Wednesday, November 30, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 13




குடும்பத்தை வழிநடத்தவேண்டிய அண்ணன், தம்பியின் மனைவியைச் சீரழிக்க முயற்சி செய்யும் ஒருவரிக்கதை தான் வாலி. கூட்டுக் குடும்பம் பண்பாடு கலாசாரம் என்ற கட்டுக் கோப்பிலிருந்து வெளியேறும் ஒரு காமுகனைப் பற்றிய கதையை தடம் மாறாமல் முடிந்திருக்கிறார் எஸ்.ஜேசூர்யா.
ஒரே உருவம் கொண்ட இரட்டைப் பிறவியான அண்ணன் வாய்பேச‌ முடியாதவன். தம்பி உல்லா ச‌மான பேர்வழி. அழகான ஒரு பெண்ணைக் கண்டு மையல் கொள்கிறான் அண்ணன். அவளை யே மனைவியாக்க வேண்டும் என்று தேடி அலைந்து தோல்வி அடைகிறான் அண்ணன். தான் ஒரு தலையாகக் காதலித்த பெண் தம்பியின் மனைவியானதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். தம்பியின் மனைவி என்றாலும் பரவாயில்லை அவளை அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறான்.
தம்பியின் முதலிரவு ஏற்பாடு தடல்புடலாக நடக்க ஆத்திரம் மேலிடத் துடிக்கிறான் அண்ணன். கனகச்சிதமாகத் திட்டமிட்டு முதலிரவைத் தடை செய்கிறான். உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி தம்பியின் மனைவியைக் குழப்புகிறான். அண்ணன் யார் தம்பி யார் என்று தெரியாது குழம்புகிறாள் தம்பியின் மனைவி. அண்ணனின் ச‌தியை அறிந்த தம்பியும் மனைவியும் அதிர்ச்சியடைகின்றனர். அண்ணனைத் திருத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிகிறது. இறுதியில் அண்ணன் சுட்டுக் கொல்ல‌ப்படுகிறான்.
வாய்பேச‌ முடியாத அண்ணனாகவும் தம்பியாகவும் இரட்டை வேடத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார் அஜித். நாயகன் அஜித்தையும் வில்லன் அஜித்தையும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். அஜித்தின் திரையுலக வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்திய படம் வாலி. அண்ணன் அஜித், தம்பி அஜித் ஆகிய இருவருக்கும் இணையாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்றவர் நாயகி சிம்ரன்.
1999 ஆம் ஆண்டு வாலி படத்தின் மூலம் மிகச் சிறந்த ஒரு நடிகையான ஜோதிகா அறிமுகமானார். வாலி படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் அவர் தலையைக் காட்டினாலும் பின்னர் தவிர்க்க முடியாத நடிகையாக பரிணமித்தார். விவேக், லிவிங்ஸ்டன், இந்து, அஜித் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தரமான படங்களையும் வில்லங்கமான படங்களையும் தந்த எஸ்.ஜே.சூர்யா திரைகதை எழுதி இயக்கினார். ஆபாச‌ம், விரச‌ம் எதுவும் அதிகமாக இல்லாது சிறந்த முறையில் உருவாக்கினார் எஸ்.ஜே.சூர்யா.
நிலவைக் கொண்டு வா, சோனா ஓ சோனா, ஏப்ரல் மாதத்தில், வானில் காயுதே வெண்ணிலா ஆகிய பாடல்கள் தேனிசை தென்றல் தேவாவின் இசையில் மனதைக் கவ‌ர்ந்தன. நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வாலி திரைப்படம் வசூலில் புதியசாதனை செய்தது.


ரமணி

மித்திரன்27/11/11

Tuesday, November 29, 2011

ஜெயலலிதாவின் அதிரடியால்திண்டாடும் தமிழகம்

பஸ் கட்டணத்தையும் பால் விலையையும் தமிழக அரசு தாறுமாறாக உயர்த்தியதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கருணாநிதி மீது நம்பிக்கை இழந்த மக்கள் ஜெயலலிதா மீது அதிக நம்பிக்கை வைத்து முதலமைச்சர் என்ற அரியாசனத்தில் அவரை அமர்த்தினார்கள். கருணாநிதி செய்த தவறினால் தான் ஆட்சி அதிகாரத்தை இழந்தார் என்பதை உணர்ந்த ஜெயலலிதா தரமான ஆட்சியைத் தருவார் என்றே எதிர்பார்ப்பு மேலோங்கியது.
குடும்ப ஆட்சியிலிருந்து மீண்ட தமிழகம் குழப்ப ஆட்சியில் சிக்கியுள்ளது. ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனேயே கூட்டணிக் கட்சிகளை அவமானப்படுத்தத் தொடங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அவமான நடவடிக்கைகளைத் தாங்கிக் கொண்டு இடதுசாரிகளும், சரத்குமாரும் ஒட்டிக் கொண்டுள்ளனர். அவமானத்தைக் கண்டுபொறுக்க முடியாத விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கத் தொடங்கி விட்டார். கூட்டணிக் கட்சிகளைப் படுகுழியில் தள்ளிய ஜெயலலிதா பொதுமக்கள் மீது பெருஞ்சுமையைத் தூக்கி வைத்துள்ளார்.
எரிபொருள், சமையல் எரிவாயு போன்றவற்றை மத்திய அரசு உயர்த்தும்போது கண்டன அறிக்கை போராட்டம் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் ஜெயலலிதா நகர பஸ் கட்டணத்தை 50 சதவீதமாகவும் புறநகர் பஸ் கட்டணத்தை 60 சதவீதமாகவும் பால் விலையை 25 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளõர். இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளார் ஜெயலலிதா. தமிழக அரசின் கடன் சுமையை நீக்குவதற்கு ஒரு இலட்சம் கோடி கடனாகத் தருமாறு பிரதமர் மன்மோகனைச் சந்தித்தபோது ஜெயலலிதா கோரிக்கை விடுத்தõர். அந்தக் கோரிக்கைக்கான பதிலை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. ஆகையினால் விலையைக் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டதனால் கீழ்மட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை அதிகரிப்பினால் தமிழக அரசின் மீது மக்கள் சீற்றம் கொள்ளக் கூடாது என்பதில் ஜெயலலிதா அவதானமாக செயற்பட்டுள்ளார். விலை அதிகரிப்புக்கும் தமிழக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. மத்திய அரசு கை விரித்ததனால் தான் விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொலைக்காட்சியில் தோன்றி விளக்கமளித்துள்ளார் ஜெயலலிதா. விலை உயர்வுக்கு தமிழக அரசு மீது மக்கள் கோபம் கொள்ளாது மத்திய அரசின் மீது எதிர்ப்புக் காட்ட வேண்டும் என்றே தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறார். இந்த அணுகு முறை அவருக்கு எதிராகவே மாறும் நிலை உள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை உயர்ந்துள்ளது. மின் கட்டணமும் விரைவில் உயரும் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக ஆட்சி மாற்றத்துக்குஇவைகாரணமாக அமையலாம்.தமது ஆட்சி பறிபோகும் என்றுமின் வாரியத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் அன்றே திருவாய் மலர்ந்தருளினார்.
பொருட்களின் விலையை உயர்த்தாது ஆட்சி நடத்த முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை. விலை அதிகரிக்கப்படும் போது பொதுமக்களைப் பாதிக்காது அதிகரிக்கப்பட வேண்டும். தமிழக அரசின் விலை அதிகரிப்பு மக்களின் தலையில் பாரிய சுமைகளை ஏற்றியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் போது ஒரே தடவையில் இவ்வளவு அதிகமாக விலை உயர்த்தப்படவில்லை எனது ஆட்சிக் காலத்தின் போது பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று பெருமையாக அறிக்கை விட்டுள்ளார் கருணாநிதி. பஸ் கட்டணத்தை நேரடியாக உயர்த்தாது மறைமுகமாக உயர்த்தியதாக கருணாநிதி மீது குற்றம் சாட்டப்படுகிறது. மறைமுக விலை உயர்வு மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை.
திரõவிட முன்னேற்றக் கழகம் விட்ட தவறுகள் காரணமாக தமிழக ஆட்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது. தமிழக ஆட்சி அதிகாரத்துடன் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி கிடைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டரை வருடங்கள் உள்ளது. ஆகையினால் இந்த விலை அதிகரிப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தவிதமான பாதகங்களையும் ஏற்படுத்தப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் விலை அதிகரிப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள ஜெயலலிதா தயவு தாட்சண்யமின்றி பஸ் கட்டணத்தையும் பால் விலையையும் அதிகரித்துள்ளார்.
பஸ் கட்டணம், பால் விலை உயர்வு என்பனவற்றின் விலை அதிகரிப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் தயாராகின்றன. எதிர்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தமிழக அரசுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆளும் கட்சியை அனுசரித்து அரசியல் நடத்தி வந்த விஜயகாந்த், ஆளும் கட்சியைத் தாக்கத் தொடங்கி விட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த விஜயகாந்த் இப்போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா தன்னை அவமதித்ததனால் ஜெயலலிதாவின் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளார் விஜயகாந்த். ஆளும் கட்சியை அனுசரித்துப் போவதைக் கைவிட்டு உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படப் போவதாக உணர்த்தியுள்ளார்.
சட்ட சபை இடமாற்றம், சமச்சீர் கல்வி, ஊழியர்கள் வேலை நிறுத்தம் போன்றவற்றினால் கடும் விமர்சனத்துக்குள்ளான தமிழக அரசு பஸ் கட்டணம், பால் விலை அதிகரிப்பினால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளதை ஆட்சி பீடம் ஏறி ஆறு மாதங்களுக்கிடையில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தைநீதிமன்றத்தி நாடவேண்டியநிலை மக்களுக்கு ஏற்பட்டது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதும், மக்களின் உயர்வுக்குப் பாடுபடுவதும் அரசாங்கத்தின் கடமை என்பதை ஜெயலலிதா உணரத் தவறிவிட்டார். ஆட்சி பீடம் ஏறியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பழிவாங்க ஆரம்பித்தார். இப்போது பொது மக்களின் தலையில் கை வைக்கத் தொடங்கி விட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆட்சியின் போது ஏற்பட்ட கடன் சுமையைச் சமாளிக்கவே பஸ் கட்டண, பால் விலை உயர்த்தப்பட்டது என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
வர்மா


சூரன்.ஏ.ரவிவர்மா



வீரகேசரிவாவாரவெளியீடு27/11/11

Sunday, November 27, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 12


மன்னர்களும் செல்வந்தர்களும் தாசியிடம் செல்வது அந்தக் காலத்தில் வழமையானது. ஒரு சில தாசிகள் மன்னர்களையும் செல்வந்தர்களையும் மட்டும் அனுமதிப்பார்கள். மற்றவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். அபாஞ்சி சற்று வித்தியாசமானவள். வசீகரிக்கும் அழகும், மயக்கும் சிரிப்பும் கொண்ட தாசி அபாஞ்சியை யாருமே நேரடியாகப் பார்க்கக் கூடாது. அவளது சிரிப்பையோ பேச்சையோ யாரும் கேட்கக் கூடாது. அவளைப் பார்த்தால் சிரிப்பை@யா, பேச்சு ஒலியை@யா கேட்டாலும் அபராதம் கட்ட வேண்டும். அபராதம் கட்ட வசதி இல்லையென்றால் தாசி அபரஞ்சியின் வீட்டில் அடிமைபோல் வேலை செய்ய வேண்டும். தாசி அபரஞ்சியைக் கனவில் கூடக் காணக் கூடாது. கனவு கண்டாலும் அபராதம்தான். தாசி அபரஞ்சியைப் பற்றி படிக்கும் இவ்வேளையில் சின்னத்தம்பி குஷ்பு ஞாபகம்வந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
விக்கிரமாதித்தன் காலத்தில் வாழ்ந்த தாசி அபராஞ்சியின் ஆட்சி மன்னன் ஆட்சியை விட ஒருபடி மேலே இருந்தது. அபரஞ்சியின் அனுமதி இன்றி அவளைப் பற்றி நினைத்தால் கனவு கண்டால் ஆயிரம் பொன் அபராதம் கட்ட வேண்டும். ஆகையினால் தாசி அபரஞ்சியைப் பற்றி கதைக்கப் பயந்தனர். தாசி அபரஞ்சி மீது மோகம் கொண்ட கோயில் குருக்கள் ஒருவர் அவளை அடைவதற்காக வசியப் பொடி தயாரித்து அபரஞ்சி வீட்டில் வேலை செய்யும் சிங்காசியிடம் கோயில் பிரசாதம் பொங்கலில் கலந்து கொடுக்கிறார். வசியப் பொடியை சாப்பிட்டதும் தாசி அபரஞ்சி தன்னைத் தேடி வருவாள் என்று குருக்கள் எதிர்பார்த்தார்.
வேலைக்காரியான சிங்காரி கோவில் பிரசாதத்தை அபரஞ்சிக்குக் கொடுக்கவில்லை. பிரசாதத்தைச் சாப்பிட்ட சிங்காரியும் மிகுதியைச் சாப்பிட்ட ஆடும் கோவில் குருக்களைச் சுற்றத் தொடங்கின. தனது திட்டம் நிறைவேறாததனால் கோவில் குளத்தங்கரையில் படுத்த தாசி அபரஞ்சியைக் கனவு காண்கிறாள். குருக்களின் படி மீது தாசி அபரஞ்சி படுத்திருக்க தன்னை மறந்த நிலையில் அபரஞ்சி அபரஞ்சி எனப் புலம்புகிறார். குருக்கள்அபரஞ்சியின் அடியாட்கள் குருக்களைப் பிடித்துச் சென்று அபரஞ்சியின் முன் நிறுத்துகின்றனர். அபராதம் செலுத்த வசதி அற்ற ஏழைக் குருக்கள் தாசியின் வீட்டு வேலைக்காரனாகிறார்.
தாசி அபரஞ்சி வீட்டில் கிளி வடிவில் இருக்கும் விக்கிரமாதித்தன் தனது கூடு விட்டு கூடு பாயும் திறமையால் மீண்டும் விக்கிரமாதித்தனாக மாறி தாசி அபரஞ்சியைத் தண்டிக்கிறாள். சொத்துக்களை இழந்த தாசி அபரஞ்சி ஆலயத்தில் தஞ்சமடைகிறாள்.
ஜெமினி நிறுவனம் தயாரித்து 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தாசி அபரஞ்சி வசூலில் புதிய சாதனை படைத்தது. தாசியைப் பற்றிய கதை என்பதனால் கவர்ச்சிக் காட்சிகள் தாராளமாக புகுத்தப்பட்டன. மறு தணிக்கை செய்யப்பட்டே இப் படம் வெளியானது. தாசி அபரஞ்சியாக பிரபல தெலுங்கு நடிகையான புஷ்பவல்லி தமிழுக்கு அறிமுகமானார். சம்பூர்ண ராமாயணம் தெலுங்குப் படத்தின் சின்ன வயது சீதையாக அறிமுகமாகி பிரபல்யமான புஷ்பவல்லியை மாதச் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்தது ஜெமினி நிறுவனம். காதல் மன்னனின் வலையில் விழுந்த புஷ்பவள்ளி ஜெமினி கணேசனின் மனைவியானார். இவரது மகள் ரேகா பிரபல ஹிந்தி நடிகை. தாசி அபராஞ்சி படத்தில் நடித்த புஷ்பல்லியின் பிரமாண்டமான கட் அவுட் அனைவரையும் கவர்ந்தது. எங்கே நின்று பார்த்தாலும் புஷ்பவல்லியின் கண்கள் தன்னையே பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
விக்கிரமாதித்தனாக எம்.கே. ராதாவும் கோவில் குருக்களாக கொத்தமங்கலம் சுப்புவும் வேலைக்காரியாக எஸ்.எஸ். சுந்தரபாயும் நடித்தனர். என்.எஸ். கிருஷ்ணன், ரி.ஏ. மதுரம் காளி என். இரத்தினம் சி.டி. ராஜகாந்தம், கே. சாரங்கபாணி ஆகியோர் நடித்தனர். கொத்தமங்கலம் சுப்பு, சுந்தரி பாய் ஜோடியின் நகைச்சுவை இப்படத்தின் மூலம் பிரபலமாகியது.
ஒலிப்பதிவு பி.எஸ். ரங்கா. இசை எம்.டி. பார்த்த சாரதி எஸ். ராஜேஸ்வரராவ் கதை வசனம், பாடல்கள் கொத்தமங்கலம் சுப்பு, டைரக்ஷன் பி.என். ராவ்.

ரமணி
மித்திரன்20/11/11

Tuesday, November 22, 2011

அ.தி.மு.க. விசுவாசிக்குபதவி கொடுத்த சோனியா

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக ராஜ்ய சபா எம்.பி. யான பி.எஸ். தேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியின் பின் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து தங்கபாலு ராஜினாமாச் செய்தார். தங்கபாலு ராஜினாமாச் செய்ததும் உடனடியாகப் புதிய தலைவரைத் தெரிவு செய்யாது இழுத்தடித்து வந்த காங்கிரஸ் தலைமை மிக ஆறுதலாகப் புதிய தலைவரின் பெயரை அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒருவர் நியமனம் பெற்றால் அல்லது தேர்தலில் போட்டியிட அனுமதியளிக்கப்பட்டால் அவர் யாருடைய ஆள் என்று தான் பார்ப்பார்களே தவிர காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு பதவி கிடைத்துள்ளது என்று சந்தோசப்படமாட்டார்கள். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக பி.எஸ். ஞானதேசிகன் நியமிக்கப்பட்டதனால் ஜி.கே. வாசனின் கோஷ்டி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு ராஜினாமாச் செய்ததும் அப்பதவியைக் கைப்பற்றப் பலர் முயற்சித்தனர். தமிழக காங்கிரஸைப் பற்றி மிக நன்றாக அறிந்து வைத்துள்ள மேலிடம் புதிய தலைவரை நியமிக்க அவசரப்படவில்லை.
தமிழர் காங்கிரஸுக்கு உயிரூட்ட ராகுல்காந்தி எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்ததனால் அவசரப்பட்டு புதியதொரு பிரச்சினையை உருவாக்க தலைமைப்பீடம் விரும்பவில்லை. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைவதற்கு தங்க பாலுதான் முக்கிய காரணம் என தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கருணாநிதிக்கு நெருக்கமான தங்கபாலுவுக்குப் பதிலாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஞானதேசிகன் நியமிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நகர்வைக் கோடி காட்டியுள்ளது.
ஸ்பெக்ரம் ஊழல் காரணமாக காங்கிரஸ் கட்சியை விட்டுத் தூரப் போகிறார் கருணாநிதி. அடுத்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர கருணாநிதி விரும்பமாட்டார். ஸ்பெக்ரம் விவகாரத்தில் கனிமொழி சிக்கியதிலிருந்து கட்சியின் செயற்பாடுகளை விட குடும்பத்தின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் கருணாநிதி. தானும் மகன் ஸ்டாலினும் எதிர்க்கட்சிகளால் பழிவாங்கப்பட்ட போது கலங்காத கருணாநிதி கனிமொழி சிறையில் இருப்பதனால் துவண்டு போயுள்ளார். கனிமொழி பட்ட வேதனைகளும் துன்ப துயரங்களும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டணியில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.
ஜி.கே. மூப்பனாரின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் ஞானதேசிகன். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய மூப்பனார் புதிய கட்சி ஆரம்பித்தபோது அவருடன் சென்றவர் ஞானதேசிகன். ஸ்ரீ வல்லிபுரத்தூரைச் சேர்ந்த இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி புரிந்தவர். கர்நாடக காங்கிரஸில் இருந்த கட்சிப் பூசலுக்கு மத்தியில் உட்கட்சித் தேர்தலை நடத்தி சோனியாவிடம் நல்ல பெயரைப் பெற்றவர். தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டிகளை சமாளித்து கட்சியை முன்னேற்றுவõர் என்ற நம்பிக்கையிலேயே சோனியா இவரைத் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளார்.
தமிழக சட்ட மன்றத்தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி அடுத்து வரப் போகும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் போது கருணாநிதி கைவிட்டால் ஜெயலலிதாவுடன் அல்லது விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டிய நிலை ஏற்படலாம். அதற்கு முன்னேற்பாடாகவே ஞானதேசிகன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழக ஆட்சி மாற்றத்தை அடுத்து பரபரப்பாக அரங்கேறிய நில மோசடி வழக்குகள் இடையில் சற்றுத் தொய்வடைந்திருந்தன. இப்போது மீண்டும் வேகம் பெறத் தொடங்கிவிட்டன. நில மோசடி வழக்கில் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி அபகரிப்பு வழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது மீண்டும் ஒரு நில மோசடிப் புகார் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீதும் நில மோசடிப் புகார் எழுந்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியதும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக நில மோசடி நில ஆக்கிரமிப்பு பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். ஒரு சிலர் பிணையில் விடுதலையாகியுள்ளனர். பலர் இன்னமும் சிறையிலேயே உள்ளனர். நில அபகரிப்பு, ஆக்கிரமிப்புப் பற்றிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகார் செய்ததனால் அதற்காகத் தனிப் பிரிவு அமைக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கிய புள்ளிகள் இதில் சிக்குவார்கள் என்று பரபரப்பாகச் செய்திகள் வெளியாகின. இன்னமும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களைச் சிக்க வைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடைபெறுகின்றன.
தோல்வியடைந்த கட்சியிலிருந்து வெளியேறும் கைங்கரியத்தைத் தமிழக அரசியல்வாதிகள் ஆரம்பித்து விட்டனர். காங்கிரஸ் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சிலர் கட்சி தாவியுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அதிலிருந்து வெளியேறிய பலர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இப்போது வெற்றி பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி தோல்வியடைந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் தாவத் தொடங்கிவிட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலூர் சம்பத் விஜயகாந்தின் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள சுமார் 200 பேர் இவருடன் கட்சிமாறியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது கட்சி மாறுபவர்களைத் தடுத்து நிறுத்தும் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலை உண்டாகும்.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு20/11/11

Monday, November 21, 2011

ஏங்குகிறேன்

முழு மதியின் ஒளியில்
பால் வீதி காணுகிறேன்
தேயா நிலவுகாண ஏங்குகிறேன்

சூரியனின் சுள்ளிட்ட‌
க‌திர்க‌ளால் வேத‌னைய‌டைகிறேன்
சுடாத‌ சூரிய‌ன் காண
ஏங்குகிறேன்

ம‌ல‌ர்க‌ளின் எழில் கொஞ்சும்
வ‌ன‌த்தில் இன்புறுகிறேன்
வாடா ம‌ல‌ர் காண
ஏங்குகிறேன்

என் தாய் ம‌ண்ணில்
ஓடிவிளையாட‌ ஆசையுறுகிறேன்
யுத்த‌மில்லா ம‌ண்காண‌
ஏங்குகிறேன்

நான் காண‌ விரும்பும்
ம‌ண்ணின் ஏக்க‌ம்
ம‌தி போல் சூரிய‌ன் போல்
க‌ட‌ல் வான் ம‌ல‌ர் போல்
ஆகி விடுமோ என‌
ஏங்கிக்கொண்டே இருக்கிறேன்

தாட்ஷாவ‌ர்மா
ஜீவ‌ந‌தி_ கார்த்திகை 2011

Saturday, November 19, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 11

உயரமான இடத்தில் இருந்து விழுந்த பேராசிரியர் தாம்பத்திய சுகம் அனுபவித்தால் இறந்துவிடுவார் என வைத்தியர்கள் எச் ச‌ரிக்கின்றனர். தனது இயலாமையினால் இளம் மனைவியின் எதிர்பார்ப்பு கருகிப் @பாவதை விரும்பாத அந்தப் பேராசிரியர் மனைவிக்கு இன்னொருவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இப்படிப்பட்ட ஒரு விபரீதமான கதைக் கருவுடன் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் சாரதா.
வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து வித்தியாசமான கதையுடன் வெளியான இப்படத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அந்த எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் புஷ்வாணமாக்கி சாரதாவை வெற்றிப்படமாக்கினார்கள் தமிழ் ரசிகர்கள். 1962 ஆம் ஆண்டு வெளியான படங்களில் பரபரப்பாக பேசப்பட்ட படம் சாரதா.
கல்லூரி பேராசிரியர் எஸ்.எஸ்.ஆரை அவரிடம் படிக்கும் மாணவி விஜயகுமாரி காதலிக்கிறார். மாணவியின்
காதலை ஏற்க மறுக்கிறார் பேராசிரியர் எஸ்.எஸ்.ஆர். எஸ்.எஸ்.ஆரை வெறித்தனமாக காதலிக்கும் விஜயகுமாரி எக்காரணம் கொண்டும் காதலை கைவிட முடியாது என்று கூறுகிறார். மாதா பிதாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் குரு மாணவியை மணக்க முடியாது என்கிறார் எஸ்.எஸ்.ஆர். இறுதியில் எஸ்.எஸ்.ஆரின் மனது மாறுகிறது. விஜயகுமாரியின் பிடிவாதம் வெற்றிபெறுகிறது. கல்லூரி விழாவுக்காக உயரமான இடத்தில் நின்று அலங்காரம் செய்யும் பேராசிரியர் தவறி விழுகிறார். அவருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. ஆனால் தாம்பத்திய சுகம் அனுபவித்தால் உயிர் போய் விடும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். இதனை கேட்ட விஜயகுமாரி அதிர்ச்சியடைகிறார்.
வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரியை நெருங்குகிறார். வைத்தியரின் எச்சரிக்கையினால் எஸ்.எஸ்.ஆரின் விருப்பத்தை நிறை@வற்றாது காலம் கடத்துகிறார் விஜயகுமாரி. தனது இயலாமையை தெரிந்துக் கொண்ட எஸ்.எஸ்.ஆர் துடிக்கிறார். விஜயகுமாரியின் வாழ்க்கை சூனியமாகிவிட்டதால் துயரடைகிறார். தன்னால் மனைவிக்கு இன்பமான வாழ்க்கை கொடுக்க முடியாததை உணர்ந்த எஸ்.எஸ்.ஆர் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு அவளுக்கு அசோகனை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். எஸ்.எஸ்.ஆரின் விருப்பத்துக்கு விஜயகுமாரி சம்மதிக்கவில்லை இன்னொரு திருமணம் செய்ய முடியாது என மறுக்கிறாள். எஸ்.எஸ்.ஆரின் வற்புறுத்தலினால் இரண்டாவது திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள் சாரதா.
திருமண கோலத்துடன் எஸ்.எஸ்.ஆரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற விஜயகுமாரி எழுந்திருக்கவில்லை. கணவனின் காலடியில் உயிர் பிரிகிறது. ஒருவருக்கு ஒருத்தி என்ற @காட்பாட்டை நிலை நிறுத்துகிறார் விஜயகுமாரி.
எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி, அசோகன், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்கராவ், வி.நாகையா, சகஸ்ரநாமம், எஸ்.வி.ராஜம்மா, புஷ்பலதா @பான்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்தார்கள். வி.மகாதேவனின் இசையமைப்பில் கண்ணதாசனின் பாடல்கள் உயிரூட்டின. ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், கண்ணானால் நான் இமையாவேன், மெல்ல மெல்ல அருகில் வந்து, தட்டுத் தடுமாறி நெஞ்சம், கூந்தலுக்கு மலர் கொடுத்தாள் , மணமகளே மணமகளே வா வா ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. "மணமளேள மணமகளே வா வா' என்ற பாடல் இன்றும் திருமண வீடுகளில் ஓங்கி ஒலிக்கிறது. ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சூல‌மங்கலம்ககோகாதரிகள் ஆகியோரின் குரல் பாடல்களுக்கு மெருகூட்டின.
சாரதா படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதிய கே.எஸ் கோபால கிருஷ்ணன் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனிடம் கொடுத்தார். .கே.எஸ்.கோபால கிருஷ்ணன் மீது அதிக நம்பிக்கை வைத்த ஏ.எல்.சீனிவாசன் சாரதா படத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தார். திரைக்கதை வசன கர்த்தா மட்டுமல்ல சிறந்த இயக்குநர் என்பதையும் முதல் படத்தின் மூலம் நிரூபித்தார் கே.எஸ்கோபால கிருஷ்ணன்.
சாரதா படத்தின் கதையை கேள்விப்பட்ட ஏ.எல்.சீனிவாசனின் நண்பர்கள் அவரை எச்சரித்தனர். முற்பணம் கொடுத்த விநியோகஸ்தர்கள் நம்பிக்கை இழந்து பணத்தைத் திரும்ப தரும்படி நெருக்கடி கொடுத்தனர். சாரதா படம் வெளியாகி வசூலை வாரி குவித்ததுடன் மாநிலத்துக்கான சிறந்த படம் என்ற தேசிய விருதையும் பெற்றது. ஏ.எல் புரடக்ஸன் என்ற நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்த ஏ.எல்.சீனிவாசன் மெஜஸ்டிக் என்ற ஸ்டூடி@யாவை குத்தகைக்கு எடுத்து படங்களை தயாரித்தார். சாரதா தந்த பெரும் வெற்றியின் பின்னர் மெஜஸ்டிக் ஸ்டூடியோவை வாங்கிசாரதா ஸ்டூடியோ எனப் பெயர் மாற்றினார்.
விஜயகுமாரி நடித்த பாத்திரத்தின் பெயர் சாரதா ஆகையினால் படத்துக்கு சாரதா எனப் பெயரிட்டார்கள். நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் இப்போது இல்லை. கதாநாயகனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இன்று கதாநாயகிகளுக்கு இல்லை. தெய்வத்திருமகள் என்ற பெயரில் அண்மையில் ஒருபடம் வெளியானது. படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த குழந்தையை முன்னிலைப்படுத்தியே படத்துக்கு பெயர்சூட்டப்பட்டது. இப்படத்துக்கு முதலில் நாயகனை முன்னிலைப்படுத்தி தெய்வத்திருமகன் என்றே பெயர்சூட்டப்பட்டது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு அலை காரணமாகவே படத் தலைப்பு மாற்றப்பட்டது.
ரமணி


மித்திரன் 06/11/11

Monday, November 14, 2011

ஜெயலலிதா அதிரடிநடுத்தெருவில் ஊழியர்கள்!




தமிழக வாக்காளர்கள் ஐந்து வருடங்களுக் கொருமுறை மாற்றத்தை விரும்புகின்றார்கள். ஆனால் எத்தனை வருடங்கள் சென்றாலும் ஜெயலலிதா மாறமாட்டார். அவரது சுபாவம் அப்படியேதான் இருக்கும் என்பதை அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் வெளிப்படுத் துகின்றன.
ஆறு அமைச்சர்களை அதிரடியாக தூக்கிவிட்டு புதிய அமைச்சர்கள் ஆறு பேரை நியமித்துள்ளார். சுமார் 13,500 மக்கள் நலப்பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். மக்கள் நலப் பணியாளர்கள் இப்போது மூன்றாவது முறையாக ஜெயலலி தாவால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவிப்பது, மனுத்தாக்கல் செய்ய முதல் அவர்களை நீக்கி விட்டுப் புதியவர்களை நியமிப்பது, அடிக் கடி அமைச்சரவையை மாற்றி அமைப்பது எல்லாம் ஜெயலலிதாவுக்குக் கைவந்த கலை. கருணாநிதியின் தலைமையில் அமைச் சரவை ஐந்து வருடங்கள் அசைவில்லாமல் இருக்கலாம். ஜெயலலிதாவின் தலைமை யிலான அமைச்சரவையில் ஐந்து நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியாது. எப்போ பதவி பறிபோகும் என்று தெரியாது பதை பதைப்புடன் தான் காலத்தை தள்ள வேண் டும்.
அதிகார துஷ்பிரயோகம், உள்ளாட்சித் தேர்தலின் போது அசமந்தமாகச் செயற் பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளரின் வெற்றிகாகச் செயற்படாதது ஆகிய காரணங் களினால் ஆறு அமைச்சர்கள் தூக்கி எறியப் பட்டு புதிதாக ஆறு அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்தனர். கடந்த மே மாதம் எசக்கிமுத்து அமைச்சராகப் பதவி ஏற்றார். ஜூன் மாதம் அவர் பதவி இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக செந்தமிழன் பதவி ஏற்றார். இப்போது செந்தமிழனும் பதவி இழந்துள்ளார்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற பரஞ்சோதி மீது ஏகப் பட்ட புகார்கள் குவிந்தன. அப் புகார்களின் பின்னணியில் சிவபதிக்கு தொடர்பு இருக்க லாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதனால் சிவபதி அமைச்சுப் பதவி இழந்தார். உதயகுமாரின் குடும்பத்தவர் மீது ஊழல் புகார் சுமத்தப் பட்டதால் உதய குமாரின் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட மக்களின் அதிருப்திக்கு ஆளான புத்தி சந்திரன் அமைச்சுப் பதவியை இழந்தார். சண்முகவேலுக்கு இரண்டு முறை அமைச்சுப்பதவி மாற்றப்பட்டது. அவரது நிருவாகத்திறன் குறைவானதன் காரணத்தி னால் அவரும் பதவி இழந்தவர்களின் பட்டியலில் இணைந்தார்.
அதிகார துஷ்பிரயோகம், ஊழல், குடும்ப ஆதிக்கம் என்பவையின் காரணமாக திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியை இழந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அதிகாரத் துஷ்பிரயோகம், ஊழல், குடும்ப ஆதிக்கம் என்பன இருக்காது என்று ஜெயலலிதா உறுதியளித்திருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுகள் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா முதல்வராகி ஆறு மாதங்களுக்கிடையில் அதிரடி யாக அமைச்சர்களை மாற்றுகிறார். அமைச் சுப் பதவியை இழந்தவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். ஜெயலலிதாவை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பது அவர் களுக்கு நன்கு தெரியும். இந்த அமைச்சரவை மாற்றம் கடைசியானதல்ல. இன்னும் பலமுறை மாற்றம் செய்யப்படும். அப்போது அமைச்சராகலாம் என்ற நம்பிக்கை அவர் களுக்கு இருக்கிறது.
ஜெயலலிதா முதல்வரானதும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தொண்டர்களும் கதிகலங்கினர். ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற காரணங்களினால் முன்னாள் அமைச்சர்கள் முதல் அடிமட்டத் தொண்டர் வரை கைது செய்யப் பட்டனர். ஜெயலலிதாவின் பார்வை இப்போது திராவிட முன்னேற்றக்கழக ஊழியர்களின் மேல் விழுந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தினால் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். சுமார் 13,500 ஊழியர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்.
ஊராட்சிகளின் அடிப்படைத் தகவல் களைப் பராமரித்து, ஊராட்சி சொத்துக் களைப் பாதுகாப்பது, சிறு சேமிப்பில் மக்களை ஊக்குவிப்பது ஆகியவை மக்கள் நலப்பணியாளர்களின் வேலையாகும். இவர்களின் பணிகளைக் கவனிக்க ஊராட்சியில் போதுமான ஊழியர்கள் இருப்பதனால் தற்காலிகப் பணியாளர்களான இவர்களின் பதவியை இரத்துச் செய்யலாம் என்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜதுறையின் ஆணையாளர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆணையாளர் திராவிட முன்னேற்றக் கழக அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர் களைப் பணி நீக்கம் செய்யலாம் எனப் பரிந்துரை செய்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி னால் மக்கள் நலப் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். திராவிட முன்னேற்றக் கழகத் தால் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை 1999ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறிய ஜெயலலிதா வீட்டுக்கு அனுப்பினார். 1996ஆம் ஆண்டு முதல் வரான கருணாநிதி மீண்டும் அவர்களுக்கு வேலை வழங்கினார். 2001 ஆம் ஆண்டு முதல்வரான ஜெயலலிதா மீண்டும் அவர் களை வேலையிலிருந்து விரட்டினார். 2006 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வரானதும் ஜெயலலிதாவால் பதவி இழந்தவர்களுக்கு மீண்டும் பதவி கொடுத்தார். இப்போது ஜெயலலிதாவின் முறை. அவர் தனது அதிகாரத்தின் மூலம் சுமார் 13,500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்.
ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் மதுபானச்சாலை ஊழியர்களாக நியமனம் பெற்றவர்களை கருணாநிதி வீட்டுக்கு அனுப்பவில்லை. 1999 ஆம் ஆண்டு இருந்த அதே மன நிலையிலேயே ஜெயலலிதா இப்பவும் இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தால் பயனடைந்தவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கொள்கையை அவர் இன்னும் கைவிடவில்லை.
ஜெயலலிதாவின் பழிவாங்கும் படலத்துக்கு மக்கள் நலப்பணியாளர்கள் இறையாகியுள்ளனர். திராவிடமுன்னேற்றக் கழகத்தால் கட்டப்பட்ட கட்டடங்களே ஜெயலலிதாவின் பார்வையிலிருந்து தப்பவில்லை. இந்த நிலையில் ஊழியர்கள் எம்மாத்திரம்? ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு நாங்களாக இருக்குமோ என்ற அச்சம் சாலைப் பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு13/11/11