Friday, July 8, 2022

அரசுக்கெதிரான போராட்டத்தால் இலங்கை முடங்குமா முடக்கப்படுமா


 ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக இன்று கொழும்பில்  போராட்டம் நடத்துவதர்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதர்காக  காலி முகத்திடலில் போராட்டக் குழுவுகும் , எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதவியை  பதவியை நீக்குவது தொடர்பில்  அனைவரும் ஒருமிட்த கருத்தைக் கொண்டுள்ளனர்.

போராட்டத்தை வெற்றிகொள்ளும் இணக்கப்பாடு என்ற பெயரில் சர்வகட்சி செயற்பாட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட  மாநாட்டின் பிரகடனம்  வெளியிடப்பட்டது.

இந்த மாநாட்டில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இணைத்தலைவர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில்   9-ஆம் திகதி  அரசியலில் பூகம்பம் நிகழ்வதால் இந்த மாதம் 9 ஆம் திகதி என்ன அரசியல் அதிர்ச்சி நடைபெறும்  என்கிற பரபரப்பு நிலவுகிறது.

இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சேக்களுக்கு எதிராக மக்கள் ஏப்ரல் 9 ஆம் திகதி போராட்டம் ஆரம்பமாஅந்து. தொடங்கினர். கோத்தா கோ கம என்ற பெயரில் ஒரு மாதிரி கிராமம் கட்டமைக்கப்பட்டு கோட்டபாயவுக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது. கடந்த மே 9-ஆம் திகதியன்று பிரதமர் பதவியில் இருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார் மகிந்த ராஜபக்ஷ . ப்ரதமர் பதவியில் இருந்து விலகுவதர்கு தயார் என எஅணில் அரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆம் திகதி இலங்கை அரசியலில் என்ன நடக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சே பதவி விலகுவாரா? ரணில் விக்கிரமசிங்கே பதவியை இழப்பாரா? என்கிற விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் வேலைத் திட்டம் வெற்றி பெற்றால் தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ரணில் விக்கிரமசிங்க சவால் விட்டார்.

இலங்கை பாராளுமன்றத்தில், நாங்கள் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளோம். அதனை முன்னெடுக்க உதவுங்கள், வீதிக்கு இறங்க வேண்டிய தேவையில்லை  அனுரகுமார அறிவித்தார்.

பொருளாதாரம் - ஜனாதிபதி பதவி விலகக் கோரி   திட்டமிடப்பட்ட்ட அரசாங்க எதிர்ப்புப் பேரணிக்கு  தடை விதிக்ககோரி பொலிஸார் நீதி மன்றத்தை அணுகினர்.கொழும்பில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுவதைத் தடுக்குமாறு விடுத்த கோரிக்கையை இலங்கை நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

கோட்டை பொலிஸ் பகுதிக்கு அருகில் மக்கள் ஒன்று கூடுவார்கள் என்றும், வன்முறைகள் இடம்பெறலாம் என்றும் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததால், பொலிஸார் நீதிமன்ற உத்தரவைக் கோரியுள்ளனர்என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ   தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக நாளைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அந்த போராட்டங்கள் மோசமடையுமாக இருந்தால் நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கொழும்பில் இன்றும், நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதால் முக்கிய இடங்களின் பாதகாப்பை உறுதிப்படுத்த விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கும்,அரசாங்கத்திற்கும் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்  கொழும்பை நோக்கி படையெடுக்கின்றனர்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாளை மறுதினம் கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அந்த சம்மேளனத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு கோரி கொழும்பில் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை முன்பாகவும்  பாராளுமன்ற வளாகத்துக்கு முன்பாகவும் புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கலகமடக்கும் பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து தடுத்தனர். ஆனாலும் போராட்டங்கள் தொடருமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த சட்டத்தரணி சிறிநாத் பெரேரா, கோட்டாபய ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு மக்கள் கூட்டாகக் கோரிக்கை விடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

எரிபொருட் தட்டுப்பாடுகளினால் கொழும்புநகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது   ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுமென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். 

ஹிருனிகா பிரேமச்சந்திர கடந்த வாரம் பிரதமரின் வீட்டுக்கு முன்பாகவும்,  ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தினார்.இன்று நடை பெறும் போரட்டத்தால் புதியதொரு அரசியல் புரட்சி ஏற்படும் என ஏர்பாட்டாலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: