Monday, November 14, 2022

மைதானத்துக்கு வெளியே தனுஷ்கவின் மன்மதலீலை


 ஆசிய கிண்ண சம்பியனான இலங்கை ரி20 உலகக்கிண்ண சம்பியனாகும் என  ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷ்க குணதிலக்கவின் செயல்  இலங்கையைத் தலை குனியச்செய்துள்ளது. பெண்கள் மீது முறைகேடு செய்ததாக குறைந்தது நான்கு  குற்றச்சாட்டுகள்  தனுஷ்க மீது சுமத்தப்பட்டுள்ளது.

கால்  இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சோகத்துடன் இலங்கை வீரர்கள்  இருந்தபோது அவர்கள் தங்கிய  கோட்டலுக்குள் நுழைந்த அவுஸ்திரேலிய பொலிஸார் தனுஷ்க குணதிலக்கவைக் கைதுசெய்தனர். தசைப் பிடிக்குக் காரணமாக ரி20 உககக்கிண்ண தொடடில் இருந்து  குணதிலக்க வெளியேறியதால் அவருக்குப் பதிலாக  மாற்று வீரர் இலங்கையில் இருந்து சென்றார்.  அப்படியான நிலையில் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைகுத் திரும்பியிருக்க  வேண்டும். ஆனால், அவர்  இலங்கைகுத் திரும்பாது அங்கு தங்கி இருப்பதற்கு யார் அனுமதிகொடுத்தது என்று   தெரியவில்லை.

ரி20 உலகக் கிண்ணப் போட்டியின் போது அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்ட தேசிய கிரிக்கெட் வீரர்  பற்றிய செய்தியால் இலங்கையர்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.    கிரிக்கெட் உலகை உலுக்கிய குற்றச்சாட்டுகள் இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது.

அஸ்திரேலியாவின் பாலியல் குற்றப்பிரிவு அதிகாரி துணை கண்காணிப்பாளர் ஜேன் டோஹெர்டி அளித்த அறிக்கையின்படி, தனுஷ்க ஒரு பெண்ணை டேட்டிங் செயலியான 'டிண்டர்' மூலம் சந்தித்ததாகவும், இருவரும் பல வாரங்களாக அரட்டை அடித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு இருவரும் சிட்னியில் உள்ள ஓபரா பாரில் முதன்முறையாக சந்தித்தனர், இருப்பினும் தனுஷ்க தேசிய கிரிக்கெட் அணியுடன் தனக்கு ஒரு அர்ப்பணிப்பு இருப்பதை நன்கு அறிந்திருந்தார்.  ஆனால், அதை ஒரு புறம் ஒதுக்கு வைத்து விட்டு அந்தப் பெண்ணுடன் நேரத்திச் செலவிட்டார்.

தனுஷ்க மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நேற்று வைரலாக பரவியதையடுத்து, ஸ்ரீலங்கா கிறிக்கெற் உடனடியாக  அவரை இஅடை நீக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அது குறித்து முழுமையான விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

"எஸ்எல்சி நீதிமன்றத்தில் நடக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும், மேலும் ஐசிசியுடன் கலந்தாலோசித்து, இந்த விஷயத்தில் ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்கும் மற்றும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கிரிக்கெட் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"

காயம் அடைந்தால் வீரர்கள் முதலில் ஓய்வில் இருக்க வேண்டும். பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட மாட்டார்கள். இதனை பயன்படுத்தி கொண்ட குணதிலக்க ஹோட்டல் அறையில் இருந்து கொண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் , டேட்டிங் ஆப் பயன்படுத்தி, அதில் பழுகும் பெண்களுடன் வெளியே சென்று ஜாலியாக தனது பொழுதை கழித்து இருக்கிறார்.

அப்படி தான் 29 வயதான பெண் ஒருவருடன் குணதிலக்க, பழகி, அவரை தனி இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவிய சோகத்தில் இலங்கை வீரர்கள் ஹோட்டலில் இருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு உள்ளே புகுந்த பொலிஸார் குணதிலக்கவை கைது செய்தனர்

  பெண்ணை காயப்படுத்தியது, அனுமதியில்லாமல் பலாத்காரம் செய்தது போன்ற வழக்கு அவர் மீது  பதியப்பட்டுள்ளது. இதனையடுத்து குணதிலக்க தரப்பில்  பிணை  வழங்க கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து, பிணைவழங்க மறுத்ததை அடுத்து குணதிலக்க  சிறையில்  அடைக்கப்பட்டார். குணத்திலக்க  மீது குற்றம் சுமத்தப்படுவது இது முதல்  முறை அல்ல.  ஏற்கனவே   இங்கிலாந்தில் பயோ பபுளை மீறி வெளியே சென்று கஞ்சா அடித்து ஒரு ஆண்டு தடை செய்யப்பட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில்,   பெண்கள் மீது குறைந்தது மூன்று முறைகேடு குற்றச்சாட்டுகளை தனுஷ்க எதிர்கொண்டா. ஒரு தவறான நடத்தை ஒரு சம்பவத்தை அவர் மற்ற இரண்டு வீரர்களுடன் சேர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தின் போது பயோ குமிழியை உடைத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், தனுஷ்கா பெண்களை துன்புறுத்தியதாக தெற்கில் இரண்டு புகார்களை எதிர்கொண்டார், அதில் அவர் மிரிஸ்ஸாவில் உள்ள இரவு விடுதி/ஹோட்டலில்  பெண்ணின் முகத்தில் அறைந்தா.

2018 ஆம் ஆண்டில், கொள்ளுப்பிட்டியில் உள்ள   ஹோட்டல் அறையில் நோர்வே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பொலிஸார் விசாரித்தபோது தனுஷ்க குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என்று  பொலிஸ்கூறியது, ஆனால் கிறிக்கெற் வாரிய விசாரணையில் அவர் அணியின் ஒழுக்கத்தை மீறியதாகவும், ஒப்பந்தத்தை மீறியதகவும் குற்றம் சாட்டப்பட்டார். தனுஷ்கவின் கூட்டாளியான சந்தீப் ஜூட்,  ஹோட்டலில் உள்ள அறையில் இரண்டு நோர்வே பெண்களில் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

  போட்டிகளின் போது, வீரர்கள் நள்ளிரவில் தங்களுடைய ஹோட்டல் அறைகளில் இருக்க வேண்டும்.விருந்தினர்களைச் சந்திக்க   முடியாது என்று   விதிகள் உள்ளன.

2018 இல் ஒரு  சம்பவம் நட்ந்தது.  ஒக்டோபர் 2017 இல் அவர் மற்றொரு ஒழுங்கு விசாரணையை எதிர்கொண்ட சில மாதங்களுக்குப் பிறகுதான், அங்கு அவர் இரவு விருந்துகளைத் தொடர்ந்து ஒரு பயிற்சி வகுப்பைத் தவறவிட்டார்.

2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கூட, கோவிட் 19 இன் போது உயிர் குமிழி மீறல் காரணமாக தனுஷ்க நிரோஷன் டிக்வெல்லா , குசல் மெண்டிஸ் ஆகியோர் ஒரு வருட தடையை எதிர்கொண்டனர், ஒரு வருடத்துக்கு நீக்கப்பட்ட்து ஒரு வருடத்தில் நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டனர்.

தனுஷ்கவுக்கு ஏற்கனவே இவ்வளவு சிக்கல் நிறைந்த கடந்தகாலம் இருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக் குழு அத்தகைய ஒரு வீரரை தேசிய கிரிக்கெட் அணியில் ஏன்வைத்திருந்தது என்ற ஒரு தீவிரமான கேள்வி இப்போது எழுந்துள்ளது.

பல குற்றச்சாட்டுகள் உள்ள ஒரு வீரர் வாழ்நாள் தடையை சந்தித்திருக்க வேண்டும், ஆனால் தனுஷ்க ஏன் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு சுற்றுப்பயணங்களுக்கு அனுப்பப்பட்டார் என்ற கேள்வி இப்போது எழுகிறது என்று விளையாட்டு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

  விளையாட்டில் ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியமானது.  ஒழுக்கத்தை மீறி , தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு  மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுவது ஏற்புடையதல்ல.

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சாமிக்க கருணாரத்ன, உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த போது, சிட்னியில் உள்ள கெசினோ ஒன்றில் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பானுகா ராஜபக்ச அறையில் இல்லை என்றும்  குறிப்பிட்டுள்ள நேரத்தை விடவும் பல மணித்தியாலங்கள் தாமதமாகவே வீரர்கள் அறைக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments: