Sunday, October 1, 2017

உலக்கிண்ண உதைபந்தாட்ட ரிக்கெற் விலை குறைப்பு



 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண உதைபந்தட்டப்போட்டி     அக்டோபர் 6 ஆம்   முதல் இந்தியாவில்   அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், கொல்கத்தா, புதுடெல்லி, கொச்சி, கோவா, கவுஹாத்தி, நவி மும்பை ஆகிய ஆறு இடங்களில் நடைபெறுகிறது. அதற்கான டிக்கெட்டுகள்,  ஃபீபா வின் இணையதளத்தில் விற்கப்படுகின்றன. உதைபந்தாட்டத்தை இந்தியாவில்      பிரபலப்படுத்தும் நோக்கில், டிக்கெட்டுகள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
 ரிக்கெற்கள் நான்கு கட்டங்களாக விற்பனையாகிறது.  முதல்கட்டமாக மே முதல் ஜூலை வரை  venue  ரிக்கெற்கள்  விற்கப்பட்டன. இரண்டாம்கட்டமாக, 50 சதவிகிதத் தள்ளுபடியில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ஜூலை 21-ஆம் திகதி  தொடங்கிய மூன்றாம்கட்ட விற்பனையில், 25 சதவிகிதத் தள்ளுபடியில்  ரிக்கெற்கள் விற்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அக்டோபர் 5ஆம் திகதி  வரை இந்த விற்பனை தொடரும். நான்காம்கட்ட விற்பனை, தொடர் தொடங்கும் 6 ஆம்  திகதி  முதல் போட்டி முடியும் 28 ஆம் திகதி வரை நடைபெறும்.
  

No comments: