Friday, August 14, 2026

376,000 மக்களைக் கவர்ந்த கூடைப்பந்தாட்டம்


   கூடைப்பந்தாட்டத்தின் உலகளாவிய நிர்வாக அமைப்பான FIBA, புதன்கிழமை வெளியிடப்பட்ட 'பாஸ்கட்பால் ஃபார் குட் இம்பாக்ட் ரிப்போர்ட் 2025' அறிக்கையின்படி, அதன் 'பாஸ்கட்பால் ஃபார் குட்' முன்னெடுப்புகள் 2025-ல் 127 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 376,000-க்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடைந்ததாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச இளைஞர் தினத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, FIBA அறக்கட்டளை 830-க்கும் மேற்பட்ட 'பாஸ்கட்பால் ஃபார் குட்' மாற்றத்தை உருவாக்குபவர்களுக்கு வலுவூட்டியதாகவும், 608 சமூகத் திட்டங்களுக்கு ஆதரவளித்ததாகவும் கூறியது. இந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற அனைத்து FIBA கண்ட அளவிலான போட்டிகளுடன் இந்தத் திட்டச் செயல்பாடுகளும் நடத்தப்பட்டன.

அறக்கட்டளையின் 'ஒரு திட்டத்தை முன்மொழியுங்கள்'   தளத்திற்கு 58 நாடுகளில் இருந்தும்,  பிராந்தியங்களிலிருந்தும் மொத்தமாக  73 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அதே நேரத்தில் 2025 உலக கூடைப்பந்து தினத்தைக் கொண்டாடும் விதமாக 33 நாடுகள்,பிராந்தியங்களில் 43 'நன்மைக்கான கூடைப்பந்து' (Basketball For Good) விழாக்கள் நடத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியது.

சமூக மேம்பாட்டிற்கான ஒரு கருவியாக கூடைப்பந்தைப் பயன்படுத்துவதற்காக, FIBA அறக்கட்டளை 2016-ல் 'நன்மைக்கான கூடைப்பந்து' திட்டத்தைத் தொடங்கியது. இதன் திட்டங்கள், உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் விளையாட்டின் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல், கல்வி கற்பித்தல் மற்றும் ஊக்கமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

  

No comments: