Tuesday, January 2, 2024

ஓய்வை அறிவித்தார் டேவிட் வானர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து, சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறார் அவுஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான 37 வயது டேவிட் வானர்.

தற்போது பாகிஸ்தானுடன் சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது அவுஸ்திரேலியா. முதலிரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், வரும் ஜனவரி 3ம் திக இரு அணிகளுக்குமிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியுடன் டேவிட் வானரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் .

 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினாலும், அடுத்த ஆண்டு (2025) நடைபெறவிருக்கும் சம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் தேவைப்படும் பட்சத்தில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் , ஒருநாள் போட்டிகளில் மட்டுமின்றி, இந்தாண்டு ஜூன் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் ரி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்பு, சர்வதேச ரி20 போட்டிகளில் இருந்து டேவிட் வானர் ஓய்வு பெற வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

எனினும், தொடர்ந்து இன்னும் சில காலத்திற்கு ஐபிஎல் மற்றும் பிபிஎல் போன்ற பிரான்சைஸ் ரி20 தொடர்களில் அவர் பங்கேற்பார் என்றே தெரிகிறது.

No comments: