Wednesday, August 17, 2022

தோசையை மறக்க முடியாத நெதர்லாந்து பிரபலம்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த ஜூலை 28 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்தது. செஸ் ஒலிம்பியாட் பங்கேற்ற அனைவருக்கும் தமிழர்கள் பண்பாட்டை விளக்கும் வகையில் நினைவு பரிசு மற்றும் பரிசு பொருட்கள் போன்றவையும் வழங்கப்பட்டன‌.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றவர்களில் நெதர்லாந்தை சேர்ந்த கிரிட் வான்டே வெல்டேயும் ஒருவர்.   இவர் இசைக் கலைஞராகவும், செஸ்சபிள் இணையத்தளத்தின் சி... வாகவும் இருந்து வருகிறார். சென்னையி உள்ள உணவு வகைகள் மிகவும் பிடித்து போனது. சமீபத்தில் கூட இவர் தமிழ்நாட்டின் வத்தக்குழம்பு தனக்கு மிகவும் பிடித்ததாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், கிரிட் வான்டே வெல்டே, வீட்டில் தனது தாயுடன் சேர்ந்து தோசை சுட்டு சாப்பிட்டு இருக்கிறார். சொந்த நாடு திரும்பிய அவருக்கு, தமிழ்நாட்டு உணவு மீதான ஈர்ப்பு குறையாமல் இருக்கும் நிலையில், அவர் தனது தாயுடன் சேர்ந்து தோசை சுட்டு அசத்தி இருக்கிறார்.

இது குறித்து தொடர்பாக கிரிட் வான்டே வெல்டே தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவுக்கு வந்த எனது தாய்க்கு, அங்குள்ள உணவுகள் மிகவும் பிடித்து போய்விட்டது. அங்கிருந்த உணவுகளின் புகைப் படங்களை பார்த்துவிட்டு, தற்போது அவர் எங்களுக்கு வீட்டிலேயே தோசை சுட்டு கொடுத்தார்என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு செஸ் ரசிர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

No comments: