Tuesday, September 12, 2023

அதிர்ச்சி தந்த சனல் 4


 உலக சாம்ராஜ்யங்களைப் புரட்டிப் போட்டதில் ஊடகங்களின் பங்கு   மிக  முக்கியமானது. ஊழல் சதி, புரட்சி  போன்ரவற்றைமுன் கூட்டியே கணித்து எச்சரிக்கைவிடும்  ஊடங்கள்  ஒரு புறம்  உள்ளன. வெளி  உலகுக்குத் தெரியாது  மறைக்கப்பட்ட உண்மைகளைத் தோண்டி எட்சுத்து வெளியிடும் ஊடகங்கள் இன்னொருவகை.

பிரித்தானியாவில்  இயங்கும் "சனல் 4" வெளியிடும் காட்சிகள் சில நாடுகளைச் சங்கடப்படுத்தியுள்ளன. பிரித்தானியாவின் சேனல் 4 கடந்த செவ்வாய்க்கிழமை     இரவு இலங்கை தொடர்பான  காணொளி ஒன்றை வெளியிட்டதால்  அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு  ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் வெளிநாட்டவர்கள்  உட்பட  269 பேர் பலியாகினர். உலகையே அதிரவைத்தது இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் சம்பவங்களால் இலங்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சனல் 4 வெளியிட்ட 50 நிமிட காணொளி பேசு பொருளாக  மாறியுள்ளது.

பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா  பல தகவல்களை சமர்ப்பித்துள்ளார். இலங்கையில் நிதிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் அசாத் மௌலானா.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீண்ட விமர்சனத்தை முன்வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டுள்ளன.

காணொளியில் பெரும்பாலான பகுதிகள்  லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்,  அசாத் மௌலானாவும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.பிள்ளையான் குழுவுடன் இணைந்து ட்ரிபொலி பிளட்டூன் என்ற ஆயுதக் கும்பலை அன்றைய அரசாங்கம் உருவாக்கி, ஊடகங்களை அடக்குவதற்கும் எதிரணியினரை மௌனமாக்குவதற்கும் பயன்படுத்தியதாக அசாத் மௌலானா இதன்போது தெரிவித்திருந்தார்.

 ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்களுக்காக , வௌ்ளை வான்குற்றச்சாட்டின் போது நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி நிஷாந்த சில்வா, வௌ்ளை கொடி வழக்கின் சாட்சியாளராக இருந்த ஊடகவியலாளர் பிரட்ரிக்கா ஜேன்ஸ், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்  லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பிற நபர்கள் சிலரின் வாக்குமூலங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்த காணொளியில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  அம்பிகா சத்குணநாதன் மற்றும் முன்னாள் இராஜதந்திர அதிகாரி சரத் கொங்கஹகே ஆகியோரின் வாக்குமூலங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிள்ளையானின் அறிவுறுத்தலின் பேரில் 2018 ஜனவரி மாதம் புத்தளம் கரடிப்புல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்களுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சுரேஷ் சலேவுக்கும்   இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் இதில்  சஹ்ரான் உள்ளிட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் 6 பேர்  கலந்து கொண்டதாக அசாத் மௌலானா தெரிவித்தார். அந்த சந்திப்பின் முடிவில் தன்னிடம் வந்த சுரேஷ் சலே, ராஜபக்ச ஆட்சிக்கு வர நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சேனல் 4  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பேஸ்மென்ட் பிலிமிஸ் நிறுவனத்தின் ‘பென் டி பெயார்’, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது நான்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கேள்விகளுக்கு பதில் கடிதம் அனுப்பி குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நிலையில்,  சேனல் 4 காணொளியில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இது தொடர்பான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் கூறப்படும் சந்திப்பின் போது தாம் மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் ஈஸ்டர் தாக்குதலின் போது இந்தியாவில் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் தொடர்புடைய அறிக்கை நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பென் டி பியரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4,  வீடியோக்களை அகற்றியுள்ளது.

அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கியுள்ளது.

பிரித்தானியாவின்  ‘சனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பில் வெளியாகியுள்ள, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பாரிய சூழ்ச்சி மற்றும் அதனூடனான சகல விடயங்களும், அதில் குறிப்பிடப்படுகின்ற நபர்கள் தொடர்பிலான விசாரணையொன்று சுயாதீன சர்வதேச விசாரணை குழு ஒன்றின் மூலமாக நடத்தப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

இந்த விசாரணை  சுயாதீனமான முறையில் நடத்தப்பட வேண்டுமானால், இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற மற்றும் தற்போதும் புலனாய்வு பிரிவுகளைப் போலவே பொலிஸ் திணைக்களங்களில் உயர் பதவிகளில் இருக்கின்ற சகல அதிகாரிகளினது சேவைக்காலம், இந்த விசாரணை முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்பட‍ வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வெளியாகியுள்ள ‘சனல் 4 ‘ செய்திச் சேவை ஆவணத் தொகுப்பில் வெளியாகியுள்ள விடயங்கள் தொடர்பில் இந்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது கவனத்தை செலுத்துமாறும் பேராயர் பொது மக்களிடம் கோரிக்கை  விடுத்திருந்தார்.

பிரித்தானியாவின்  ‘செனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பொன்று கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே  கர்தினால் ஆண்டகை  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்குலகு ஊடகங்கள் இலங்கையின் கொலைககளம் குறித்த அவணப்படத்தை அடிப்படையாக கொண்டு கட்டுரைகளையும், ஆயு;வுகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் நிலையில், இலங்கை அரசாங்கமோ சனல் 4 தொலைககாட்சி ஒளிபரப்பிய ஆவணப்படம் போலியானது என்றே தொடர்ந்தும் குறிப்பிட்டு வருகிறது.

ஆவணப்படம் வெளியானவுடன் இதுதொடர்பில் அறிக்கை வெளியிட்ட பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகம், குறித்த காட்சி போலியானதென வர்ணித்திருந்ததுடன், காட்சிகளில் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுவதை அவதானிக்க முடிவதாகவும், சில சர்வதேச ஊடகங்கள் சிலரை திருப்திபடுத்தும் நோக்குடன் செயற்படுவதாகவும் கவலை வெளியிட்டிருந்தது. 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ சனல் 4 ஆவணப்படம் வெளியானவுடன் குறித்த படம் புலிகளின் பணத்தில் மேற்கொள்ளப்பட்ட போலி ஒளிப்பதிவு எனவும், புலிகள் தமது பணத்தின் மூலம்  சனல் 4 தொலைககாட்சியை மீண்டுமொருமுறை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இறுதி யுத்தத்தில் பொதுமக்களை காப்பற்ற இராணுவம் தன்னை அர்ப்பணித்திருந்ததாகவும், சரணடைந்த புலிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டதாகவும், இதற்கு தமிழ் செல்வனின் மனைவி, சூசையின் மனைவி, பிரபாகரனின் பெற்றோர் உதாரணமெனவும் கோத்தாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் முற்றாக சனல் 4 தொலைககாட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைககளம் என்ற ஆவணப்படத்தை நிரகரித்துள்ள நிலையில சில அரசியற் கட்சிகளிடமிருந்து இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக ஜே.வி.பி. இந்த விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் மனோ கனேசனும் சனல் 4 ஆவணப்படம் குறித்து இலங்கை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்நிலைப்பாட்டை கொண்டிருப்பதையே அவதானிக்க முடிகிறது.

No comments: