Saturday, September 10, 2022

மக்கள் மீது சுமத்தப்பட்ட இன்னொரு சுமை

பொருளாதார வீழ்ச்சி , அளவுக்கதிகமான கடன்  போன்றவற்றால்  தள்ளாடும் இலங்கைக்கு ஜெனீவா எனும்  பொறி காத்திருக்கிறது.   ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.  பயங்கரவாத தடைச் சட்டம்,  இராணுவமயமாக்கல்,பொறுப்புக்கூறல் போன்றன  இலங்கைக்கு எதிராக இறக்கை கட்டிப் பறக்கின்றன.

 யுத்தத்தின் போது, சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, போரை முடிவுக்குக் கொண்டு வந்தவுடன், 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது மட்டுமல்லாமல்,  13 +  எனக்கூறினார். கூறினார். அரசியலமைப்பின் திருத்தத்தை அவர்கள் "13-பிளஸ்" என்று அழைத்தனர். அதர்கு என்ன நடந்ததென  இது வரை யாருக்கும் தெரியாது.  ஜெனீவவை வருடாந்தத் திருவிழா போல் சிலர் கருதுகிறார்கள். ஆளும் கட்சிப்  பிரமுகர்களும் ,தமிழ் அரசியல்வாதிகளும் வருடம் தோறும் ஜெனீவாவுக்குச் சென்று வருகின்றனர்.   இம்முறை  ஏதாவது  ஒரு மாற்றாம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்கக் களம்  இறங்கிய ஜனாதிபதி  மிக நீளமான இராஜாங்க அமைச்சர்  பட்டியலை வெளியிட்டுள்ளார். 37  இராஜாங்க அமைச்சர்கள் என்ற செய்தியைப் பார்த்த மக்களுக்கு தலைச் சுற்று ஏற்பட்டுள்ளது.

இந்த இலாகாக்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நிதி, போக்குவரத்து, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, விவசாயம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள், பெருந்தோட்டக் கைத்தொழில்கள், மின்சாரம் மற்றும் எரிசக்தி, நீர் வழங்கல், முதலீட்டு ஊக்குவிப்பு, தனியார் கல்வி, நெடுஞ்சாலைகள், வெகுஜன அமைச்சர்கள் ஆகியோர் அடங்குவர். ஊடகம், தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாடு மற்றும் வீட்டுவசதி, பாதுகாப்பு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி, வெளியுறவு, நீதி மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள், வர்த்தகம், சுதேச மருத்துவம், மீன்பிடி, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் வளர்ச்சி, வனவிலங்கு மற்றும் வன இருப்பு பாதுகாப்பு, கால்நடை மேம்பாடு, நீர்ப்பாசனம், சுகாதாரம், கிராமப்புற பொருளாதாரம், வீட்டு விவகாரங்கள், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள், கிராமப்புற சாலை மேம்பாடு, உயர் கல்வி, சுற்றுலா, முதன்மை தொழில்கள் மற்றும் சமூக அதிகாரம் என இராஜாங்க அமைச்சுகள்  நீண்டுள்ளன.

அரசபணியாளர்களின்  எண்ணிக்கை கூடுதலாக உள்ளதால் அதனைக் குறைக்க  பரிந்துரை செய்யப்பாட்டுள்ளது. இந்த ஆண்டி டிசம்பரில் 60 வயது பூர்த்தியாகும் அனைஅவ்ரும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்களென அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளும் சுழி ஓடி  சிலர் தப்பிவிடுவார்கள். அதுவும் ஒரு வகையிலான அரசியல்தான்.

 பொருளாதாரம்  மோசமான நிலைமையில் இருகும் நிலையிலும்  இருந்தபோதிலும், அரசாங்கம் சில இலாகாக்களை உருவாக்கியுள்ளதன் காரணத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

பொருளாதாரத்தின் இக்கட்டான சூழ்நிலையில், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை அல்லது பொதுத்துறையில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை, அமைச்சுக்களுடன் தொடர்புடைய பாரிய செலவினங்களின் காரணமாக உண்மையில் ஒரு அழுத்தமான விடயமாகும். உண்மையில், அமைச்சர்கள், அவர்களது ஊழியர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு அரசாங்கம் எவ்வளவு செலவழிக்கிறது என்பது பல ஆண்டுகளாக முக்கிய தலைப்பு. ஒவ்வொரு சதத்தையும் மிச்சப்படுத்துவது மிகவும் முக்கியமான ஒரு நேரத்தில், அறிவியல் பூர்வமான முறையில் புதிய மாநில அமைச்சர்களை நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை பிரதான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கொண்டு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பான ஜனாதிபதியின் வாக்      அத்தியாவசியமற்ற பொருட்களின்  இறக்குமதிக்கு தடை போடப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு ஐந்துவருட விடுகிறகொடுத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப ஆலோசனை வழங்கப்படுகிறது. பணத்தைச் சேமித்து டொலரின் வருவாயை அதிகரிக்கத் திட்டமிடும் அரசாங்கம் அமைச்சர்களின் எண்ணீக்க்கையை அதிகரித்து செல்வீனத்தைக் கூட்டியுள்ளது.

ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியில் 14 பேர் மாத்திரமே பாராளுமன்றத்தில் உள்ள நிலையில், அவர்களில் 6 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.  2 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு பல மாதங்களாக பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை மற்றும் பரவலான எதிர்ப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளது, ஏப்ரல் மாதத்தில் அதன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

37 புதிய  அமைச்சர்களுக்குரிய சம்பளத்தை வழங்கப்படமாட்டதுஆனால் அவர்களுக்கு எரிபொருள், அரசு வீட்டுவசதி, மெய்க்காப்பாளர்கள், தனிப்பட்ட ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் இலவச முத்திரைகளுடன் தலா மூன்று கார்களுக்கு உரிமை உண்டு என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதியஅமைச்சர்கள்  அனைவரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கூட்டணியில் இருந்து வந்தவர்கள்.

செலவுகளைக் குறைகும்படி மக்களுக்கு ஆலோசனை சொலும் அரசாங்கம்  அமைச்சர்களை அதிகளவில்  நியமித்து  மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சரிந்த பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்குப் பதிலாக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தனது பதவியை தக்க வைத்துள்ளார் ஜனாதிபதி  ரணில்.குறுதிகளுக்கு எதிரானது.

No comments: