Monday, February 7, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 2

மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான .வி.எம்மும், ரசிகர்கலின் பெரன்பைப் பெற்ற எம்.ஜி.ஆரும் முதன் முதலில் இணைந்த திரைப் படம் "அன்பே வா."   திரையுலகில் கொடிகட்டிப் பறந்த  சிவாஜி, ஜெமினி,ஜெய்சங்கர்,எஸ்.எஸ்.ஆர், ரவிச்சந்திரன் ஆகியோரை  நடிபில் படங்களைத் தயாரித்த  ஏவிஎம்... முதன்முறையாக எம்ஜிஆரை கதநாயகனாக்கி  எடுத்த படம்தான் அன்பே வா. ஏவிஎம் நிறுவனத்தில் எம்ஜிஆர் நடித்த   ஒரே படமும் இதுதான். 1966ம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி தைத்திருநாளில், பொங்கல் நன்னாளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் அன்பே வா.

  .வி.எம் நிறுவனத்தின் படத்தில்  எம்.ஜி.ஆர் நடித்ததற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது.  " ராஜாவின் பார்வை ரானியின் பக்கம்" எனும் பாடலுக்குப் பின்னால்  இன்னொரு கதை உள்ளது. எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் ரசிகர்கள் உள்ளது  போல அவர்களுடன் நடிப்பதற்கும் சிலர் உள்ளனர்.  எம்.ஜி.ஆரின் மீது மிகுந்த விசுவாசமுள்ளவர் அசோகன். பிரமாண்டமான .வி.எம்மின் படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்காதது அவருகு வருத்தமாக இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆரை வைத்து படமெடுங்கள் என  சொல்வார்.

.சி.திருலோகச்சந்தரின் கதையை சின்ன பட்ஜெட்டில் ஜெய்சங்கரை வைத்து எடுக்கலாம என ஆலோசனை செய்தபோது எம்.ஜி.ஆரை டை பண்ணலாமா என சரவணன் கேட்டார். ,தகப்பன் சம்மதம் தெரிவித்ததும் எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்காக சரவணனும், முருகனும் சென்றனர். அவர்களை வரவேற்ரு உபசரித்த   எம்.ஜி.ஆர் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணீடுங்க நாம ஒரு படம் சேர்ந்து பண்ணீடுவோம் என்றார்.

.எதிரே அமர்ந்திருந்த சகோதரர்களின் முகம் மலர்ந்தது.அது ராமாவரம் தோட்டம்.மாநிலத்தின் முக்கிய முகமான மக்கள் திலகத்தின் உறைவிடம்.முகம் மலர்ந்த சகோதரர்கள் .வி.எம்மின் வாரிசுகள்.உங்க கூட ஒர்க் பண்ண ஃபாதர் பிரியப்படுறாரு.நாகிரெட்டிக்கு செய்தது போல் எங்க பேனருக்கும் ஒரு படம் பண்ணித் தருணும் என கேட்க வந்த இடத்தில் தான் உடனடியாக பச்சைக் கொடி காட்டினார் மக்கள் திலகம்.ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு என கொடுத்தார்கள்.

 அதனைப் பார்த்த எம்.ஜி.ஆட் ஆச்சரியப்பட்டார். அப்படியொரு ஸ்கிரிப்டை அதற்கு முன்பு எம்.ஜி.ஆர்.பார்த்ததே இல்லை.பக்காவாக பைண்ட் செய்யப்பட்டிருந்தது.அதில் நேர்த்தியான எண்களைப் போட்டு எடுக்கப்போகும் காட்சிகள் சீன் வாரியாக பிரிக்கப்பட்டு பேச வேண்டிய வசனங்கள் பங்கு பெறும் பாத்திரங்கள் என பக்காவான ஸ்கிரிப்ட்.

அந்தக் கதையை தனது ரசிகர்கள்  ஏற்றுக்கொள்வார்களோ என்ற சந்தேகம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. பெரிய நிறுவனத்துக்கு மறுப்புச் சொல்லவும் மனம் இல்லை. இது எம்.ஜி.ஆரின் கதை அல்ல. அம்மா, தங்கச்சி சென்ரிமென்ற், பழிவாங்கல், சண்டை எதுவுமே இல்லை. ஆனாலும் ஒப்புதலளித்துவிட்டார்.எம்.ஜி.ஆர் உள்ளே வந்ததும்  தயாரிப்பின் போக்கு மாரிவிட்டது. ஈஸ்ட்மென் கலர். சிம்லா லொகேஷன். அபிநய சரஸ்வதி சரோஜாதேவி. நாகேஷ், மனோரமா, டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன் என்று அருமை அருமையான நடிகர்கள். பழைய டிரெண்டில் இருந்து சற்றே விலகி, புதுமையான இசைச்சேர்க்கையில் ஜாலம் காட்டினார் எம்.எஸ்.விஸ்வநாதன். அன்பே வா படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர். ஆனால், படத்தை  நகர்த்துபவர் நாகேஷ்.  இதனை எம்.ஜி. ஆர் பெரிதாக எடுக்கவில்லை.

வெளிப்புறப் படப்பிடிப்பு. அதுவும் சிம்லாவில் இந்த அளவுக்கு எவரும் படமாக்காத நிலை. கண்ணுக்கு குளுமையான காட்சிகள். கதையை விட்டு மீறாத காட்சிகள் என ஓர் படத்துக்கு என்ன நியாயம் சேர்க்கமுடியுமோ அவை அனைத்தையும் சேர்த்துக்கொண்டு, வித்தை காட்டியிருப்பார் இயக்குநர் .சி.திருலோகச்சந்தர் .

எம்.எஸ்.விஸ்வநாதன் படத்துக்கு இசை அமைத்தார். ஆனால், பாடல்களில்  குமரனின் ஆதிக்கம் பலமாக இருந்தது. .உயர்ந்த மனிதனில் கூட குமரனின் டேஸ்ட் இருக்கும்.அப்படித் தான் அன்பே வாவிற்கும் இருவரும் அமர்ந்தார்கள்.அட்டகாசமான பாடல்கள் கிடைக்க காரணம் குமரனின் பங்களிப்பு தான்.ஒன்ஸ் பப்பா இலங்கை பைலா பாடலில் கூட அவரது பங்களிப்பு இருந்தது.ட்விஸ்ட் டான்ஸ் டெஸ்ட் மேட்ச் என பார்த்துப் பார்த்து அவர் செய்தார்.எந்த பாடலுக்கும் எம்.ஜி.ஆர். நேரடி தொடர்பில் இல்லை.ஓகே வாங்குவதற்கு மட்டும் போட்டுக் காட்டியதோடு சரி.எம்.எஸ்.விக்கே இது ஆச்சரியம்.அவரு வந்து உட்கார்ந்தா என்னை ஒரு வழி பண்ணிடுவாரு.எதுக்கும் நீங்க கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க.கடைசி நேரத்தில கூட பாட்டை மாத்திடுவாரு என அவரது அனுபவத்தைச் சொல்ல குமரன் பயந்தது என்னவோ உண்மை.செட்டியாரு கேட்டாரா?. கேட்டாருங்க.என்ன சொன்னாரு.நல்லாயிருக்கப்பா இதையே வெச்சுக்கலாம்னு சொல்லீட்டாரு.செட்டியாருக்கு பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே தான்.இப்படித் தான் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் .வி.எம்மிற்கு மரியாதை தந்தார்.உங்க நிறுவனம் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.நீங்க எது செய்தாலும் கரெக்டா இருக்கும்.எங்கிட்ட ஒப்பீனியன் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.நேரா சூட்டிங் போயிடலாம்.அவுட்டோரில் இருக்கும்போது டேப்பில் ஒலிக்கும் பாடலை இயக்குநர் டேஸ்டிற்கு நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆரை அது வரை திரையுலகம் கண்டதே இல்லை.அதிலொரு பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.இதிலும் குமரனின் ஆதிக்கம் இருந்தது.

நாய்கனும், நாயகியும் மிக நெருக்கத்தில் கனவு கணும் பாடல் காட்சிக்கு  எம்.எஸ்.வி  15க்கும்  மேற்பட்ட பல மெட்டுகளைப் போட்டுக் கட்டினார். குமரனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. என்னதா எதிர் பாக்கிறீங்க என  விஸ்வநாதன் கேட்டார்.

 நேத்து ஒரு படம் பார்த்தேன்.பாரீஸ் ஷாம்பெய்ன்.அதில ரெண்டு குதிரை பூட்டின கோச்சில லவ்வர்ஸ் உட்கார்ந்து போறாங்க.அப்போ ஒரு மியூசிக் குடுக்கிறான் . சும்மா ஜில்லுனு இருக்கு.நமக்கே குதிரைல போற ஃபீலிங் கெடைக்குது.அது மாதிரி ஒரு ஃபீலிங் இந்த பாட்டிலும் இருந்தா பெட்டரா இருக்கும்.அவ்வளவு தானே.ஆர்மோனியத்தை  மூடிவிட்டு பியானோவுக்கு மாறினார். எம்.எஸ்.வி போட்ட் முதல் ரியூனைக் கேட்டதும்  குமரன் துள்ளிக் குதித்தார்.  உடனே வாலிக்கு அழைப்பு விடுத்தார்கள்.வாகினியில் இருக்கும் வாலிக்கு தகவல் விடுக்கப்பட்டது. .வி.எம் முக்குச் சென்ற வாலி அதிர்ச்சியடைந்தார். ஆர்மோனியம் இல்லாமல் பியனோவுடன் இருக்கும் .எம்.எஸ். வியைப் பார்த்தால் யர்தான் ஆச்சரியப்பட மாட்டார்கள்.  கனவுக் காட்சி,குதிரை வண்டி என்றதும்  வாலியின் கற்பனை ராஜா, ராணி என விரிந்தது ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் வாலி சொன்னதும்  குமரன் முகம் மலர்ந்தது.பியானோவில் விஸ்வநாதன் வாசிக்க கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் வாலியின் வரிகளில் அனைவரும் மயங்கினர். ரி.எம்.எஸ்ஸும், சுசீலாவும் பாடலுக்கு உயிர் கொடுத்தனர்.

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் எனும் பாடலை எப்படிப் படமாக்க வேன்டும் என்ற ஐடியா எதுவுமே இயக்குநர் திருலோகச்சந்தருக்கு இருக்கவில்லை.  ஏதோ ஒரு தெலுங்கு படத்திற்காக பயன்படுத்திவிட்டு அக்கு வேறு ஆணி வேறாகக் குவித்து வைக்கப் பட்டிருந்த  கிடந்த சாரட்டை  ஆர்ட் டைரக்டர் சேகர்  பொருத்திக் கொடுத்தார். அழகான வெள்ளைக் குதிரையைக் கொண்டுவந்து புல்லுக் கட்டைக் காட்ட அது தலையை அப்படியும் இப்படியும் ஆட்டியது. இது போதும் என்ரார் இயக்குநர்.

ராஜவின் பார்வை ராணியின் பக்கம் எனும் பாடல் காட்சியைப் பர்க்கும்போது  ராஜா எம்.ஜி. ஆரும், ராணி சரோஜாதேவியும் குதிரை வண்டியில் வேகமாகச் செல்வது போலவும்  வண்டியின் வெகத்துக் கேற்ப குதிரை தலையை ஆட்டுவது போலவும்  இருக்கும். அது மட்டுமல்லாது அந்தக் குதிரை வண்டியில் நாம் செல்வது போன்ற  உணர்வும் ஏற்படும்.

No comments: