Thursday, June 28, 2018

ஜேர்மனியை வெளியேற்றிய தென்.கொரியா


பிறேஸிலில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைக் கையில் ஏந்தி பெருமையுடன் நாடு திரும்பிய ஜேர்மனி, 2018 ஆம் ஆண்டு முதல் சுற்றுடன் அவமானமாக நாடு திரும்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

1938க்குப் பிறகு ஜேர்மனி உலகக்கிண்ணப் போட்டியிலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. தொடர்ச்சியாக மூன்று  உலகக்கிண்ணப்  போட்டிகளில் நடப்பு சாம்பியன் அணி முதல் சுற்றுடன் வெளியேறும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.   2002-ம் ஆண்டில் பிரான்ஸ் அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் கண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது.    2010-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் இத்தாலியும்இ 2014-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினும் முதல் சுற்றுடன் வெளியேறின. இந்த வரலாற்றுப் பட்டியலில் ஜேர்மனியும் இடம் பிடித்துள்ளது. மெக்ஸிக்கோவுக்கு எதிரான் போட்டியில் 1- 0 என்ற கோல்கனக்கில் தோல்வியடைந்த ஜேர்மனி ,சுவீடனுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது

தரவரிசையில் முதலிடத்தில் இடத்தில் இருக்கும் ஜேர்மனிக்கு தோல்வியில் இருந்து மீண்டு வருவது பெரிய விடயமல்ல. கடைசிப் ஓட்டியில் தென்.கொரியாவை ஜேர்மனி எதிர்கொண்டது. ஆசிய நாட்டுக்கு எதிராக பெரிய  வெற்றியைப் பெற்று ஜேர்மனி அடுத்த சுற்றுக்குச் செல்லும் என ரசிகர்கள் உறுதியாக நம்பினார்கள்.  உதைபந்தாட்ட உலகின் குட்டி நாடான தென்.கொரியா, நடப்பு சம்பியனான ஜேர்மனியை வெளியேற்ரும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். தென்.கொரிய வரலாற்றில் இது பொன் எழுத்துகளால் பொரிக்கப்பட வேண்டிய நாள். ஜேர்மனியில் வரலாற்றில்  இது  கறுப்புதினம்.

  ‘எப் பிரிவில்  நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில்  நடப்பு சம்பியன் ஜேர்மனி  , ஆசிய கண்டத்தை சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜேர்மனி   களம் கண்டது.  ஜேர்மனி அணியில் அதிக அளவில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்த அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோ வும் அணியை சிறப்பாக வழிநடத்துவதில் ஆற்றல் படைத்தவர். இதனால் இந்த போட்டி தொடரில் சம்பியனாகும் அணிகளில் ஒன்றாக ஜேர்மனி கருதப்பட்டது.

ஆனால் தென்கொரியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜேர்மனி அணி தன் மீதான எதிர்பார்ப்பை நிறவேற்ற முடியாமல் ஏமாற்றம் அளித்தது. ஜேர்மனி  அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்து இருந்தாலும் (70 சதவீதம்) கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. தென்கொரியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க ஜேர்மனி வீரர்கள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. தென்கொரியா அணியின் கோல்கீப்பர் ஜோ ஹெயினூ அபாரமாக செயல்பட்டு ஜேர்மனி வீரர்களின் 20-க்கும் மேற்பட்ட ஷாட்களை முறியடித்து சிம்மசொப்பனமாக விளங்கினார்.

கோல் எதுவும் அடிக்காதஹால்  ஜேர்மனி வீரர்கள் கடைசி கட்டத்தில் பதற்றத்துடன் விளையாட ஆரம்பித்தனர். அதனை தென்கொரியா வீரர்கள்  சரியாக பயன்படுத்தி கொண்டனர். வீரர்கள் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக வழங்கப்படும் நேரத்தில் (இஞ்சுரி டைம்) தென்கொரியா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கார்னர் வாய்ப்பில் தென்கொரியா வீரர் கிம் யங்வோன் முதல் கோல் அடித்தார். அதனை நடுவர் ஆப்-சைடு என்று தெரிவித்தார். ஆனால் தென்கொரியா வீரர்களின் அப்பீலை அடுத்து வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த நடுவர் கோல் என்று அறிவித்தார். இதனால் பதில் கோல் திருப்ப ஜேர்மனி அணியின் கோல்கீப்பர் உள்பட எல்லா வீரர்களும் முன்னால் இறங்கி ஆடினார்கள். அந்த நேரத்தில் தென்கொரியா அணியின் கேப்டன் சன் ஹிங்மின் பந்தை எளிதாக கடத்தி சென்று 2-வது கோலை அடித்தார்.


முடிவில் தென்கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த தோல்வியால் ஜேர்மனி அணி தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு  அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தென்கொரியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாவிட்டாலும்  பெரிய அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்ததுடன்  தனது பிரிவில் 3-வது இடத்தை பெற்ற மகிழ்ச்சியுடன் போட்டியில் இருந்து விடைபெற்றது.

இதேபிரிவில் மற்றொரு கடைசி லீக் ஆட்டம் எகடெரின்பர்க் நகரில் நடந்தது. இதில் மெக்சிகோ-சுவீடன் அணிகள் சந்தித்தன. வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படும் என்ற நிலையில் சுவீடன்  களம் இறங்கியது. இதில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

பிற்பாதியில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்த சுவீடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. சுவீடனின்   அகஸ்டின்சன் 50-வது நிமிடத்திலும், கப்டன் கிரான்விஸ்ட் ‘பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 62-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 74-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் அடித்த பந்தை மெக்சிகோ வீரர் அல்வரேஸ் தடுக்கையில் அது சுயகோலாக மாறியது.

எப் பிரிவில் லீக் ஆட்டம் முடிவில் சுவீடன், மெக்சிகோ ஆகியன  தலா 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றன. கோல் விகிதாசாரம் அடிப்படையில் சுவீடன்   முதலிடத்தை பிடித்தது. மெக்சிகோ   2-வது இடம் பெற்றது


No comments: