Thursday, April 11, 2024

விதிமுறையை மீறிய ராஜஸ்தான் முதல் தோல்வியுடன் சஞ்சு சாம்சனுக்கு தண்டனை

ஜெய்பூரில் நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் 3 விக்கெட்களால் தோல்வியடைந்ததுராஜஸ்தான் ராயல்ஸ் அணி  முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஆனால் ஏப்ரல் 10ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 5வது போட்டியில் குஜராத்திடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 68* (38), ரியன் பராக் 76 (48) ஓட்டங்கள் எடுத்த   196  ஓட்டங்கள் எடுத்தது.

  குஜராத் ப்டன் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 6 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (44) ஓட்டங்கள் குவித்தார். இருப்பினும் எதிர்புறம் சாய் சுதர்சன் 35, மேத்யூ வேட் 4, அபினவ் மனோகர் 1, விஜய் சங்கர் 16, சாருக்கான் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.     குஜராத்தின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 35 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் ராஜஸ்தான் வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது அடித்து நொறுக்கிய ராகுல் திவாட்டியா 22 (11) ஓட்டங்களும்ரஷிட் கான் 24* (11) ஓட்டங்களும் அடித்து கடைசி பந்தில் வெற்றியை பறித்தனர்.

ரன் ரேட் காரணமாக தொடர்ந்து ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

 இந்த போட்டியில் 18வது ஓவரின் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 20 ஓவர்களை ராஜஸ்தான் வீசி முடிக்கவில்லை. அதனால் அப்போதே உள்வட்டத்திற்கு வெளியே ராஜஸ்தான் அணியின் 2 வீரர்களிக் குறைத்ததால்  நடுவர்கள் தண்டனை கொடுத்தனர். ‍  இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த விதிமுறையை 2024 தொடரில் ராஜஸ்தான் அணி முதல் முறையாக மீறியுள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே முதல் தவறு என்பதால் ராஜஸ்தான் அணியின் கப்டன் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் இந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து 12 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 இதையும் படிங்க: கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி குஜராத்தை காப்பாற்றிய கில்.. விராட் கோலியை முந்தி புதிய சாதனை இதை சஞ்சு சாம்சன் ஏற்று கொண்டதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. அத்துடன் இதே தவறை மீண்டும் ராஜஸ்தான் அணி செய்தால் சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சமும் மற்ற 11 வீரர்களுக்கு தலா 6 லட்சமும் அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  16 ஓவர்கள் வரை நிலைத்து நின்று விளையாடியசுப்மன் கில்  6 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (43) ஓட்டங்கள் அடித்து   வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் . இப்போட்டியில் அடித்த 72 ஓட்டங்களையும் சேர்த்து சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் 94 இன்னிங்ஸில் 3 சதங்கள் உட்பட 3045* ஓட்டங்களை எடுத்துள்ளார்அதை 24 வருடம் 215 நாட்கள் வயதில் எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் விராட் கோலி 26 வருடம் 186 நாட்களில் 3000ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக ஐபிஎல் தொடரில் 2வது வேகமான 3000 ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

 லக்னோ அணிக்காக விளையாடும் நட்சத்திர கே.எல் ராகுல் 80 இன்னிங்ஸில் வேகமாக 3000 ஓட்டங்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். தற்போது 94 இன்னிங்ஸில் 3000 ஓட்டங்கள் அடித்துள்ள கில் அந்தப் பட்டியலில் 2வது வீரராக இடம் பிடித்துள்ளார். மொத்தத்தில் இந்த வருடம் குஜராத்தின் புதிய கப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் முடிந்தளவுக்கு வெற்றிகளில் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: