Tuesday, May 26, 2026

ஜெஸ்ஸி மார்ஷின் ஒப்பந்தத்தை 2030 ஆம் ஆண்டு வரை நீடித்தது கனடா


 தலைமைப் பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ் உடனான உப்பந்தத்தை  2030  ஆம் ஆம்டு உலகக் கிண்ணப் போட்டி வரை நீடிக்கும் வகையில் கனடாவுடன் நான்கு ஆண்டு கால ஒப்பந்த நீடிப்பில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜான் ஹெர்ட்மேனுக்குப் பிறகு 2024-ல் பொறுப்பேற்ற அந்த அமெரிக்கர், 2024 கோபா அமெரிக்காவில் கனடாவை நான்காவது இடத்திற்கும், கடந்த ஆண்டு அதன் மிக உயர்ந்த பீபா தரவரிசையான 26-வது இடத்திற்கும் வழிநடத்தினார்.

அமெரிக்கா  மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகக்  கிண்ணப் போட்டியை  நடத்தவுள்ள கனடா, இத்தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்று, இந்த வார இறுதியில் தனது இறுதி அணியை அறிவிக்கத் தயாராகி வருகிறது.

 லீட்ஸ் யுனைடெட் , ஆர்.பி. லீப்ஜிக் அணிகளின் பயிற்சியாளராக இருந்த மார்ஷ், கனடா அணியுடன் 12 வெற்றிகள், 12 சமநிலைகள், ஐந்து தோல்விகள் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

  

No comments: