியிலேயே முதலாவது சதத்தை அடித்தார் சச்சின். பிட்ச்சில் நின்றால் பிச்சு உதறுவார் என்ற பயம் எதிரணி வீரர்களிடம் இருந்தது. அந்தப் பயத்தில் இருந்து எதிரணி வீரர்கள் தற்போது விடுபடத் தொடங்கி விட்டார்கள். சிறிது காலம் தடுமாறிய நிலையில் இருந்த சச்சின் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விளாசுவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடம் இருந்தது. அந்த நம்பிக்கையைச் சிதறடித்து விட்டார் சச்சின். கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இல்லாதவர் சச்சினின் மனைவி அஞ்சலி. திருமணத்துக்கு முன் கிரிக்கெட்டைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. ஒருநாள்போட்டியில் 49 சதம் அடித்த சச்சின் 50 ஆவது சதமடிப்பாரா என்ற நம்பிக்கை உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தார் அஞ்சலி. தன் மனைவி அஞ்சலியின் ஆசையை நிறைவேற்றாது ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் சச்சின்.
ஜென்ரில்மன் விளையாட்டு என வர்ணிக்கப்படும் கிரிக்கெட்டில் கண்ணியமான ஒரு சில வீரர்களில் சச்சினும் ஒருவர். ஆட்டமிழந்தால் நடுவரின் முடிவை எதிர்பாராது வெளியேறி விடுவார். தவறான தீர்ப்பை நடுவர் வழங்கினாலும் அதற்கு எதிராக உடலசைவு எதனையும் வெளிக்காட்டாது வெளியேறி விடுவார். 2001 ஆம் ஆண்டில் தன் ஆபிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்தியதாக சச்சினின் மீது புகார் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு சச்சினுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்ட காருக்கு சுங்கவரி விதிப்பிலிருந்து விலக்களிப்பதற்கு  சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தினால் 1.13 கோடி (இந்திய ரூபா) இழப்பீடு என்று வழக்குத் தொடரப்பட்டது.
463 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 452 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். 21.367 பந்துகளுக்கு முகம் கொடுத்தார். 18.426 ஓட்டங்கள் எடுத்தார். இவற்றில்  2.016 பவுண்டரிகள், 195 சிக்ஸர்கள் அடக்கம். 41 முறை ஆட்டம் இழக்கவில்லை. துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாது பந்து வீச்சிலும் ஒரு சில போட்டிகளில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அஸார் தலைமையிலான இந்திய அணி 1993 ஆம் ஆண்டு ஹீரோ ஆப் கிண்ண அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவைச் சந்தித்தது. கடைசி ஓவரில் ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறும் நம்பிக்கையில் தென்னாபிரிக்கா இருந்தது. கடைசி ஓவரை வீச சச்சினை அழைத்தார் அஸார். தென்னாபிரிக்க ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கடைசி ஓவரில் மூன்று ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்த இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் சச்சின்.
463 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 270 இன்னிங்ஸ்களில் பந்து வீசினார். 8054 பந்துகளை வீசிய சச்சின் 6,850 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஒரு நாள் போட்டிகளில் 154 விக்கெட்களை வீழ்த்தினார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 32 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரது சிறந்த பந்து வீச்சாகும். இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளையும் நான்கு முறை நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட்டை விட்டு வெளியேறினால் விளம்பரங்களின் வருவாய் குறைந்து விடும். தடை ஓய்வு பற்றிய முடிவை காலதாமதமாக சச்சின் அறிவித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஓய்வு எப்போது என்ற கேள்விக்கு சச்சின் பதிலளித்துள்ளார்.
எப்போது ஓய்வு என்ற கேள்வி கேள்வியாக மட்டுமல்லாது சர்ச்சையையும் எழுப்பியது. சர்ச்சைகளின் வீரியத்தை சச்சின் சற்று குறைத்துள்ளார்.
சச்சினின் இந்த முடிவுக்கு சர்ச்சைகளும் விமர்சனங்களும் ஊடகங்களும் தான் காரணம் என்று அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சர்ச்சைகளும் விமர்சனங்களும் என்றாவது ஒரு நாள் ஏதோ ஒரு ரூபத்தில் வெளிவந்து கொண்டே இருக்கும். விமர்சகர்களின் பார்வை இப்போ டோனியின் மீது விழுந்துள்ளது. டோனியின் தலைவிதி பாகிஸ்தானின் கையில் உள்ளது.
கங்குலி, லக்ஷ்மன், ட்ராவிட் ஆகியோரின் வெற்றிடங்களை நிரப்ப முடியாது தவிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சச்சினின் வெற்றிடத்தை எப்போது நிரப்பும்?
சாதனைகள் என்றோ ஒரு நாள் முறியடிக்கப்படலாம். சச்சினின் ஒரு சில சாதனைகள் முறியடிக்கப்பட முடியாதவை. சச்சினின் சாதனைகள் அனைத்தையும் ஒரு வீரரால் முறியடிக்க முடியாது. பிரிக்க முடியாதது. சச்சினும் சாதனையும் ஒரு நாள் போட்டியில் சச்சின் இல்லை என்றாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும்.
மெட்ரோநியூஸ்   28/12/12

Thursday, December 27, 2012

திரைக்குவராதசங்கதி 52


மறக்கமுடியாதபழையகுர‌ல்களில்ஒன்றுஜமுனாராணியினுடையது.இன்றுகுத்துப்பாடல்கள்எனஇள‌களைக் கவரும் பாடல்களை அன்று பாடியவர்களில் ஜமுனாராணியும்ஒருவர்.ஜமுனாராணி,எல்.ஆர்.ஈஸ்வரிஆகியோரின்அந்தக்காலகுத்துப்பாடல்கள்அந்தக்காலஇளைஞர்களைமட்டுமல்லாதுமுதியவ‌ர்களையும்கவர்ந்திழுத்தன.1952ஆம்ஆண்டுமார்டன்தியேட்டர்ஸ்தயாரித்தவளையாபதி படத்தில் டி.எம்.எஸ்.ஸுடன் இணைந்து குளிர்தாமரை மலர்ப்பொய்கை என்ற பாடலை முதன் முதலாகப்பாடினார் ஜமுனாராணி. அவருடையகுர‌லில் ஒருகவர்ச்சிஇருந்தது.அதேபடத்தில்உள்ளஇன்னொருபாடலானகுலுங்கிடும்பூவில் எல்லாம் தேனருவி பாய்வதனால்என்ற பாடல்தான் ஜமுனா ராணியை அடையாளம் காட்டியது. இந்த இர‌ண்டு பாடல்களும் பார‌திதாசனால் எழுதப்பட்டவை..

டி.எம். சௌந்தரர்ராஜனின் கம்பீர‌க் குர‌லுக்குஇணையாக ஜமுனாராணி பாடிய பாடல்கள்இன்றைக்கும்மறக்கடியாதவையாகஉள்ளன.ஏழுவயதில்சினிமாவுக்கு குர‌ல் கொடுத்தவர். 14 வயதில் கதாநாயகிக்காக பின்னணிபாடியவர். நான்குவயதில் சங்கீதப் போட்டியில்முதல் பரிசு பெற்றவர். ஐந்து வயதில் வானொலிக்காகதேர்வுசெய்யப்பட்டவர்போன்றபெருமைகளின்சொந்தக்கார‌ர். ஜமுனாராணி. 1964 ஆம் ஆண்டு தெலுங்குத்திரைப்படமான தியாகய்யா வெளியானபோதுபிர‌பலஇசைவித்தகர்களின்பாடல்கள்அப்படத்தில்இடம்பெற்றன.அவர்களுடன்ஏழுவயதானஜமுனாராணியும்மதுரைநகரிலோஎன்றபாடலைப்பாடிஇருந்தார்.நடனமங்கையாகத்தான்சினிமாவில்ஜமுனாராணி அறிமுகமானார். நாடகங்களில்தனியாகவும் குழுவாகவும் நடனமாடினார். தீன பந்தாஜீவன் முக்திராவால்மீதி, கருடகர்வ பங்கயம்போன்ற தெலுங்குப் படங்களில்ஜமுனாராணிநடனமாடிஇருந்தார்.1952ஆம்ஆண்டுவெளியாகிதமிழ்த்திரைஉலகின்பெரும்புர‌ட்சியைஉருவாக்கியதேவதாஸ்படத்தில்ஜமுனாராணி பாடிய "ஒ தேவதாஸ் படிப்பு இதானாவாத்தியாரு தூங்கிப் போனா ஓட்டம் பிடிக்கிறே'என்ற பாடல் ஜமுனாராணிக்குபெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.

1952 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம்ஆண்டுவரை மார்டன் தியேட்டர்களில் மாதச்சம்பளத்துக்கு பாடுவதற்கு ஜமுனாராணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மார்டன்தியேட்டர்களில் இருந்து அவர் வெளியேறியதும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தவர் கவியர‌சு கண்ணதாசன், பி சுசீலா, ஜிக்கி,பி. லீலா ஆகியோருடன் ஜமுனா ராணியின்குர‌லும் ஒலிக்க கவியர‌சு முக்கிய கார‌ணியாக விளங்கினார்.1954 ஆம் ஆண்டு வெளியான குலேபகாவலி படத்தின் ஆசையும் நேசமும் என்ற பாடல்ஜமுனா ராணியால் இப்படியும் பாடமுடியுமா எனக் கேட்க வைத்தது. போதையில் தள்ளாடியபடி விக்கலுடன் ஹம்மிங்கும் சேர்ந்த பாடல் அது. அந்தப் பாடலையார் பாடுவது என்ற விவாதம் நடைபெற்றபோது பட்டென ஜமுனாராணியை சிபாரிசுசெய்தார் கவியர‌.அன்பு எங்கே என்ற படத்தில் ஜமுனாராணி பாடியமேலேபறக்கும்ராகெட்டு,மின்னல் பூச்சி ஜாக்கெட்டு, ஆளை பயக்கும்பேஸ்கட்டு அதுதான் இப்போ மார்க்கட்டுஎன்ற ஆங்கிலமும் தமிழும் கலந்த வரிகள்முடித்ததும் மாமா.... என ஜமுனாராணியின் குர‌ல் அந்தக் காலத்தில் அனைவரையும் மயங்க வைத்தது


.கவர்ச்சிப் பாடல்களில் கலக்கிய ஜமுனாராணிக் குமகாதேவி படத்தில் காமுகர் நெஞ்சில்நீதியில்லைஅவருக்குதாய் என்றும் தார‌ம்என்றும்பேதமில்லைஎன்றஉருக்கமான பாடலைஜமுனாராணி நன்றாகப் பாடுவார் என கவியர‌சு கூறினார்.மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.உருக்கமான பாடலை ஜமுனாராணியால் பாட முடியாது. கவர்ச்சிப் டல்களுக்குத்தான் அவரின் குர‌ல் பொருந்தும் என எம்.எஸ்.வி. அடித்துக் கூறினார்.மகா தேவி படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர். நாயகி சாவித்திரி, சாவித்திரிக்கான அப்பாடல் மிகவும் உருக்கமாகஎழுதப்பட்டது. அனைவரும் ஒப்புக்கொண்டாலும் கதாநாயகன் எம்.ஜி. ஆரும் ஒப்புதலளிக்கவேண்டும்.இவைஎல்லாவற்றையும் மனதில் கொண்டே ஜமுனாராணி வேண்டாம்என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் கவியரசு விடாப்பிடியாக‌ இருந்தார். இந்தக் குர‌ல் சரிவர‌வில்லை என்றால்கால்ஷீட் செலவை நான் தருகிறேன் என்றார்.அந்தப் பாடலைப் பாட ஜமுனாராணிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஒலிப்பதிவுஒத்திகையின்போது மெல்லிசை மன்னர் வெளியேறிவிட்டார். அவருடைய இணை பிரியா நண்பர் ராமமூர்த்தி பாடலைப் பற்றி ஜமுனாராணிக்கு விளக்கம்கொடுத்தார்.இந்தப் பாட்டைஉணர்ச்சிபூர்வமாகஉருக்கமாகப்பாடினால்தான்உனக்குவேறுபாடல்களும் கிடைக்கும் இல்லையென்றால் உன்னை செக்ஸ் பாடகியாகத்தான் வைத்திருப்பார்கள். இது என்னுடைய மானப்பிர‌ச்சினை. நன்றாகப் பாடுஎன கவியர‌சர் ஆலோசனை கூறினார்.ஜமுனாராணி பாடிய பாடலைக் கேட்ட எம்.எஸ். விஸ்வநாதன்திகைத்துவிட்டார்.பாடல்மனதைப்பிசைந்தது.உன்னை தப்பா நினைச்சிட்டோம்மா நன்றாக பாடியிக்கிறாய். ஆனா வார்த்தை இன்னும் சுத்தமாகஇருக்கவேண்டும்எனக்கூறினார்எம்.எஸ்.விஸ்வநாதன்.

மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர். மகாலிங்கம் பாடிய செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பாடலை ஜமுனாராணியும் பாடியிருந்தார்.இர‌ண்டு பாடல்களையும்ர‌சிகர்கள்விரும்பிக்கேட்டார்கள்.யார‌டிநீமோகினி,தடுக்காதேஎன்னைதடுக்காதே,குங்குமப்பூவே,பாட்டொன்றுகேட்டேன்பர‌வசமானேன்,சித்திர‌த்தில்பெண்ணெழுதி,சேதிகேட்டோசேதிகேட்டோபோன்றநூற்றுக்கணக்கானபாடல்கள்ஜமுனாராணியின்புகழைப்பறைசாற்றுகின்றன.இளையராஜாவின்இசையில்ஒரேஒருபாடலைமட்டும்ஜமுனாராணிபாடியுள்ளார்.ஜமுனாராணிஎம்.எஸ்.ராஜேஸ்வரிஇணைந்துநாயகன்படத்துக்காகபாடியநான்சிரிச்சாதீபாவளிஎன்றபாடல்இன்றும்ர‌சிகர்கள்விரும்பும்பாடலாகஉள்ளது.ஜமுனாராணியின்தகப்பனின்பெயர்வரதராஜுலுநாயுடு,தாயார்திரெளபதி,வாய்ப்பாட்டுவீணைஆகியவற்றில்சிறப்புத் தேர்ச்சிபெற்றதாயிடம்இசைபயின்றார் ஜமுனா ராணி.

திரைசைஇசைத்திலகம்கே.வி.மகாதேவன்ஜமுனாராணிக்குஅதிகமானவாய்ப்புக்கொடுத்தார்கே.வி.மகாதேவன்வ‌ருடத்துக்கு30டங்களுக்குஇசைஅமைத்தகாலத்தில்வர்ச்சிப்பாடல்களுக்குஜமுனாராணியைத்தான்கூப்பிடுவார்.இர‌ணடுகதாநாயகிகள்ஒருபடத்தில்இருந்தால்இருவரும்இணைந்துபாடல்கள்ஒலிக்கும்போதுஒருகதாநாயகிக்குசுசீலாவும்இன்னொருகதாநாயகிக்குஜமுனாரணியும்பாடுவார்கள்.அத்தனைபாடல்களும்இன்றும்மனதைவிட்டுஅகலாதவை.ஒருகாலத்தில்ஜமுனாராணிவீட்டில்இருந்ததுகிடையாது.அவரைக்காணவேண்டுமானால்ஏதாவதுஒருஸ்ரூடியோவுக்குத்தான்செல்லவேண்டும்.காலைஒன்பது மணிமுதல்ஒருமணிவரை,பிற்பகல்இர‌ண்டுமணியிலிருந்துஇர‌வுஒன்பது மணிவரை, இர‌வு ஒன்பது மணியில் இருந்து நள்ளிர‌வு இர‌ண்டு மணிவரை மூன்றுஷிப்ட்களில்பாடினார்ஜமுனாராணி.இன்றுபோல்நவீனவசதிகள்அன்று இல்லை. பலமுறை ஒத்திகைபார்த்த பின்னர்தான் ஒலிப்பதிவு செய்வார்கள். ஒருஇடத்தில்பிசகினால்மீண்டும்முதலில்இருந்துஒலிப்பதிவுசெய்யப்படும்.எம்.எஸ்.விஸ்வநாதனும்ராமமூர்த்தியும்பிரிந்தபின்னர்விஸ்வநாதன்மளமளவெனமுன்னுக்குச்சென்றுவிட்டார்.அவர்ஜமுனாராணிக்குசந்தர்ப்பம்கொடுக்கவில்லை. ஜமுனாராணியின் மீது மதிப்பு வைத்தராம மூர்த்திக்கு சந்தர்ப்பம் கிடைக்காததனால்ஜமுனாராணியால்தொடர்ந்துபாடமுடியாதநிலைஏற்பட்டது. ஜமுனாராணிக்கு அதிகளவில்வாய்ப்புக் கொடுத்த கே.வி.மகாதேவனும் சினிமாவில்இருந்துஒதுங்கஆர‌ம்பித்ததுஜமுனாராணிக்குபின்னடைவைக்கொடுத்தது.1975 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை ஜமுனாராணி பாடிய பாடல்கள் எவையும் வெளிவர‌வில்லை.1987ஆம் ஆண்டு நாயகன் படத்தில் இளையராஜாவின்இசையில்நான்சிரித்தால்தீபாவளிஎன்றபாடலைப் பாடினார். ஜமுனா ராணியும் ஜிக்கியும் இணைந்துபாடிய அப்பாடல்மீண்டும் அவர்களின் குர‌லின் மதிப்பை எடுத்துக்காட்டியது.


ரமணி
மித்திரன்


18/03/2007
112,,114


Friday, December 21, 2012

கொந்தளித்த ரசிகர்கள் அமைதி காத்த ரஜினி



தமிழகஅரசுக்குஎதிரானபோராட்டத்தைவெற்றிகரமாகநடத்தியுள்ளது.திராவிடமுன்னேற்றக்கழகம்தமிழகஆட்சியைப்பறிகொடுப்பதற்குமின்தடையும்மிகமுக்கியகாரணம்.திராவிடமுன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின்போது ஆற்காடுவீராசாமிஇதுபற்றிஅப்போதுவெளிப்படையாகப்பேசினார்.மின்வெட்டு,மின்சாரத்த‌டங்கல்காரணமாகஅன்றையதிராவிடமுன்னேற்றக்கழகஅரசுக்குஎதிராகப்பலபோராட்டங்கள்நடந்தன.அண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகமும்தன்பங்குக்கும்போராட்டம்நடத்தியதாகமின்வெட்டு,மின்தடைஆகியவற்றுக்குஎதிரானபோராட்டங்களைஅண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகம்எதிர்நோக்கியுள்ளது.திராவிடமுன்னேற்றக்க‌ழகத்துக்குஎதிராகஅண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகம்ஏவியமின்வெட்டுஎன்றகணைபூமராங்போல்அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்துக்கு எதிராகத் திரும்பியுள்ளது.


மின்வெட்டுக்காரணமாகதமிழகம்மிகநீண்டகாலமாககடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.நாம்ஆட்சிபீடம்ஏறினால்மின்வெட்டுஇல்லாதமிழகத்தைஉருவாக்குவோம்என்றவாக்குறுதியுடனேயேஜெயலலிதாமுதலமைச்ச‌ரானார்.கருணாநிதிஇருந்ததிரையில்ஜெயலலிதாஇருந்துகொண்டுகருணாநிதிசெய்தவற்றையேசெய்துகொண்டிருக்கிறார்.தமிழகமீனவர்கள்கடலில்சுட‌ப்பட்டபோதுக‌ருணாநிதிபிரதமர்மன்மோகனுக்குக்கடிதம்எழுதினார்.கருணாநிதிவிட்டஇடத்திலிருந்துஜெயலலிதாகடிதம்எழுதுகிறார்.தமிழகமின்வெட்டைத்தீர்க்கமுடியாதுகருணாநிதிதிண்டாடினார்.மின்வெட்டைத்தீர்க்கமுடியாதஜெயலலிதா,திராவிடமுன்னேற்றக்கழ‌த்தின்மீதுபழியைப்போடுகிறார்.காவிரிநீர்ப்பிரச்சினையைத்தீர்ப்பதற்குநீதிமன்றத்தைநாடினார்.கருணாநிதி.ஜெயலலிதாவும்இப்போதுஅதற்காக நீதிமன்றப் படியேறியுள்ளார்.

கூடங்குளம்அணுமின்நிலையம்உற்பத்தியைஆரம்பித்தால்தமிழகத்தில்மின்பற்றாக்குறைநீங்கிவிடும்என்றுமத்தியஅரசுகூறுகிறது.கூடங்குளம்அணுமின்நிலையத்தைஎதிர்த்துப்போராடுபவர்களுக்குவுஆதரவுதெரிவித்தஜெயலலிதாஇப்போதுகடும்எதிர்ப்புத்தெரிவிக்கிறார்.தமிழகஅரக்குஎதிராகஏதாவதுபோராட்டம்செய்யவேண்டும்என்றுகாத்திருந்ததிராவிடமுன்னேற்றக்கழகத்துக்குமின்வெட்டுசாதகமாகியது.மின்வெட்டுப்பிரச்சினைøயகையில்எடுத்ததிராவிடமுன்னேற்றக்கழகம்தமிழகஅரசுக்குஎதிராகப்போராட்டம்நடத்திவிட்டுதனதுபங்குமுடிந்தவிட்டதெனக்திருப்திப்பட்டுள்ளது.

கருணாநிதி, அன்பழகன்,ஸ்டாலின்உட்படபல‌தலைவர்களும்தொண்டர்களும் கலந்துகொண்டுதமிழகஅரசுக்குஎதிரானதமதுஉணர்வுகளைவெளிப்படுத்தினர்.வழக்கம்போல்அழகிரிஇந்தப்போராட்டத்திலும்கலந்துகொள்ளவில்லை.அழகிரிலந்துகொள்ளாததைஊடகங்கள்முக்கியத்தும்கொடுத்துவெளியிட்டன.தமிழகஅரசின்பிடியிலிருந்துதன்மகன்தயாநிதியைகாப்பாற்றிவிட்டார் அழகிரி .தமிழகமுதல்வராஜெயலலிதாபதவிஏற்றதும்திராவிடமுன்னேற்றக்கழகத்தலைவர்கள்மீதுஊழல்புகார்சுமத்தப்பட்டது.பலர்கைதுசெய்யப்பட்டனர்.கருணாநிதி,ஸ்டாலின்,அழகிரிஆகியோர்மீதும்பரவலானகுற்றச்சாட்டுச்சுமத்தப்பட்டது. தான் தவறு செய்திருந்தால் தன்னை கைது செய்யும்படி பொலிஸ் சுப்பிரின்டன் அலுவலகத்துக்குச் சென்றுகோரிக்கை விடுத்தார் ஸ்டாலின்.

மதுரையில் நடைபெற்ற கிரனைட் ஊழல்மோச‌டியில் அழகிரியின் மகன் தயாநிதியின்மகனின்நிறுவனமும்சிக்கியது.தயாநிதியைக்கைதுசெய்யபொலிஸார்முயன்றபோதுஅவர்தலைமறைவாகிவிட்டார்.அவரைக்கைதுசெய்வதற்காகப்பலபொலிஸ்படைகள்முயற்சிசெய்தன.தயாநிதியின்முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டது.மனம்தளராதஅழகிரிஉயர்நதிமன்றத்தின்மூலம்கைதுசெய்வதைத்தடைசெய்வதற்கானமுன்பிணைமனுவைப்பெற்றார்.தயாநிதியைக்கைதுசெய்யும்முயற்சியின்தமிழகஅரசுதோல்வியடைந்துவிட்டது.தனதுசெல்வாக்கைமீண்டும்வெளிப்படுத்தினார்அழகிரி.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியதும் அஞ்சா நெஞ்ச‌ன்அழகிரியின்செல்வாக்கு மதுரையில்குறைந்துவிட்டதாகக்கருதப்பட்டது.அண்மையில்திருமணவைவத்தில்பேசியஅழகிரி தனது பலத்தைக் காட்டவேண்டியநேரம்வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.


ரஜினிகாந்தைமீண்டும்ஒருமுறைசீண்டிப்பார்த்துள்ளது.தமிழகஅரசுதனதுபிறந்தநாளன்றுரஜினிசென்னையில்இருப்பதில்லை.ரஜினியும்ஜெயலலிதாவும்ஒரேவீதியில்குடிஇருக்கின்றனர்.ரஜினியைக்காணவரும்ரசிர்கர்களினால்ஜெயலலிதாவுக்கும்சிலதடங்கல்கள்ஏற்பட்டன.பிறந்தநாள்வாழ்த்துக்கூறுவதற்காகரஜினியைத்தேடிரசிகர்கள்அதிகளவுவருவதனால்மற்றவர்களுக்குபெரியஇடையூறுஏற்பட்டது.இவற்றைத்தவிர்ப்பதற்காகவேதனதுபிறந்தநாளன்றுர‌ஜினிசென்னையில்இருப்பதில்லை.ரஜினியின்பிறந்தநாளைவள்ளுவர்கோட்டத்தில்நடத்துவதற்குரசிகர்கள்ஏற்பாடுசெய்தனர்.அனுமதிகொடுப்பதற்குஇழுத்தடிப்புசெய்யப்பட்டது.இதனைஅறிந்தரஜினிதனதுரசிகர்களைச்சந்தித்துபொறுமைகாக்கும்படிபணித்தார்.வள்ளுவர்கோட்டத்தில்ர‌ஜினியின்பிறந்தநாளைகொண்டாடுவதற்குஅனுமதி மறுக்கப்பட்டது.அதன்காரணமாக‌வை.எம்.பி.ஏ. மைதானத்தில் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.சூப்பர் ஸ்டார் என்றபட்டத்துடன்இந்தியாபோற்றும்ஒருநடிகரின்பிறந்தநாள்வைபவத்துக்குவிதிக்கப்பட்டதடைஅவர்மீதானகாழ்ப்புணர்ச்சியைவெளிப்படுத்தியது.தன்பலம்என்னஎன்பதைஎதிரிகளுக்குவெளிக்காட்டவிரும்பினார்ரஜினி.தனதுவீட்டில்ரசிகர்களைச்ச‌ந்திக்கப் போவதாக அறிவித்தார். ரஜினியின் பிறந்த நாளன்று அவரதுவீடுஇருந்தவீதிரசிகர்களினால்திக்குமுக்காடியது.ரசிகர்களைச்ச‌ந்தித்துவாழ்த்துக்களைப்பெற்றுக்கொண்டார்ரஜினி.தமிழகஅரசியல்த்தலைவர்கள் பலர் ரஜினிக்கு வாழ்த்துத்தெரிவித்தனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர்கள் ரஜினியை வாழ்த்தவில்லை.

தமிழகஅரசுக்குஎதிரானதனதுஎதிர்ப்பைவெளிக்காட்டியுள்ளார்ரஜினி.அரசியலுக்குவரும்எண்ணம்இல்லைஎன்றஅவர்கூறினாலும்அரசியல்மாற்றத்துக்காகக்குரல்கொடுக்கவேண்டியநிலைக்குஒருசிலர்அவரைத்தள்ளிவிடுகின்றன.மின்சாரப்பற்றாக்குறைகாரணமாகதனக்குகட்அவுட்மின்அலங்காரம்எதுவும்செய்யவேண்டாம்என்றுஅன்புக்கட்டளையிட்டார்.ரஜினிரசிகர்களுக்குவிடுக்கப்பட்டஅன்புக்கட்டளைஅண்ணாதிராவிடமுன்னேற்றக்க‌ழகத்துக்குவிடுக்கப்பட்டஎச்ச‌ரிக்கைமணியாககும்.அரசியலுக்குவரமாட்டேன்என்றுரஜினிகூறினாலும்அவரதுசெயற்பாடுஅரசியலைநோக்கியதாகவே உள்ளது.

மெட்ரோநியூஸ் 21/12/12





Thursday, December 20, 2012

தடம் மாறிய தமிழ்ப் படங்கள் 45


பெண்பித்தனானகணவனைத்திருத்தும்பெண்ணின்கதைதான்1976ஆம்ஆண்டுவெளியானமன்மதலீலை.இளம்பெண்களையும்திருமணமானபெண்களையும்மயக்கிவசப்படுத்தும்கணவனாககமல்நடித்தார்.கமலைத்திருத்தும்மனைவியாககவர்ச்சிநடனமாடிரசிகர்களைக்கிளுகிளுக்கவைத்தஆலம்நடித்தார்.

பெண்பித்தனாகத்திரியும்கமல்,ஆலத்தைமுறைப்படி திருமணம் செய்கிறார். ஒருவர்மீதுஒருவர்அளவுகடந்தபாசத்தையும்அன்பையும்பொழிகின்றனர்.அழகானமனைவிவீட்டில்இருக்கவேறுபெண்களைக்கண்டதும்மனம்தடுமாறுகிறார்கமல்.அழகானபெண்களின்பின்னால்சென்றுஅவர்களதுபலவீனம்அறிந்துதன்வலையில்வீழ்த்துகிறார்.இளம்பெண்களும் திருமணமான பெண்களும் கமலின்  வலையில் வீழ்ந்து அவரின் காமப் பசிக்கு இரையாகின்றனர்.

கணவனின்காமலீலைகளைஅறிந்தஆலம்அவரைத்திருத்தமுயல்கிறார்.கமலைத்திருத்துவதற்காகஅவரின்கழுத்தில்தாலிகட்டுகிறார்.கழுத்தில்தாலிஇருந்தால்தனதுநினைவுவரும்வேறுபெண்களைத்திரும்பிப்பார்க்கமாட்டார்என்றுநினைக்கிறார்ஆலம்.ஆலம்கட்டியதாலிக்குமதிப்புக்கொடுக்காதுஅதனைக் கழற்றிவைத்துவிட்டுசல்லாபலீலையைத்தொடர்கிறார்கமல்.கமலைத்திருத்தமுடியாதுஎன்பதை அறிந்த ஆலம் விவாகரத்துச் செய்கிறார்.


ஆலம்தன்தாய்வீட்டிற்குச்செல்கிறார்.ஆலம்வீட்டைவிட்டுவெளியேறியதால்கவலைப்படுகிறார்கமல்.அன்றுமுதல்தன்னுடன்வேலைசெய்பவரிடம் தனது மனக்குமுறலைவெளிப்படுத்துகிறார்.நண்பனின்அறிவுரையால்கமல்மனம்மாறுகிறார்.தாய்வீட்டிற்குசென்றஆலம்தனதுதகப்பனும்கம‌லைப் போன்று பெண்பித்தன் என அறிகிறார் தன்தவறை உணர்ந்து இருவரும் மீண்டும் ணைந்து வாழத் தொடங்குகிறார்கள்.

கமல்,ஆலம்,ஜெயப்பிரதா,வை.விஜயா,சுனந்தினி,ஹேமாசௌத்திரி,ஜெயசுதாஆகியோர்நடித்தனர்.இவர்கள் அனைவரும் கமலின்ஆசைக்குஇரையாகும் பாத்திரத்தில்நடித்தனர்.அன்றையகவர்ச்சிநடிகையானஆலம்கதாநாயகியாகநடிக்கஅன்றையபிரபலநாயகிகளானஜெயப்பிரதாஜெயசுதாஆகியோர்சிறியபாத்திரத்தில்நடித்தனர்.மன்மதலீலையில்பெண்க‌ளைமயக்ககமல்புரியும்அங்கசேஷ்டைகள்ரசிகர்க‌ளைப்பெரிதும்கவர்ந்தது.பெண்களைப்பார்த்து"உங்களுக்குத்திருமணமாச்சா"என்றுகமல்கேட்கும்வசனத்தைஅன்றுஉச்சரிக்காதவர்கள் இல்லை.

பாடல்கள்கண்ணதாசன்இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்,கே.ஜே.ஜேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசிலா,வாணிஜெயராம்,எல்.ஆர்.ஈஸ்வரிஆகியோர் பாடியுள்ளனர்.மன்மதலீலைமயக்குதுஆளைமனைவிஅமைவதெல்லாம்இறைவன்கொடுத்தவரம்  நாதமெனும்கோயிலிலே,ஹலோமைடியர்ரோங் நம்பர்ஆகியபாடல்கள்இன்றும்திகட்டாதுஇனிக்கின்றன. கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் கே. பாலச்சந்தர்.

தமிழில்மன்மதலீலைஎன்றபெயர்வெளியாகிரசிகர்களைக்கவர்ந்தஇப்படம்தெலுங்கில்"மன்மதலீலா"ஹிந்தியில்"மீட்டிமீட்டிபேட்டன்"என்றபெயரில்வெளியாகி பிரபல்யமானது.
மித்திரன்
ரமணி 30/12/12


Monday, December 17, 2012

திரைக்குவராதசங்கதி 51



ர‌ஜினியின்வெள்ளிவிழாப்படங்களில்ஒன்று"அண்ணாமலை'.""மலைஅண்ணாமலை''எனர‌ஜினிகூறும்ஸ்டைலேஅலாதியானது.ர‌ஜினிகுஷ்புநடித்தஅப்படம்த‌மிழகத்தில்வெள்ளிவிழாக்கொண்டாடியது."அண்ணாமலை'படப்பாடல்கள்அனைத்தும்பிர‌பலமானவை."ரெக்கைகட்டிப்பறக்குதம்மாஅண்ணாமலைசைக்கிள்''என்றபாடல்தமிழகஅμசியலில்பெரும்தாக்கத்தைஏற்படுத்தியது.காங்கிர‌ஸ்கட்சியில்இருந்துவெளியேறியமூத்ததலைவவ‌ரானமூப்பனார்புதியகட்சிஒன்றைஆர‌ம்பித்தார்.அண்ணாமலையின்சைக்கிள்அப்போதுபிர‌பலமாகஇருந்ததால்தனதுதேர்தல்சின்னமாகசைக்கிளயேதேர்ந்தெடுத்தார்.தேர்தல்காலத்தில்அக்கட்சியின்வேட்பாளர்களும்தொண்டர்களும்"அண்ணாலை'படத்தில்உள்ள""ரெக்கைகட்டி'பறக்குதம்மாஅண்ணாமலைசைக்கிள்''என்றபாடலைஒலிபர‌ப்பித‌மது சைக்கிள் சின்னத்தை பிர‌பல்யப்படுத்தினர்

."குதாகர்கர்ஸ்'என்றஹிந்திப்படத்தின்தழுவல்தான்"அண்ணாமலை'."அண்ணாமலை'படத்தைவசந்த்இயக்குவார்எனமுதலில்அறிவிக்கப்பட்டது.பின்னர்அந்தவாய்ப்புசுரேஷ்கிருஷ்ணாவுக்குகிடைத்தது."அண்ணாமலை'யின்பிர‌மாண்டமானவெற்றிசுரேஷ்கிருஷ்ணாவைஉயர்ந்தஇடத்தில்இருத்தியது.""சினிமாவில்நடி,வாழ்க்கையில்நடிக்காதே''இதுகுருநாதர்பாலசந்தர்ர‌ஜினிக்குகூறியஅறிவுரை.அந்தஅறிவுரையின்படிதான்பொதுநிகழ்ச்சிகளில்நரைத்தமுடியுடனும்,தாடியுடனும்வருகிறார்.நாய்களின்மீதுர‌ஜினிமிகுந்தஅன்புவைத்திருக்கிறார்.போயஸ்தோட்டத்தில்உள்ளநாயின்பெயர்நந்தகோடம்பக்கத்தில்உள்ளநாயின்பெயர்கண்ணார‌ஜினியைச்சந்திக்கயார்சென்றாலும்எழுந்துநின்றுகைகுலுக்குவார்.அவர்கள்புறப்படும்போதுஎழுந்துநின்றுகைகொடுப்பார்.கலைஞரின்வசனத்தைபேசிடிக்கவேண்டும்என்பதுரஜினியின்நீண்டகாலஆசை..போலியோபற்றியஇர‌ண்டுநிமிடகுறும்படத்தல்ர‌ஜினிநடித்துள்ளார்.அதுபெரும்வர‌வேற்பைப்பெற்றதால்க‌ண்தானம்பற்றியபடத்திலும்நடித்தார்.ரஜினிதனதுகுடும்பத்தினருடன்கண்தானம்செய்ய பதிவு செய்துள்ளார்.


ஏ.வி.எம். தயாரித்த பிர‌மாண்டமானபடங்களில் "சகலகலா வல்லவனும்' ஒன்று.அது வெள்ளி விழா கொண்டாடிய படம்.கமல் சண்டை செய்யும் போது சுவரிலேஎம்.ஜி.ஆரின்போஸ்டர்ஒன்றுஇருக்கும்.எம்.ஜி.ஆரின்படத்தைக்கண்டதும்ர‌சிகர்கள்உற்சாகமிகுதியில்விசில்அடித்துஆர்ப்பாட்டம்செய்வார்கள்.ஏ.வி.எம்.தயாரித்த"பாயும்புலி'படத்தில்ஒருசண்டைக்காட்சியின்போதும்"சகலகலா வல்லவன்' போன்று சுவரில்எம்.ஜி.ஆரின்படம்ஒட்டப்பட்டிருந்தது. ப‌டப்பிடிப்புக்குமுன்புஎம்.ஜி.ஆரின்படத்தைப்பார்த்தர‌ஜினிஅதனைஅகற்றவேண்டும்என்றுகூறினார்.""என்படத்துக்குவருபவர்என்னைப்பார்க்க மட்டுமே வμவேண்டும்.எம்.ஜி.ஆர்.என்றபெரியமனிதரின்மூலம்பிர‌பல்யம்பெறநான்விரும்பவில்லை'' என்றார்ர‌ஜினி.ர‌ஜினியின் விருப்பத்தையடுத்து எம்.ஜி.ஆரின் போஸ்ர‌ர் அகற்றப்பட்டது

ர‌ஜினிகாந்த்25ஆவதுபடம்நடிக்கும்போதேதனது100ஆவதுபடமாகஸ்ரீராகவேந்திரரின் கதை வெளியாக வேண்டும் என்றுநினைத்தார். அவர் நினைத்தது போன்றே100ஆவது படமாக ஸ்ரீ"ராகவேந்திரா' வெளியானது. படம் படுத்துவிட்டதுர‌ஜினிக்குஆத்திர‌மும் ஏமாற்றமும் ஒருங்கே ஏற்பட்டன.உனது கதையைவியாபார‌த்துக்காகஎடுக்கவில்லை.மக்கள்மத்தியில்உன்னைப்பற்றித் தெரிய வேண்டும் என்பதற்காகவேஉன் கதையை படமாக்கினேன். உனது கதைøய நீயே தோல்வியடையச் செய்துவிட்டாய் என்று கோபப்பட்டு சுமார் 15 நாட்கள்ஸ்ரீ"ராகவேந்திரரைக்கும்பிடாதுஇருந்தார்.ஸ்ரீராகவேந்திர‌ரின்பாத்திர‌த்தில்கன்னடசூப்பர்ஸ்டார்ராஜ்குமார்நடித்திருந்தார்.அப்படமும்வெற்றிபெறவில்லை. ஒருநாள்ர‌ஜினிøய சந்தித்தராஜ்குமார் ஸ்ரீராவேந்திர‌ர்பற்றி கதைத்து விட்டுஎன்படமும்இப்படித்தான்சரியாகஓடவில்லை.பின்னர்திரையிட்டபோதெல்லாம்நன்றாகஓடியதுஎன்றார்.ர‌ஜினிநடித்தஸ்ரீராகவேந்திரா'படத்தைப்பார்த்துபாராட்டினார்.ராஜ்குமார்கூறியதுபோன்றேஸ்ரீராகவேந்திராமுதலில்நன்றாக ஓடவில்லை. என்றாலும்பின்னர் திரையிடப்பட்டபோது பெரு வர‌வேற்பைப் பெற்றது
ரமணி
மித்திரன்  11/03/2007
111


Saturday, December 15, 2012

இடம் மாறிய நாஞ்சில் சம்பத் கவலைப்படாத வைகோ


திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து வைகோ வெளியேறிய போது அவரின் பின்னால் சென்றவர்களில் மிக முக்கியமானவர் நாஞ்சில் சம்பத் .மிகச் சிறந்த பேச்சாளரான இவர் வைகோவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவர் வைகோவின் மீதும் கட்சியின் மீதும் ஏற்பட்ட வெறுப்பினால் ஜெயலலிதாவிடம் சரணடைந்துள்ளார்.

வைகோவுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது. கட்சியை விட்டு நாஞ்சில் சம்பத் வெளியேறப்போகிறார் என்ற செய்தி கசியத் தொடங்கிய உடனே கட்சியை விட்டு வெளியேற மாட்டேன். கட்சியை விட்டு என்னை வெளியேற்ற முடியாது என்று சவால் விட்டார் நாஞ்சில் சம்பத் நாஞ்சில் சம்பத்தின் சவாலுக்கு வெளிப்படையாக‌ப் பதிலளிக்காத வைகோ கட்சிப்பத்திரிகையில் மெல்லிதாகக் குட்டுக்கொடுத்தார்.

மிகச்சிறந்தமேடை பேச்சாளர்களில் நாஞ்சில் சம்பத்தும் ஒருவர். அவருடைய காரசாரமான நக்கல் பேச்சைக் கேட்பதற்கென்றே கூட்டம் சேருவதுண்டு. எதிரணி அரசியல் வாதிகளை அவர் தரக்குறைவாகத் தாக்கிப் பேசும் போது வைகோ கடிவாளம் போடுவதுண்டு. பெண்களைப்பற்றி இழிவாகப்பேசினால் நாஞ்சில் சம்பத்தைக் கூப்பிட்டு அறிவுரை கூறுவார்.

திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து வெளியேறி வைகோவுடன் 19 வருடங்கள் அரசியல் பயணம் செய்த நாஞ்சில் சம்பத் நாடாளுமன்றத்துக்கோ சட்ட சபைக்கோ செல்ல ஆசைப்படவில்லை. அவர் ஆசைப்பட்டுக் கேட்டிருந்தால் வைகோ மறுக்காது சந்தர்ப்பம் வழங்கி இருப்பார். அண்ணாத்திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த உடனேயே உதவி கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாஞ்சி விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக வைகோ  சாஞ்சி க்குச் சென்றார். கழகத் தொண்டர்களும் பிரமுகர்களும் வைகோவுடன் சென்று  நடுவீதியில் மறியல் போராட்டம் செய்தனர். அந்தப்போராட்டத்துக்கு நாஞ்சில் சம்பத் செல்லவில்லை. அப்பொழுதே இருவருக்கும் இடைவெளி அதிகரித்தது.

பொதுக்கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் வைகோ இறுதியாகப் பேசும் வேளை அனைவரும் காத்திருப்பார்கள். ஆனால் நாஞ்சில் சம்பத் இடையில் வெளியேறி விடுவார். இது பற்றி வைகோவும் நாசூக்காக எடுத்துச் சொல்லியிருந்தார். நாஞ்சில் சம்பத் அதனைக் கணக்கில் எடுக்கவில்லை.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறியதனால் கழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்றிருந்தால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த மிகச் சிறந்த மேடை பேச்சாளர் அண்ணா திராவிட முன்னேற்றக்    கழகத்துக்கு தாவியுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் கவர்ச்சிகரமான பேச்சாளர் இல்லாத குறையை நாஞ்சில் சம்பத் தீர்த்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த உடனேயே நாஞ்சில் சம்பத்துக்குப் பொறுப்பான பதவி வழங்கப்பட்டுள்ளது. கழகத்தில் உள்ள மூத்த தலைவர்கள் இதனை விரும்பவில்லை. வெளிப்படையாக எதிர்ப்புக்காட்ட முடியாது மனதுக்குள் கொதித்துப் போயுள்ளனர். ஜெயலலிதாவுக்கு எதிராக விமர்சனம் செய்ய முடியாததனால் அனைவரும் மௌன யுத்தம் செய்கின்றனர். 

அண்ணாத்திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர்கள் கூட ஜெயலலிதாவை திடீரெனச் சந்திக்க முடியாது நாஞ்சில் சம்பத் ஜெயலலிதாவைச் சந்தித்து கட்சி உறுப்பினராகி பொறுப்பான பதவி ஒன்றைப் பெற்றதை நினைத்து அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களே ஆச்சரியப்படுகின்றனர். 

அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தில் நாஞ்சில் சம்பத் இணைந்ததனால் அக்கட்சியின்  வாக்குவங்கி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு எதுவும் இல்லை வைகோவின் கட்சியில் இருந்த பிரபலமான பேச்சாளர் ஒருவரை என் கட்சியில் இணைந்து விட்டேன் என்ற பெருமையுடன் ஜெயலலிதா திருப்திப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. 

இந்திய ஜனாதிபதியின் தமிழக விஜயத்தினால் ஜெயலலிதாவும் கருணாநிதியும் கடுப்பில் உள்ளனர். தமிழக சட்ட சபையின் வைர விழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்துக்குச் சென்ற ஜனாதிபதி பிரணரப் முகர்ஜி விமான நிலையத்திலிருந்து நேராக கருணாநிதியைச் சென்று சந்தித்தார். தமிழக சட்ட சபை வைர விழாவில் கருணாநிதியின் விருப்பதை மீறியே பிரணாப் முகர்ஜி தமிழக சட்ட சபை வைர விழாவில் கலந்து கொண்டார். 

ஜெயலலிதாவின் விருப்பத்துக்காக தமிழக சட்டசபை வைர விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கருணாநிதியைத் திருப்திப்படுத்துவவதற்காக‌ விமான நிலையத்தில் இருந்து நேரே கருணாநிதியைச் சந்திக்கச் சென்றார். தமிழக சட்ட சபையின் வைர விழாவைப் பகிஷ்கரித்த கருணாநிதியின் வீட்டிற்கு முகர்ஜி சென்றதை ஜெயலலிதா வால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை‌ தனது  அழைப்பை ஏற்றுத் தமிழகத்துக்கு வந்த ஜனாதிபதி முகர்ஜி தனது எதிரியான கருணாநிதியைச் சந்தித்ததை ஜெயலலிதா விரும்பவில்லை. இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை ஆதரித்தவர். 

கருணாநிதி .முகர்ஜிக்கு எதிராக சுஷ்மாவை வேட்பாளராக்கி எதிர்கட்சிகளை திக்கு முக்காட செய்தவர் ஜெயலலிதா. சட்ட சபை வைர விழாவில்  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டதனால் காங்கிரஸுடன் நெருங்கிச்செல்வதாக‌ ஜெயலலிதா வெளிக்காட்டினார். ஆனால் காங்கிரஸ் கட்சி கருணாநிதிக்கு ஆதரவாக இருப்பதை முகர்ஜி வெளிபடுத்தினார். 

தமிழக சட்ட சபையில் உரையாற்றிய ஆளுநர் ரோசய்யா  தனது பெயரைக் குறிப்பிடாததனால் கருணாநிதி கடும் கோபத்தில் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தமிழக ஆளுநருக்கும் இடையேயான பனிப்போர் இதனால் சந்திக்கு வந்துள்ளது. தமிழகத் தில் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்தாலும் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனது அதிகாரத்தைப் பயன்படுத் த‌ வேண்டும். அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் அத்துமீறல் சிலவற்றுக்கு ஆளுநர் துணை போகிறார் என்று கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மீது பாரிய குற்றச்சாட்டுகளை சுமத்திய தமிழக அரசு அவர்களை கைதுச்செய்து சிறையில் அடைத்தது இதற்கு எதிராக திராவிடமுன்னேற்றக்கழகம்போராட்டம் நடத்தியது. தமிழக அரசின் அராஜகத்தை எதிர்த்தது. ஆளுநர் ரோசய்யாவிடம் திராவிட முன்னேற்றக்கழகம்மனு கையளித்தது.அந்த மனுமீது ஆளுநர் ரோசய்யா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும் ஆளுநரிடம் புகார் செய்தது திராவிட முன்னேற்றக்கழகம் அதனையும் ஆளுநர் பொருட்படுத்தவில்லை. சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர் கருணாநிதியின் பெயரை குறிப்பிடாததை மிகப்பெரிய தவறாக திராவிட முன்னேற்றக்கழகம் கருதுகிறது. 

அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்திற் துக்கெதிரான‌ குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்காததனால் அவரை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை திராவிட முன்னேற்றக்கழகத்தினால் முன்வைக்கப்படலாம் தமிழக ஆளுநருக்கு எதிராகக் காய் நகர்த்த ஆரம்பித்து விட்டது திராவிட முன்னேற்றக்கழகம்
    
மெட்ரோநியூஸ் 14/12/12