Wednesday, May 27, 2026

காணாமல் போனவர்களுக்கு ஆதரவாக மெக்ஸிகோவில் பிரசாரம்

 

 உலகக் கோப்பையை இணைந்து நடத்த  மெக்ஸிகோ  தயாராகி வரும் நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம்பிக்கையில், ஆர்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை அதன் முக்கிய  உதைபந்தாட்ட மைதானமான  அஸ்டெகாவுக்கு அருகில் மெக்சிகோவில் "காணாமல் போன" சிலரின் படங்களை ஆர்வலர்கள் காட்சிப்படுத்தினர்.

2006-ல் அரசாங்கம் தனது சர்ச்சைக்குரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, மெக்சிகோவில் சுமார் 130,000 பேர் அதிகாரப்பூர்வமாக காணாமல் போனவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஏப்ரல் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று இந்த நெருக்கடியை மிகவும் கடுமையானதாகக் கருதி, அதை "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" என்று முத்திரை குத்தியது.

தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் ஆர்வலர்களும் குடும்பத்தினரும், ஞாயிற்றுக்கிழமையன்று மெக்சிகோ நகரத்தில் உள்ள அஸ்டெகா மைதானத்திற்கு அருகில் அவர்களின் முகப் படங்களை ஒட்டினர். அங்குதான், ஜூன் 11 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெக்சிகோ தனது உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்குகிறது

No comments: