Sunday, August 21, 2022

2.45 மில்லியன் உலகக்கிண்ண ரிக்கெட் விற்பனையானது


 கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண  டிக்கெட் விற்பனை 2.45 மில்லியனை எட்டியுள்ளது.  போட்டிகள் தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே 500,000 க்கும் மேற்பட்ட இருக்கைகள் இன்னும் உள்ளன என்று பீபா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த வாரம் முடிவடைந்த விற்பனையின் முதல் கட்ட விற்பனையில் 520,000 டிக்கெட்டுகள் வாங்கப்பட்டதாகவும் , சேர்பியா, மரூன் ஆகியா நாடுகளுக்கு எதிராக பிறேஸில் விளையாடும் போட்டிகளுக்கு அதிக ரிக்கெற்கள் விற்பனையானதாக  பீபா தெரிவித்துள்ளது. 

கட்டார், அதன்   அண்டை நாடுகளான சவூதி அரேபியா ,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அவர்களது குடியிருப்பாளர்களுக்கான டிக்கெட் விற்பனையின்  முதல் 10 வீதம்  ஒதுக்கப்பட்டுள்ளன.  அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, பிரான்ஸ், ஆர்ஜென்ரீனா, பிறேஸில், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கும் அதிக  ரிக்கெட்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன.

கட்டாருக்கு வெளியே உள்ள ரசிகர்களுக்கான மலிவான டிக்கெட்டுகளின் விலை 250 ரியால்கள் ($69).   இணையதளம் மூலம் கட்டாரில் தங்குவதற்கான இடங்களை முன்பதிவு செய்ய ரசிகர்கள் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வாங்க வேண்டும்.

டோஹா மற்றும் அதைச் சுற்றியுள்ள எட்டு மைதானங்களில் 64-விளையாட்டு போட்டி நவம்பர் 20 அன்று தொடங்குகிறது மற்றும் மொத்தம் 3 மில்லியன் டிக்கெட்டுகளைக் கொண்டுள்ளது.

சுமார் 2 மில்லியன் டிக்கெட்டுகள் பொது விற்பனையில் வைக்கப்பட்டது.1 மில்லியன்  டிக்கெட்கள் பீபா பங்குதாரர்களான உறுப்பினர் கூட்டமைப்புகள், ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது.

80,000 இருக்கைகள் கொண்ட புதிய லுசைல் ஸ்டேடியத்தில் டிசம்பர் 18 ‍ கட்டாரின் தேசிய தினமான - உலகக் கிண்ண  இறுதிப் போட்டிக்கு 3 மில்லியன் டிக்கெட் கோரிக்கைகள் கிடைத்ததாக பீபா முன்பு கூறியது. 

மரூன் எதிர் பிறேஸில், பிறேஸில் எதிர் செர்பியா, போர்ச்சுகல் எதிர்  உருகுவே, கோஸ்டாரிகா  எதிர் ஜேர்மனி , அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் போன்ற குழு நிலை போட்டிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள்  கோரப்பட்டதாக பீபா தெரிவித்தது.

கட்டார், சவூதி அரேபியா, அமெரிக்கா, மெக்ஸிகோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா, பிறேஸில், வேல்ஸ் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில்  வசிக்கும் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளைப் பெற்று டிஜிட்டல் வரிசைகளுக்கு வழிவகுத்தனர்" என்று ஃபிஃபா தெரிவித்துள்ளது.

No comments: