Wednesday, January 27, 2016

வடமாகாண முதலமைச்சரை சுற்றி பின்னப்படும் அரசியல்

அகிம்சை, சத்தியாக்கிரகம் உண்ணாவிரதம்,ஹர்த்தால் என்பனவற்றுடன் ஆரம்பமான தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம்  மீண்டும் உண்ணாவிரதம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.  வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக  இளைஞர் ஒருவர் தந்தைசெல்வா சதுக்கத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருந்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்

முதலமைச்சர் சுதந்திரமாக செயற்பட விடவேண்டும், முதலமைச்சர் மீது அவதூறு செய்ய வேண்டாம், அரசியல் கைதிகள் விடயத்தில்கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்,தமிழ் மனன்ர்களின் வரலாற்றுச்சின்னங்க்களை  பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்,போரால் பதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்து அம்சக்கொரிக்கையை முன்வைத்து அவர் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார்.
தனக்கு ஆதரவாக ஒருவர் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்த முதலமைச்சர்  தனது செயலாளரை அனுப்பி உண்ணாவிரதத்தைக் கைவ்டும்படி கேட்டார். உண்ணாவிரதம் இருந்தவர் மறுத்தார். முதலமைச்சர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டார். அதற்கும் அவர் மசியவில்லை. அவர் தனது ஒருநாள் உன்னவிடதத்தை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார். இந்திய காங்கிரஸ் தொண்டர்கள் போல் உடை அணிந்த அவர்  வரணியைச்சேர்ந்த நா.துஷாந்த் என அடையாளம் காணப்பட்டார்.  அவரைப்ப்றிய மேலதிக விபரங்கள் எவையும் வெளிச்சத்துக்கு வரவில்லை.

தமிழ் அரசியல் அரங்கில் வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனைப்பற்றிய பரபரப்பான செய்திகளை வெளியிடுவதில் சில ஊடகங்கள் அதிக ஆர்வம்  காட்டுகின்றன. வடமாகாண முதலமைச்சர்  பேசினாலும் பேசாவிட்டலும் அதனை செய்தியாக்குவதில் ஊடகங்கள் அக்கறைக் காட்டுகின்றன.

   சுன்னாகத்தையும் அதன் அண்டி உள்ள கிராமங்களின் கிணறுகளில் உள்ள நீரை குடிக்கலாமா  குடிக்கக்கூடாதா என்ற கேள்வியை முனவைத்து போராட்டம் நடந்தபோது முதலமைச்சரின் உறுதி மொழியின் பிரகாரம் போராட்டம் கைவிடப்பட்டது. தண்ணீரில் உள்ள மசுப்றிய அவடமக்கான சபையின் அறிக்கையை சிலர் ஏறுக்கொள்ள மறுக்கிறார்கள். இதற்கான சரியான விளக்கத்தை கொடுக்க முடியாமல் வடமாகாண சபை தடுமாறுகிறது.

 தமிழ்அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி  பலசமயங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் போது ஓடிச்செல்லும் அரசியல்வாதிகள்  பேச்சு   வார்த்தை  நடத்தி அதனை முடிவுக்குக் கொண்டுவருவார்கள்.  கடந்த அவருடம் தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர். உணர்வு பூர்வமான உண்ணாவிரதப்போராட்டத்தை  கைவிட மறுத்த கைதிகள் வடமாகாண முதலமைச்சர்மீது நம்பிக்கை வைத்தனர்.  ஜனாதிபதியை அவர் சந்தித்து உறுதிமொழி வழங்கிய பின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

 பாராளுமானார் ஆருப்பிஒனே சுமந்திரனுக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான கருத்துமோதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் முறுகலை ஏற்படுத்தியது. தமிழ் அரசுக்கட்சியின் முதலமைச்சர் கட்சியை விட்டு தூரப்போகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் கட்சியின் மோதலமைச்சரா அல்லது மக்களின் முதலமைச்சரா எனற கேள்விக்கு யாரும் பதில் கூறவில்லை.
தமிழ் மக்கள் பேரவை அமைக்கப்பட்டபின்னர் முதலமைச்சருக்குக்கும் கட்சிக்கும் இடையேயான பிளவு அதிகரித்தது போன்ற ஏற்பட்டது. கூட்டமைப்பிந்தலைவர் சம்பந்தனுக்கும் உதலமைச்சருக்கும் இடையிலான பேச்சு  வாரத்தின் பின்னர் எல்லாம் சுமுகம் என இவரும் கருத்துத் தெரிவித்தனர். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து முதலமைச்சர் விலக வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதைத் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என முதல்வர் அழுத்தம் திருத்தாமாகத் தெரிவித்தார்.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை  இல்லாத்தீர்மானம் வரப்போவதாக செய்தி வெளியானது. அவருன் கிழ் உள்ள வடமாகாண சபை உறுப்பினர்கள் கூடி  அவர் மீது நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் சுயமாக இயங்க முடியாமல் இருப்பது  போன்ற கருத்து உள்ளது. ஆனால் முதலமைச்சர் சுயமாகவும் திடமாகவும் இயங்குகிறார்
தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சி அல்ல என்று அதில் உள்ளவர்கள் உரக்கக் கூறுகின்றனர்.  காலப்போக்கில் அது அரசியல் கட்சியாக செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குரிய பதிலும் தயாராகவே இருக்கும். 



 ஊர்மிளா
சுடர் ஒளி
ஜனவரி 27 பெப்ரவரி02  16

No comments: