Wednesday, November 23, 2022

பாரதீய ஜனதா தலைவர்களினால் ஆட்டம் காணும் குஜராத் அரசியல்


 குஜராத் சட்ட சபைத் தேர்தலை இந்திய அரசியல்களம் மிக  உன்னிப்பாக அவதானிக்கிறது. குஜராத் மண்ணின் மைந்தர்களான பிரதமர்  மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஆகிய  இருவரின் செல்வாக்கை குலைக்கப்போகும் தேர்தல் என எதிர்க் கட்சிகள் கட்டியம் கூறுகின்றன.  பாரதீய ஜனதாவிடம் இருந்து குஜராத் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி களம்  இறங்கியுள்ளது.

 கங்கிரஸ் தலைவர்களினால் செய்ய் முடியாததைச் செய்து காட்டப்போஓஒவதாக  கெஜ்ரிவால் சபதம் போட்டுள்ளார். குஜரத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வலுவாக  இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள செல்வாக்கு மிக்கவர்கள் பரதீய ஜனதாவுக்குத் தாவியுள்ளனர்.    ஆகையால்  முன்னரை விட பலம் அதிகரித்துளதாக பாரதீய ஜனதா நம்புகிறது. தேர்தல் வேட்பாளர் பட்டியல் அந்த நம்பிக்கையை குலைத்துள்ளது.

பாரதீயஜனதாக் கட்சி, கங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இது வரை காலமும்  வலுவான  போட்டியாளராக இருந்தன. ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் கால் பதித்துள்ளதால் மும்முனைப் போட்டியாகியுள் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

  டிசம்பர் 1 ஆம் திகதியும், 5 ஆம் திகதியும் இரண்டு கட்டங்களாகச் தேர்தல் நடைபெற உள்ளது.   அசைக்க முடியாத அரை நூற்றாண்டுகால பாரதீய ஜனதாவின் ஆட்சிக்கு உட்கட்சிப்  பூசல் பெரும் தலைவலியாகியுள்ளது. முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கபப்டவில்லை.  காங்கிரஸில் இருந்து தாவியவர்களுக்கு தேர்தலில் போட்டியுட  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில்,   166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாரதீய ஜனதா  அறிவித்திருக்கிறது . உள்ளுர் தலைவர்களிப் புறக்கணித்து கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, காங்கிரஸிலிருந்து  இடம் மாரிய  ஹர்திக் படேல் உள்ளிட்ட புதுமுகங்களின்  பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.   காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதீய ஜனதாக் கட்சிக்குச் சேர்ந்த பலருக்கு      தேர்தலில் போட்டியிட அனுமதியளிக்கபட்டுள்ளது.  இது  கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பலர்  இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

 ஐந்து அமைச்சர்கள் உள்பட 38 எம்.எல்.ஏ-க்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாதது கட்சிக்குள்  அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. தற்போதைய சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா , அமைச்சர்களில், பிரிஜேஷ் மெர்ஜா, ராஜேந்திர திரிவேதி, பிரதீப் பார்மர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.மறுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களில், பிரிஜேஷ் மெர்ஜா, ராஜேந்திர திரிவேதி, பிரதீப் பார்மர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பா.. எம்.எல்.-வுமான விஜய் ரூபானிக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. ``நான் போட்டியிட வாய்ப்புக் கோரவே இல்லை. ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்ற எனக்குக் கட்சி வாய்ப்பளித்தது. இப்போது என்னைப் பஞ்சாப் பா..-வுக்கு பொறுப்பாளர்களாக நியமித்திருக்கின்றனர்'' என்று கூறியிருக்கிறார் விஜய் ரூபானி.

தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டாமையினால்   பாரதீய ஜனதாவின்  முக்கிய தலைவர்கள் சிலர் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கின்றனர். கட்சியின் மூத்த நிர்வாகியும், குஜராத் பா..-வின் பழங்குடியினப் பிரிவின் தலைவருமான ஹர்ஷத் வாசவாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கட்சியிலிருந்து விலகி அவர், நந்தோத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். இதேபோல,    குஜராத் சட்டசபை உறுப்பினர்களான  தினேஷ் படேல், சதீஷ் படேல் ஆகியோரும் கட்சியிலிருந்து விலகி, சுயேச்சையாகப் போட்டியிடவிருக்கின்றனர்.

வஹோதியா   தொகுதியில் ஆறு முறை  வெற்றி பெற்ற  மதுபாய் ஶ்ரீவஸ்தவுக்கும் இந்தத் தேர்தலில் சந்தர்ப்பம்  வழங்கப்படவில்லை. இதனால் கட்சியிலிருந்து விலகியவர், ``1995-ல் சுயேச்சையாக நின்று பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றேன். அப்போது மோடியும் அமித் ஷாவும் என்னை பா..-வில் இணையுமாறு கேட்டுக்கொண்டதால்தான், கட்சியில் இணைந்தேன். தற்போது பா..கமீது கடுங் கோபத்திலிருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு எம்.எல்.-வான கேசரி சொலான்கி என்பவர் தனக்கு சீட் வழங்காததால், கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்துவிட்டார். இந்த நிலையில், அதிருப்தியிலிருப்பவர்களைச் சமாதானப்படுத்த மத்திய இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவியை குஜராத்துக்கு அனுப்பியிருக்கிறது பா.. மேலிடம். ஆனால், அவரைப் பார்ப்பதையே பல அதிருப்தி எம்.எல்.-க்கள் தவிர்த்துவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

``கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சியிலிருக்கும் பா.. அரசுமீது ஒரு சில விஷயங்களில் குஜராத் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவருவதாக சொல்லப்படுகிறது. அந்த அதிருப்தியைச் சமாளிக்கவே பல தொகுதிகளில் பழைய ஆட்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடங்களில், அந்தக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்.எல்.-க்கள் சிலர், பா..-வை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவதால், அந்தக் கட்சியின் வாக்குவங்கி சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன'' என்கின்றனர் குஜராத் அரசியலைக் கூர்ந்து நோக்குபவர்கள்.

பாரதீய ஜனதாவின் புதிய வேட்பாளர்களை  குஜராத் மக்கள் ஏற்ருக்கொள்வார்களா நிராகரிப்பார்களா என்பது தேர்தலின்  பின்னரே தெரிய வரும்.

No comments: