Saturday, January 11, 2014

இத்தாலி 1934

இத்தாலியில் 1934 ஆம் ஆண்டு இரண்டாவது உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி  நடை பெற்றது.தகுதிகாண் போட்டியில் 32 நாடுகள் பங்கு பற்றின. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 16 நாடுகள் விளையாடத்தகுதி பெற்றன. உருகுவே, இங்கிலாந்து, பரகுவே ஆகியன தகுதி காண் போட்டியில் தோல்வியடைந்தன.

ஐரோப்பாவிலிருந்து ஒஸ்ரியா,ஜேர்மனி, பெல்ஜியம், செக்கோஸ்லோவாக்கியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, ரோமானியா, ஸ்பெயின்,  தென்னமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில் ஆகியன உலகக்கிண்ண உதைபந் தாட்ட போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. ஆபிரிக்கா கண்டத்திலிருந்து விளையாடுவதற்கு முதல் முதலாக எகிப்து தெரிவாகியது. ஆசிய, அவுஸ்திரேலியா கண்டங்களிலிருந்து எந்தவொரு நாடும் தகுதிபெறவில்லை.

சுவீடன்,-ஆர்ஜென்ரீனா,ஒஸ்ரியா,-பரான்ஸ், ஜேர்மனி,-பெல்ஜியம்,  ஸ்பெயின்,-பரேஸில், ஹங்கேரி,-எகிப்து, சுவிட்சர்லாந்து, -நெதர்லாந்து, இத்தாலி, -அமெரிக்கா, செக்கோஸ்லோவாக்கியா,-!ரோமானியா  ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டியில் வெற்றி பெற்ற நாடுகள் கால் இறுதிக்குத் தெரிவாகின.

இத்தாலி அதிகபட்சமாக 7-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வென்றது. செக்கோஸ் லோவாக்கியா-சுவிட்சர்லாந்து, ஜேர்மனி,- சுவீடன், ஒஸ்ரியா,- ஹங்கேரி, ஆகியவற்றுக்கிடையேயான கால் இறுதிப் போட்டியில்   வெற்றி பெற்ற செக்கோஸ்லோவாக்கியா, ஜேர்மனி, ஒஸ்ரியா, ஆகியன அரை இறுதிக்கு முன்னேறின. இத்தாலி, ஸ்பெயின்  ஆகிய வற்றுக்கிடையேயானப் போட்டி சமநிலையில் முடிந்த தனால் பெனால்ரி வழங்கப்பட்டது. பெனால்ரியும் சமனாகியதால் மறுநாள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இத்தாலி அரை இறுதிக்கு முன்னே றியது.
அரை இறுதி இத்தாலி 1-0 கோல் கணக்கில் ஒஸ்ரி யாவையும், செக்கோஸ்லோவாக்கியாவை 3-1 கோல் கணக்கில் ஜேர்மனியும் வென்றன.ஜேர்மனி ஒஸ்ரியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற ஜேர்மனி மூன்றாவது இடத் தைப் பெற்றது.
இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டியில் இரு நாடுகளும் தலா ஒரு கோல் அடித்து போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி வழங் கப்பட்டது.2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி சம்பியனானது. உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் இத்தாலி 12 கோல்கள் அடித்தது. இத்தாலிக்கு எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன.
ஐந்துகோல்கள் அடித்த செக்கோஸ்லோவாக்கியாவின் வீரர் ஒட்ரிக் ஜெட்லி கோல்டன் ´  விருதை வென்றார்.ஜேர்மனி வீரரான எட்முன் கொனென், இத்தாலி வீரர் அஞ்சேலோ ஐவியோ ஆகியோர் கோல்டன்´ விருதுக்குப் போட்டியிட்டனர்.
உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் 70 கோல்கள் அடிக்கப்பட்டன. 36,3000 பேர் போட்டி யைக் கண்டு இரசித்தனர்.   இப்போட்டியிலிருந்து மாற்று வீரர் அறிமுகம் செய்யப்பட்டது. உருகுவேயில் நடந்த உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்காக  விளையாடிய லூயிஸ் மொன்றி இத்தாலிக்காக விளையாடினார்.

 ரமணி 
சுடர் ஒளி 05/01/14

No comments: