லக்னோ அணிக்கு எதிராக 3. 3 ஓவர்களில் 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கி உள்ளார் மும்பை வீரரான ஆகாஷ் மத்வால்.சேப்பாக்கத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி Qஉஅலிfஇஎர் 2-க்கு தகுதிப்பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் மத்வால். இவர் 5 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அணில் கும்பளேவின் சாதனையும் சமன் செய்து மிரளவைத்துள்ளார்.
29 வயதாகும்
ஆகாஷ் மத்வால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை டென்னிஸ் பந்தில்தான் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்.
உத்தராகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஆகாஷ் மத்வால் ரிஷப் பந்தின் வீடு அருகே வசித்து வந்தார். இதனால் அவர் உதவியால் கிரிக்கெட்டுக்குள் வந்திருக்கிறார்.கடந்த 2019 ஆம் ஆண்டு சையது முஸ்தாக் கோப்பையில் அறிமுகமான ஆகாஷ் மத்வால் அதே ஆண்டு ரஞ்சிக்கோப்பையிலும் அதற்கு அடுத்த ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையிலும் அறிமுகமானார்.
கடந்தாண்டு
பெங்களூர் ராயல் சாலஞ்ஜர்ஸ் அணிக்கு
வலை பயிற்சி பந்துவீச்சாளராக இருந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏலம் எடுத்துகொண்டாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இந்த சீசனில்தான் தன்னுடைய முதல் போட்டியை விளையாடினார். பின்பு சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட், குஜராத் அணிக்கு எதிராக 3 விக்கெட், ஐதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட் எடுத்து அசத்தினார். லக்னோ அணிக்கு எதிராக 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. மேலும் அணில் கும்ப்ளேயின் சாதனையை
சமன் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ஆட்டநாயகன்
விருதை வென்ற பின்பு பேசிய ஆகாஷ் மத்வால் நான் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தேன். எப்போதும் அதை நிறுத்தியதில்லை. எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன். தொடக்கத்தில் இருந்தே நான் டென்னிஸ் பந்தில்தான் பந்துவீசி வந்தேன். நான் இன்னும் சிறப்பாக பந்து வீசுவேன் என நினைக்கிறேன்.மும்பை
அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.மேலும் ஆர்சரும் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலே வெளியேறிய நிலையில் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. தற்போது ஆகாஷ் மத்வாலின் இந்த பந்துவீச்சு மும்பை அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. பும்ராவுடன்
என்னை ஒப்பிடாதீர்கள். நான் இன்னமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் மேலும் 2018-ல் இருந்து என்னுடைய
வாய்ப்புக்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என ஆகாஷ் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment